பூரம்1: தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை!
ஆசை, தோசை, அப்பளம், வடை என்று குழந்தைகள் விளையாடும் போது சொல்வதைக் கேட்டுள்ளீர்களா? சில சமயம் பெரியவங்க கூட ஆசை தோசை என்பார்கள்! ஏன்? ஆசைக்கும் தோசைக்கு என்ன கனெக்சன்?
சரி, அதெல்லாம் விடுங்க.
இங்கே எத்தனைப் பதிவர்கள், தங்கச்சி ஆசைப்பட்டுக் கேக்க, ஒரு அண்ணனாய் நீங்க வாங்கிக் கொடுத்திருக்கீங்க?
வாங்கிக் கொடுத்தீங்களா,இல்லை நல்லா ஓங்கிக் கொடுத்தீங்களா?:-)
பாசமலர் சிவாஜி-சாவித்திரி, "தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி" பாட்டு பாடும் டி.ராஜேந்தர் லெவலுக்கு எல்லாம் நீங்க இறங்கி யோசிக்க வேண்டாம்! தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்திருக்கீங்களா? இல்லையா??
நீங்க பேச்சிலர்-னா, சும்மா, கூச்சப்படாமச் சொல்லுங்க!
கல்யாணம் ஆகியிருந்தா, சும்மா, பயப்படாமச் சொல்லுங்க! :-)
ஆனா இன்னிக்கி நாம பாக்கப் போற கதை, கொஞ்சம் வித்தியாசமானது!
தங்கையோ எட்டாம் நூற்றாண்டு!
அண்ணனோ பதினோராம் நூற்றாண்டு!
ச்சே....இது எப்படிச் சாத்தியம்? அச்சோ....என்னை அடிக்க வாரீங்களா?
வ.வா.ச-வில் எழுதுவதால், இங்கேயும் கலாய்க்கத் தொடங்கி விட்டேன் என்று கும்ம வரீங்களா? பொறுமை! பொறுமை! மேலே படியுங்கள்!
அவள் ஒரு தங்கை - மாலை இட்ட மங்கை - நளினம் கொஞ்சும் நற்குண நங்கை! பாண்டி நாட்டாள் - தமிழ்ப் பாட்டாள்!
காதல் கவிதைகள் புனைவதில் அவளை மிஞ்ச உலகில் யாரும் கிடையாது!
அவளுக்கு அப்பா மட்டும் தான். அம்மா இருந்திருந்தால் அவள் வயதுக்குப் பல விஷயம் பேசி இருப்பாள். ஆனா அதுக்காக மனசுக்குப் பூட்டு போட்டு வைக்க முடியுமா?...அதுவும் கவிதைகள் ஊற்றெடுக்கும் கங்கை உள்ளத்துக்கு?
அவள், தன் மனதை, ஒரு மன்னனுக்குப் பறிகொடுத்தாள்.
அவனோ குழல் அழகன், கண் அழகன், வாய் அழகன்,
கொப்பூழில் எழு கமலப் பூ அழகன்! தன்னை அன்பால் நாடி வந்த எவரையும், எந்தப் பேதமும் காணாது காப்பவன்!
ஆனால் அவனை அடைவது என்னமோ அவ்வளவு சுலபமான விஷயமாகத் தெரியவில்லை! கழுவும் மீனில் நழுவும் மீன் என்பார்களே! அது போல!
பாடி ஆகி விட்டது, மாலை சூடி ஆகி விட்டது!
தூதும் விட்டு விட்டாள், நோன்பும் நோற்று விட்டாள்!
ஹூஹூம்....ஒன்றுமே நடக்க வில்லை! தந்தையின் உதவியும் அவளுக்குப் பெரிதாக உதவவில்லை! எல்லாம் காதல் படுத்தும் பாடு!
அவன் வியர்வையிலும், எச்சிலிலும் கூடத் துளசி மணமே தெரிந்தது அந்தப் பேதைப் பெண்ணுக்கு!
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை அல்லவா? காதலுக்கும் தெய்வம் தானே துணை! ஓ...அதனால் தான் கோவில்களில் இப்போதெல்லாம் அதிக அளவில் இளைஞர், இளைஞி கூட்டங்களோ? கற்பூர ஜோதிக்குப் பதில் காதல் ஜோதிகளோ? :-))
மதுரைக்கு அருகில் உள்ள ஊர், திருமால் இருஞ் சோலை; அழகர் கோவில்-னு சொன்னா இன்னும் நல்லாத் தெரியும்! ஏற்கனவே காதலில் வெற்றி பெற்ற முருகன் கூட அங்கு தான் இருக்கிறான்! சரியான இடம் தான் மருதகாரய்ங்களுக்கு!
அங்கு தோசைப் பிரசாதம் மிகப் பிரபலம்!
அங்கு ஆசைப் பிரசாதம் பெற, வேண்டிக் கொள்கிறாள் இந்தப் பேதை!
"கள்ளழகரே, கள்ளழகரே! என் காதலைக் கனிவித்துக் கொடு!
உனக்கு நூறு தடா சர்க்கரைப் பொங்கலும், நூறு தடா வெண்ணையும் நேர்ந்து விடுகிறேன்!
(தடா என்றால் பாத்திரம் என்று அர்த்தம்...நீங்க அரசியல் பற்றியெல்லாம் ஏதும் தப்பா நினைச்சிக்காதீங்க :-)
நீ உண்ட பின், அதை உன் அடியவர்கள் எல்லாம் உண்டு, சேஷமாக வாழட்டும், சேமமாக வாழட்டும்! "
நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங் கொலோ
(- நாச்சியார் திருமொழி)
வெண்ணெய், அதை உருக்கி நெய், அதையே ஊற்றி அக்கார அடிசில்! - என்ன சாமர்த்தியமான வேண்டுதல் பாருங்க :-)
அக்காரம்=சர்க்கரை; அடிசில்=சோறு/பொங்கல்;
அக்கார அடிசில் = சர்க்கரைப் பொங்கல்!
இதைக் கேட்டவுடன் சர்க்கரையாய்க் கரைந்து விட்டார் கள்ளழகர்...
அவ்வளவு தான்...கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா, என்று அவள் கேட்டதைக் கொடுத்து விட்டார்.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
மருத கள்ளழகரை வேண்டிக்கிட்டா காதலில் உடனே வெற்றி!
பதிவுலக நண்பர்களில் காதலர்கள் யார் யாரு இருக்கீங்க? கை தூக்குங்க பார்க்கலாம்! மதுரை அழகர் கோவிலுக்கு டிக்கெட் எடுக்கணும்ல; அதான் கேட்டேன்! :-))
ஆனாப் பாருங்க....ஊர் மெச்ச, உலகம் போற்ற, நம்பிக்கு மாலையிடவில்லை நங்கை! அதான் தம்பதிகள் ஏற்கனவே மாலை மாற்றிக் கொண்டார்களே வில்லிபுத்தூரில்...இன்னும் என்ன? :-)
திருவரங்கத்தில் நம்பியிடம் சர்க்கரைப் பொங்கலாய் கரைந்து விட்டாள் நங்கை!
அவன் பாம்புப் படுக்கையில் மெல்லத் தன் காலை வைத்து,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி....அவன் மலர் மார்பைச் சேர்ந்து விட்டாள்.
பாம்பின் மேல் நாம் எல்லாம் கால் வைத்தால் பதறுவோம்! படையும் நடுங்குவோம்! ஆனால் அவள் ஏதோ ஏக்கமாய் முணுமுணுத்துக் கொண்டே ஏறிவிட்டாள்! அந்த ஏக்கத்தைக் கண்ட பச்சை மாமலைப் பாம்புக்கு, "மனதில் ஓர் எண்ணம்"!
சரி....அப்போ அவளுடைய வேண்டுதல்? - அவ்வளவு தான், அம்போ!!!
காந்திக் கணக்கு என்பார்களே - அதுவா? :-)
அம்மா இருந்திருந்தா நிறைவேத்தி வைச்சிருப்பா! அப்பாவுக்கு மகளைப் பிரிந்த துக்கமும், பாட்டெழுதும் பணியுமே சரியாகப் போய்விட்டது!
மூன்று நூற்றாண்டுகள் கழிந்து விட்டன!
ராமானுசர் வந்துதித்த கால கட்டம். அவர் ஆதிசேஷன் என்னும் அந்தப் பாம்பின் அம்சம்.
பழுத்த துறவி...ஆனால் படிப்பதோ காதல் கவிதை! - திருப்பாவை என்னும் காதல் கவிதை! திருப்பாவை ஜீயர் என்றே பெயர் அவருக்கு!
அரங்க மாநகரத்தில் அன்று பெருவிழா.
கோவிலில் அரங்கனுக்குத் தமிழை ஓதுகிறார்கள். அப்போது இந்த நாச்சியார் திருமொழியையும் சேர்த்துத் தான் ஓதுகிறார்கள்! "நூறு தடா" என்னும் வரிகள் வரும் போது ராமானுசருக்கு "தடார்" என்று ஒரு கலக்கம்!
அச்சோ! கோதையே சொன்னதைச் செய்யாமல் போனாளே! வாய்ச் சொல் வீரமோ என்று உலகத்தார் யாராச்சும் நாளை சொல்லி விட்டால், பழி யாருக்கு?
பதறினார்....துண்டை உதறினார்....எழுந்தோடினார்!
- எங்கே? நேரே மதுரை அழகர் கோவிலுக்குத் தான்!
நூறு தடா வெண்னெய், நூறு தடா சர்க்கரைப் பொங்கல்.....
கல்யாண சீர் வரிசைப் பாத்திரங்களில் எப்படி நிரப்புவார்களோ, அப்படி நிரப்பினார்கள். சுந்தர ராஜப் பெருமாள் என்னும் மாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாளின் நேர்ச்சையாக,
அவள் பெயரும் நட்சத்திரமும் சொல்லிக், கோதையின் சார்பாகச் சமர்பித்தார் அண்ணல்! - வேண்டுதல் நிறைவேறியது! கோதையின் வாக்கும் மெய்யானது!
காதலே ஜெயம்! ஜெயிக்க வைத்த மதுரை நம்பிக்கு ஜெயம்! என்று அனைவரும் ஆனந்தப்பட்டார்கள்.
ஆனால் ராமானுசருக்கு மட்டும் ஏனோ, ஆண்டாளைப் பார்க்க வேண்டும் போல் ஒரு உணர்வு!
"அம்மாடி...உன் ஆசை இதோ பூர்த்தியாகி விட்டது. இன்னும் என்ன ஒரே ஆழ்ந்த சிந்தனை? சிரி தாயி..." என்று சொல்ல வேண்டும் போல் ஒரு உந்துதல்...மதுரையில் காணிக்கையைச் செலுத்தி முடித்து, வில்லிபுத்தூருக்கு மீண்டும் ஒரே ஓட்டம்!
வில்லிபுத்தூர் கோவிலுக்குள் அவர் நுழைந்தது தான் தாமதம். அவருக்கு என்ன உணர்ச்சிகள் மனத்தில் ஓடினவோ, அதே உணர்ச்சிகள் அனைத்தும் கல்லில் சிலையாய் நிற்கும் ஆண்டாளுக்கும்!
"நம் கோயில் அண்ணன் வந்தாரே", என்று அர்ச்சகர் மேல் ஆவேசித்துச் சொன்னாள்! கருவறையில் இருந்து ஓடி வருகிறாள்...அர்ச்சகரின் உருவில்!..தன் புதிய அண்ணனை வரவேற்க! எல்லாருக்கும் ஒரே திகைப்பு!
அந்த அர்ச்சகருக்கு நல்ல நாளிலேயே தமிழ் அவ்வளவாக வராது! இன்றோ மடை திறந்த வெள்ளமாய் கவி பாடி ஓடி வருகிறார். வருபவள் அவளே அல்லவா?
அர்த்த மண்டபம் தாண்டியும் வந்து விட்டாள்...ராமானுசரைக் கையால் பிடித்து அழைத்து, அண்ணா என்று அன்பு காட்டினாள் கோதை!
எட்டாம் நூற்றாண்டுத் தங்கையும், பதினோராம் நூற்றாண்டு அண்ணனும் அளவளாவி மகிழ்ந்தார்கள்!
எதுக்கு ஆண்டாள் ராமானுசரைப், போயும் போயும், அண்ணா என்று கூப்பிட வேண்டும்?
ரக்ஷா பந்தன் - அதாங்க ராக்கி - கையில் கட்டி விடுவாங்களே - ஒடனே சிஸ்டர் ஆயிடுவாங்களே...அப்ப அண்ணன்கள் எல்லாரும் என்ன பண்ணுவாய்ங்க? தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுப்பாங்க!
அட, நம்மூரு கல்யாணத்துல கூட எடுத்துக்குங்க!
மணப்பெண்ணின் சகோதரன் தான், காசி யாத்திரைக்குக் கூட வரான், கால் கழுவி விடறான், பொரி வார்த்து பெண்ணைக் கொடுக்கறான்! - இப்படியான அண்ணன் தங்கை உறவு காலம் எல்லாம் தொடரும் ஒன்று!
ஒவ்வொரு பண்டிகைக்கும் அண்ணன் வீட்டுச் சீரைக் கேட்கும் தங்கச்சிங்க யாராச்சும் இருக்கீங்களா? :-)
காதலுக்குக் கண் தானில்லை! - ஆனால்
அன்புக்கோ காலமே இல்லை!! - நூற்றாண்டாவது? ஒன்றாவது?
இன்றும் வில்லிபுத்தூர் ஆலயத்தில் அர்த்த மண்டபதையும் சேர்த்து தான், கருவறையாகவே கருதப்படுகிறது! அங்கு ஆண்டாள் கால் பதித்த காரணத்தால்! அதற்கு முன்பே நாம் எல்லாம் நின்று விட வேண்டும், அதற்கு மேல் அனுமதி இல்லை!
இப்படி ஆண்டாளுக்கே அண்ணன் ஆன காரணத்தால் தான்....அவள் மேல் பாடப்பட்ட வாழித் திருநாமம் என்னும் பாட்டில்,
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே என்று பாடினார்கள்!
பெரும்பூதூர் மாமுனி = ராமானுசர்
அவருக்கு பின் ஆன தங்கை = ஆண்டாள்...திருவடிகளே சரணம்!
அடியே கோதை...
இன்னும் கொஞ்ச நாளில் உன் பிறந்த நாளடி! திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்த அழகியே...உனக்கு மட்டுமா பிறந்த நாள்? எங்கள் பாரத தேசமும் இதே நாளில் தானே அன்று புதிதாகப் பிறந்தது!
(இந்த ஆண்டு Aug 15, அன்று ஆடிப் பூரம் வருகிறது)
அதை ஒட்டி, ஆடிப் பூரம் - தொடர் பதிவுகளாய் - உன்னைப் பலப்பல கோணங்களில் காண ஆசை! அதுக்கு வில்லிபுத்தூர் வரப் போகிறோம்!
இதோ, உனக்கு பிறந்த நாள் பரிசுகளாய், பதிவுகள், தொடரும்...
Read more »
சரி, அதெல்லாம் விடுங்க.
இங்கே எத்தனைப் பதிவர்கள், தங்கச்சி ஆசைப்பட்டுக் கேக்க, ஒரு அண்ணனாய் நீங்க வாங்கிக் கொடுத்திருக்கீங்க?
வாங்கிக் கொடுத்தீங்களா,இல்லை நல்லா ஓங்கிக் கொடுத்தீங்களா?:-)
பாசமலர் சிவாஜி-சாவித்திரி, "தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி" பாட்டு பாடும் டி.ராஜேந்தர் லெவலுக்கு எல்லாம் நீங்க இறங்கி யோசிக்க வேண்டாம்! தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்திருக்கீங்களா? இல்லையா??
நீங்க பேச்சிலர்-னா, சும்மா, கூச்சப்படாமச் சொல்லுங்க!
கல்யாணம் ஆகியிருந்தா, சும்மா, பயப்படாமச் சொல்லுங்க! :-)
ஆனா இன்னிக்கி நாம பாக்கப் போற கதை, கொஞ்சம் வித்தியாசமானது!
தங்கையோ எட்டாம் நூற்றாண்டு!
அண்ணனோ பதினோராம் நூற்றாண்டு!
ச்சே....இது எப்படிச் சாத்தியம்? அச்சோ....என்னை அடிக்க வாரீங்களா?
வ.வா.ச-வில் எழுதுவதால், இங்கேயும் கலாய்க்கத் தொடங்கி விட்டேன் என்று கும்ம வரீங்களா? பொறுமை! பொறுமை! மேலே படியுங்கள்!
அவள் ஒரு தங்கை - மாலை இட்ட மங்கை - நளினம் கொஞ்சும் நற்குண நங்கை! பாண்டி நாட்டாள் - தமிழ்ப் பாட்டாள்!
காதல் கவிதைகள் புனைவதில் அவளை மிஞ்ச உலகில் யாரும் கிடையாது!
அவளுக்கு அப்பா மட்டும் தான். அம்மா இருந்திருந்தால் அவள் வயதுக்குப் பல விஷயம் பேசி இருப்பாள். ஆனா அதுக்காக மனசுக்குப் பூட்டு போட்டு வைக்க முடியுமா?...அதுவும் கவிதைகள் ஊற்றெடுக்கும் கங்கை உள்ளத்துக்கு?
அவள், தன் மனதை, ஒரு மன்னனுக்குப் பறிகொடுத்தாள்.
அவனோ குழல் அழகன், கண் அழகன், வாய் அழகன்,
கொப்பூழில் எழு கமலப் பூ அழகன்! தன்னை அன்பால் நாடி வந்த எவரையும், எந்தப் பேதமும் காணாது காப்பவன்!
ஆனால் அவனை அடைவது என்னமோ அவ்வளவு சுலபமான விஷயமாகத் தெரியவில்லை! கழுவும் மீனில் நழுவும் மீன் என்பார்களே! அது போல!
பாடி ஆகி விட்டது, மாலை சூடி ஆகி விட்டது!
தூதும் விட்டு விட்டாள், நோன்பும் நோற்று விட்டாள்!
ஹூஹூம்....ஒன்றுமே நடக்க வில்லை! தந்தையின் உதவியும் அவளுக்குப் பெரிதாக உதவவில்லை! எல்லாம் காதல் படுத்தும் பாடு!
அவன் வியர்வையிலும், எச்சிலிலும் கூடத் துளசி மணமே தெரிந்தது அந்தப் பேதைப் பெண்ணுக்கு!
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை அல்லவா? காதலுக்கும் தெய்வம் தானே துணை! ஓ...அதனால் தான் கோவில்களில் இப்போதெல்லாம் அதிக அளவில் இளைஞர், இளைஞி கூட்டங்களோ? கற்பூர ஜோதிக்குப் பதில் காதல் ஜோதிகளோ? :-))
மதுரைக்கு அருகில் உள்ள ஊர், திருமால் இருஞ் சோலை; அழகர் கோவில்-னு சொன்னா இன்னும் நல்லாத் தெரியும்! ஏற்கனவே காதலில் வெற்றி பெற்ற முருகன் கூட அங்கு தான் இருக்கிறான்! சரியான இடம் தான் மருதகாரய்ங்களுக்கு!
அங்கு தோசைப் பிரசாதம் மிகப் பிரபலம்!
அங்கு ஆசைப் பிரசாதம் பெற, வேண்டிக் கொள்கிறாள் இந்தப் பேதை!
"கள்ளழகரே, கள்ளழகரே! என் காதலைக் கனிவித்துக் கொடு!
உனக்கு நூறு தடா சர்க்கரைப் பொங்கலும், நூறு தடா வெண்ணையும் நேர்ந்து விடுகிறேன்!
(தடா என்றால் பாத்திரம் என்று அர்த்தம்...நீங்க அரசியல் பற்றியெல்லாம் ஏதும் தப்பா நினைச்சிக்காதீங்க :-)
நீ உண்ட பின், அதை உன் அடியவர்கள் எல்லாம் உண்டு, சேஷமாக வாழட்டும், சேமமாக வாழட்டும்! "
நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங் கொலோ
(- நாச்சியார் திருமொழி)
வெண்ணெய், அதை உருக்கி நெய், அதையே ஊற்றி அக்கார அடிசில்! - என்ன சாமர்த்தியமான வேண்டுதல் பாருங்க :-)
அக்காரம்=சர்க்கரை; அடிசில்=சோறு/பொங்கல்;
அக்கார அடிசில் = சர்க்கரைப் பொங்கல்!
இதைக் கேட்டவுடன் சர்க்கரையாய்க் கரைந்து விட்டார் கள்ளழகர்...
அவ்வளவு தான்...கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா, என்று அவள் கேட்டதைக் கொடுத்து விட்டார்.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
மருத கள்ளழகரை வேண்டிக்கிட்டா காதலில் உடனே வெற்றி!
பதிவுலக நண்பர்களில் காதலர்கள் யார் யாரு இருக்கீங்க? கை தூக்குங்க பார்க்கலாம்! மதுரை அழகர் கோவிலுக்கு டிக்கெட் எடுக்கணும்ல; அதான் கேட்டேன்! :-))
![]() | ![]() |
ஆனாப் பாருங்க....ஊர் மெச்ச, உலகம் போற்ற, நம்பிக்கு மாலையிடவில்லை நங்கை! அதான் தம்பதிகள் ஏற்கனவே மாலை மாற்றிக் கொண்டார்களே வில்லிபுத்தூரில்...இன்னும் என்ன? :-)
திருவரங்கத்தில் நம்பியிடம் சர்க்கரைப் பொங்கலாய் கரைந்து விட்டாள் நங்கை!
அவன் பாம்புப் படுக்கையில் மெல்லத் தன் காலை வைத்து,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி....அவன் மலர் மார்பைச் சேர்ந்து விட்டாள்.
பாம்பின் மேல் நாம் எல்லாம் கால் வைத்தால் பதறுவோம்! படையும் நடுங்குவோம்! ஆனால் அவள் ஏதோ ஏக்கமாய் முணுமுணுத்துக் கொண்டே ஏறிவிட்டாள்! அந்த ஏக்கத்தைக் கண்ட பச்சை மாமலைப் பாம்புக்கு, "மனதில் ஓர் எண்ணம்"!
சரி....அப்போ அவளுடைய வேண்டுதல்? - அவ்வளவு தான், அம்போ!!!
காந்திக் கணக்கு என்பார்களே - அதுவா? :-)
அம்மா இருந்திருந்தா நிறைவேத்தி வைச்சிருப்பா! அப்பாவுக்கு மகளைப் பிரிந்த துக்கமும், பாட்டெழுதும் பணியுமே சரியாகப் போய்விட்டது!
மூன்று நூற்றாண்டுகள் கழிந்து விட்டன!
ராமானுசர் வந்துதித்த கால கட்டம். அவர் ஆதிசேஷன் என்னும் அந்தப் பாம்பின் அம்சம்.
பழுத்த துறவி...ஆனால் படிப்பதோ காதல் கவிதை! - திருப்பாவை என்னும் காதல் கவிதை! திருப்பாவை ஜீயர் என்றே பெயர் அவருக்கு!
அரங்க மாநகரத்தில் அன்று பெருவிழா.
கோவிலில் அரங்கனுக்குத் தமிழை ஓதுகிறார்கள். அப்போது இந்த நாச்சியார் திருமொழியையும் சேர்த்துத் தான் ஓதுகிறார்கள்! "நூறு தடா" என்னும் வரிகள் வரும் போது ராமானுசருக்கு "தடார்" என்று ஒரு கலக்கம்!
அச்சோ! கோதையே சொன்னதைச் செய்யாமல் போனாளே! வாய்ச் சொல் வீரமோ என்று உலகத்தார் யாராச்சும் நாளை சொல்லி விட்டால், பழி யாருக்கு?
பதறினார்....துண்டை உதறினார்....எழுந்தோடினார்!
- எங்கே? நேரே மதுரை அழகர் கோவிலுக்குத் தான்!
நூறு தடா வெண்னெய், நூறு தடா சர்க்கரைப் பொங்கல்.....
கல்யாண சீர் வரிசைப் பாத்திரங்களில் எப்படி நிரப்புவார்களோ, அப்படி நிரப்பினார்கள். சுந்தர ராஜப் பெருமாள் என்னும் மாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாளின் நேர்ச்சையாக,
அவள் பெயரும் நட்சத்திரமும் சொல்லிக், கோதையின் சார்பாகச் சமர்பித்தார் அண்ணல்! - வேண்டுதல் நிறைவேறியது! கோதையின் வாக்கும் மெய்யானது!
காதலே ஜெயம்! ஜெயிக்க வைத்த மதுரை நம்பிக்கு ஜெயம்! என்று அனைவரும் ஆனந்தப்பட்டார்கள்.
ஆனால் ராமானுசருக்கு மட்டும் ஏனோ, ஆண்டாளைப் பார்க்க வேண்டும் போல் ஒரு உணர்வு!
"அம்மாடி...உன் ஆசை இதோ பூர்த்தியாகி விட்டது. இன்னும் என்ன ஒரே ஆழ்ந்த சிந்தனை? சிரி தாயி..." என்று சொல்ல வேண்டும் போல் ஒரு உந்துதல்...மதுரையில் காணிக்கையைச் செலுத்தி முடித்து, வில்லிபுத்தூருக்கு மீண்டும் ஒரே ஓட்டம்!
வில்லிபுத்தூர் கோவிலுக்குள் அவர் நுழைந்தது தான் தாமதம். அவருக்கு என்ன உணர்ச்சிகள் மனத்தில் ஓடினவோ, அதே உணர்ச்சிகள் அனைத்தும் கல்லில் சிலையாய் நிற்கும் ஆண்டாளுக்கும்!
"நம் கோயில் அண்ணன் வந்தாரே", என்று அர்ச்சகர் மேல் ஆவேசித்துச் சொன்னாள்! கருவறையில் இருந்து ஓடி வருகிறாள்...அர்ச்சகரின் உருவில்!..தன் புதிய அண்ணனை வரவேற்க! எல்லாருக்கும் ஒரே திகைப்பு!
அந்த அர்ச்சகருக்கு நல்ல நாளிலேயே தமிழ் அவ்வளவாக வராது! இன்றோ மடை திறந்த வெள்ளமாய் கவி பாடி ஓடி வருகிறார். வருபவள் அவளே அல்லவா?
![]() | ![]() |
அர்த்த மண்டபம் தாண்டியும் வந்து விட்டாள்...ராமானுசரைக் கையால் பிடித்து அழைத்து, அண்ணா என்று அன்பு காட்டினாள் கோதை!
எட்டாம் நூற்றாண்டுத் தங்கையும், பதினோராம் நூற்றாண்டு அண்ணனும் அளவளாவி மகிழ்ந்தார்கள்!
எதுக்கு ஆண்டாள் ராமானுசரைப், போயும் போயும், அண்ணா என்று கூப்பிட வேண்டும்?
ரக்ஷா பந்தன் - அதாங்க ராக்கி - கையில் கட்டி விடுவாங்களே - ஒடனே சிஸ்டர் ஆயிடுவாங்களே...அப்ப அண்ணன்கள் எல்லாரும் என்ன பண்ணுவாய்ங்க? தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுப்பாங்க!
அட, நம்மூரு கல்யாணத்துல கூட எடுத்துக்குங்க!
மணப்பெண்ணின் சகோதரன் தான், காசி யாத்திரைக்குக் கூட வரான், கால் கழுவி விடறான், பொரி வார்த்து பெண்ணைக் கொடுக்கறான்! - இப்படியான அண்ணன் தங்கை உறவு காலம் எல்லாம் தொடரும் ஒன்று!
ஒவ்வொரு பண்டிகைக்கும் அண்ணன் வீட்டுச் சீரைக் கேட்கும் தங்கச்சிங்க யாராச்சும் இருக்கீங்களா? :-)
காதலுக்குக் கண் தானில்லை! - ஆனால்
அன்புக்கோ காலமே இல்லை!! - நூற்றாண்டாவது? ஒன்றாவது?
இன்றும் வில்லிபுத்தூர் ஆலயத்தில் அர்த்த மண்டபதையும் சேர்த்து தான், கருவறையாகவே கருதப்படுகிறது! அங்கு ஆண்டாள் கால் பதித்த காரணத்தால்! அதற்கு முன்பே நாம் எல்லாம் நின்று விட வேண்டும், அதற்கு மேல் அனுமதி இல்லை!
இப்படி ஆண்டாளுக்கே அண்ணன் ஆன காரணத்தால் தான்....அவள் மேல் பாடப்பட்ட வாழித் திருநாமம் என்னும் பாட்டில்,
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே என்று பாடினார்கள்!
பெரும்பூதூர் மாமுனி = ராமானுசர்
அவருக்கு பின் ஆன தங்கை = ஆண்டாள்...திருவடிகளே சரணம்!
அடியே கோதை...
இன்னும் கொஞ்ச நாளில் உன் பிறந்த நாளடி! திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்த அழகியே...உனக்கு மட்டுமா பிறந்த நாள்? எங்கள் பாரத தேசமும் இதே நாளில் தானே அன்று புதிதாகப் பிறந்தது!
(இந்த ஆண்டு Aug 15, அன்று ஆடிப் பூரம் வருகிறது)
அதை ஒட்டி, ஆடிப் பூரம் - தொடர் பதிவுகளாய் - உன்னைப் பலப்பல கோணங்களில் காண ஆசை! அதுக்கு வில்லிபுத்தூர் வரப் போகிறோம்!
இதோ, உனக்கு பிறந்த நாள் பரிசுகளாய், பதிவுகள், தொடரும்...











