Thursday, April 18, 2013

இளையராஜா-"ஒனப்புத் தட்டு"-தமிழ்ச் சினிமாவில் Folk!

உங்கள் காதலி, இளையராஜா ரசிகையாக இருந்தால்...???
ஒரு "ஒனப்புத் தட்டு" வாங்கி,
இளையராஜா படம் போட்ட பேழையில் வச்சிக்,
குடுத்துப் பாருங்களேன்; Sure Love Workout:)

ஒத்த ரூவா தாரேன் - ஒரு
ஒனப்புத் தட்டும் தாரேன்;
ஒத்துக்கிட்டு வாடீ - நம்ம
ஓடைப் பக்கம் போவோம்

மிகவும் பரவலான (பிரபலமான) பாட்டு; ராஜா இசைக்கே உரிய தெம்மாங்கழகு;
திராவிட முன்னேற்றத் திலகம், நம்ம கு"ஷ்"பு அக்கா வளைஞ்சி வளைஞ்சி ஆடிய பாட்டு:)
இந்த பாட்டில் வரும் "ஒனப்புத் தட்டு" = இதை யாராச்சும் பார்த்து இருக்கீகளா?

இதே ராஜா, இதே ஒனப்புத் தட்டைச்...
சின்ன "ஜ"மீன் படத்திலும் போட்டிருக்காரு - "ஒனப்புத் தட்டு புல்லாக்கு" என்னும் பாடல்!
என் தோழி ஆண்டாள், "உக்கமும் தட்டொளியும்" -ன்னு பாடுவா; தட்டு+ஒளி = கண்ணாடி;
அந்தத் தட்டுக்கும் - ஒனப்புத் தட்டுக்கும் என்ன தொடர்பு?

காதுக்கும்-மூக்குக்கும் பாலம் போட்டாற் போல் அமையும், ஒரு அழகான நகை; வனப்பு!
கண்ணாடி (தட்டொளி) போல் மின்னும் - வனப்புத் தட்டு - ஒனப்புத் தட்டு!

இது நாட்டுப்புறத்துக்கே உரிய நகை; அதான் "நாட்டுப்புறப் பாட்டில்" மட்டும் மின்னுது; பட்டணத்துக் காரவுக, பாடுபட்டுத் தான் இதைப் பார்க்க முடியும்:)


நாட்டுப்புறப் பாடல்கள் - தமிழ்ச் சினிமாவில்?
= ரொம்ப அதிகம் கிடையாது; ஆனா அங்கொன்னும் இங்கொன்னுமா மின்னும்;

முழுப் பாடலும் நாட்டுப்புற இசையா வச்சா, என்ன ஆயீருமோ? -ன்னு பயந்துக்கிட்டு...
முதல் பத்தி மட்டும் "நாட்டுப்புறமா" வச்சி,
மீதியை அந்தக் கவிஞர்-இசையமைப்பாளரே மாத்தீருவாங்க! (பாடறியேன் படிப்பறியேன் போல)

ஆனா, முழுக்க முழுக்க, கிராமத்து மணம் வீசுறாப் போல ஒரு பாட்டு?
= அதுவும், செயற்கையா இல்லாம, இயற்கையா?
= டேய், தமிழ்ச் சினிமா -ன்னு சொல்லிட்டு, "செயற்கை இல்லாம" -ன்னு bit போடுறியே; ஒனக்கு ஏன் இந்த பொழப்பு ரவீ? ன்னு வையாதீக:)

* "இயற்கையா" = இருக்கே, "தண்ணீர் தண்ணீர்" -ங்குற படத்துல!
* "இயற்கையா" = இசையும் போட்டாரு, திரையிசைச் சக்கரவர்த்தி, MSV

இந்தப் படத்துல, எல்லாமே பெரிய பெரிய தலைங்க!
= சரிதா, பாலச்சந்தர், கோமல் சுவாமிநாதன், கண்ணதாசன், வைரமுத்து, சுசீலாம்மா, ஜானகி, MSV
= ஆனா, ஒருத்தரும், தன் "Stamp"ஐப் படத்துல நுழைக்கலை; படத்தைப் படமா இருக்க விட்டாங்க! அதான் "இயற்கை" வாசனை;

இந்த ஒரு பாட்டு = சின்ன வயசில் இருந்தே என் உசுருல கலந்துட்ட பாட்டு;
நெஞ்சாங் கூட்டில், குத்திக் குத்தி நிக்கும்!

ஒரு பாட்டுக்கு - பாடல் காட்சி எப்படி அமையணும்-ங்கிற "சோடிப் பொருத்தம்"... Made For Each Other - நீங்களே பாருங்க!


மானத்திலே மீன் இருக்க
மதுரையிலே நீ இருக்க
சேலத்திலே நான் இருக்க
சேருவது எக் காலம்?
(How many sleepless nights under countless stars? இந்த ஏக்கத்தை = நாலே வரியில்?)

அத்து வானக் காட்டுக்கள்ளே
ஆயக் குழல் ஊதையிலே
சாடை சொல்லி ஊதினாலும்
சாடையிலே நான் வருவேன்...
(Just asking him for one signal = "என் கிட்ட வந்துரு"
I will run away to him; நாலே வரியில்?)

காதை வுடு புள்ள; மனசையும்-ல்ல தீண்டிருச்சி?


நாட்டுப்புறப் பாடல்கள் vs சங்க இலக்கியம் = என்ன வேறுபாடு?
* சங்க இலக்கியம் = உடுத்தி நிக்கும்
* நாட்டுப் பாட்டு = அம்மணமா நிக்கும்;

இதைப், "பண்ணத்தி" -ன்னு காட்டும் தொல்காப்பியம்!

என்னடா இவன்..., சினிமாப் பாட்டுக்குக் கூட, தொல்காப்பியர் கிட்ட இருந்தே தொடங்குறான்-ன்னு முணுகாதீங்கப்பா:)
"Old Xerox Man" & krs are deep friends:)


தமிழ்த் தொன்மத்தை, யார் யாரோ, எப்படி எப்படியோ அழிச்சாலும்.., 
அதெல்லாம் தாங்கிக்கிட்டு,
இன்னிக்கி வரை, காத்துக் குடுக்கும் ஒரே நூல் = "தொல்காப்பியம்"; பாருங்க 2000 yrs முன்னாடியே இருக்கும் நாட்டுப்புறப் பாடல்களைக் காட்டுது;

தமிழைச் சட்டம் போட்டு அடைக்காம, 
* Standardization-ன்னு இலக்கணமும் அமைத்து,
* Flexibility-ன்னு, அதே சமயம் புழங்கி விளையாட இடமும் குடுத்து...
Thol Kaapiyar = Hez a True Parent! You can always be on your own & still count on him, in need;

பாட்டு இடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே

இந்தப் பண்ணத்தி (பண் + நத்தி) தான் நாட்டுப்புறப் பாடல்; தனியாப் பண் (ராகம்) அமைக்க வேணாம்....  தானே, பண் - நத்தும்;
குறுந்தொகை போல், இதுக்கு அடி வரை எல்லாம் கிடையாது; Freelance!

அதுவே தானும் பிசியொடு மானும்
அடி இகந்து வரினும் கடிவரை இன்றே

கரிசல் காட்டு எழுத்தாளர் கி ராஜநாராயணன், "கிசி"-ன்னு சொல்லுவாரு உடம்பின் காதல் பசியை;
வயிற்றில் = பசி; உடலில் = கிசி;
தொல்காப்பியர் காட்டுவதோ = பிசி!

எந்த வரையறையும் இல்லாத = புற உறுப்புப் பாட்டைப் "பண்ணத்தி" என்பர்;
இது நாட்டுப்புற மக்களுக்கே உரியது; இது சங்க காலத்தில் இருந்தே இருக்கு!

ஆசைக்கு மயிர் வளர்த்து - மாமா
அழகுக்கொரு கொண்டை போட்டுச்
சோம்பேறிப் பயலுக்கு நான் - மாமா
சோறாக்க ஆளானேனே...

மாமா மேல் ஆசை வச்சவ...
காலத்தின் கோலத்தால், வேற எவனுக்கோ சோறு பொங்க ஆகிப் போச்சே-ன்னு பாடுறா;
கொண்ட கொழுநனைச் "சோம்பேறிப் பய" -ன்னு  பாட முடியுமா சங்கத் தமிழில்?:))

= பாட முடியும்; ஆனா "வரையறை" உண்டு!

உடலால் ஒன்னு, மனசால் ஒன்னு -ன்னு வாழும் வாழ்வையும் சங்கத் தமிழ் காட்டும்; "கைக்கிளை" பற்றிய ஆய்வுப் பதிவு = இங்கே
சங்கத் தமிழ், எந்த மனித உணர்ச்சியும் ஒதுக்காது; "மதங்கள்" இல்லாமல் இயற்கை வாழ்வு வாழ்ந்தவங்க இல்லீயா?

இன்றைய மாற்றுப் பாலினக் காதல், Male பரத்தை (பரத்தன்) எல்லாம் சங்கத் தமிழ் மறைக்காது காட்டும்;
* பெரும்பான்மை உணர்வே = மனிதம்;
* சிறுபான்மை உணர்வு = மனிதம் அல்ல -ன்னு சொல்லாது சங்கத்தமிழ்!

ஆனா, "சோம்பேறிப் பயலுக்கு, மாமா, சோறாக்க ஆனேனே" -ன்னு நேரடியாச் சொல்ல முடியாது சங்கத் தமிழில்..
மாமனை எண்ணி, "உள்ளுறை/ இறைச்சிப் பொருள்" -ன்னு பாட முடியும்!

அதான் சொன்னேன்;
* சங்கத் தமிழ் = உடுத்திக் கிட்டு நிக்கும்
* நாட்டுப் பாடல் = அம்மணமா நிக்கும்



ஒரு சின்ன வேறுபாடு பார்க்கலாமா? ரெண்டு பாட்டுலயும் "நிலா" திட்டு வாங்குது:)
* sanga tamizh song = decent scolding; * folk song = abrupt scolding

(குறுந்தொகை 47 - நெடுவெண் நிலவனார்)
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டு இடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண் ணிலவே

(Hey Moon, Hez coming to see me in the night = Only "see"?:)
இந்த நேரம் பார்த்து, ஏன் இப்பிடி மினுக்குற? கொஞ்சம் வெளிச்சம் கொறைச்சாத் தான் என்ன? = for our puNarchi privacy:)

பாவம், அவனே வேங்கை மரக் காட்டு வழியா, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை-ன்னு, எனக்கு மெத்தை போட வரான்;
எங்கள் களவுக்கு நீ நற்பொருள் அல்ல! = நல்லை அல்லை! நடுவெண் நிலவே)

இதையே பண்ணத்தி (நாட்டுப் பாடல்) எப்படிப் பாடும்?

வெள்ளை வெண் நிலாவே - வெள்ளி
வெளிச்சமான பால் நிலாவே
கள்ள நிலாவே நீ - கருக்கலிட்டால் ஆகாதோ?

ஆலம் விழுது போலே - குட்டி
அந்தப் பிள்ளைத் தலை மயிரை
ஆளு ஒண்ணும் பார்க்காம - குட்டி ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே;

"நல்லை அல்ல"-ன்னு polished-ஆச் சொல்லாம,
"கள்ள நிலா" -ன்னே திட்டுறா;
"குட்டி ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே" -ன்னு குறுந்தொகையில் பாட முடியுமா?:) நம்ம மக்கள், "குட்டித்" தொகை-ன்னு பேரு வச்சிருவாக:)

ஆனா பாருங்க, இது வரை யாரும் காட்டாத உவமை, நாட்டுப்புறத்தில்;
பெண்ணின் கூந்தல் முடிச்சு = ஆலம் விழுது போல!

இருட்டில், அவன் இன்ப ஆட்டத்துக்கு, அவன் கையில், அந்த விழுதே ஊஞ்சலாகிப் போனதோ?
ச்ச்ச்சீ போ, இதுக்கு மேல எழுத எனக்கு வெட்கமா இருக்குடா முருகா!:)


நண்பர்கள் @kanapraba, @kuumuttai அளவுக்கு இல்லாட்டாலும்...
Youtube-இல், இன்னும் சில "தமிழ்ச் சினிமா - நாட்டுப்புறப் பாடல்"-களை எப்பவோ வலை ஏத்தினேன்;  கேட்டுட்டுச் சொல்லுங்க!

ஓடுகிற தண்ணியில், ஒரசி விட்டேன் சந்தனத்தை 
சேந்துச்சோ சேரலையோ, செவத்த மச்சான் நெத்தியிலே? 

ஓலை ஒன்னு நான் எழுதி, ஓட விட்டேன் தண்ணியிலே 
சேந்துச்சோ சேரலையோ, செவத்த மச்சான் கைகளிலே? 

When susheelamma sings ஒரசி விட்டேன், watch the gap; It will be like real உரசி விட்டேன் effect:)
Lyrics: வைரமுத்து Voice: மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா
Music: VS நரசிம்மன் Film: அச்சமில்லை அச்சமில்லை

பொதுவா, பொண்ணுங்க, புருசன் காலடி மண்ணை எடுத்துப் பொட்டு வச்சிப்பாக; ஆனா, என்ன ரவுசு பாருங்க கிராமத்து மண்ணுக்கு? "
ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து, நான் பல்லு வெளக்கப் போறதெப்போ?" :))

இதே பாட்டை, இதே சுசீலாம்மா, முன்னாடியே பாடி இருக்காங்க, ஆனா சீர்காழியோடு:)

என்னாது? சீர்காழி குரலில் நாட்டுப்புறப் பாட்டா? = அதுவும் "ஓடுகிற தண்ணியல ஒரசி விட்டேன்" பாட்டா?
பிள்ளைக் கனியமுது-ன்னு படம்; KV Mahadevan இசை; பாட்டு கெடைச்சா யாராச்சும் குடுங்க Please!


நாட்டுப்புறப் பாட்டில் தான் "Call & Response" ஆக இசை அமையும்;
பக்தி இலக்கியத்தில், பெரும்பாலும் One sided Flow மட்டுமே! (exceptions: ஆண்டாள் & மாணிக்கவாசகர்)
முதல் மரியாதை படத்தில், இந்த நாட்டுப் பாட்டைப் பாருங்க = Call & Response Type!

(he) ஏறாத மலை மேலே - எலந்தை பழுத்து இருக்கு; 
ஏறி உலுப்பட்டுமா? எலுமிச்சம் கண்ணுகளா, எஞ்சோட்டுப் பொண்ணுகளா!

(she) ஏறாத மலை மேலே - எலந்தை பழுத்து இருக்கு; 
ஏறி உலுப்புங்களேன், எளைய கொழுந்தனாரே, என்னாசை மச்சினரே! 

Lyrics: folk (paras added by வைரமுத்து) voice: மலேசியா & ஜானகி
Music: இளையராஜா film: முதல் மரியாதை


குருவிக்கரம்பை சண்முகம் -ன்னு அற்புதமான கவிஞர்;
இது நாட்டுப் பாட்டு அல்ல; ஆனா அந்தவொரு "Feeling"; ராஜா, வேணும்-ன்னே நாட்டுப் பாட்டுல, சரிகமபதநி-யும் கொண்டாந்து சேத்து இருப்பாரு:)

One of the forgotten masterpieces of Ilayaraja!
See how Raja teaches music to folk kids - ஐயோ...ஐயோ... நல்லாக் கேளுங்க; வச்ச மரம் கீழே:)

ஏரியில எலந்தை மரம் - தங்கச்சி வச்ச மரம் 
வச்ச மரம் - தங்கச்சி வச்ச மரம் 
 பூவுமில்ல காயுமில்ல - தங்கச்சி வச்ச மரம் 



தொடர்புடைய பதிவு: தமிழ்ச் சினிமாவில் சங்க இலக்கியப் பாடல்கள்

சங்கத் தமிழும் - உங்க(த்) தமிழும்...
இன்னும் வரும்...

22 comments:

  1. கே.ஆர்.எஸ்,

    பழைய சினிமாவில வரும் டப்பாங்குத்து வகை பாடல் எல்லாமே நாட்டுப்புற இசை தான், கொஞ்சம் சினிமாட்டிக்கா மாத்தியிருப்பாங்க.

    சின்னகுட்டி நாத்தனா சில்லரைய மாத்தினா குன்னக்குடி போற வண்டியில குழந்தை குட்டிய ஏத்தினா...

    டிகேஎஸ்.நடராஜன் பாடிய என்னடி முனியம்மா உன் கண்ணில மையி...

    வகை எல்லாமே நாட்டுப்புற பாட்டு வகை தான்.

    தமிழ்சினிமாவில் நாட்டுப்புற இசை எப்பவும் இருந்துக்கிட்டு தான் இருந்துச்சு ஆனால் மக்கள் அதை வேற மாதிரி புரிஞ்சுக்கிட்டாங்க.

    இளையராஜா வந்தப்பிறகு தான் நாட்டுப்புற இசைக்கே அடையாளம் கிடைச்சாப்போல ஒரு பேச்சும் உருவாகிடுச்சு :-))

    ReplyDelete
    Replies
    1. //சின்னகுட்டி நாத்தனா
      சில்லரைய மாத்தினா//

      sooperu:)

      ஆமாம்; என்னடி முனியம்மா பாடலும் நாட்டுப்புறப் பாடலே!

      //இளையராஜா வந்தப்பிறகு தான் நாட்டுப்புற இசைக்கே அடையாளம் கிடைச்சாப்போல//

      he he
      நாட்டுப்புறப் பாடல்-ன்னாலே, குத்துப்பாட்டு/ என்னாடி முனியம்மா வகையறாக்கள் மட்டுமே-ன்னு ஒரு எண்ணம்; அப்படிக் காட்டிக் காட்டியே ஆக்கிட்டாங்க!

      ஆனால், "மானத்துலே மீன் இருக்க, மருதையில நீ இருக்க" -ன்னு காதல்/ ஏக்கம்/ சமூக உண்மைகள் -ன்னு
      நாட்டுப் பாட்டில் கொட்டிக் கிடப்பதை, "வேறு மாதிரி" அழகுறக் காட்சிப் படுத்தினார் இளையராஜா; அதான் போல, அப்படியொரு பேரு அவருக்கு உருவாயிருச்சி:)

      Delete
  2. பாடல் அனைத்தும் அருமை... நாட்டுப்புறப் பாடல்கள், சங்க இலக்கியம் என அனைத்தும் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தமிழ்மணம் இணைக்க முடியவில்லை...

    ReplyDelete
  4. மானத்திலே மீன் இருக்க
    மதுரையிலே நீ இருக்க
    சேலத்திலே நான் இருக்க
    சேருவது எக் காலம்?

    பாட்டு பிரமாதம்...நாயக்கர் & சேரி பெண் -- மனது கனத்தது!

    ReplyDelete
    Replies
    1. my fave of faves - this song:)
      scenes also too good, to match the lyrics

      Delete
  5. அருமையான ரசனையான பதிவு.

    ReplyDelete


  6. அருமை.


    subbu thatha

    ReplyDelete
  7. வணக்கம்

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  8. Once Again.... Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_3.html

    ReplyDelete
    Replies
    1. ஆகா! மிக்க நன்றி தனபாலன் சார், தங்களின் இந்த ஆர்வத் தொண்டுக்கு:)
      வலைச்சர வாசகர்களுக்கும் நன்றி!
      ஆனா, நான் தான் எழுதறத நிப்பாட்டிட்டேன்; அதான் எங்கும் போறதும்/வரதும் இல்லை:( Sorry!

      Delete

  9. மிகவும் இரசித்தேன் இரவி சார் :-)

    பொருள் விளக்கம் தான் கேட்கப்போறேன்..


    அத்து வானக் காட்டுக்கள்ளே
    ஆயக் குழல் ஊதையிலே

    அது என்ன அத்து வானக் காடு? வானமே ”எல்லை”யா இருக்குற மாதிரி அடர்ந்தக் காடுன்னு பொருள்-ங்களா?

    ஆயக் குழல் - குழல் சரி...அது என்ன ஆயக் குழல்? ஆயன் குழல் ->கண்ணனின் குழல் -> புல்லாங்குழல் ..அப்படினு பொருள் கொள்ளலாங்களா?

    ReplyDelete
    Replies
    1. இரவி -ன்னே கூப்புடுங்க அருண்; சாரெல்லாம் சாரா:)
      Sara-வை வேணும்ன்னா Sir ன்னு கூப்புட்டுக்கோங்க:)

      ஆயக் குழல் = நீங்களே சொல்லிட்டீங்களே! அதான் சரி
      ஆயன் குழல் = ஆயர் குல மக்களின் குழல் (கண்ணன் -ன்னு ரொம்ப குறுக்கிட வேணாம்:))

      அத்து வானம்; அத்து-ன்னா நீங்க சொன்ன மாதிரி, எல்லை-ங்கிற பொருளும் இருக்கு; ஆனா இங்கிட்டு, அத்துதல் = சேர்தல்
      அத்து வானக் காடு = தொலைவில் பார்க்கும் போது, காட்டோட வானம் சேருதாம்; Horizon; அத்தனாம் பெரிய காடு

      நாட்டுப்புறத் தமிழில் இலக்கணத்தை விட, இலக்கியமே சுவை அதிகம்:)

      Delete
  10. நன்றிகள் இரவி...

    உங்க ஒன்னப்புத்தட்டு கீழே கொடுத்துள்ள தரவில் உள்ள அம்மனி அணிந்திருப்பது தானா?

    http://blog.bodycandy.com/2012/02/29/modification-around-the-world-nose-piercing-in-india/indian-nose-piercing/

    அப்புறம் அந்த “புல்லாக்கு”? பம்படம் மாதிரியான அணியா?

    ReplyDelete
    Replies
    1. Almost yes, Arun:)

      ஆனா, இம்புட்டு பெருசா இருக்காது; பொடிசா இருக்கும்!
      இது, வடக்கத்திப் பொண்ணாத் தெரியுது; அதனாலென்ன? கிராமம் கிராமம் தானே; ஆதிவாசி/ ஆதிகுடிகளின் அணிகலனும் கூட!

      பம்படம் = காதுக்கு; கனமா இருக்கும்
      புல்லாக்கு = மூக்குக்கு; மெல்லீசு

      Delete
  11. மன்னிக்க இரவி...

    தேடிப்பார்த்ததில் :

    ta.wiktionary.org/wiki/புல்லாக்கு

    புல்லாக்கு(பெ)

    பெண்கள் மூக்கிலன் நடுத்தண்டில் அணியும் ஓர் அணிகலன்.

    http://www.travel-images.com/photo/photo-india362.html

    படத்தில் உள்ள கல் பதித்த அணி தான் ”புல்லாக்கு” என்பதா?

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு எதுக்கு "மன்னிக்க"?:)
      ஆமாம்! இதுவே புல்லாக்கு!

      பரதநாட்டிய நகைகள் (அ) வில்லிபுத்தூர் ஆண்டாள் கிட்ட, இது போன்ற நகைகளின் புகைப்படம்/ வடிவம் பார்க்க முடியும்;
      Here's one link for Bharatanatyam Jewelry = http://www.dancecostumesandjewelry.com/categories/EarRings-EarChains-NoseStuds/EarChains-and-Mattal/

      Delete
  12. என் நன்றிகள் இரவி ..:-)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP