சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன?
Update:(Mar-24,2009,10:30am)
* நந்தனார் மனு, தமிழக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!
* நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர். கனிமொழி அவர்களிடத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!
* Mar-21 அன்று, நாமக்கல் சிபி அண்ணா, இதை அலுவலகத்தில் சேர்ப்பித்தார்!
* இம்முயற்சியில் பெரிதும் உதவிய தமிழ் உலகம் குழுமம்-மணியம் ஐயா மற்றும் ஆல்பர்ட், நாக. இளங்கோவன் ஐயா, மதுமிதா அக்கா, அதிகாலை.காம் நவநீதன், அபி அப்பா மற்றும் அனைத்து ஆர்வலர்களுக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றி! ஒப்பமிட்டவர்க்கெல்லாம் ஓங்கிய நன்றி!
தேர்தல் காலமே ஆனாலும், செல்பவர் காதுக்கும், கருத்துக்கும் இது சென்று சேர்ந்து விட்டால்...
பிறகு சிறிது சிறிதாக உருப் பெறும்! தொடர்ந்து இதில் ஆர்வம் காட்டுவோம்!
திருநாளைப் போவார், நந்தனார் திருவடிகளே சரணம்! திருச்சிற்றம்பலம்!
......Previous updates and the post below:
தில்லையில் இப்போதே நந்தனார் சிலையை மீள்-நிறுவி வி்ட்டால்...
பின்னர் யாராலும் அதன் மீது மீண்டும் கை வைக்க முடியாது! - கண்டிப்பா ஒரு தயக்கம் இருக்கும்!
இதோ, தமிழக முதல்வரிடம் தரப் போகும் மனு!
http://www.petitiononline.com/Chid2009/petition.html
உங்கள் கையெழுத்தை இட்டு, நந்தனின் தலையெழுத்தை மாற்றுவீராக!
அடியேன்,
அம்பலவாணர் பேரால், மிக மிக நன்றி! திருச்சிற்றம்பலம்!
Update:(Feb-12,2009,12:15pm)
Tried a small pictorial representation.(Based on gopala krishna bharathi, u.ve.sa accounts and malarmannan’s article in thinnai)
"பழைய" நந்தனார் சிலை பற்றிய குறிப்புகள்:
1. ஆளுயரச் சிலை
2. கைகளில் கடப்பாரையோடு
3. கூப்பிய கரம்
4. தோளில் மண்வெட்டி
5. நின்ற திருக்கோலம்
* மீண்டும் வடிவமைக்க நேர்ந்தால் இந்தக் குறிப்பு சற்று உதவும்-ன்னு நினைக்கிறேன்!
* இருந்த இடம்: நிருத்த சபை நடராஜரைப் பார்த்தவாறு, தெற்குத் தூணில்! (நிருத்த சபை என்பது பொன்னம்பலத்துக்கு தெற்கே இருப்பது!)
பல மாற்றுக் கருத்துடை அன்பர்களும் தங்கள் கையொப்பம் இட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி! நன்றி! நன்றி!!
இந்த நன்முயற்சியை மேலும் முனைப்பாக்க, எல்லாத் தரப்பினரும், தயங்காது யோசனை சொல்லுங்கள்!
* அன்று தில்லைக்குள் வர, நந்தனார் வரவேற்கப்பட்டரா? என்ற ஆய்வைத் தற்சமயம் விடுவோம்!
* இன்று தில்லைக்குள் வர, நந்தனாரை முழுமூச்சாய் வரவேற்போம்! பூரண பொற் குடம் எடுப்போம்!
பதிவு:
திருச்சிற்றம்பலம்! தில்லையம்பல நடராஜப் பெருமானின் காரியங்களை, "தான் வைத்ததே சட்டம்" என்று தனிப்பட்ட முறையில் நடத்திக் கொள்ளாமல், பொதுவில் நடத்த, நீதிமன்ற உத்தரவு ஆகியுள்ளது என்று அனைவரும் அறிவீர்கள்! (Feb-2, 2009)
அடியார்கள் முயற்சி கைக்கூட, இறைவன் திருவுள்ளம் சேர, இது வாராது வந்த வெற்றி! நெஞ்சுக்கு நீதி! முயற்சி திருவினை ஆக்கும்!
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்! - என்று ஐயன் சொன்னது, மெய்யாலுமே அம்பலம் ஏறி உள்ளது! தில்லை அம்பலம் ஏறி உள்ளது!
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்...
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!!!
இவை வெறும் வரிகள் அல்ல! அம்பலவாணனை ஒவ்வொரு கோணத்தில் (angle) இருந்தும் பார்த்தவர்களுக்கு, இந்தக் குமிழ் சிரிப்பு கட்டாயம் தெரிந்திருக்கும்!
ஆண்களையும், பெண்களையும் ஒரு சேர ஈடழிக்க வல்ல குமிழ் சிரிப்பு! தீட்சிதர்கள் மொழியில் சொல்லணும்-ன்னா ஜகன் மோஹனாகாரம்!
இனி என்ன? அவ்வளவு தானா?
தீட்சிதர்களின் ஆதிக்கம் ஒடுங்கியதாலேயே, நல்ல விடயங்கள் எல்லாம் தானாய் நடந்து விடுமா என்ன? இனி என்ன செய்யணும் என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா? இது தொடர்பாகச் செய்ய வேண்டிய சில ஆக்கங்கள் பற்றி, முன்பு இட்ட பதிவு இதோ!
மேற்சொன்ன பதிவைப் பிரதி எடுத்து, அப்போது இரு தரப்புக்கும், அஞ்சல் (தபாலில்) அனுப்பி இருந்தேன்! சென்ற அக்டோபர் மாதம், அம்மா-அப்பா மணிவிழாவுக்கு இந்தியா சென்றிருந்த போது, தில்லை செல்லும் வாய்ப்பும் கிட்டியது!
அப்போது மதிய வேளை! தீட்சிதர் ஒருவரிடம்/இருவரிடம் பதிவுலகக் கருத்துக்கள் பற்றி லேசாப் பேச்சு கொடுத்த போது, நான் தான் அப்படி தபால் அனுப்பிச்ச ஆளு-ன்னு தெரியாம, என் கிட்டயே, என்னைத் திட்டித் தீர்த்தார்! இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது! :)
ஆனால் சென்ற விஷயம் அம்மா-அப்பா விழா என்பதால், நானும் எதுவுமே பதில் பேசவில்லை! "சமத்துப் பிள்ளையா" இருந்து விட்டேன்! கடைசியா முடிக்கும் போது, நான் தான் அந்த மாதவிப் பந்தல்-ன்னு சொன்னேன்! சொன்னது தான் தாமதம்....முகம் மாறியது! ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அவரும் சிரித்து விட்டார்! :))))
தாங்கள் வைத்ததே சட்டம்! 100% Obedience! மறுப்புரை, கருத்து விவாதங்கள் - இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாத ஜனநாயகவாதிகள் நம் தீட்சிதப் பெருமக்கள்!
கருத்துக்களைப் பேசக் கூடக் கூடாது, பேசினால் கோபித்துக் கொள்வோம் என்ற போக்குள்ளவர்களிடம், அரசும் தொழில் முறை ரீதியாகவே (Professionalism) நடந்து கொள்ளல் நலம்!

ஜூனியர் விகடன் செய்தி: (Feb-11-2009)
அறநிலையத் துறை அதிகாரிகள் புடை சூழ, விழுப்புரத்திலிருந்து அறநிலையத் துறை இணை ஆணையர் திருமகள், சிதம்பரத்துக்கு வந்துள்ளார்.
இதற்கிடையில் அதிகாரிகளில் சிலரிடம், தீட்சிதர்கள் எதிர்ப்பைக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். உடனே அதிரடிப்படை போலீஸாரும், வஜ்ரா மற்றும் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.
இந்தப் பரபரப்பின் 'க்ளைமாக்ஸா'க இரவு ஒன்பது மணி அளவில் அதிகாரிகள் கோயிலுக்குள் நுழைந்தனர். அதேநேரம், நானூறுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் அதிகாரிகளை வழிமறித்தனர்.
அவர்களின் வழக்கறிஞர் சிவக்குமாரிடம் நீதிமன்றத் தீர்ப்பையும், அரசு உத்தரவையும் கொடுத்த இணை ஆணையர் திருமகள், "ஒழுங்கா வழிவிடுங்க..." என்றார்.
சில நிமிட வாக்குவாதத்துக்குப் பிறகு அரசிடம் கோயிலை ஒப்படைக்க தீட்சிதர்கள் சார்பாக சம்மதித்துக் கையெழுத்திட்டார் சிவக்குமார்.
உடனடியாக தில்லை காளியம்மன் கோயிலின் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாரையே நடராஜர் கோயிலுக்கும் செயல் அலுவலராக நியமித்து ஆணை பிறப்பித்தார் திருமகள். அன்றிரவே, கோயில் அலுவலகச் சுவர்களில், இந்தத் தகவல் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.
மறுநாள் மூன்றாம் தேதி கோயிலுக்கு வந்த செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், கீழக் கோபுரம் அருகே இருந்த ஒரு இடத்தில் அலுவலகத்தை அமைத்து நிர்வாக வசதிக்காக பத்து தற்காலிகப் பணியாளர் களையும் நியமித்தார்.
இந்நிலையில் நம்மிடம் பேசிய தீட்சிதர்கள், "தலைமுறை தலைமுறையாகக் கோயிலை நம்பியே வாழ்ந்து வருகிறோம். அரசு இவ்வளவு வேகமாகச் செயல்படுவதைப் பார்த்தால், எங்களை கோயிலை விட்டே அப்புறப்படுத்தி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. நாங்கள் மேல் முறையீடு செய்யப் போகிறோம்.
அதன் தீர்ப்பு வரும் வரை, இப்படி தடாலடியான காரியங்கள் செய்வதை அரசு கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்..." என்றனர்.
(பத்திக்கும் படத்துக்கும் நன்றி: ஜூனியர் விகடன்)
சரி...........விகடன் செய்தியைப் பார்த்ததில் இருந்து, நமக்கே இருக்கும் உள்ளுணர்வில் இருந்து, அடுத்த கட்டம் நன்றாகத் தெரிகிறது! = மேல் முறையீடு! உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த வழக்கு மேலும் நீட்டிக்கும்! இடைக்காலத் தடை கேட்டுப் பெற்றால் கூட ஆச்சரியம் இல்லை!
அதனால் அரசு செய்ய வேண்டியது என்ன? உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?
1. ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை
2. நிர்வாகம் தொடர்பானவை
என்னென்னு கிடு கிடு-ன்னு பார்க்கலாமா? நீங்களும் விட்டுப் போனவற்றைச் சொல்லுங்கள்! தொகுத்து தமிழக அரசுக்கும், இணை ஆணையர் திருமகளுக்கும், மின்னஞ்சலில் கூட அனுப்பி வைக்கலாம்!
ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை:
1. நந்தனார் என்னும் திருநாளைப் போவார் நாயனார் சிலையை உடனே தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்! நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு, அவர் திருவுருவச் சிலை முன்பு இருந்தது! அப்புறம் "மாயமானது"!
எங்கு இருந்ததோ, அங்கேயே நந்தனாரை நிறுவி, வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்!
பழைய சிலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை! உடனேயே புதிய சிலை ஒன்றினைத் தக்க ஸ்தபதி செய்து கொடுப்பார்!
இதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு செய்து முடித்தால் மிகவும் நலம்! மிகவும் சுலபமான வேலை தான்! அதிக நேரமில்லை!
வருகிற Feb-23 மகா சிவராத்திரி! - அதற்குள் நந்தனார், நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு இருப்பது பெரும் சிறப்பு!
தமிழக ஆலயங்களின் வருவாய், தமிழக அரசுக்குப் பல வழிகளில் துணை செய்கிறது! எனவே இந்த நற்செயலை (சத் காரியத்தை), உடனே செய்து கொடுக்க,
* தமிழக அரசு நன்றிக் கடன் பட்டுள்ளது என்பதை மட்டும் இங்கே ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!
* முதல்வர் கலைஞர் இதைத் தன் தனிப்பட்ட பணியாக எடுத்துச் செய்து கொடுத்தால், தில்லைத் தெய்வத் தமிழில், அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்!
நந்தனார் சிலை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்: கோபால கிருஷ்ண பாரதியின் கீர்த்தனைகள், உ.வே.சா குறிப்புரைகள் மற்றும் அரசு அலுவலர்களின் கட்டுரைகள்!
இந்தத் திண்ணைக் கட்டுரையையும் அவசியம் வாசிக்கவும்!
2. திருக்கோயில் ஓதுவார்கள், இப்போது கீழிருந்து தேவாரப் பதிகங்களை ஓதுகிறார்கள்!
ஆறுகால பூசையின் போது, தீட்சிதர்கள் தங்கள் வழிபாடுகளை முடித்த பின்னர், மணி அடிப்பார்கள்! பின்னர் ஒரு ஓதுவார், தமிழ்ப் பதிகம் ஓத ஆரம்பிப்பார்!
ஆனால் கருவறைக்கு (சிற்றம்பலம்) வெளியே உள்ள பொன்னம்பல மேடையில் இருந்து அல்ல! அந்த மேடையின் படியிறங்கி, கீழே வளாகத்தில் ஒரு ஓரமாய் நின்று ஓதுவார்!
இனி அவரைப் பொன்னம்பல மேடையில் ஏறிப் பதிகம் பாடச் சொல்ல, ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்! அவர் தனியாகப் பாடாமல், உடன் இன்னொருவர் துணைக்கு நின்றால் நலம்! பொது மக்களும் கூடவே தேவாரம் பாடினால், இன்னும் இன்னும் நலம்!
3. ஆலய வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள், ஓலைச் சுவடிக் குறிப்புகள், இன்னும் இதர வரலாற்று ஆதாரங்களை, உடனே டிஜிடைஸ் (Digitization) செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்! தொல்பொருள் துறையின் உதவியை நாடி, குறைந்த பட்சம் படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது நலம் பயக்கும்!
4. சிறிய அளவிலான தேவாரத் திருமுறைகள் பள்ளியை, தில்லையில் துவக்க வழி வகை உள்ளதா என்று அறநிலையத் துறை ஆராய வேண்டும்! இதற்கான பூர்வாங்க முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்!
5. சைவத் திருமடங்கள் - திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுர ஆதீனம், காஞ்சி மடம், சிருங்கேரி மடம், இன்னும் பல மடத் தலைவர்கள் ஒன்று கூடி, தமிழக அரசுக்கு வழிகாட்டுச் செயல் முறை (Policy Guidelines) ஒன்றை வகுத்துக் கொடுக்க வேண்டும்!
வைணவத் தலைநகரம் திருவரங்கம்! அதே போல் சைவத் தலைநகரம் தில்லை!
திருவரங்கத்தில் கோயில் ஒழுகு என்ற தினப்படி நடத்தை விதிமுறைகளை இராமானுசர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்து வைத்தார்! அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியான ஒழுகு முறைகள்! இன்னிக்கும் அது நடைமுறையில் இருக்கு!
தமிழ் வழிபாடு, தமிழ் விழாவான பகல் பத்து-இராப் பத்து, கருவறைக்குள் அர்ச்சகர்களே முன்னின்று சொல்ல வேண்டிய தமிழ்ப் பாசுரங்கள் என்னென்ன = என்று அனைத்தும் அதில் இருக்கு!
It is a kind of Code Book! Koil Ozhugu!
அதைத் திருவரங்க ஜீயர்களிடம் கேட்டுப் பெற்று, ஒரு உசாத் துணை (Reference) போலப் பயன்படுத்திக் கொள்ளலாம்! இது யோசனை தான்! கட்டாயம் இல்லை! ஆனால் அது போல ஒரு செயல்முறை Code Book-ஐத் திருமடங்கள் உருவாக்கித் தரவேண்டும்!
6. நடராஜப் பெருமானின் ஆலயக் குடமுழுக்கு, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! கடைசியாக நடந்தது 1987! இருபத்தி இரண்டு வருடங்கள் ஓடி விட்டன!
மூச்சுக்கு மூச்சு, கர்மானுஷ்டானம், கர்மானுஷ்டானம், என்று வாய் கிழியப் பேசும் தீட்சிதர்கள், 22 ஆண்டுகளாக குடமுழுக்கு இல்லாமல், ஒரு ஆலயம் நடத்தி வருகிறார்கள்!
ஆலயக் குடமுழுக்கு படோபடத்துக்கு அல்ல! சன்னிதிகள் சீரமைப்பிற்கே! வீட்டுக்கே அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாச்சும் வெள்ளை அடிக்கிறோம்! இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தானே? எனவே அரசு குடமுழுக்குக் குழுவை உடனே அமைத்தல் வேண்டும்!
நிர்வாகம் தொடர்பானவை:
1. கோயிலின் பொருள் ஆதாரங்களை, தனித்த ஆய்வாளர்கள் (Independent Evaluator) கொண்டு கணக்கெடுத்து, அதை வெள்ளை அறிக்கையாகப் பொது மக்கள் முன் வைப்பது!
2. ஆலய அளவில், சிறிது காலத்துக்குத் தினப்படி சந்திப்புகள் (Daily Status Meeting) நடத்துவது!
3. தீட்சிதப் பிரதிநிதிகளுடன் ஆணையர் அமர்ந்து பேசி, கொள்கை முடிவுகள் இன்னின்ன என்று தெளிவாக விளக்கி விடுவது!
அவர்கள் எதிரியாகப் பார்க்கப்பட மாட்டார்கள்! எனவே பழைய கசப்பை மறந்து பூரண ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோருவது!
4. ஆயிரம் தான் இருந்தாலும், தீட்சிதர்களும் இறைவனுக்குப் பணி செய்யும் வேலையில் இருப்பவர்கள் தான்! அவர்கள் எதிர்காலம், அவர்கள் மாத ஊதியம், அறநிலையத் துறையில் அவர்களுடைய ஊழியர் நிலை என்ன - இது போன்றவற்றையும் தெளிவாக விளக்கி விடுதல் நலம் பயக்கும்!
5. தில்லை நடராஜப் பெருமானின் திருக்கூத்தைப் பார்த்தாவாறு, அந்த மண்டபத்துக்கு வெளியேயே, மிக அருகில் கோயில் கொண்டுள்ளார் கோவிந்தராசப் பெருமாள்! மண்டபத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால், நேராக நடராசரையும், இடப் பக்கம் திரும்பி, பெருமாளையும் சேவிக்கலாம்!
இந்தப் பெருமாள் கோயில் மட்டும் ஏற்கனவே அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கு! அதனால் அதன் ஊழியர்களையே, ஆரம்ப கால அவசரப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
தேவை: சில விரைவான நடவடிக்கைகள்! மேல் முறையீடுகளுக்கு முன்பாக, குறிப்பாக நந்தனார் சிலை நிறுவுதல்!
தில்லை பற்றிய கருத்துச் சண்டைகள் நிறையவே நடந்துள்ளன! ஆனால் இப்போது கடமை நேரம்!
உங்களுக்குத் தோன்றும் வேறு யோசனைகள் என்ன? முன் வையுங்களேன், நண்பர்களே, சக பதிவர்களே!
* அவசரத் தேவை!
* நெடுங்காலத் தேவை!
* ஆன்மீக விடயம்!
* நிர்வாக விடயம்!
ஒன்றாகத் தொகுத்து, அறநிலையத் துறைக்கும், உதவி ஆணையர் திருமகள் அவர்களின் மின்னஞ்சலுக்கும் யோசனைகளாக அனுப்பி வைக்கலாம்! என்ன சொல்றீங்க?
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!
Read more »
* நந்தனார் மனு, தமிழக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!
* நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர். கனிமொழி அவர்களிடத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!
* Mar-21 அன்று, நாமக்கல் சிபி அண்ணா, இதை அலுவலகத்தில் சேர்ப்பித்தார்!
* இம்முயற்சியில் பெரிதும் உதவிய தமிழ் உலகம் குழுமம்-மணியம் ஐயா மற்றும் ஆல்பர்ட், நாக. இளங்கோவன் ஐயா, மதுமிதா அக்கா, அதிகாலை.காம் நவநீதன், அபி அப்பா மற்றும் அனைத்து ஆர்வலர்களுக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றி! ஒப்பமிட்டவர்க்கெல்லாம் ஓங்கிய நன்றி!
தேர்தல் காலமே ஆனாலும், செல்பவர் காதுக்கும், கருத்துக்கும் இது சென்று சேர்ந்து விட்டால்...
பிறகு சிறிது சிறிதாக உருப் பெறும்! தொடர்ந்து இதில் ஆர்வம் காட்டுவோம்!
திருநாளைப் போவார், நந்தனார் திருவடிகளே சரணம்! திருச்சிற்றம்பலம்!
......Previous updates and the post below:
தில்லையில் இப்போதே நந்தனார் சிலையை மீள்-நிறுவி வி்ட்டால்...
பின்னர் யாராலும் அதன் மீது மீண்டும் கை வைக்க முடியாது! - கண்டிப்பா ஒரு தயக்கம் இருக்கும்!
இதோ, தமிழக முதல்வரிடம் தரப் போகும் மனு!
http://www.petitiononline.com/Chid2009/petition.html
உங்கள் கையெழுத்தை இட்டு, நந்தனின் தலையெழுத்தை மாற்றுவீராக!
அடியேன்,
அம்பலவாணர் பேரால், மிக மிக நன்றி! திருச்சிற்றம்பலம்!
Update:(Feb-12,2009,12:15pm)
Tried a small pictorial representation.(Based on gopala krishna bharathi, u.ve.sa accounts and malarmannan’s article in thinnai)
![]() | ![]() |
1. ஆளுயரச் சிலை
2. கைகளில் கடப்பாரையோடு
3. கூப்பிய கரம்
4. தோளில் மண்வெட்டி
5. நின்ற திருக்கோலம்
* மீண்டும் வடிவமைக்க நேர்ந்தால் இந்தக் குறிப்பு சற்று உதவும்-ன்னு நினைக்கிறேன்!
* இருந்த இடம்: நிருத்த சபை நடராஜரைப் பார்த்தவாறு, தெற்குத் தூணில்! (நிருத்த சபை என்பது பொன்னம்பலத்துக்கு தெற்கே இருப்பது!)
தில்லையில் நந்தனாருக்கு
உங்கள் கையொப்பம்!
பல மாற்றுக் கருத்துடை அன்பர்களும் தங்கள் கையொப்பம் இட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி! நன்றி! நன்றி!!
இந்த நன்முயற்சியை மேலும் முனைப்பாக்க, எல்லாத் தரப்பினரும், தயங்காது யோசனை சொல்லுங்கள்!
* அன்று தில்லைக்குள் வர, நந்தனார் வரவேற்கப்பட்டரா? என்ற ஆய்வைத் தற்சமயம் விடுவோம்!
* இன்று தில்லைக்குள் வர, நந்தனாரை முழுமூச்சாய் வரவேற்போம்! பூரண பொற் குடம் எடுப்போம்!
பதிவு:
திருச்சிற்றம்பலம்! தில்லையம்பல நடராஜப் பெருமானின் காரியங்களை, "தான் வைத்ததே சட்டம்" என்று தனிப்பட்ட முறையில் நடத்திக் கொள்ளாமல், பொதுவில் நடத்த, நீதிமன்ற உத்தரவு ஆகியுள்ளது என்று அனைவரும் அறிவீர்கள்! (Feb-2, 2009)
அடியார்கள் முயற்சி கைக்கூட, இறைவன் திருவுள்ளம் சேர, இது வாராது வந்த வெற்றி! நெஞ்சுக்கு நீதி! முயற்சி திருவினை ஆக்கும்!
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்! - என்று ஐயன் சொன்னது, மெய்யாலுமே அம்பலம் ஏறி உள்ளது! தில்லை அம்பலம் ஏறி உள்ளது!

பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்...
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!!!
இவை வெறும் வரிகள் அல்ல! அம்பலவாணனை ஒவ்வொரு கோணத்தில் (angle) இருந்தும் பார்த்தவர்களுக்கு, இந்தக் குமிழ் சிரிப்பு கட்டாயம் தெரிந்திருக்கும்!
ஆண்களையும், பெண்களையும் ஒரு சேர ஈடழிக்க வல்ல குமிழ் சிரிப்பு! தீட்சிதர்கள் மொழியில் சொல்லணும்-ன்னா ஜகன் மோஹனாகாரம்!
இனி என்ன? அவ்வளவு தானா?
தீட்சிதர்களின் ஆதிக்கம் ஒடுங்கியதாலேயே, நல்ல விடயங்கள் எல்லாம் தானாய் நடந்து விடுமா என்ன? இனி என்ன செய்யணும் என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா? இது தொடர்பாகச் செய்ய வேண்டிய சில ஆக்கங்கள் பற்றி, முன்பு இட்ட பதிவு இதோ!
மேற்சொன்ன பதிவைப் பிரதி எடுத்து, அப்போது இரு தரப்புக்கும், அஞ்சல் (தபாலில்) அனுப்பி இருந்தேன்! சென்ற அக்டோபர் மாதம், அம்மா-அப்பா மணிவிழாவுக்கு இந்தியா சென்றிருந்த போது, தில்லை செல்லும் வாய்ப்பும் கிட்டியது!
அப்போது மதிய வேளை! தீட்சிதர் ஒருவரிடம்/இருவரிடம் பதிவுலகக் கருத்துக்கள் பற்றி லேசாப் பேச்சு கொடுத்த போது, நான் தான் அப்படி தபால் அனுப்பிச்ச ஆளு-ன்னு தெரியாம, என் கிட்டயே, என்னைத் திட்டித் தீர்த்தார்! இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது! :)
ஆனால் சென்ற விஷயம் அம்மா-அப்பா விழா என்பதால், நானும் எதுவுமே பதில் பேசவில்லை! "சமத்துப் பிள்ளையா" இருந்து விட்டேன்! கடைசியா முடிக்கும் போது, நான் தான் அந்த மாதவிப் பந்தல்-ன்னு சொன்னேன்! சொன்னது தான் தாமதம்....முகம் மாறியது! ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அவரும் சிரித்து விட்டார்! :))))
தாங்கள் வைத்ததே சட்டம்! 100% Obedience! மறுப்புரை, கருத்து விவாதங்கள் - இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாத ஜனநாயகவாதிகள் நம் தீட்சிதப் பெருமக்கள்!
கருத்துக்களைப் பேசக் கூடக் கூடாது, பேசினால் கோபித்துக் கொள்வோம் என்ற போக்குள்ளவர்களிடம், அரசும் தொழில் முறை ரீதியாகவே (Professionalism) நடந்து கொள்ளல் நலம்!

ஜூனியர் விகடன் செய்தி: (Feb-11-2009)
அறநிலையத் துறை அதிகாரிகள் புடை சூழ, விழுப்புரத்திலிருந்து அறநிலையத் துறை இணை ஆணையர் திருமகள், சிதம்பரத்துக்கு வந்துள்ளார்.
இதற்கிடையில் அதிகாரிகளில் சிலரிடம், தீட்சிதர்கள் எதிர்ப்பைக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். உடனே அதிரடிப்படை போலீஸாரும், வஜ்ரா மற்றும் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.
இந்தப் பரபரப்பின் 'க்ளைமாக்ஸா'க இரவு ஒன்பது மணி அளவில் அதிகாரிகள் கோயிலுக்குள் நுழைந்தனர். அதேநேரம், நானூறுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் அதிகாரிகளை வழிமறித்தனர்.
அவர்களின் வழக்கறிஞர் சிவக்குமாரிடம் நீதிமன்றத் தீர்ப்பையும், அரசு உத்தரவையும் கொடுத்த இணை ஆணையர் திருமகள், "ஒழுங்கா வழிவிடுங்க..." என்றார்.
![]() | ![]() |
உடனடியாக தில்லை காளியம்மன் கோயிலின் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாரையே நடராஜர் கோயிலுக்கும் செயல் அலுவலராக நியமித்து ஆணை பிறப்பித்தார் திருமகள். அன்றிரவே, கோயில் அலுவலகச் சுவர்களில், இந்தத் தகவல் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.
மறுநாள் மூன்றாம் தேதி கோயிலுக்கு வந்த செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், கீழக் கோபுரம் அருகே இருந்த ஒரு இடத்தில் அலுவலகத்தை அமைத்து நிர்வாக வசதிக்காக பத்து தற்காலிகப் பணியாளர் களையும் நியமித்தார்.
இந்நிலையில் நம்மிடம் பேசிய தீட்சிதர்கள், "தலைமுறை தலைமுறையாகக் கோயிலை நம்பியே வாழ்ந்து வருகிறோம். அரசு இவ்வளவு வேகமாகச் செயல்படுவதைப் பார்த்தால், எங்களை கோயிலை விட்டே அப்புறப்படுத்தி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. நாங்கள் மேல் முறையீடு செய்யப் போகிறோம்.
அதன் தீர்ப்பு வரும் வரை, இப்படி தடாலடியான காரியங்கள் செய்வதை அரசு கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்..." என்றனர்.
(பத்திக்கும் படத்துக்கும் நன்றி: ஜூனியர் விகடன்)
![]() | ![]() |
அதனால் அரசு செய்ய வேண்டியது என்ன? உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?
1. ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை
2. நிர்வாகம் தொடர்பானவை
என்னென்னு கிடு கிடு-ன்னு பார்க்கலாமா? நீங்களும் விட்டுப் போனவற்றைச் சொல்லுங்கள்! தொகுத்து தமிழக அரசுக்கும், இணை ஆணையர் திருமகளுக்கும், மின்னஞ்சலில் கூட அனுப்பி வைக்கலாம்!
ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை:
1. நந்தனார் என்னும் திருநாளைப் போவார் நாயனார் சிலையை உடனே தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்! நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு, அவர் திருவுருவச் சிலை முன்பு இருந்தது! அப்புறம் "மாயமானது"!
எங்கு இருந்ததோ, அங்கேயே நந்தனாரை நிறுவி, வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்!
![]() | ![]() |
இதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு செய்து முடித்தால் மிகவும் நலம்! மிகவும் சுலபமான வேலை தான்! அதிக நேரமில்லை!
வருகிற Feb-23 மகா சிவராத்திரி! - அதற்குள் நந்தனார், நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு இருப்பது பெரும் சிறப்பு!
தமிழக ஆலயங்களின் வருவாய், தமிழக அரசுக்குப் பல வழிகளில் துணை செய்கிறது! எனவே இந்த நற்செயலை (சத் காரியத்தை), உடனே செய்து கொடுக்க,
* தமிழக அரசு நன்றிக் கடன் பட்டுள்ளது என்பதை மட்டும் இங்கே ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!
* முதல்வர் கலைஞர் இதைத் தன் தனிப்பட்ட பணியாக எடுத்துச் செய்து கொடுத்தால், தில்லைத் தெய்வத் தமிழில், அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்!
நந்தனார் சிலை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்: கோபால கிருஷ்ண பாரதியின் கீர்த்தனைகள், உ.வே.சா குறிப்புரைகள் மற்றும் அரசு அலுவலர்களின் கட்டுரைகள்!
இந்தத் திண்ணைக் கட்டுரையையும் அவசியம் வாசிக்கவும்!
2. திருக்கோயில் ஓதுவார்கள், இப்போது கீழிருந்து தேவாரப் பதிகங்களை ஓதுகிறார்கள்!
ஆறுகால பூசையின் போது, தீட்சிதர்கள் தங்கள் வழிபாடுகளை முடித்த பின்னர், மணி அடிப்பார்கள்! பின்னர் ஒரு ஓதுவார், தமிழ்ப் பதிகம் ஓத ஆரம்பிப்பார்!
ஆனால் கருவறைக்கு (சிற்றம்பலம்) வெளியே உள்ள பொன்னம்பல மேடையில் இருந்து அல்ல! அந்த மேடையின் படியிறங்கி, கீழே வளாகத்தில் ஒரு ஓரமாய் நின்று ஓதுவார்!
இனி அவரைப் பொன்னம்பல மேடையில் ஏறிப் பதிகம் பாடச் சொல்ல, ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்! அவர் தனியாகப் பாடாமல், உடன் இன்னொருவர் துணைக்கு நின்றால் நலம்! பொது மக்களும் கூடவே தேவாரம் பாடினால், இன்னும் இன்னும் நலம்!
3. ஆலய வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள், ஓலைச் சுவடிக் குறிப்புகள், இன்னும் இதர வரலாற்று ஆதாரங்களை, உடனே டிஜிடைஸ் (Digitization) செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்! தொல்பொருள் துறையின் உதவியை நாடி, குறைந்த பட்சம் படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது நலம் பயக்கும்!
4. சிறிய அளவிலான தேவாரத் திருமுறைகள் பள்ளியை, தில்லையில் துவக்க வழி வகை உள்ளதா என்று அறநிலையத் துறை ஆராய வேண்டும்! இதற்கான பூர்வாங்க முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்!
5. சைவத் திருமடங்கள் - திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுர ஆதீனம், காஞ்சி மடம், சிருங்கேரி மடம், இன்னும் பல மடத் தலைவர்கள் ஒன்று கூடி, தமிழக அரசுக்கு வழிகாட்டுச் செயல் முறை (Policy Guidelines) ஒன்றை வகுத்துக் கொடுக்க வேண்டும்!
வைணவத் தலைநகரம் திருவரங்கம்! அதே போல் சைவத் தலைநகரம் தில்லை!
திருவரங்கத்தில் கோயில் ஒழுகு என்ற தினப்படி நடத்தை விதிமுறைகளை இராமானுசர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்து வைத்தார்! அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியான ஒழுகு முறைகள்! இன்னிக்கும் அது நடைமுறையில் இருக்கு!
தமிழ் வழிபாடு, தமிழ் விழாவான பகல் பத்து-இராப் பத்து, கருவறைக்குள் அர்ச்சகர்களே முன்னின்று சொல்ல வேண்டிய தமிழ்ப் பாசுரங்கள் என்னென்ன = என்று அனைத்தும் அதில் இருக்கு!
It is a kind of Code Book! Koil Ozhugu!
அதைத் திருவரங்க ஜீயர்களிடம் கேட்டுப் பெற்று, ஒரு உசாத் துணை (Reference) போலப் பயன்படுத்திக் கொள்ளலாம்! இது யோசனை தான்! கட்டாயம் இல்லை! ஆனால் அது போல ஒரு செயல்முறை Code Book-ஐத் திருமடங்கள் உருவாக்கித் தரவேண்டும்!
6. நடராஜப் பெருமானின் ஆலயக் குடமுழுக்கு, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! கடைசியாக நடந்தது 1987! இருபத்தி இரண்டு வருடங்கள் ஓடி விட்டன!
மூச்சுக்கு மூச்சு, கர்மானுஷ்டானம், கர்மானுஷ்டானம், என்று வாய் கிழியப் பேசும் தீட்சிதர்கள், 22 ஆண்டுகளாக குடமுழுக்கு இல்லாமல், ஒரு ஆலயம் நடத்தி வருகிறார்கள்!
ஆலயக் குடமுழுக்கு படோபடத்துக்கு அல்ல! சன்னிதிகள் சீரமைப்பிற்கே! வீட்டுக்கே அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாச்சும் வெள்ளை அடிக்கிறோம்! இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தானே? எனவே அரசு குடமுழுக்குக் குழுவை உடனே அமைத்தல் வேண்டும்!
நிர்வாகம் தொடர்பானவை:
1. கோயிலின் பொருள் ஆதாரங்களை, தனித்த ஆய்வாளர்கள் (Independent Evaluator) கொண்டு கணக்கெடுத்து, அதை வெள்ளை அறிக்கையாகப் பொது மக்கள் முன் வைப்பது!
2. ஆலய அளவில், சிறிது காலத்துக்குத் தினப்படி சந்திப்புகள் (Daily Status Meeting) நடத்துவது!
3. தீட்சிதப் பிரதிநிதிகளுடன் ஆணையர் அமர்ந்து பேசி, கொள்கை முடிவுகள் இன்னின்ன என்று தெளிவாக விளக்கி விடுவது!
அவர்கள் எதிரியாகப் பார்க்கப்பட மாட்டார்கள்! எனவே பழைய கசப்பை மறந்து பூரண ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோருவது!
4. ஆயிரம் தான் இருந்தாலும், தீட்சிதர்களும் இறைவனுக்குப் பணி செய்யும் வேலையில் இருப்பவர்கள் தான்! அவர்கள் எதிர்காலம், அவர்கள் மாத ஊதியம், அறநிலையத் துறையில் அவர்களுடைய ஊழியர் நிலை என்ன - இது போன்றவற்றையும் தெளிவாக விளக்கி விடுதல் நலம் பயக்கும்!
5. தில்லை நடராஜப் பெருமானின் திருக்கூத்தைப் பார்த்தாவாறு, அந்த மண்டபத்துக்கு வெளியேயே, மிக அருகில் கோயில் கொண்டுள்ளார் கோவிந்தராசப் பெருமாள்! மண்டபத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால், நேராக நடராசரையும், இடப் பக்கம் திரும்பி, பெருமாளையும் சேவிக்கலாம்!
இந்தப் பெருமாள் கோயில் மட்டும் ஏற்கனவே அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கு! அதனால் அதன் ஊழியர்களையே, ஆரம்ப கால அவசரப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
தேவை: சில விரைவான நடவடிக்கைகள்! மேல் முறையீடுகளுக்கு முன்பாக, குறிப்பாக நந்தனார் சிலை நிறுவுதல்!
தில்லை பற்றிய கருத்துச் சண்டைகள் நிறையவே நடந்துள்ளன! ஆனால் இப்போது கடமை நேரம்!
உங்களுக்குத் தோன்றும் வேறு யோசனைகள் என்ன? முன் வையுங்களேன், நண்பர்களே, சக பதிவர்களே!
* அவசரத் தேவை!
* நெடுங்காலத் தேவை!
* ஆன்மீக விடயம்!
* நிர்வாக விடயம்!
ஒன்றாகத் தொகுத்து, அறநிலையத் துறைக்கும், உதவி ஆணையர் திருமகள் அவர்களின் மின்னஞ்சலுக்கும் யோசனைகளாக அனுப்பி வைக்கலாம்! என்ன சொல்றீங்க?
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!