Showing posts with label Kissing for Dummies. Show all posts
Showing posts with label Kissing for Dummies. Show all posts

Wednesday, August 28, 2013

கண்ணன் பிறந்தநாள்: Kissing For Dummies!

மக்களே... (இது 18+ பதிவு:) சற்று "விழிப்புடன்" படிக்கவும்:)

என் மனத்துக்கினிய தோழி - தென் பாண்டித் தெள்ளமுது,
தமிழ்த் தாய்க்கு நல்லாள் - காமக் காதலர்க்கு வல்லாள்
...அவ காதலனுக்கு இன்னிக்கு பொறந்த நாளாம் (Aug-28-2013)

அவனக்கு நான் எதுக்கு-ய்யா வாழ்த்து சொல்லணும்?
சரி, சரி, முறைக்காதே டீ! உனக்காகச் சொல்லுறேன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கண்ணா! from me & my murugavan:)
* சேலை திருடறது, பானை உடைக்குறது = இதெல்லாம் தான் ஒங்கூருல Romance-ஆ?
* டேய் வெண்ணைய்.. = Atleast today, Learn from my dearest தோழி, What is Romance?

பின்னிய கூந்தல் கருநிற நாகம்..
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்


என்னடா, ஒரு பொண்ணு கிட்ட போயி.. பையன் எப்படி. இதெல்லாம்? -ன்னு வெட்கப்படாதே!
பெண்கள், ஆண்களை விட........ :)

கொஞ்சம் தூண்டி விடணும், அவ்ளோ தான்! அப்பறம், இன்ப தீபம் அணையவே அணையாது:)


இச்சு தா, இச்சு தா! கன்னத்துல இச்சு தா
-ன்னு "ரன்" பாடல் போலவே.. நாச்சியார் திருமொழியில் பாடலாம் தான்; ஆனா பாசுரச் சந்தம்/ இலக்கிய மருவாதை-ன்னு ஒன்னு இருக்குல்ல? :)

இருப்பதிலேயே சுவையான சுவை எது? = "இச்-" சுவை!
அதான் இன்னொருவர் பாட்டை, ஆண்டாள் "இச்" சுவையா மாத்திப் பாடுறா! :)

"இச்"-சுவை தவிர யான் போய், 
இந்திர லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன், 

அரங்க மா நகர் உளானே!

Eyes over Eyes, Lips over Lips, Hips over Hips, Everything over Everything
* முத்தத்திலேயே துவங்கி, முத்தத்திலேயே முடிப்பது = ஒரு பெரிய கலை!
* "ஏழு பிறவி முத்தம்" கொடுப்பது எப்படி? = கோதை கிட்டயே கேட்கலாமா?
Here we go... Java For Dummies அல்ல! = Kissing For Dummies :)



1. முதலில் கோச்சிக்கணும்! 
அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்!:) 

ஏன்னா...
கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்கு = சுவை அதிகம்!:)

அட, வேங்கடத்தில் உலாவும் கொழுத்த மேகங்களே! போயி உங்க ஆளிடம் சொல்லுங்க!
திரு-வேங்கடம்-உடையானை இந்த உலகத்தில் இனி ஒருத்தனும் மதிக்க மாட்டான்!

எப்பவும் அவனே கதி -ன்னு கிடக்குற என்னை, அவன் கேவலமா நினைச்சிட்டான்-ல்ல?
இவ இளிச்ச வாயி, அன்பைத் தானாவே கொடுத்துருவா-ன்னு நினைச்சிட்டான்-ல்ல?

வேங்கடவா...
கதி என்றும் தான் ஆவான், கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் - உன்னை வையகத்தார் மதியாரே!




2. இப்போ கோவம் தணிக்க அவன் வந்தாகணும் இல்லையா? 

அப்போ என்ன பண்ணலாம்? 
உடனே "இச்" கொடுத்துறதா? No No! :)

அவன் ஆடையைப் பிடிச்சி இழுத்து அவனை வம்பு செய்யணும்!

அது என்ன, எப்பமே அவன் தான் சேலையை ஒளிக்கணுமா?
= அவன் "உள்ளாடை"-யை  நான் ஒளிச்சி வச்சா என்ன?:)))

அவன் உள்ளாடை வாசத்தில் = அவன் வாசம் வீசுதே! 
அந்தத் துணியை என் மேல இறுக்கமாச் சுத்திக்குவேன்!

அவனுக்குத் தெரியாமல், அவன் ஆடையை, அவன் Suitcase-இல் இருந்து களவாடி, என் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுகிறேன்! :)

பெண்ணின் வருத்தம் அறியாத,
பெருமான் அரையில் (இடுப்பில்) - பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை - 
வாட்டம் தணிய வீசீரே!


3. அடுத்து??? 
ஆளு கிட்டக்க கிட்டக்க வரான்! 

கண்ணு படக் படக்-ன்னு அடிச்சிக்குது! 
இதயம் தடக் தடக்-ன்னு அடிச்சிக்குது!

ச்சே! என்ன வீரம் பேசினாலும், அவன் கிட்டக்க வரும் போது மட்டும்..
இந்த மனசு, Last Minute கூட்டணிக் கட்சியா மாறிடுதே! :)

அய்யோ! என் உதடே! அவன் கிட்டக்க போயிறாத!
அதுக்கப்புறம் நான் கண்ணை மூடிக்குவேனா?
அவன் "உடம்பழகை" முழுக்கப் பார்க்க முடியாம போயீரும்!

* தொடர் வண்டியில் என்னுடன் விசில் அடித்து வரும் = வாய் அழகு!
* என்னை முழுங்குவது போல் பார்க்கும் = கண் அழகு!
* அவனுடைய தொப்புளில் (கொப்பூழ்) = நான் விடும் பம்பரம் அழகு!
* அதற்கும் கீழே = அவன் குழல் அழகு!:)))))))

சேச்சே, crowd பாக்குது, கீழே வேணாம்! மேலே -ன்னு மாத்தீருவோம்;
அவன் முடியைக் கோதி விடும் = (மேல்) குழல் அழகு!

அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும், முத்தம் கொடுப்பதற்கு முன்பே பார்த்துடணும்;
முத்தத்தில் கண்ணை மூடிட்டா, அப்பால அதெல்லாம் பாக்க முடியாமப் போயீரும்:)

எனவே..
* முதலில் மேலோர் = கண்கள்!
* அப்பறம் கீழோர் = இதழ்கள்!

* அதனினும் கீழோன் = குழல்கள்!

எழிலுடைய அம்மனை மீர்! என் அரங்கத்து இன் அமுதர்,
குழல் அழகர் -> வாய் அழகர் -> 
கண் அழகர்! 
கொப்பூழில் = எழு கமலப் பூ....
எழு கமலப் பூ அழகர்! எம்மானார்! எம்மானார்!


4. அய்யோ! அவன் பச்சைக் கர்ப்பூர நெடி...
என் பச்சை உடம்பை என்னமோ பண்ணுதே! 

அவன் கிட்டக்க வந்துட்ட்டான்! 
அவன் உதடு கிட்ட்டக்க வந்துரிச்சி!

என்ன tooth paste use பண்ணுவான்-ன்னு தெரியலையே?
சரியான வெண்ணையா இருப்பானோ??? வெண்ணைய் வீச்சம் அடிக்குதே!
Pepsodent Butter-ன்னு புது Brand ஏதாச்சும் வந்திருக்கா என்ன? :)

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் = தித்தித்து இருக்குமோ?


மருப்பு ஒசித்த மாதவன் தன் "வாய்ச் சுவையும்+நாற்றமும்"
விருப்புற்றுக் கேட்கின்றேன், சொல் ஆழி வெண் சங்கே!


அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
அண்ணலும்  தேக்கினான்! அவளும் தேக்கினாள்!


* அடியார்க்கு = நீர்த் தீர்த்தம்! 
* எனக்கோ அவன் = வாய்த் தீர்த்தம்!

என் எச்சிலை, அவன் பருகி...
அவன் எச்சிலை, அதில் கலந்து...
மீண்டும் எனக்கே ஊட்டி விடுவான் = என்னெச்சில் ருசி, எனக்கே தெரிகிறது!!!

சேய்த் தீர்த்தமாய் நின்ற - செங்கண் மால் தன்னுடய
"வாய்த் தீர்த்தம்" பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே!


5. முத்தக் கலை முடித்த பின்னர்...

தேன் உண்ட மயக்கத்தில், "வாழ்வின் பயனை அடைந்தேன்"-ன்னு டயலாக் விட்டுறாதே!
லேசு மாசா, "Hmm, ’twaz Okay" என்பது போல் ஒரு லுக்கு விட்டுறணும்! :)


அப்போ தானே அடுத்த முறை, இன்னும் அறிவா/அழகா வேறு மாதிரி முயல்வான்? :)

ஞாபகம் வச்சிக்கடீ கோதை!
* வேடனுக்குத் தானே சென்று விழும் பறவையை விட..
* வேட்டையாடி விழும் பறவை மேலத் தான் காதல் அதிகம்!

அதனால் நீ அவனிடம் விழ நினைச்சாலும்...
வேட்டை நாடகம் நடத்தி, அப்புறமா விழு! :)

மாலாய்ப் பிறந்த நம்பியை, 
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்கள் உரைப்பானை,
இங்கே போதக் கண்டீரே?


ஏலாப் பொய் சொல்லும் Porkki-ன்னு திட்டி அனுப்பு!
அப்போ தான் ஏக்கமாத் தூங்கப் போவான்!
அடுத்த முத்தச் சுவை, இன்னும் சுவை பெறும்! :))

பாவம், ரொம்ப உழைச்சவனை, வாயராப் பாராட்டலையே? -ன்னு நினைக்குறியா?
அவன் தூங்கும் போது, அவனையும் அறியாமல், உன் உதட்டுச் சாயத்தை அவன் கன்னத்தில் பூசு!  அவனுக்கு = சிவப்பு மையால் மதிப்பெண் வழங்கு!


கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!


"அடியே! கோதை! அவனைக் கட்டிக்கிட்டா எங்கேடி இருப்பாய்? அவனுக்கு-ன்னு தனியா வீடு கூடக் கெடையாது!
வெளியில பார்க்க பணக்கார "மலை-வீடு" போல இருக்கும்; ஆனா மொத்தமா முப்பது நிமிஷம் கூடத் தூங்க வுட மாட்டானுங்க! :)

108 வீடு வீடாச் சுத்தணும்!
வேர்வை பொங்கி வழியும் அவன் கரு-அறையில்!
A/C கூட இருக்காது!
பாம்புப் படுக்கை! சொர சொர-ன்னு இருக்கும்! என்னடி பண்ணுவ?"

Kothai Says:
"Just a small room, power cuts ok...
Even with a lil' candle light,
His sight is tight that makes me light!

High Definition in his Eyes...
Sub Woofer as he Whispers...
Home Theater in his Prank
That makes me really crank...
Armani, CK, Obsession
Are dull and dumbest possession!
His fragrance comes and fascinates
The "Smell of my Lover" oscillates!

His arms have rooms. Thatz my home! Thatz my home!

* எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
* "உன்" தன்னோடு!
* உறவேல் இங்கு ஒழிக்க ஒழியாது!

அவனுக்கு என்னை "விதி!" = நான் கடவா வண்ணமே நல்கு!

அவன் களைத்துப் படுத்தாலும் விட மாட்டேன்...
என் கூந்தலில் உதிர்ந்த... முல்லைச் சரத்தின் வாழை நாரால்...
அவன் கைகளையும் கால்களையும் - கட்டிலில் கட்டிப் போடுவேன்
நாளை காலையும், அவன் = எனக்கே! எனக்கே!!!

பிறந்த நாள் இரவில்...
அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் = தன்னை "ஈ"ந்தாள்! 
= முருகாபகர் ஆர்வம் "ஈ"!

குத்து விளக்கெரியக்...
கோட்டுக் கால் கட்டில் மேல்...
"மெத்" என்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி...

கொத்து அலர் பூங் குழல்...
நப்பின்னை கொங்கை மேல்...
கொங்கை மேல்ல்ல்ல் வைத்துக் கிடந்த மலர் மார்பா = உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Read more »

Saturday, July 25, 2009

கோதையின் பிறந்தநாள்: Kissing For Dummies

மக்களே, என் மனத்துக்கினிய தோழி, என் மன்னவன் காதலி,
தென் பாண்டித் தெள்ளமுது, பேரழகுப் பெட்டகம்,
தமிழன்னையே விரும்பிச் சுவைக்கும் தமிழ் பேச வல்லாள், காதலர்க்கு நல்லாள்
...அவளுக்கு இன்று பிறந்த நாள் (Jul-25-2009, ஆடிப் பூரம்)!

திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
தோள் மேல் கை போட்டுப் பேச வல்ல தோழியே!
நாள் எல்லாம் உன் நட்பில் நானும் வாழி வாழியே!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்-டீ, கோதை!
Happy Birthday dee, my sweet lil' village girl! :)

அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, இன்னும் பல நூற்றாண்டு இரு!


பின்னிய கூந்தல் கருநிற நாகம்..
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்


மற்ற ஆழ்வார் பாடல்களை எல்லாம் கோதை பாடியிருந்தா எப்படிப் பாடி இருப்பா? சும்மா கற்பனைக் குதிரையில் போய் வருவோமா?
வாங்க மக்கா! ஆடல் மா என்னும் வெண் புரவி காத்துக்கிட்டு இருக்கு! :) மொதல்ல அரங்கத்தில் இருந்தே ஆரம்பிப்போம்!

இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே!
- இது தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பாடல்! இதையே என் தோழி ஆண்டாள் பாடினா?

இச்சு தா, இச்சு தா! கன்னத்துல இச்சு தா-ன்னு "ரன்" படப் பாடல் போல பாடலாம் தான்! ஆனால் பாசுரச் சந்தம் வரணும்-ல்ல? இலக்கிய மருவாதை-ன்னு ஒன்னு இருக்குல்ல? :)

இருப்பதிலேயே சுவையான சுவை எது? = "இச்-இச்" சுவை!
அதான் ஆண்டாள் "இச்" சுவையைப் பாடுகிறாள்! :)
"இச்" சுவையைத் தவிர, இந்திர லோகத்துச் சுகமே கொடுத்தாலும் வேணவே வேணாம் என்கிறாள்! :)

"இச்" சுவை தவிர யான் போய், இந்திர லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகர் உளானே!


காதல் விளையாட்டை...முத்தத்திலேயே துவங்கி, முத்தத்திலேயே முடிப்பது என்பது ஒரு பெரிய கலை!
ஏழு ஜென்ம பந்தத்து முத்தம் கொடுப்பது எப்படி?
கோதை கிட்டயே கேட்கலாம் வாரீகளா?
Here we go...முத்தம் For Dummies :)



1. முதலில் கோச்சிக்கணும்! அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்! :) ஏன்னா, கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்குச் சுவை அதிகம்! :)

அட, வேங்கடத்தில் உலாவும் கொழுத்த மேகங்களே! போயி உங்க ஆளிடம் சொல்லுங்க! திரு-வேங்கடம்-உடையானை இந்த உலகத்தில் ஒருத்தனும் மதிக்க மாட்டான்!
எப்பவும் அவனே கதி என்று கிடந்த என்னை, அவன் கேவலமா நினைச்சிட்டான்-ல்ல? இவ இளிச்ச வாயி, அன்பைத் தானாவே கொடுத்துருவா-ன்னு நினைச்சிட்டான்-ல்ல?

கதி என்றும் தான் ஆவான்,
கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல்
வையகத்தார் மதியாரே!



2. இப்போ கோவம் தணிக்க அவன் வந்தாகணும் இல்லையா? அப்போ என்ன பண்ணனும்? உடனே "இச்" கொடுத்துறதா? நோ நோ! :)

அவன் ஆடையைப் பிடித்து இழுத்து அவனை வம்பு செய்யணும்! அது என்ன எப்பமே அவன் தான் சேலையை ஒளிக்கணுமா? அவன் இடுப்புத் துணியை நான் ஒளிச்சி வச்சா என்ன?

அவன் இடுப்புத் துணியின் வாசத்தில் அவன் வாசம் வீசுகிறதே! அந்தத் துணியைப் பிடித்திழுத்து என் மேல் சுற்றிக் கொள்கிறேன்!
அவனுக்குத் தெரியாமல், அவன் ஆடையை, அவன் சூட்கேசில் இருந்து களவாடி, என் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுகிறேன்! :)

பெண்ணின் வருத்தம் அறியாத,
பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை,
வாட்டம் தணிய வீசீரே!



3. அடுத்து??? ஆளு கிட்டக்க கிட்டக்க வரான்! கண்ணு படக் படக்-ன்னு அடிச்சிக்குது! இதயம் தடக் தடக்-ன்னு அடிச்சிக்குது!
ச்சே! என்ன வீரம் பேசினாலும், அவன் கிட்டக்க வரும் போது மட்டும் மனசு லாஸ்ட் மினிட் கூட்டணிக் கட்சியா மாறிடுதே! :)

அய்யோ! என் உதடே! அவன் கிட்டக்க போயிறாதே! அதுக்கப்புறம் நானோ கண்ணை மூடிக்குவேன்! அதுனால அவனைச் சரியாப் பார்க்க முடியாது போயிடும்!

* அவன் முடியைக் கோதி விடும் குழல் அழகு!
* தொடர் வண்டியில் என்னுடன் விசில் அடித்து வரும் வாய் அழகு!
* என்னை முழுங்குவது போல் பார்க்கும் கண் அழகு!
* அவனுடைய தொப்புளில் (கொப்பூழ்) நான் விடும் பம்பரம் அழகு!

அதையெல்லாம் நான் முத்தம் கொடுப்பதற்கு முன்பே பார்த்து விடுகிறேன்! அதுக்கு அப்பறமா என் மூடின கண்ணு மூடினது தான்! :)
எனவே, இதழொடு இதழ் கலக்கும் முன், கண்ணோடு கண் கலக்கட்டும்!
* முதலில் மேலோர் = கண்கள்!
* அப்பறம் தான் கீழோர் = இதழ்கள்!

எழிலுடைய அம்மனை மீர்! என் அரங்கத்து இன் அமுதர்,
குழல் அழகர்! வாய் அழகர்! கண் அழகர்! கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர்! எம்மானார்! எம்மானார்!




4. ஹைய்யோ! அவன் பச்சைக் கர்ப்பூர நெடி என் பச்சை உடம்பை என்னமோ பண்ணுதே! அவன் கிட்டக்க வந்துட்ட்ட்ட்ட்ட்டான்! அவன் உதடுகள் கிட்ட்ட்ட்ட்ட்டக்க வந்துரிச்சி!

என்ன டூத் பேஸ்ட் யூஸ் பண்ணுவான்-ன்னு தெரியலையே?
சரியான வெண்ணையா இருப்பானோ??? வெண்ணைய் வீச்சம் அடிக்குதே!
Pepsodent Butter-ன்னு புது பிராண்ட் ஏதாச்சும் வந்திருக்கா என்ன? :)

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் "வாய்ச் சுவையும்+நாற்றமும்"
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே!

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
அண்ணலும் தேக்கினான்! அவளும் தேக்கினாள்!

சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடய
"வாய்த் தீர்த்தம்" பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே!


அடியார்க்கு நீர்த் தீர்த்தம்! எனக்கோ அவன் வாய்த் தீர்த்தம்!
* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம்! = உன்-என் வாழ்வில், செயல் வெற்றி!
* இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம்! = உன்-என் வாழ்வில், அறன் வலியுறுத்தல்!
* மூன்றாம் தீர்த்தம் = த்ரிதீயம் மோக்ஷ ப்ரோக்தம்! = உன்-என் வாழ்வில், வாழ்வாங்கு வாழல்!


5. முத்தம் கொடுத்து முடித்த பின்னர், தேன் உண்ட மயக்கத்தில்,
"ஆகா, வாழ்வின் பயனை அடைந்தேன்"-ன்னு தப்பித் தவறிக் கூட டயலாக் விட்டுறாதே!
லேசு மாசா, "I am not that satisfied, But ’twaz Just Okay" என்பது போல் ஒரு லுக்கு விடணும்! :)

அப்போ தானே அடுத்த முறை, இன்னும் அறிவா அழகா வேறு மாதிரி முயல்வான்? :)
ஞாபகம் வச்சிக்க மனசே! வேடனுக்குத் தானே சென்று விழும் பறவையை விட, வேட்டையாடி விழும் பறவை மேலத் தான் காதல் அதிகம்!
அதனால் நீ அவனிடம் விழ நினைச்சாலும், வேட்டை நாடகம் நடத்தி, அப்புறமா விழு! :)

மாலாய்ப் பிறந்த நம்பியை,
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்கள் உரைப்பானை,
இங்கே போதக் கண்டீரே?

ஏலாப் பொய் சொல்லும் என் செல்லப் Porkki-ன்னு கொஞ்சம் திட்டி அனுப்பு!
அப்போ தான் ஏக்கமாப் போவான்! அப்போ தான் அடுத்த முத்தச் சுவை இன்னும் சுவை பெறும்! :))


கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!


"அடியே! கோதை! அவனைக் கட்டிக்கிட்டா எங்கேடி இருப்பாய்? அவனுக்கு-ன்னு தனியா வீடு-ன்னு கெடையாது! வெளியில் இருந்து பார்க்க வேணும்-ன்னா ரொம்ப பணக்கார மலைவீடு போல இருக்கும்! ஆனா மொத்தமா முப்பது நிமிஷம் கூடத் தூங்க விட மாட்டானுங்க! :)
108 வீடு வீடாச் சுத்தணும்! வேர்வை பொங்கி வழியும் அவன் கரு-அறையில்! ஏசி கூட இருக்காது! கரென்ட் கூட இருக்காது! பாம்புப் படுக்கை! சொர சொர-ன்னு இருக்கும்! என்னடி பண்ணுவ?"

Kothai Says:
"Just a small room, power cuts ok...
Even with a lil' candle light,
His sight is tight that makes me light!

Soothing music from the street
My windows open, welcome beat...
Gentle breeze that brings in ease

High Definition in his Eyes...
Sub Woofer as he Whispers...
Home Theater in his Prank
That makes me really crank...
Armani, CK, Obsession
Are dull and dumbest possession!
His fragrance comes and fascinates
The "Smell of my Lover" oscillates!

Thatz my home, Thatz my home!
His arms have rooms that are large enough!
Thatz my home! Thatz my home!

* எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
* "உன்" தன்னோடு உற்றோமே ஆவோம்!
* "உனக்கேஏஏஏ" நாம் ஆட் செய்வோம்!
* மற்றை நம் காமங்கள் மாற்று!

அவனுக்கு என்னை "விதி!"
என்ற இம் மாற்றம் நான் கடவா வண்ணமே நல்கு!



இவள் விசித்திர விறுவிறு காதல், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
பல கோடி நூறாயிர முத்தங்களுடன் வாழியே! வாழியே!!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP