Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Tuesday, July 21, 2009

சூரிய கிரகணம் For Dummies: தமிழில் என்ன? அறிவியலில் என்ன?

வாங்க மக்கா! முப்பது நாளில் மூன்று கிரகணங்கள், கிரகண காலத்தில் என்ன செய்யக் கூடாது?, கிரகண கால நன்மை தீமைகள், கிரகணமும்-அரசியலும்-மஞ்சள் துண்டும் - இப்படி விதம் விதமாப் படிச்சி ஓய்ஞ்சிருப்பீங்க! :)

1. ஆன்மீகத்தில் கிரகணம்
2. தமிழில் கிரகணம் (கரவணம்)
3. அறிவியலில் கிரகணம்-ன்னு மூனாப் பிரிச்சி, லேசு மாசாப் பாத்துருவமா? :)



1. ஆன்மீகத்தில் கிரகணம்:

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் கிரகணப் பதிவையும் ஒருகா வாசித்து விடுங்கள்! மூட நம்பிக்கையான பழக்கங்களை அதிகம் சொல்லாது இயல்பாக எழுதியுள்ளார்! :)

இன்று அதிகாலை (July-22-2009),
பிரம்ம முகூர்த்தம் என்னும் சிற்றஞ் சிறு காலையில்,
05:28 முதல் 07:14 வரை சூரிய கிரகண காலம்!
அதுவும் முழுமையான பூர்ண சூரிய கிரகணம்!

ஜப்பான், சீனா, இந்தியா என்று தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் தெரியும் இந்த கிரகணத்தில், இந்தியாவில் பீகார்-தாரிக்னா என்னும் கிராமத்தை நோக்கிப் பலரும் ஓடுகிறார்கள்!
தெளிவான வானம் என்பதால் ஆர்யபட்டா முன்பு முகாம் இட்ட இந்த ஊர், கிரகணத்தின் போது மட்டும் வெளிச்சத்துக்கு வருகிறது! :)

கிரகண காலத்தில் செய்யப்படும் தியானமும், ஜபமும், யோகமும்
பல லட்சம் மடங்கு பயன் தர வல்லவை என்று யோக நூல்கள் சொல்லும்!


அதனால் ஆலயங்களில் வழக்கமான சாங்கிய பூசைகள், கூட்டான பிரார்த்தனைகள், மேள தாள மணிச் சத்தங்கள் இதெல்லாம் ஏதும் இல்லாது,
கிரகண காலத்தில், கோயில் நடையைச் சார்த்தி வைப்பார்கள்!
இது ஏதோ மூட நம்பிக்கைக்காகவோ, கிரகணத்துக்குப் பயந்து கொண்டோ செய்வது அல்ல! :)

கூட்டத்தோடு கூட்டமாக வெறுமனே இறைவனைக் கண்ணால் மட்டுமே தரிசிக்காது,
தனிமையில் தியானமும்,
அவனைப் பற்றிய நினைவுகளை நம்முள் இருத்திக் கொள்ளவுமே இவ்வாறு செய்யப்படுகிறது!

புறக் கண்களால் மட்டுமே தரிசனம் செய்யாது, அகக் கண்களாலும் உணரும் பொருட்டே இந்தக் கோயில் நடை சாத்தல்!
கிரகண கால உணர்தல்கள் நமக்குப் பன்மடங்கு பயன் தரும் என்பதால் இப்படி!

கிரகண காலத்தில் தியானம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை! அனைவரும் இறைவனைப் பற்றி வாசித்து, மனத்தில் உணரவாவது முயற்சி செய்ய வேண்டும்! இதோ வாசியுங்கள்:
1. ஓம் என்றால் என்ன?
2. நமோ என்றால் என்ன?
3. நாராயண என்றால் என்ன? - என்ற தொடர்பதிவுகளின் தொடர்ச்சியை இன்றிரவு இட முயல்கிறேன்! :)



2. தமிழில் கிரகணம் (கரவணம்):

* கிரகணம் என்ற சொல்லுக்குத் தமிழில் பெயர் இல்லையா?
* தமிழர்கள் வானியல் ஆராய்ச்சி செய்தார்களா இல்லையா?

இதெல்லாம் தனி ஆய்வு! :) கோதை என்னும் கிராமத்துப் பெண், Ascent of Venus & Descent of Jupiter பற்றியெல்லாம் குறித்து வைக்கிறாளே! இதோ! வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று!

கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்! கரத்தல் = மறைத்தல்!
காக்கை "கரவா" கரைந்துண்ணும் என்பது குறள்!
நிலவோ, பூமியோ சூரியனை மறைப்பதால் (கரத்தலால்) = கரவணம்!
தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதைப் பேசும்!

கரவணம் பற்றிய சங்கப் பாடல்கள் பற்றியெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்!
ஏன்னா அதில் அறிவியலும் உண்டு! அறிவில்லாத இயலும் உண்டு! :)
அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த
பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல
என்று நற்றிணைப் பாடல்! பறவைகள் கிரகண காலத்தில் ஒளிந்து கொள்ளும் பாடல்கள் பலவும் சங்கத் தமிழில் உண்டு!

அருணகிரியும், பாரதப் போரில் செயற்கையாக எழும்பிய கிரகணத்தைப் பற்றி திருப்புகழ் முதல் பாட்டில் பாடுகிறார்! ஆழ்வார்களும் பாடுகிறார்கள்!

முத்தைத் தரு பத்தித் திருநகை என்னும் முதல் திருப்புகழில், "பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக" - என்று பேசுகிறார் அருணகிரி!
கண்ணன் தன் ஆழியால் கதிரவனை மறைத்து நிழல் உண்டாகச் செய்து,
இருள் காட்டிச் செயத்ரதனை வெளிக் கொணர்ந்தமை பற்றி இன்றும் ஆய்வு செய்கிறார்கள்!

* பாரதப் போர் தொடங்கும் முன்னர் ஏற்பட்ட நிலாக் கரவணம் (சந்திர கிரகணம்) பற்றிய குறிப்பும்,
* அதற்குப் பதின்மூன்று நாள் கழித்து, சக்கர மறைப்பு (அ) கதிர்க் கரவணம் (சூரிய கிரகணம்) பற்றியும் பேசப்படுவதை வைத்து,
மகாபாரத காலம் (Dating of the Mahabharata War) பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே உள்ளது!
போரின் காலத்தை ஆறு வகையாகக் கணிக்கிறார்கள்: 3129 BCE - 1397 BCE

சில புராணங்களில் ராகு, கேது, பாம்பு விழுங்கல் என்று கதைகளை அளந்தாலும், அதற்கெல்லாம் தத்துவம் என்று விவஸ்தை இல்லாமல் சிலர் பெயர் கொடுத்தாலும்.....

* நம் விஞ்ஞானிகளான வராக மிஹிரர் போன்றவர்கள் சந்திரன்/ பூமியின் கருநிழல் - அயனிழல் (அயல் நிழல்) - Umbra & Penumbra - இதுவே கிரகணத்துக்குக் காரணம் என்று தெளிவாகக் காட்டிச் சென்றுள்ளனர்!

* ஆனால் பிரம்மகுப்தர் போன்ற சில விஞ்ஞானிகளோ அதை ஒப்புக் கொள்ளாமல், "நிழல்" கிரகங்களான (சாயாக் கிரகங்கள்) - Ascending & Descending Nodes - ராகு & கேதுவின் மறைப்பே என்றும் மாற்றி வாதிட்டுள்ளனர்! ஆனால் ராகு/கேதுவை பாம்பாகக் கருதாமல், சாயா-நிழலாகவே கருதிப் பேசியுள்ளனர்.

எது எப்படியோ, பாம்பு விழுங்குதல் கிடையாது! நிழலின் பொருட்டே இந்த வானக் கோலம் என்பது இந்திய விஞ்ஞானத்தில் அப்போதே தெளிவு!
நாம் தான் ஓவர் புனிதப் பூச்சால், செய்த தவறுகளை/அறியாமையை இப்படியெல்லாம் கதைகட்டி மறைத்து விட்டோம்!
இந்திய விஞ்ஞானத்தை இந்திய மதங்களே அறிந்தோ அறியாமலோ சம்பிரதாயப் போர்வையில் மறைத்து விட்டன!


3. அறிவியலில் கிரகணம் (கரவணம்):

இதான் எல்லாருக்குமே தெரியுமே-ங்கறீங்களா? சும்மா படம் பாருங்க! அப்பறம் எப்பமே மறக்க மாட்டீங்க! அறிவியல் பூர்வமா யாரு கேட்டாலும் உங்களால வாயாலயே அத்தனையும் விளக்க முடியும் :)

நிலவின் நிழலில் எப்படி மறைந்து வெளி வருகிறது என்ற அருமையான படம்:


சூரிய கிரகணம் ஏன் வருகிறது?
அதுவும் ஏன் அமாவாசை அன்னிக்கி மட்டுமே வருகிறது?
ஹிஹி! சூரிய கிரகணம்-ன்னாலும் சந்திரனை வைச்சித் தான் எதுவுமே பேச முடியும்! :)

* சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் போகும் போது,
* அதன் நிழல் பூமி மேல் விழுந்தா,
* அந்த நிழல் பட்டு, சூரியத் தகடு மறைவது போல் ஒரு தோற்றம்
* அதான் சூரிய கிரகணம்-ன்னு எல்லாருக்குமே தெரிஞ்சது தான்!

ஆனால் ஏன் அமாவாசை அன்னிக்கி மட்டும் இது நடக்கிறது? அதான் மாசா மாசம் அமாவாசை வருதே! அப்புறம் ஏன் மாசா மாசம் சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை?

= ஏன்னா நிலவின் சுற்று வட்டப் பாதையும், பூமியின் சுற்று வட்டப் பாதையும் ஒரு 5 டிகிரி சாய்வு! அதுனால முக்கால் வாசி நேரம், இந்த நிழல் விழாம நாம எஸ்கேப் ஆயிடறோம்!

ஆனால், வருசத்துக்கு ரெண்டு முறையாச்சும், எப்படியோ நிழல் எங்கேயாச்சும் விழுந்துடுது! அதுனால அப்படி விழுந்த இடத்தில் மட்டும் கிரகணம் தெரியுது!
அமாவாசை அன்னிக்கு நமக்குத் தான் நிலவு தெரியலையே தவிர, சூரியனில் இருந்து பார்த்தா நல்லாவே தெரியும்! :)

நிலவின் நிழல் ரெண்டு தினுசா விழும்!
1. கருநிழல் - Umbra - உள் நிழல்
2. அயல் நிழல் (அயனிழல்) - Penumbra - வெளி நிழல்
நீங்களே சுவற்றுக்கு அருகில் போய் நின்னு உங்க நிழலைப் பாருங்க! ரெண்டு தினுசா தெரிவீங்க! :)

* உள் நிழல் விழுந்தா முழு கிரகணம்! (Total Eclipse)
* வெளி நிழல் விழுந்தா முழுமையற்ற கிரகணம்! (Partial Eclipse)

முழுமையற்ற கிரகணம் பார்வைக்கு இன்னும் டேஞ்சர்! ஏன்னா, சூரிய ஒளி மறைஞ்சும் மறையாமலும் இருக்கு! மங்கலாத் தானே இருக்கு-ன்னு பார்த்தா அம்புட்டு தான்!

முழுமையான கிரகணத்தின் போது ஏற்படும் வைர மோதிர சேவை பார்த்து இருக்கீயளா? :) (Diamond Ring Effect)
நிழல் விலக ஆரம்பிக்கும் போது, நிலவின் பள்ளத்தாக்கில் உள்ள மலை முகட்டு இடுக்குகள் வழியாக லேசா ஒளி சிந்த ஆரம்பிக்கும் போது, இந்த வைர மோதிர டகால்ட்டி நடக்குது! :)

முழுமையான கிரகணத்தில்,
நிலவு ஒரு தகடு போல் முழுக்க சூரியனை மறைத்துக் கொள்ளும் போது, சூரியனின் வெளி வட்டமான கரோனா (Corona) என்னும் ப்ளாஸ்மா நன்கு தெரியும்!
ஆனால் கொஞ்ச நேரம் தான்! அந்தக் கொஞ்சூண்டு நேரத்துக்கு விஞ்ஞானிகள் காத்திருக்கும் அழகைப் பார்க்கணுமே! திருப்பதி தரிசனம் கதை போலத் தான்! :)

இன்னும் நிறைய சொல்லலாம்! ஆனால் அதெல்லாம் விக்கி பசங்க பதிவில் வரவேண்டியது! ஆனால் பதிவர் இலவசக் கொத்தனார் இப்போ என்ன வீடு கட்டிக்கிட்டு இருக்காரு-ன்னு தான் தெரியலை! :)
கீழ்க்கண்ட காணொளிகளையும் பாருங்கள்! "ஏன் சில இடங்களில் மட்டும் கிரகணம் தெரிகிறது?" என்பதற்கும் விளக்கம் கிடைக்கும்!

கிரகண செய்முறை விளக்கம்:


கிரகணம் ஏன் சில இடங்களில் மட்டும் தெரிகிறது?



இப்போ கேள்வீஸ் ஒன்லி கேள்வீஸ் :)

1. ஏன் சூரிய கிரகணம்-ன்னா அமாவசை மட்டுமே? சந்திர கிரகணம்-ன்னா பெளர்ணமி மட்டுமே?

2. சூரியனும் சந்திரனும் பார்க்க ஒரே சைசில் இருப்பதால் நம்ம பூமியில் பார்க்கும் கிரகணத்துக்கு மவுசே தனி! :)
ஏன் நம்ம சந்திரன் சூரியனைப் போல ஒரே சைசில் தெரியறான்?

3. நாம செயற்கையா செயற்கைக் கோள் எல்லாம் ஏவுறோமே? அதன் நிழல் எல்லாம் விழுந்து ஏன் கிரகணம் தெரிவதில்லை? :)

4. கிரகணம் என்பது பூமியில் மட்டும் தானா? இல்லை செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter) போன்ற கோள்களில் கூடத் தெரியுமா?

அறிவியல் புலிகள் சொல்லுங்க பார்ப்போம்! ஆன்மீகப் புலிகளும் பதில் சொல்லலாம்! :)
கிரகணம் என்னும் வடமொழிச் சொல், தமிழில் "கரவணம்" என்பதையும் மறக்காதீக! :)
Read more »

Sunday, March 29, 2009

மதுரை மீனாட்சி & Simple Pendulum!

என்ன மக்கா, மருதையே தி்ருவிழாக் கோலமா களை கட்டுதே! ஏப்ரல்-08 ஆத்தா மீனாச்சி கோயில்ல குடமுழுக்கு! அதுக்குப் பந்தல்-ல பந்தல் போடலீன்னா எப்படி? முழுக்க முழுக்க மீனாட்சியம்மன் மேல் புதிரா புனிதமா ஒன்னு எட்டாம் தேதி போட்டுருவோம்! பதிவுலக மருதைக்காரவுக சாமார்த்தியத்தையும் பாத்துருவோம்! :))

ஆனால்.....இன்னிக்கி மதுரை மீனாட்சி & Pendulum Technique!

"எலே! எடுப்பட்ட பய புள்ள! Pendulum Technique-ஆ? அதுக்கும் ஆத்தா மீனாட்சிக்கும் என்னலே சம்பந்தம்? கோதையைத் தான் அப்துல் கலாம் கூட ஒப்பிட்டு பதிவு போட்டே! இப்போ மீனாட்சியையும் விடுறதா இல்லியா நீயி?"

"அட, பாண்டி நாட்டுப் பெண்களை ரசிக்காம விட முடியுமா? அவிங்க அழகென்ன? நறுவிசு என்ன? மயிலென்ன? ஒயிலென்ன? :)
கலர் வேணுமின்னா கொஞ்சம் கொறைச்சலா இருக்கலாம்! ஆனால் அந்தக் கலர்லயும் ஒரு காந்தம் இருக்குல்லே? என்ன நாஞ் சொல்லுறது? :)"

"அடப் பாவி மக்கா! பிள்ளைத் தமிழ்-ன்னு ஏதோ வலைப்பூ துவங்கினயே! ஏதோ கொழைந்தயளைப் பத்தித் தான் எழுதப் போறமில்ல-ன்னு நெனச்சோம்? பிள்ளைத் தமிழ்-ன்னா, பெட்டைப் புள்ளைக பிள்ளைத் தமிழா? வெளங்கிரும்!"

"ஹா ஹா ஹா! அட மக்கா, அதுவும் இருக்குல்லே! பெண்பாற் பிள்ளைத் தமிழ்-ன்னு புள்ளைக தமிழை அப்பவே பாடி வச்சிருக்காவ! அதைத் தான் இன்னிக்கி பாக்கப் போறம்! அதுல தான் Pendulum Technique! ஆத்தா மீனாச்சியை அறிவியல் பூர்வமா தரிசிக்கலாமா?" :)


சின்ன வயசுல இயற்பியல் பாடம் படிச்ச ஞாபகம் இருக்கா? ஆறாங் கிளாஸ்ல பெண்டுலம் பத்திச் சொல்லிக் கொடுப்பாய்ங்க! வகுப்புக்கே பெண்டுலம் எடுத்துக்கிட்டு வருவாரு வாத்தி!
அதன் நீள உசரங்களை அட்ஜஸ்ட் பண்ணி, Pendulum Bobஐ சுண்டி இழுத்து விட்டாக்கா அப்படியும் இப்படியும் அசையும்! பக்கத்துல நான் தான் நிப்பேன்!:)

Start = கையில ஒரு ஸ்டாப் வாட்ச் கொடுத்து, அதைப் பொசுக்குன்னு அழுத்தச் சொல்லுவாரு!
Stop = ஸ்டாப் வாட்ச்சில் முள்ளு இருக்கும் எண்ணை உரக்கச் சொல்லணும்! அதை அந்த மாங்காப் பையன் சரவணன் போர்ட்டில் எழுதுவான்!

இப்படியே மாறி மாறி, பெண்டுலம் வெளையாட்டு நடக்கும்! ஒரு பத்து ரீடிங் எடுத்தவுடன், வாத்தி என்னென்னமோ கணக்கெல்லாம் போட்டு, ஒரு Formula-வை உருவாக்கி,
This is Simple Harmonic Motion-ன்னு முடிச்சது தான் ஞாபகத்துல இருக்கு! அதுவும் பெண்கள் இல்லாத ஒரு வகுப்பில் எப்படி நுணக்கமா கான்சன்ட்ரேட் பண்ணுறது? அறிவியல் வகுப்பு நடத்துறவங்க இதைக் கூட அறியலீன்னா எப்படி? :)

அது முடிஞ்சதும், அடுத்து தமிழ் வகுப்பு! அதுல மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்! ஆரம்பிச்சுட்டாருய்யா டேனியல் ஐயா! கிறித்தவரா இருந்தாலும், சும்மா உருகி உருகிப் பாடம் எடுப்பாரு! பாடியே காட்டுவாரு! அதுவும் ஆழ்வார் பாசுரம்-ன்னா சொல்லவே வேணாம்! அவர் கண்களே பனிக்கும்! இப்போ தெரியுதுங்களா தி சீக்ரெட் ஆஃப் கேஆரெஸ்! :)



குமரகுருபரக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை! வயசு அஞ்சு ஆகுது! பள்ளிக்குப் போற வயசில் பேச்சு வரலீன்னா எப்படி? என்னென்னமோ மருத்துவம் செஞ்சிப் பார்த்துவிட்டு, திருச்செந்தூர் முருகப் பெருமான் சன்னிதியில் கொண்டாந்து பிள்ளையைப் போடுறாங்க பெத்தவங்க!

செந்திலாண்டவன் அழகுத் தோற்றம் குழந்தையை இழுஇழு என்று இழுக்கிறது! இலைத் திருநீறு வாயில் கரைகிறது! பேசுகிறான் குமர குருபரன்...

பின்னாளில் அவுரங்கசீபின் அண்ணன் தாரா ஷூகோவிடமே தமிழின் மேன்மையை எடுத்துச் சொல்லப் போகும் குழந்தை அல்லவா! அவன் வாயில் பேச்சைக் கொடுக்க, தமிழ்க் கடவுள் முருகவேள் கடன்பட்டுள்ளானே! குழந்தை வளர்ந்து பெரும் கவிஞன் ஆகிறது! கவி-யோகியும் ஆகிறது!

தென்பாண்டித் தேசமாம் மதுரைக்கு வந்த குமரகுருபரர், அன்னை மீனாட்சியையும், அப்பன் அழகனையும் கண் குளிரத் தரிசிக்கிறார்!
மூன்று அழகர்கள் அல்லவா மதுரைக்கு! = கள்ளழகர், கூடலழகர், மதியழகர் (சோம சுந்தரர்)!

இப்படி அழகர்கள் கூடி இருப்பதால் தானே மதுரைக்கே ஒரு தனி கிறக்கம்! ஆனால் அத்தனை அழகுக்கும் ஆட்சியாள் யார்? அவள் மீது தான் பிள்ளைத் தமிழ் பாடுகிறார் நம் கவிஞர்! இன்றுள்ள பிள்ளைத் தமிழ் நூல்களில் எல்லாம் தலைசிறந்தது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!

மறுநாள் திருமலை நாயக்கர் சபையில் அரங்கேற்றம்! குமரகுருபரர் பாடப்பாட, மொத்த சபையும், துறைத் தீந் தமிழில் கட்டுண்டு கிடக்கிறது!
கடைசி வரிகள்! ஊசல் பருவம்! அன்னை மீனாள் சிறு பெண்ணாய் ஊஞ்சலாடும் அழகு!

எதிரே உள்ள மரத்தைக் காலால் உதைத்து, அன்னை, ஊஞ்சலில் இன்னும் உயர உயர எம்புகிறாள்! உதைத்த மரத்தில் இருந்து பூக்கள் சொரிகின்றன!
அன்னையின் ஊஞ்சல் வீசி வீசி ஆடுகிறது! காற்றைக் கிழித்து.....அவ்வளவு வேகம்!
ஆனால் அதையும் விட வேகமாய் இன்னொன்றும் ஆடுகிறது! எது? = மதுரை மீனாட்சியின் கம்மல்!


பசும்பொன்னில் தொங்க விட்ட கிளிக் கூண்டு போல் ஒரு காதணி! கீழே பாண்டி முத்துக்கள் பதித்த அந்த லோலாக்கு! அது ஊஞ்சலை விட வேகமாக ஆடுகிறதாம்!
ஊஞ்சல் அப்புறம் போய், இப்புறம் வருவதற்குள்...தொங்கட்டான் ஒரு சுற்று முடித்து விடுகிறது! அப்புறம் தான் ஊஞ்சலே ஒரு சுற்று முடிக்கிறது! ஆகா, இது எப்படிச் சாத்தியம்?

கற்பனை செய்து பாருங்கள்!
* ஊஞ்சல் ஒரு பெண்டுலம்!
* ஊஞ்சலில் உள்ளவள் காதில் ஒரு பெண்டுலம்!
ஊஞ்சல் பெண்டுலம் ஆட, ஊஞ்சலில் உள்ளவள் பெண்டுலமும் ஆட...
Both the pendulums are in Simple Harmonic Motion! :)

பெண்டுலத்தைத் தமிழில் ஊசல் என்று சொல்லுவார்கள்!
இரண்டு ஊசல்களை ஒரே நேரத்தில் ஒரே Plane-இல் இயக்கி விட்டால்...
இரண்டும் ஒரே சமயத்தில் கடக்கின்றன!
சமச்சீர் இயக்கத்தில் இயங்குகின்றன! (Simple Harmonic Motion)!
ஆனால் ஊசலின் நீளத்தைப் பொறுத்து தான் அதன் வேகமும் அமையும் என்பது இயற்பியல் சூத்திரம்! ஞாபகம் இருக்கா மக்கா? :)


* ஊஞ்சல் சங்கிலியின் நீளம் அதிகம்! அதனால் நேரமும் அதிகம்!
* கம்மல் சங்கிலியின் நீளம் குறைவு! அதனால் நேரமும் குறைவு!
Given the same acceleration due to gravity at the same place...
the time taken for oscillation
is directly proportional
to the length of the pendulum! :)

எப்படி இருக்கு அன்னை மீனாட்சி செய்யும் Pendulum Experiment (ஊசல் சோதனை)?
சுட்டிப் பொண்ணு மீனாட்சி, மாநிலத்திலேயே முதல் மாணவியா வந்துற மாட்டாளா என்ன? :)


ஊசல் பாடலைப் பார்ப்போமா?
இரு பதமும் மென்குரல் கிண்கிணியும் முறையிட்டு
இரைத்திடும் அரிச் சிலம்பும்
இறும் இறு மருங்கு என்று இரங்கு மேகலையும் பொன்
எழுது செம் பட்டு வீக்கும்


இரண்டு கால்களில் மெல்லிய ஜில்ஜில் எழுப்பும் கிண்கிணிக் கொலுசும்,
"அம்மா, தாயே, மீனாட்சி, அங்கயற்கண்ணி" என்று முறையிட்டு முனுகும் சிலம்பும்,
இற்று விடுமோ, இற்று விடுமோ என்னும் ஒயிலான இடுப்பு அணி மேகலையும்,
தங்க ரேக்கு நூலிழை ஓடும் பட்டுத் துணி, அதை இறுக்கி இடுப்பில் கட்டியிருக்கா மீனாட்சி!

திரு இடையும் உடை தாரம் ஒட்டி யாணமும்
செங்கைப் பசுங் கிள்ளையும்
திரு முலைத் தரள உத்தரீயமும் மங்கலத்
திரு நாணும் அழகு ஒழுக நின்


அவள் இடையில் உடையும் ஒட்டியாணமும் புரள...
அவள் கையில் பச்சைக் கிளி கீச் கீச் என்று கத்த...
அவள் முலைகளில் முத்து மாலை வரிசைகள் தவழ...
அவள் மங்கலத் திருக்காப்பை அணியுமாறு அழகாக ஆடிட...

அருள் பொழியும் மதிமுகமும் முகமதியின் நெடுநிலவு
அரும்பு குறு நகையும் ஞான
ஆனந்த மாக்கடல் குடைந்து குழை மகரத்
தோடு அமராடும் ஓடு அரிக்கண்


மீனாட்சியின் அருள் முகம், பூர்ண சந்திரன்! முழு மதி!
அதில் தோன்றும் குறு மென் புன்னகையோ, பிறை மதி!
ஞானாந்தம் என்னும் கடலைக் குடைந்து செய்த மகரத் தோடுகள், தொங்கட்டான்கள் ஆட...அந்த ஆட்டத்தின் வேகம் என்ன தெரியுமா? கண்கள் பாயும் வேகம்! அம்புட்டு வேகம்! ஊஞ்சலை விட வேகம்!
இப்படி மீனாளின் தோடுகளுக்கும், மீனாளின் கண்களுக்கும் இடையே வேகப் போட்டி!

பொரு கயலும் வடிவழகு பூத்த சுந்தர வல்லி
பொன்னூசல் ஆடியருளே!
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி
பொன்னூசல் ஆடியருளே!


தோடு ஆடி, அதோடு கயல் கண் ஆடி, வடிவழகு பூக்கும் வடிவாம்பிகே! சுந்தரேசனின் சுந்தரவல்லி! பொன்னூஞ்சல் ஆடி அருளே!
புனுகும் நெய்யும் பூசிய சொக்கனின் அழகுக்குக் கொஞ்சமும் இளைச்சவள் அல்ல நீ! எங்கள் மீனாட்சிக் குழந்தையே! பொன்னூஞ்சல் ஆடி அருளே!


இதுவே, மீனாட்சி ஊஞ்சலின் வேகம்!
அதை விட, மீனாட்சி தோடு வேகம்!
அதை விட, மீனாட்சி கண்கள் வேகம்!
அதை விட, எங்கள் மனது வேகம் அம்மா!.....உன்னிடம் பறி கொடுத்த மீனாட்சி மனது வேகமோ வேகம்!

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் இறுதிப் பாடல் இது!

குமரகுருபரர் பாடி முடிக்கவும், எங்கிருந்தோ ஓடியே வருகிறாள் ஒரு சுட்டிப் பெண்!
திருமலை நாயக்கர் மடி மேலே பிஞ்சுப் பாதங்களால் ஏறுகிறாள்!
மன்னன் கழுத்தில் இருந்த முத்து மாலையைப் பிஞ்சுக் கரங்களால் பறிக்கிறாள்!
இறங்கி வந்து, குமரகுருபரர் கழுத்தில் போட்டு விட்டு.....ஓடியே போகிறாள்!

மதுரை அரசாளும் எங்கள் மீனாட்சி திருவடிகளே சரணம்!
Read more »

Saturday, December 27, 2008

மார்கழி-13: ஆண்டாளும் அப்துல் கலாமும்!

ஆண்டாளும், அப்துல் கலாமுமா? என்ன பேச்சு இது? ஆண்டாள் எப்போ ராக்கெட் விட்டா? ஏவுகணை விட்டா? விண்வெளி ஆராய்ச்சி பண்ணா? பாக்கலாம் வாரீயளா? :)


வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று! - அப்படின்னா என்ன?
அட, வெரி சிம்பிள்! வெள்ளிக் கிழமை வந்துருச்சி! வியாழக் கிழமை போயிருச்சி! இந்தப் பாட்டை வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஆண்டாள் எழுதி இருக்காளா என்ன? ஹிஹி! வாங்க இன்றைய பாசுர விளக்கத்தில் பார்க்கலாம்! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக், கீர்த்திமை பாடிப் போய்ப்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!!


புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்,
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய், நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல்-ஓர் எம் பாவாய்!



வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று - இதைப் பார்த்து விட்டு அப்புறம் மற்ற விளக்கத்துக்குப் போவோம்!

வெள்ளி=Friday! வியாழன்=Thursday-ன்னு பொதுவா எடுத்துக்கலாம்!
வெள்ளிக்கிழமை பொறந்தாச்சி! வியாழக்கிழமை ஓடியே போச்சு! அப்படின்னு ஆண்டாள் சொல்ல வராளா? ஆனால் செவ்வாய் எழுந்து திங்கள் உறங்கிற்று-ன்னு எல்லாம் அவள் வேறெங்கும் பாடினா மாதிரி தெரியலையே!
அப்படின்னா இதுல வேற ஏதோ ஒன்னு இருக்கு! மேலும் இன்னும் சூர்யோதயம் வேற ஆகவில்லை! அதனால் (தமிழ்க் காலக் கணக்குப்படி) இன்னும் வெள்ளிக்கிழமை வரலை! அப்போ இது என்ன?

வெள்ளி=Venus! வியாழன்=Jupiter!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = Venus rose as Jupiter set!


பொதுவா சூர்யோதயத்துக்கு முன்னுள்ள பிரம்ம முகூர்த்தம் என்னும் காலத்தில், வானிலே விடி வெள்ளி தெரியும்! இன்னிக்கிக் கூட புது வீட்டுக்குப் போகும் போதோ, சொந்த வீடு கட்டிக்கிட்டுப் போகும் போதோ, வெள்ளி எதிர்க்கே போகாதே-ன்னு பெரியவங்க சொல்லுவாய்ங்க!

* அதிகாலைச் சூரியன் உதயம் ஆவதற்கு முன்னால் வானில் வெளிச்சம் அதிகம் இருக்காது! அதனால் பூமிக்கு மிக அருகில் உள்ள வெள்ளிக் கிரகம் (Venus) ஒரு நட்சத்திரம் போல தெரியும்! வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்!
* ஆனால் வியாழன் (Jupiter) அவ்வளவு சீக்கிரம் தெரியாது! தன் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் போது மட்டுமே தெரியும்!

வியாழன் கிரகம் ஒரு பக்கமாய் மறைய, எதிரே வெள்ளிக் கிரகம் தோன்றும் வானியல் நிகழ்வு இது! வானில் சந்திரனும் இன்னும் மறையவில்லை! மேற்றிசையில் இருக்கு! சூரியன் இன்னும் ஒரு மணியில் இதோ உதிக்கத் துவங்கப் போகிறது!
பார்க்கிறாள் கோதை! அவள் காலத்தில் நடைபெற்ற ஒரு அதிசய வானியல் நிகழ்வை உடனே குறித்து வைக்கிறாள் அவள் திருப்பாவை டைரியில்! ஒரு கோதையின் டைரிக் குறிப்பு!

எப்போதெல்லாம் இப்படி அதிசய நிகழ்வு நடந்தது என்பதை விஞ்ஞானிகளின் துணையோடு, வானியல் குறிப்பை ஆராய்ந்தார்கள். அதை வைத்து ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! நாம் அந்த ஆய்வுக்குள் போகாமல், இந்த நுட்பத்தை மட்டும் இப்போதைக்கு ரசிப்போம்!

ஆண்டாள் காலத்தில் மட்டும் தான் இப்படி நடந்ததா? அதுக்கு அப்பறம் இப்படி நடக்கவே இல்லையா? நம் காலத்தில் இவ்வாறு எல்லாம் நடந்துள்ளதா? இல்லீன்னா உனக்கு வைணவம் ரொம்பப் பிடிக்குமே-ன்னு கோதையை ரொம்பத் தான் ஓவராப் புகழறீயா? :)

Pic Shot on Dec-01-2008, during Venus-Jupiter Conjunction


ஹிஹி! அரண்டவன் கண்ணுக்கு அடியேன் தொட்டதெல்லாம் வைணவம்! :) ஒரு இனிய அதிர்ச்சி பார்த்தீங்களா? இது போன்ற அதிசய நிகழ்வு, வெள்ளி எழுந்து வியாழம் உறங்கல், இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடித் தான் நடந்திருக்கு! Nov 28 - Dec 01, 2008! இதோ செய்தி!

* நீங்க யாராச்சும் அன்னிக்கி இதைக் கண்டீர்களா?
* உடனே பாவையோடு தொடர்பு படுத்திப் பார்த்தீங்களா?
* டைரியில் குறிச்சி வச்சீங்களா?
* பதிவு ஏதாச்சும் போட்டு, பதிஞ்சு வச்சீங்களா? :)
ஹிஹி! அறிவியல் காலத்தில் வாழும் போதே நாமெல்லாம் இப்படின்னா, கிராமத்துப் பொண்ணு கோதை இது பற்றி அன்றே பதிஞ்சி வைப்பதைப் பாருங்கள்!
இப்போ தெரியுதா அவளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்? இனி இந்த நிகழ்வு வரப் போவது அடுத்த May-11-2011 இல் தான்! :)

மன்னர்களின் அந்தப்புர லீலைகளைச் அக்காலப் புலவர்கள் சிலர் உலாவாகப் பதிந்து வைத்தார்கள்! மானிடனைப் பாடாது, இறைவன் அருளை மட்டுமே பாட்டாக வடித்து வைத்தார்கள் இன்னும் சில அருட்கவிஞர்கள்! ஆனால் ஆண்டாள் இன்னும் ஒரு படி மேலே போய், அறிவியல்-வாழ்வியல்-இறையியல் என்று அத்தனையும் சமதளத்தில் கொண்டு வருகிறாள்!
இப்போ தெரிகிறது அல்லவா, அவள் பாவை மட்டும் தனித்து நிற்கக் காரணம் என்ன-ன்னு?

* அப்துல் கலாம் ஐயா விஞ்ஞானியாக இருந்து கொண்டு, கவிதையும்-இறையும் நேசித்தார்!
* கோதை கவிதாயினியாக இருந்து கொண்டு, விஞ்ஞானம் நேசித்தாள்!
Space Data Aggregator, Andal திருவடிகளே சரணம்! :)


புள்ளின் வாய் கீண்டானை = கொக்காக வந்த பகாசுரன் அலகைப் பிளந்தானை (கண்ணனை)
(பீமன் கொன்ற பகாசுரன் வேறு! இந்தக் கொக்குப் பகாசுரன் வேறு! அப்பவே பெயர்க் குழப்பங்கள் போல!) இந்தப் பகாசுரனின் அலகைப் பிளப்பதை, திருமலையில் எம்பெருமானுக்கு அலங்காரமாகச் செய்து, மீள் பதிந்து காட்டுகிறார்கள் (Re-enactment)!

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை = இந்தப் பொல்லா அரக்கன் இராவணன் என்று சொல்வாரும் உண்டு!
ஆனால் சென்ற பாட்டில் இராவணனைக் கோமான் (Gentleman) என்று பாடி விட்டாள்! மேலும் இராவணன் தலையை இராமன் கிள்ளிக் களையவில்லை! அப்போ இது யாரா இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்!

கீர்த்திமை பாடிப் போய் = இப்படி மூர்த்தியின் கீர்த்தியை பாடிக் கொண்டு
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் = புள்ளைங்க (பொண்ணுங்க) எல்லாம் பாவை நோன்பு நடக்கும் படித்துறைக்குப் போகுதுங்க!
பாவைக் களம் என்றால் எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து நோன்புக்கு உண்டான சில சடங்குகளைச் செய்யும் படித்துறை! அப்பவே பொண்ணுங்களைப் புள்ளைக-ன்னு கூப்பிடும் பழக்கம் இருந்திருக்கு போல! :)

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = வெள்ளிக் கிரகம் தோன்ற, அதன் முன் வியாழன் கிரகம் மறையுதே! இது என்ன அதிசயம்!


புள்ளும் சிலம்பின காண் = பறவைகள் பலவும் சிலம்ப ஆரம்பித்து விட்டன! இந்த அதிசய வானியல் நிகழ்வைப் பார்த்தா? இல்லை இது அதிகாலைப் பறவைச் சத்தமா? இப்போதும் கிரகணங்களின் போது பறவைகள் பலமாகக் கத்துவதைப் பார்க்கலாம்!

போதரிக் கண்ணினாய் = போது+அரிக் கண்ணை உடையவளே! போது=மலர்; அரி=வண்டு! வண்டு மேயும் மலர் போல இருக்குடி உன் கண்ணு!
பூப்போல விரிந்த கண், அதில் கருவண்டு போல உன் கருமணி நல்லாவே தெரியுது! இப்படியா விழிச்சிக்கிட்டே அரைத் தூக்கம் தூங்குவ? அடிச்சீ! எழுந்து வா! (ஆண்டாள் காட்டும் உவமையின் சக்தியைப் பாருங்க....முழிச்சிக்கிட்டே தூங்கும் கண் = போது அரிக் கண்)

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? = ஆற்றிலும் குளத்திலும் முங்கி முங்கிக் குளிக்கும் சுகம் போல வருமா? அதுவும் சில்லுன்னு தண்ணி உடம்பில் படும் போது, முதலில் குளிரெடுத்தாலும், பிற்பாடு எவ்வளவு புத்துணர்ச்சியா இருக்கும்!

காக்காய் குளியல், யானைக் குளியல் போலவா குளிப்பது? நல்லா முங்கி முங்கி நீராட வேணாமா? திருநாமங்களைச் சொல்லிக்கிட்டே குடைந்து குடைந்து நீராடாமல், நீ ஏதோ அரைத் தூக்கம் தூங்கிக் கிட்டு இருக்கியே? போதும்!
குகுகு = குள்ள-குளிர-குடைந்து! :) இதை யாராச்சும் பின்னூட்டத்தில் விரித்துப் பேசுங்க!

பாவாய், நீ நன்னாளால் = பெண்ணே, நல்ல நாளு அதுவுமா இன்னிக்கி கூடவா தூக்கம்?
கள்ளம் தவிர்ந்து கலந்து = உன் கள்ளமான அரைத் தூக்கம் போதும்! வா, எங்களுடன் கலந்து விடு! எம்பெருமானிடத்தில் "கலந்து" விடு!

திருக் "கலந்து" சேரும் மார்ப தேவ தேவ தேவனே,
இருக் "கலந்த" வேத நீதி ஆகி நின்ற நின்மலா,
கருக் "கலந்த" காள மேக மேனி யாய நின்பெயர்,
உருக் "கலந்து" ஒழிவி லாது உரைக் குமாறு உரைசெயே
!

இப்படிக் கலந்து கலந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!
Read more »

Tuesday, February 26, 2008

மஜ்ஜை தானம் மகத்தான தானம்! Bone Marrow Donation - Part 2

எலும்பு மஜ்ஜை தானம்-னு பதிவுல சொல்றதுக்கு எல்லாம் ஈசியாத் தான் இருக்கும்! ஆனா உதவணும் மனம் இருந்தாக் கூட, மனத்தில் கூடவே பயமும் இருக்கேப்பா!
எங்க வீட்டுல சொன்னா அவ்ளோ தான்! டின்னு கட்டிருவாங்க! இந்த வேலையெல்லாம் உனக்குத் தேவையா-ன்னு கேட்பாங்களே!

அட என்னாங்க அண்ணாச்சி, இப்பிடி வீட்டுக்குப் பயந்த புள்ளையாட்டும் Act கொடுக்கறீங்க? நீங்க "தம்" அடிக்கறது வீட்டுக்குத் தெரியுமா என்ன? :-)
இல்லீன்னா மவுண்ட் ரோடு Casino தியேட்டர் படத்துக்கு எப்பமே வீட்ல சொல்லிட்டுத் தான் வாரீங்களா? :-)
ஹிஹி! கோச்சீக்காதீங்க! சும்மா ஒங்களைச் சீண்டறத்துக்காகச் சொன்னேன்!

நமக்கே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா விஷயம் புரியுது! அப்படி இருக்க, வீட்டில் இருக்கும் அம்மா அப்பாவுக்கோ, இல்லை மனைவிக்கோ முழு விஷயம் தெரியும்-னு எதிர்பார்க்கலாமா? நீங்க பக்குவமா எடுத்துச் சொல்லலாம்!

அதை விட, நீங்க தானம் கொடுத்து விட்டு அப்புறம் வந்து சொன்னீங்கனா, உங்களைப் பார்த்த பின்னாடி அவிங்களுக்கே ஒரு தெம்பு வந்துரும்! சமையலைக் கூட உங்க மேலத் தானே முதலில் டெஸ்ட் பண்ணறது வழக்கம்? அதே போல இதுக்கும் நீங்க தான் முதல் டெஸ்ட்! :-)

பச்சைக் குழந்தைகள் விஷயத்தில் உங்களையும் என்னையும் விட, வீட்டில் இருப்பவங்களுக்குத் தான் கருணையும் அதிகம்! பொறுமையும் அதிகம்! எத்தனையோ விஷயம் செஞ்சிட்டீங்க! இதைச் செய்ய முடியாதா உங்களால?

வலியோ, பக்க விளைவுகளோ இன்றி இயல்பாக எடுக்கப்படும் முறை தான் எலும்பு மஜ்ஜை தானம்-ன்னு சென்ற பதிவில் பார்த்தோம்!
வாங்க, இன்னிக்கு, தானம் கொடுக்கும் போது என்னவெல்லாம் நடக்குது-ன்னு பாத்துருவோம்!

Fear of the Unknown-ன்னு சொல்லுவாங்க! கடவுளைப் பத்தி தெரியாத வரைக்கும் தான் "பய"பக்தி! கொஞ்சம் தெரியா ஆரம்பிச்சிருச்சுன்னா, "பய"பக்தியில், பயம் போயிடும்! பக்தி மட்டும் நின்னுக்கும்! அது போலத் தான் இதுவும்! விஷயம் தெரிஞ்சி போச்சின்னா பயம் போயிடும் :-)


*1. முதலில் பதிவு! அப்பறம் தான் எல்லாம்!சென்ற பதிவில் சொன்னா மாதிரி, முதலில் பெயரைப் பதிஞ்சிக்கிடணும்! இணையத்துலேயே பதிஞ்சிக்கிலாம்!
* இந்தியாவில் பங்களிக்க இங்கிட்டுப் போங்க!
* அமெரிக்கா நிரந்தர வாசமா? - இங்கிட்டுப் போங்க!
* அமெரிக்காவில் பதிந்தவுடன், Kit வீடு தேடி வரணுமா? இங்கே!
* அவிங்கவங்க நாட்டில் பங்களிக்க, இங்கிட்டுப் போகலாம்!

*2. பதிஞ்சாச்சு; அப்பாலிக்கா என்ன?நீங்க பதிஞ்சி முடிஞ்சதும், உங்களின் எச்சில் சாம்பிளோ அல்லது இரத்த சாம்பிளோ கொடுக்கச் சொல்லிக் கடிதம் வரும். உங்கள் ஊரிலேயே இருக்கும் ஆய்வுக் கூடத்துக்கு (Diagnostic Lab) அனுப்பி வைப்பார்கள். இதில் உங்கள் செலவு எதுவும் கிடையாது!

* முக்கியமா இங்கிட்டு ஒரு விஷயம் சொல்லிக்கறேன் மக்களே!
நீங்களும் இது தொடர்பா எதற்கும் காசு கொடுக்க வேண்டாம்! அதே போல தானத்துக்காக, உங்களுக்கும் எந்தக் காசும் தரப்பட மாட்டாது! :-)

*3. அடுத்தது தானம் தானா?
அதான் இல்லை! பல நேரங்களில் உங்களுக்கு அழைப்பே வராமல் கூட போகலாம்! பாவம், எந்தக் குழந்தையோ, இல்லை எந்த மனிதரோ? தேவையைப் பொறுத்து தான் அழைப்பு வரும்!

ஒரே குடும்பத்துக்குள் ஒப்புமை (Match) கிடைப்பதே 30% தான்!
அப்படி இருக்க வெளியில் கிடைப்பது அதை விடக் கம்மி!
இப்போ தெரியுதுங்களா, எதுக்கு பெயரையாச்சும் பதிஞ்சி வச்சிக்குங்க-ன்னு திருப்பித் திருப்பி பிளேடு போடறேன்-னு! இதுக்குத் தான்! :-)

*4. சரிப்பா, நான் ஒருத்தருக்கு மேட்ச் ஆயிட்டேன்னு வை! அப்புறமா?
கையைக் கொடுங்க சாமீ! நீங்க ஆசீர்வதிக்கப்பட்டவர்! லட்சத்துல ஒருத்தரய்யா நீர்! உங்களால் ஒரு பிஞ்சு ஜீவன் காப்பாத்தப்படணும்-னு இருக்கு!


நீங்கள் மேட்ச் ஆனீர்கள் என்றால், மருத்துவமனையில் இருந்து உங்களிடம் தொலைபேசுவார்கள்! இன்ன காரணத்துக்குத் தேவை என்பதைச் சொல்லி, உங்களிடம் மீண்டும் ஒரு முறை சம்மதம் கேட்பார்கள்!

தயவு பண்ணி "யோசிச்சி சொல்லறேன்" எல்லாம் சொல்லிடாதீங்க! உண்டு/இல்லை-ன்னு தெளீவா சொல்லிருங்க!
யாரும் உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டாங்க! தப்பா நினைச்சிக்கவும் மாட்டாங்க! நேரத்தை வீணடிக்காமல், லட்சம் பேரில் வேறு யாரையாச்சும் தேடுவாங்க!

உங்கள் உடல் நிலையோ, அல்லது வேறு குடும்பக் காரணங்களோ உண்மையாகவே தானத்துக்குத் தடையா இருக்கும் பட்சத்தில் சொல்லிவிடலாம்! அவர்களும் பல கேள்விகள் கேட்டு, நீங்கள் அந்த நேரத்தில் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொண்டு தான் அடுத்த கட்டத்துக்குச் செல்வார்கள்.

*5. அடுத்தது என்ன? தானம் தான்!
மருத்துவமனையில் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்! நீங்களும் அவர்கள் யாரும் போலி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, தானத்துக்கான அடையாள அட்டையைக் கொடுத்து விடுவார்கள்.

அப்பறம் என்ன? ஆப்பிள் ஜூசு குடிங்க! :-)
மயக்க மருந்து உங்களுக்குத் தரப்படும்! (லோக்கல் அனிஸ்தீஷியா)! ஆனா முழிச்சிக்கிட்டு தான் இருப்பீங்க!

மெல்லிய ஊசிகளால் 3-5% எலும்பு மஜ்ஜை எடுத்துக் கொள்ளப்படும்! அதுவும் நாலு வாரங்களில் மறுபடியும் உங்கள் உடலில் சுரந்து விடும்! மொத்தம் 2-4 மணி நேரம் தான்! அப்பறம் அன்னிக்கே வீட்டுக்கு வந்து விடலாம்!
*6. பக்க விளைவுகள்?ஒங்க தில்லுக்கு அதெல்லாம் ஒன்னுமே வராது! கவலைப் படாதீங்க!
சில மக்கள் மட்டும் சோர்வு/தலைவலி வந்ததாச் சொன்னாங்களாம்! அதான் இப்பல்லாம் சூடான பதிவுக்குச் சூடான பின்னூட்டம் போட்டா, பக்க விளைவுகள் எல்லாம் தானா வருதே! இதெல்லாம் உங்களை அசைச்சிடுமா என்ன? :-)

*7. என்னிடம் எடுக்கப்பட்ட மஜ்ஜை அடுத்து எங்கே போகும்?
அதே மருத்துவமனையிலோ, இல்லை பயனாளி எங்கு அட்மிட் ஆகி இருக்காரோ, அங்கு மருத்துவக் கூரியர் மூலமாக விரைந்து செல்லும்!
ஏற்கனவே அந்த நோயாளி/குழந்தை கீமோதெரப்பிக்கு உட்படுத்தப்பட்டு இருப்பாங்க! இது நோய் வாய்ப்பட்ட செல்களை (diseased cells) ஓரளவு அகற்றி இருக்கும்!

உங்கள் மஜ்ஜையில் கிடைத்த செல்கள் அவர்களுக்கு transfusion மூலமாகச் செலுத்தப்படும்.
இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாப் போச்சுனா, சில நாட்களில் ஆரோக்யமான செல்களை அவர்கள் உடம்பும் உற்பத்தி செய்யத் துவங்கி விடும்!

*8. தானம் பெற்றுக் கொள்பவரிடம் நான் பேசலாமா?
நீங்கள் விருப்பப்பட்டால் பதிவு செய்து கொள்ளலாம்! 3-6 மாதம் கழித்து கடிதமோ, தொலைபேசியோ, இல்லை நேரிலோ சந்திக்க ஏற்பாடு செய்து தருவார்கள்.

*9. இன்னொருத்தருக்கும் தானம் செய்ய என்னைக் கூப்பிட்டால்?
ஹிஹி! பயப்படாதீங்க! அதெல்லாம் கூப்பிட மாட்டாங்க! நீங்க தானம் செய்து முடித்த அடுத்த ஒரு ஆண்டுக்கு, உங்கள் பெயர் தகவற் களஞ்சியத்தில் (Database) இருந்து மறைக்கப்படும்! உங்களை இரத்த தானம் கூட செய்ய வேண்டியதில்லை என்றும் சில இடங்களில் சொல்லி விடுவாங்க.

* 10. இன்னொரு ஈசியான விஷயம் வந்திருக்கு!
அண்மைக் காலத்தில், எலும்பு மஜ்ஜைக்குப் பதிலா, PBSC-ன்னு ஒன்னு வந்திருக்கு! Peripheral Blood Stem Cell-ன்னு பேரு! இதில் தானம் செய்வது இன்னும் எளிது! எலும்பு மஜ்ஜை எடுப்பதற்குப் பதிலா, நம்ம இரத்தத்தில் இருந்தே செல்களை எடுத்துக்கறாங்க!

தானம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன், ஊசி மூலம் மருந்து செலுத்தி, அதிக செல்கள் இரத்தத்தில் உற்பத்தி ஆகுமாறு செய்யறாங்க. பின்னர் ஒரு கையில் இருந்து இரத்தம் எடுத்து நம் கண் முன்னாலேயே கருவிக்கு அனுப்புறாங்க.

அது செல்களை மட்டும் பிரித்து எடுத்துக் கொண்டு விடும்! மீதி இரத்தத்தை நம் அடுத்த கைக்கு அனுப்பி விடுவார்கள். இதில் மயக்க மருந்தோ, மஜ்ஜை எடுப்பதோ இல்லாமல் இன்னும் எளிதாகப் போய் விடுகிறது.
ஒரே ஒரு விஷயம்: இது இன்னும் பரவலாக்கப் படவில்லை!


மக்களே,
ரெண்டு பதிவுக்கும் வந்து படிச்சிப் பார்த்து, ஆதரவு தந்தமைக்கு நன்றி!
ரொம்ப டெக்னிக்கலா எல்லாம் சொல்லாது, இயல்பா பேசிக்கறாப் போலத் தான் சொல்லி இருக்கேன்! அதையும் மீறி கொஞ்சம் மொக்கை தலை தூக்கி இருந்தா மன்னிச்சிக்குங்க!

நீங்கள் செய்யும் ஒரே உதவி - எலும்பு மஜ்ஜை தானம், பேரில் இருப்பது போல் அப்படி ஒன்னும் பயங்கரமானது இல்லை என்பது தெரிந்து கொள்வது தான்!
உங்களுக்கு இந்நேரம் தானாகவே தெரிஞ்சிருக்கும்! உங்களுக்குத் தெரிஞ்சதைத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்க! அதுவே முதல் படிக்குப் போதும்!

இதையும் மீறி அடுத்த கட்டத்துக்குச் சென்று உதவணும் நினைச்சா...
please please please...உங்கள் பெயரை இங்கு பதிந்து கொள்ளுங்கள்!

உயிர் தேடும் வேட்டையில், லட்சத்தில் ஒரு பெயர் அகப்படும் போது ஏற்படும் விம்மிதம் இருக்கே! அது சொல்லில் அடங்காது!
இறைவனுக்குச் செய்யும் திருமஞ்சனம் (அபிஷேகம்) எப்படி குளிரப் பண்ணுகிறதோ, அதே போல், "உயிர் தரும் செல்களால்" ஒரு குழந்தைக்குச் செய்யும் திருமுழுக்கு, பெருமானுக்கு என்றுமே உகப்பானது! குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!

குழந்தைகள் வலி இன்றி, வளம் பெற்று வாழட்டும்!
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங் கைகளாலே வந்து அச்சோ அச்சோவே!
ஆரத் தழுவ வந்து அச்சோ அச்சோவே!!
(- பெரியாழ்வார் திருமொழி; குழந்தையை நோய் அண்டாமல் இருக்கப் பாடும் பட்டினம் காப்பு)





References (உசாத்துணை):
தானம் கொடுத்த நாள் அன்று ஸ்டீவனின் அனுபவங்கள் =
http://bookreviewsandmore.ca/2007/07/bone-marrow-part-3-donation.html
தானம் கொடுக்கும் போது நடப்பவை என்ன? =
http://www.mayoclinic.com/health/bone-marrow/CA00047
வ.கே.க =
http://www.matchpia.org/htm/faq.htm
http://www.marrow.org/DONOR/When_You_re_Asked_to_Donate_fo/Donation_FAQs/index.html
NMDPஇல் இருந்து Eligibility Guidelines =
http://www.giveblood.org/nmdp/eligibility.htm

Read more »

Sunday, February 17, 2008

இரத்த தானம் செய்யலாம்! Bone Marrow Donation செய்யலாமா? - 1

அண்மையில் Help Gayathri - Leukemia-ன்னு ஒரு பதிவை நண்பர் கப்பி சுவரொட்டியில் போட்டிருந்தாரு!
அதுல காயத்ரி என்னும் இரண்டு குழந்தைகளுக்குத் தாய்-இருபத்து எட்டு வயதுப் பெண், எலும்பு மஜ்ஜை தானம் தேடி அலையும் செய்தி வந்துச்சி.

இரத்த தானம்-ங்கிறது இப்பெல்லாம் சர்வ சாதாரணமா ஆகிப் போச்சு!
ஆனா அது என்னாங்க எலும்பு மஜ்ஜை தானம்?
பேரைக் கேட்டாலே பயமா இருக்கே! = எலும்பு/ மஜ்ஜை
தானம் கொடுக்கறேன் பேர்வழி-ன்னு ஏதாச்சும் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டா?...

Okay; அதாச்சும் என்னான்னா...
பச்சைக் குழந்தைங்க ஒன்னுமே பண்ணாம, கஷ்டப்படுறத பாத்தா மட்டும் தாங்க முடியறதில்லீங்க!
கோவம் கோவமா வருது! வீட்டுக்கு வந்து "போய்யா...நீயும் உன் கருணையும்"-ன்னு சண்டை எல்லாம் கூட போட்டிருக்கேன் முருகன் கிட்ட!

சினிமாவிலும் கதைகளிலும் Blood Cancerஐப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டுப் போச்சு நமக்கு! அங்க காட்டுறதெல்லாம் வாழ்வே மாயம் கமலஹாசன் ஸ்டைல்ல மட்டுமே வரும்!
ஆனால், சிறு குழந்தைகள் இந்த நோயால் படும் அவஸ்தை?
இதுக்கு, இந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை ஒளிக் கீற்றாய் வந்திருப்பது தான் Bone Marrow என்னும் எலும்பு மஜ்ஜை சிகிச்சை!

நாங்கள் பங்கு கொள்ளும் சமூக நிலையத்தின் (Community Center) சார்பாக, விழிப்புணர்வு முகாம் ஒன்னு அண்மையில் நடந்துச்சு!
புது ஜெர்சி, நியூ பிரன்ஸ்விக் நகரத்து St. Peters மருத்துவமனையில் நடந்த இந்த முகாமில், ஒரு volunteerஆ (தன்னார்வலர்...தமிழ்-ல சரி தானே?) கலந்துகிட்டேன்!

அப்போது தான் இரத்த தானம் போல் இந்தத் தானம் பற்றியும் பல விசயங்கள் தெரிய வந்துச்சி!
சரி உங்க கிட்டு வந்து புலம்பாம வேறு யாரு கிட்டப் போயி புலம்பப் போறேன்?

அதான் வழக்கம் போல, உங்க கிட்ட கொஞ்சம் சொன்னா,
நீங்க இன்னொருத்தர் கிட்ட பேச்சுவாக்குல சொல்லி, அப்படியே கொஞ்சமாச்சும் பரவாதா என்ன?

தானம் தராமல் வேறு வழிகளில் கூட உதவ முடியும்!
இப்போதே தரணும் என்பது கூட இல்லை! பெயரைப் பதிந்து கொண்டால் கூடப் போதும்!
இரண்டு தொடராப் போடுறேன். படிச்சித் தான் பாருங்களேன்!


இரத்த தானம் - அதன் அருமை பெருமை இப்போ எல்லாருக்கும் தெரியும்! தூய்மையான முறைகளில் இரத்தம் கொடுக்க இப்போதெல்லாம் யாருக்கும் எந்தப் பயமும் இருக்குறதில்ல! 

வலியப் போயி இரத்தம் கொடுக்கும் நல்ல உள்ளங்கள் நாட்டில் இருப்பதை நினைச்சாப் பெருமையாத் தான் இருக்கு! இரத்த தானத்துக்குன்னே விதம் விதமா நெட்வொர்க் இருக்கு!
ஆனா இது போல ஒரு விழிப்புணர்வு எலும்பு மஜ்ஜை தானத்துக்கு இருக்கான்னு கேட்டா...இல்லைன்னு தான் சொல்லணும்! 

இரத்த தானம் வந்த புதிதில், மக்களுக்கு என்னவெல்லாம் பயம், தயக்கம் இருந்துச்சோ, 
அதே மாதிரி புதுசா வந்த இந்த எலும்பு மஜ்ஜை தானத்துக்கும் இருக்கு!

இந்த எலும்பு மஜ்ஜைத் தானம் எப்படின்னா,
இரத்த தானத்தில் இரத்த வகை (Blood Group) மாதிரி அவ்ளோ ஈசியா எல்லாம் இங்க செட் ஆகாதுங்க! 
ஒரே குடும்ப முறை, நெருங்கிய சொந்தம், ஒரே நாடு/இனம்-னு இப்படிச் செட் ஆவுற விஷயங்கள் ஏகப்பட்டது இருக்கு இதுல!

அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுக்குன்னே ஒரு பெரிய தகவற் களஞ்சியம் (Database) வச்சி நடத்துறாங்க! இந்தியாவில் இப்பத் தான் கொஞ்சம் கொஞ்சமா விழிப்புணர்ச்சி வரத் தொடங்கி இருக்கு!

இந்தத் தானத்தைத் தேடுற இந்தியர்கள் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லீங்க! அதுவும் இப்ப அண்மைக் காலங்களில் இந்தியக் குழந்தைகளும் இதனால் அதிகம் பாதிக்கப்படுதுங்க! 
இந்தச் சின்னக் குழந்தைகளுக்காகத் தேடித் தேடி அவங்க அம்மா-அப்பா நடக்கும் நடை இருக்கே! அப்பப்பா!!

இந்தக் காலத்துல ஒரே குழந்தையோட கூட நிறுத்திக்கறாங்க! 
அதுனால சகோதர சகோதரிகள் வழியாகவோ, இல்லை நெருங்கிய குடும்ப உறவு மூலமாகவோ தானம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டே வருது! 
அதுனால வெளியில் தேட வேண்டிய கட்டாயம்! சரி...எங்கே-ன்னு போய் தேடுவது?
டாக்டர்கள் பொதுவா சினிமாவில் வருவது போல், அமெரிக்கா-ன்னு கைகாட்டுவாங்க! 
ஆனா இங்கிட்டு அல்லாடித் திரிஞ்சி வந்து, நம்ம இனத்துக்கு ஒத்து வரா மாதிரி, மரபியல் (genetics) சார்ந்த ஒரு தானம் அளிப்பவரைத் தேடிக் கண்டு பிடிப்பதற்குள்...போதும் போதும் என்று ஆகி விடும்!

எத்தனை தான் பணம் வைத்திருக்கட்டுமே! 
சிகிச்சையும் முழுசாத் துவங்க முடியாமல், தானம் கிடைக்கும் இடம் எது-ன்னு கூட தெரியாமல், பிஞ்சு உயிர்கள் அல்லாடும் சிலவற்றைப் பார்த்த போது.....இறைவா!



* இவிங்களுக்கு என்ன தான் தேவை?
நம் முதுகின் பின்னால் இருக்கும் பெல்விக் எலும்புகளில் இருந்து கொஞ்சூண்டு திரவங்கள். 
இந்தத் திரவம் தான் Liquid Marrow - எலும்பு மஜ்ஜை!
மட்டன் சாப்பிடும் போது சில பேர் உறிஞ்சுவார்களே! இல்லீன்னா முருங்கைக் காய் உறிஞ்சுவோம் இல்லியா! அது போலன்னு வச்சிக்குங்களேன்!

* எதுக்கு இதெல்லாம் இவிங்களுக்குத் தேவைப்படுது?உயிர் அச்சுறுத்தும் சில நோய்கள் - Leukemia, Lymphoma, குழந்தைகள் கேன்சர் போன்றவற்றிற்கு இந்த எலும்பு மஜ்ஜையோ இல்லை கொடி இரத்தமோ (Cord Blood) சிகிச்சைக்குத் (Transplant) தேவைப்படுகிறது!

* இது தவிர வேற சிகிச்சையே இல்லையா?
கீமோதெரப்பி, ரேடியேஷன்-ன்னு சில சிகிச்சைகள் இருந்தாலும்...பல ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த எலும்பு மஜ்ஜை சிகிச்சையை நிரந்தரத் தீர்வாக் கண்டு பிடிச்சிருக்காங்க!
அதுவும் சிறு குழந்தைகளை, ரேடியேஷன் போன்ற பழைய வலி நிறைந்த சிகிச்சைக்கு உட்படுத்திக் காலத்தை வீணடிப்பதை விட, இது இன்னும் நல்ல தீர்வாக உள்ளது!

* இதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்?
1. நம் எலும்பு மஜ்ஜையைத் தேவைப்பட்டால் கொடுக்கலாம்-ன்னு எண்ணம் வந்தா போதும்!
2. உடனே கொடுக்கணும்-னு இல்லை! பெயரைப் பதிஞ்சி வச்சிக்கிட்டா போதும்! எப்போது தேவையோ அப்போது அவர்களே கூப்பிடுவார்கள்!
3. அதுவும் அபூர்வ இரத்த வகை உள்ளவர்கள் (Rare blood group) செய்தால் இன்னும் புண்ணியமாப் போகும்!
4. தெரியாதவங்களுக்கு எடுத்துச் சொல்லலாம். உங்கள் நிறுவன மனிதவளத் துறையிடம் (HR) அறிமுகப்படுத்தலாம்!
5. முற்றிலும் நம் விருப்பம் தான்! பெயரைப் பதிந்த பின், நமக்குப் பிடிக்கலைன்னா முடிவை மாத்திக்கலாம்! எதுவும் கட்டாயம் இல்லை!

* யார் வேண்டுமானாலும் கொடுக்கலாமா?
1. 18-60 வயதுக்குள் யார் வேண்டுமானுலும் தரலாம்!
2. எச்.ஐ.வி மற்றும் 18 வயதுக்கு மேல் மஞ்சள் காமாலை வந்தவர்கள் தானம் தர முடியாது.
3. போதைப் பொருள் பழகியோர், வரம்பற்ற உடலுறவு கொண்டவர்கள் - இவர்கள் மட்டும் தானம் தர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

* எலும்பு, மஜ்ஜை...பேரே ரொம்ப பயமா இருக்கேப்பா!ஹிஹி...பயப்படாதீங்க! 
உங்க எலும்பை ஒடைச்சி இன்னொருத்தருக்குப் பொருத்த எல்லாம் மாட்டாங்க! 
முட்டிக்கி முட்டி தட்டறது எல்லாம் இங்கிட்டு கிடையாது! :-) பாருங்க எப்படிக் காபி குடிச்சிக் கிட்டே கொடுக்கறாரு மனுசன்!
1. இது பெரும்பாலும் outpatient முறை தான். 4-6 மணி நேரத்துக்கு மேல் ஆகாது!
2. இரத்த தானத்துக்கும் இதுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, இதுக்கு லோக்கல் மயக்க மருந்து (Local Anaesthesia) கொடுப்பது தான்! மத்தபடி ஒன்னும் பெருசா வித்தியாசம் இல்லை!

3. வலியோ, அபாயமோ கிடையாது! உங்களிடம் இருந்து பெறப்படும் 5% மஜ்ஜையே போதும் ஒரு உயிரைக் காப்பாற்ற!
4. தானம் கொடுத்த 4-6 வாரங்களில், உங்கள் உடம்பு, நீங்கள் கொடுத்த தானத்தை ஈடு கட்டி விடும்!

5. வெகு சிலருக்கு மட்டுமே தலைவலி, அசதி ஓரிரு நாள் இருக்கலாம்! ஆனால் இது மிகவும் கம்மி!
பிட்ஸ்பர்க் வேங்கடேஸ்வரர் ஆலயத்தில் Bone Marrow Drive செய்யும் சிறார்கள்

* சரி யோசிக்கிறேன்! ஆனா இதுக்கு எங்கிருந்து ஆரம்பிக்கறது? ஏதோ பெயரைப் பதிஞ்சி வச்சிக்கலாம்-னு சொன்னீங்களே! எங்கே?

முதலில் யோசிக்கறேன்-னு சொன்னீங்க பாருங்க! அதுக்கே நன்றி!

உலகில் மிகப் பெரிய - கொடையாளர்கள் தகவற் களஞ்சியம் - National Marrow Donor Program (NMDP) - Marrow.org
அமெரிக்காவை மையமாக வைத்துச் செயல்பட்டாலும், உலகெங்கும் மருத்துவர்கள் இதில் யாராச்சும் உதவுவோர் கிடைக்க மாட்டார்களா என்று முதலில் பார்க்கிறார்கள்.

ஆனால் அண்மையில் நம் இந்திய நாட்டவர்/வம்சா வளியினருக்கு என்றே ஒரு தனி தகவற் களஞ்சியம் தொடங்கப்பட்டுள்ளது!
என்னைக் கேட்டால், அதில் பதிந்து கொள்வது இன்னும் சிறப்பு! 
மரபியல் ஒப்பாக உள்ளவருக்குத் தானே உதவ முடியும்! இங்கு பதிந்தால் பெறுபவருக்கும் நன்மை! கொடுப்பவருக்கும் எளிது!
அந்தத் தளத்தின் பெயர் MatchPIA.org

***இங்கே நம் பெயரைப் பதிந்து கொள்ளலாம்! ***லட்சத்தில் ஒருவர் தான் தானத்துக்குத் தேறுகிறார்!
நீங்கள் அந்த உயிர் தரும் அபூர்வ கொடையாளியாகவும் இருக்கலாம்!
YOU could be that special life-giving person!
இவர்களின் திட்டம் இந்திய மரபியல் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும்!
//The goal of USADR, is to build a donor registry of educated and committed donors, who will represent a concentration of genetics by different regions of India, resulting in a greater number of matches for South Asian patients. Once completed, this project may be deemed the Largest Genetic Journey undertaken in India//

என்னைக் கேட்டால்,
அயல் நாட்டில் தற்காலிகமாக வாழும் நம் போன்ற இளைஞர்/இளைஞிகள், இதற்கு முதலில் காலடி எடுத்து வைக்க நினைக்க வேண்டும்! நாம் வளர்ந்த தாய்நாட்டில், இன்று வளரும் குழந்தைகளுக்குச் செய்யும் மிகப் பெரிய கைம்மாறாக இது இருக்கும்!

கணிணித் துறையில் எத்தனையோ பேர் databaseகளில் வேலை பார்க்கிறோம். சாதாரணமாய் ஒரு query போட்டு ஒன்னுமே வரலை என்றாலே எப்படி வெறுப்பாய் இருக்கு! 
ஒரு உயிர் காக்க இவர்கள் தேடும் bone marrow queryக்கு, ஒன்றுமே கிட்டவில்லை என்றால் இவர்களின் அப்போதைய மனநிலை எப்படி இருக்கும்-னு கற்பனை செய்து பாருங்கள்!

குறைந்தபட்சம் இந்த Database-ஐ ஆவது நாம் நிரப்பலாம்!
அடுத்த பதிவில்...
* பெயரைப் பதிந்து கொண்டால் எப்படிக் கூப்பிடுவாங்க?
* இன்னாருக்கு/இந்த நாட்டவருக்கு மட்டும் தானம் அளிக்கிறேன் என்று சொல்லலாமா?
* எப்படி எடுப்பாங்க? பக்க விளைவுகள் ஏதாச்சும் இருக்குமா?
* இப்படித் தானம் கொடுத்தால் வீட்டில் திட்டு விழுமா? :-)
என்பதை எல்லாம் பார்த்து விட்டு முடிப்போம்!

உங்களுக்கு இந்தத் தானம் சம்பந்தமான கேள்விகள் இருந்தாலும் தயங்காமல் கேளுங்க! அடியேன் அறிந்த வரை சொல்கிறேன். எங்கள் இயக்கத்தில் மருத்துவரைக் கேட்டும் சொல்கிறேன்.
நம் பதிவர்கள் இடையே இருக்கும் VSK ஐயா உட்பட மருத்துவர்கள் பலரையும் நாம் கலந்து ஆலோசிக்கலாம்!

(இன்று குலசேகராழ்வார் பிறந்த நாள். நேரம் இருந்தால் தனிப் பதிவு இடுகிறேன். இல்லீன்னா, இதையே அவர் பதிவாகக் கருதிக் கொள்ளவும்)

References (உசாத்துணை):தானம் கொடுத்த நாள் அன்று ஸ்டீவனின் அனுபவங்கள்= http://bookreviewsandmore.ca/2007/07/bone-marrow-part-3-donation.html
தானம் கொடுக்கும் போது நடப்பவை என்ன?
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP