Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts
Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts

Monday, December 17, 2007

குறுக்குப் புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன்!

குறுக்கும் நெடுக்குமாய் ஓடி, வெற்றி பெற்றவர்கள் இதோ!
அறிவன்
அரைபிளேடு
மோகன்தாஸ்
தங்கம்
லஷ்மி
பொன்ஸ்
ஜெயஸ்ரீ

அனைவருக்கும் வாழ்த்துக்கள் மக்களே!
புதிரா புனிதமாவில், முதல் முறை நிறைய பேர் 100/100 அடித்துள்ளார்கள்! மகிழ்ச்சியாய் இருக்கு!

ஆர்வமுடன் பங்கு பெற்ற மற்றவர்களுக்கும், வாழ்த்துக்கள்!
பரிசு எப்படியும் உங்களுக்கும் சேர்த்து தானே! :-)
இதோ பரிசேலோ ரெம்பாவாய்.... ஆசிரியர் கல்கியுடன், பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களின் Group Photo. ஏற்கனவே நீங்கள் பார்த்தும் இருக்கலாம்! யார் யார் எந்தெந்த பாத்திரம் தெரிகிறதா? (நன்றி பொ.செ யாகூ குழுமம்)

புதிரா புனிதமாவில், குறுக்கெழுத்து ஸ்டைல் நல்லா இருக்கா, இல்லை பழையபடி மல்டிபிள் சாய்ஸ் தான் பிடிச்சிருக்கா?
மேலாக்க ஒரு வாக்குப் பெட்டி இருக்கு பாருங்க! அங்கன சொல்லுங்க மக்கா! அடுத்த முறை அப்படியே பின்னிடலாம்!

சரியான விடைகள் இதோ: (பெருசாப் பாக்கணும்னா, கிளிக்குக)




மக்களே
நண்பர்கள் ஜிடாக்கில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நியூயார்க் நேரப்படி, நாளை மாலை (Dec 19) வரை வாய்தா போட்டாச்சே!


அலோ மக்களே, ஏதோ மார்கழி மாசம் பொறந்துடுச்சாமே! குளிருல நடுங்கிக்கிட்டே என்ன பண்றீங்க? - தெருவுல கலர் கலரா, கலர்கள் போடும் கலர் கோலங்களைப் பார்க்க கலரலையா நீங்க?...ச்சே கிளம்பலையா நீங்க? :-)

என்னாது, ஓவராக் குளிருதா?
அதுக்காக அப்படியே போத்திக்கிட்டு தூங்கிட முடியுமா என்ன? குளிர் பாத்தா கலர் பாக்க முடியுங்களா? கெளம்புங்க மக்கா!
முட்டைய ஒடைச்சாத் தான் ஆம்லெட்டு! ஆட்டையைப் போட்டாத் தான் ஆள் செட்டு! :-)

சரி...மேட்டர் இன்னான்னா, மார்கழி மாசம் பெண்கள் எல்லாம் பாவை நோன்பு நோற்பாங்களாம்! விளையாட்டு போல விளையாடிக்கிட்டே செய்வாங்களாம், பாட்டுக்குப் பாட்டு ஸ்டைல்-ல!

அப்ப, ஆண்கள் மட்டும் சும்மாவா? - நாங்க சிங்கம்-ல!
அவங்க பாட்டுக்குப் பாட்டுன்னா,
நாங்க வார்த்தைக்கு வார்த்தை! - தெரியும்-ல!
அதான் நாமளும் மார்கழி வார்த்தை விளையாட்டைத் தொடங்கிடலாம்-னு...

இதோ அடுத்த புதிரா? புனிதமா??
இந்த முறை ஆட்டம் கொஞ்சம் வித்தியாசம்.....குறுக்கெழுத்துப் புதிர்!
மார்கழி மாசம் கோலம் போடுறா மாதிரி, கட்டம் கட்டமா போட்டு ஒரு மார்கழி ஸ்பெசல்!!

டாபிக் - எல்லாருக்கும் புடிச்ச எவர் க்ரீன்...பொன்னியின் செல்வன்!
மார்கழி ஆட்டம் ஆடுங்க மக்கா...விடைகள் நாளை மாலை நியூயார்க் நேரப்படி!
என்னாது....பேப்பர், பென்சில் எல்லாம் வேணுமா?...
அந்தா...அந்தப் பொட்டிக் கடையில வாங்கிக்குங்க, பழுவேட்டரையர் அக்கவுண்ட்-ல! :-)


விடைகளைப் பொட்டிக்குள்ளாரயே போட்டுப் பாக்கலாம்!
பின்னூட்டம் இடும் போது மட்டும், கீழே உள்ள காப்பி பேஸ்ட்-ஐ யூஸ் பண்ணிக்கங்க மக்கா!



இடமிருந்து வலம்:

1. அப்பர் சுவாமிகள் கண்ட காட்சி, திருவிழாவாக நடக்கும் ஊர். இங்கு தான் ரெண்டு சீனத்து வர்த்தகர்கள் வாராங்க! (5)
2. புயல் அடித்த பின் இங்கு பழுவேட்டரையர் வருகிறார், இளவரசரைப் பிடித்துக் கொண்டு போக!
ஊரின் முதல் பாகம் பத்து மில்லியன். இரண்டாம் பாகம் தான் புதிரின் விடை (2)
3. தேவாரம் மீட்ட திருநாரையூர் இளைஞரின் கடைசிப் பெயர் - last name (3)

4. //இவன் என்னைச் சிநேகத்துரோகி என்று சொன்னான். ஆனால் இவன் சிநேகத்துரோகி மட்டுமல்ல; எஜமானத் துரோகி// -
இவ்வாறு கந்தமாறனைக் கரிகாலனிடம் போட்டுக் கொடுப்பது யார்? (8)
5. பூங்குழலியின் அண்ணி. முதல் நான்கு எழுத்து மட்டும் (4)
6. கல்கியில் நாவல் வந்த போது, பத்திரிகையில் முதலில் படம் வரைந்தவர் (4)

7. (வலமிருந்து இடம்) ஒற்றனுக்கே ஒற்றன் வைக்கும் இவரின் பெயர், பட்டப் பெயர் நீங்கியுள்ளது (5)
8. இளவரசர் அருண்மொழியைப் படகோட்டி, நாகை சூடாமணி விகாரத்தில் இருந்து காத்தவன் (6)
9. இலங்கையில் இருந்து இளவரசர், நேரே இந்தச் சோழ நாட்டு ஊருக்குத் தான் வரவேண்டும் என்று வந்தி அடம் பிடிக்கிறான் (4)
10. மழபாடித் தென்னவன். மாதேவியின் அப்பா (6)

கீழிருந்து மேல்:

1. ஜோதிடர் வீட்டுக் கூரையைப் பிடித்துக் கொண்டு தப்பிய வானதி, வெள்ளத்தில் இந்த ஊருக்கு வந்து கரை சேர்ந்தாள் (6)
2. சிறையிருந்த பைத்தியக்காரனின் உண்மைப் பெயர் (7)
4. (கீழிருந்து மேல்) இந்த ஆற்றில் தான் வேல் எறிந்து வந்தியத்தேவனை மூழ்கடித்ததாக கந்த மாறன் நினைத்துக் கொண்டான் (4)

11. பிரம்மராயர், ஊமை ராணி்யைத் தஞ்சைக்குப் பிடித்துக் கொண்டு வர அனுப்பும் ஆள் யார்? (5)
12. இடும்பன்காரியைச் சந்திக்கும் இன்னொரு சதிகாரன், மீன் முத்திரையைச் செய்து காட்டுவான். இவன் பெயர் என்ன? (8)
13. சுரங்கப்பாதைகளும், பொக்கிஷமும், புலிகளும் இருக்கும்....பழுவேட்டரையரின் இதற்குள் தள்ளப்பட்டால், அதோ கதி தான்! (4)

14. (கீழிருந்து மேல்) செம்பியன் மாதேவியின் கணவர் (8)
15. சோழனுடன் வணிகம் செய்த கிரேக்க நாட்டவர் (4)
16. இந்தப் புதர்களின் பின்னால் இருந்து தான் பூங்குழலி, பழுவூர் இளையராணியும் மந்திரவாதியும் பேசுவதை ஒட்டுக் கேட்டாள் (2)


விடைகளைக் காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளுக்கு ஈசியா....
Across
1
2
3
4
5
6
7
8
9
10

Down
1
2
4
11
12
13
14
15
16


Results of the Poll:

Read more »

Wednesday, July 04, 2007

புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு!

இதோ...விடைகளும், வின்னர்களும்

மோனா, பொன்ஸ், ஜெயஸ்ரீ - 10/10
ஆதித்தன், பினாத்தல் சுரேஷ், ஜி.ராகவன், சத்தியா - 9/10
மனதின் ஓசை, ஸ்ரீதர் வெங்கட் - 8/10
------------------------------------------------------------------------
விடைகள் கீழே...bold செய்யப்பட்டுள்ளன. விரிவான விளக்கங்கள், பின்னூட்டத்தில்! நின்றவர்க்கும், வென்றவர்க்கும் வாழ்த்துக்கள்!!!

பரிசேலோர் எம்பாவாய்!

பொன்னியின் செல்வனுக்கு, ஓவியர் மணியம் வரைந்த இரண்டு படங்கள்:
இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
1. காதல் ஜோடிகள்: குந்தவை-வந்தியத்தேவன், நந்தினி-பழுவேட்டரையர்
2. வீரநாராயணபுரம் ஓவியம் - இது விண்ணகரக் கோவில் என்று நூலின் முதலிலேயே வந்து விடும். அதன் வசனம், சாம்பிளுக்கு இதோ!

//ஸ்ரீமத் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸ்ரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.
அத்தகைய பெருமாளின் கோயிலுக்குத்தான் இப்போது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றார்கள். சந்நிதிக்கு வந்து நின்றதும் ஆழ்வார்க்கடியான் பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-
"பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம்//


படங்களுக்கு நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளை-tamilheritage.org


பொன்னியின் செல்வன் பற்றி நாள் கணக்கில் பேசலாம், பதிவுக் கணக்கில் பேசலாம்! சரி..........மீள் பதிவு மாதிரி, பொன்னியின் செல்வனை மீள் படிப்பு படிச்சா என்னவென்று தோன்றியது!
சரியான சோம்பேறியாச்சே நானு, எங்கிருந்து படிக்கப் போகிறேன்?
அதான் ஒரு பத்து கேள்வி கேட்டுப்புட்டு, பதில் ஒன்றும் பிடிபடலைன்னா, உடனே புத்தகமும் கையுமா உட்காருவதா ஒரு முடிவெடுத்து விட்டேன்!

இதைப் படமாக எடுப்பது பற்றியெல்லாம் பலர் பேசினார்கள்! வந்தியத் தேவனா யாரு நடிக்கலாம்?
என்னைக் கேட்டா, எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பதிவரின் பெயரைத் தான் ரெக்கமண்டேஷன் செய்வேன்!

நீங்க யாரையாச்சும், இல்லாக்காட்டி உங்களையே ரெக்கமண்டேஷன் செய்து கொள்வீர்களா? The Lord of The Rings படமாகுது.....பொன்னியின் செல்வன் ஆக முடியாதா?
நம்ம குருநாதர் Dubukku எப்பயோ ஒரு முறை சொன்னது ஞாபகம் வருது!
"பொன்னியின் செல்வனை ஒரே படமாக எடுப்பது என்பது, பதினெட்டு முழம் புடவையை எடுத்துக் கழுத்தில் "டை" யாக கட்டிக் கொள்வது போல"

பார்ப்போம், எத்தனை தூரம் நந்தினியும் குந்தவையும் நினைவில் இருக்கிறார்கள் என்று!
சேந்தன் அமுதனுக்கும் பழுவேட்டரையருக்கும் என்ன தொடர்பு என்று!
இலங்கையின் பட்டினங்கள் பெயர் நினைவுக்கு வருகிறதா என்று!

இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-)
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு பொன்னியின் செல்வன்!

1

"திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரசோழ பராந்தகரின் மகாமான்ய முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மாதி ராஜர் வருகிறார்! பராக்! பராக்!....."


இந்த அநிருத்தப் பிரம்மராயரின் இயற்பெயர் என்ன?

1


அ) அருண்மொழிப் பட்டன்
ஆ) ராமன் கிருஷ்ணன்
இ) வைணவதாசர்
ஈ) கிருஷ்ணன் ராமன்

2

ஆதித்த கரிகாலனின் நெருங்கிய நண்பர்கள் இருவர். அதில் ஒருவன் இவன். இவன் பெயர் என்ன? இவன் தங்கை தான் வந்தியத் தேவனை விரும்பினாள். ஆனால் இறுதியில் மாண்டாள். அவள் பெயர் என்ன?

2


அ) பார்த்திபேந்திரன் - பூங்குழலி
ஆ) கந்தமாறன் - மணிமேகலை
இ) பினாகபாணி - வானதி
ஈ) முருகையன் - பூங்குழலி

3

இலங்கையில் முதன் முதலாக, பூங்குழலியின் உதவியோடு, நாகத் தீவில் இறங்கினான் வந்தியத்தேவன்.


பின்னர் இளவரசர் அருண்மொழி இருக்கும் நகரத்தை நோக்கிக் கிளம்பினான். எந்த நகரம்?

3


அ) யாழ்ப்பாணம்
ஆ) அனுராதபுரம்
இ) மாதோட்டம்
ஈ) திருக்கேதீசுவரம்

4

சுந்தர சோழர் அடிக்கடி கனவில் கண்டு பயப்படும் ஊமை ராணியின் பெயர் என்ன?

4


அ) மந்தாகினி தேவி
ஆ) செம்பியன் மாதேவி
இ) வானவன் மாதேவி
ஈ) இலாட மாதேவி

5இன்று தமிழ்மணத்தில் போலிகளின் பிரச்சனை இருப்பது போல பொன்னியின் செல்வன் -இலும் ஒரு போலி பாத்திரம் இருந்தது? - ஒரு போலி இளவரசனாய் வலம் வரும் அவர் யார்?

5

அ) குடந்தை வைத்தியர் மகன்
ஆ) மதுராந்தகத் தேவர்
இ) மதுராந்தக உத்தம சோழர்
ஈ) சேந்தன் அமுதன்

6

தீப்பொறி கண்களும் தொங்கும் மீசையுமாக மணியம் வரைந்த பெரிய பழுவேட்டரையர் பற்றிப் படித்திருக்கிறோம்.


அவரைக் கொன்றது யார்?

6

அ) சின்னப் பழுவேட்டரையர்
ஆ) இடும்பன் காரி இ) பெரிய பழுவேட்டரையர்
ஈ) நந்தினி

7

மாய மோகினி, எவரையும் கவரும் வல்லமை கொண்டவள், பேரழகி, சாகசக்காரி....நம்ம நந்தினி, கதையின் கடைசியில் என்ன ஆனாள்?...... தப்பி ஓடினாள்.

ஆம்; பழுவூர் இளைய ராணி நந்தினி தேவியும் மறைந்து விட்டாள். இனி அவளை இக்கதையிலே நாம் காண மாட்டோம் என்கிறார் கல்கி.


அவள் மலைக்குகையில் யாரிடம் இருந்து தப்பி ஒடினாள்?

7


அ) ரவிதாசன்
ஆ) குந்தவை
இ) பழுவேட்டரையர்
ஈ) பாண்டிய ஆபத்துதவிகள்

8

கல்கி, தம் புதினத்தின் நடுநடுவே சைவ, வைணவ, பெளத்த ஆலயங்கள் பற்றிக் குறிப்புகள் பலவற்றைக் கொடுப்பார். கிழவன் சிவனார், கிழவி உமையவளை நான் பாட மாட்டேன் என்று சுந்தரர் கோபித்துக் கொண்டு போன தலம் பற்றி ஒரு குறிப்பு வரும்! பின்னர் உமையவளை மட்டும் இளையவளாக பிரதிட்டை செய்வார்கள். சுந்தரர் வந்து பாடுவார்!


இதே போல் யாரோ பாடமாட்டேன் என்று சொன்னதால் தான் கிழவன் பழுவேட்டரையன் இளையவள் நந்தினியைப் பிடித்தானோ என்று, ஆதித்த கரிகாலன் கிண்டல் செய்வான்! அது எந்தத் தலம்?

8


அ) திருவையாறு
ஆ) நாகைப் பட்டினம்
இ) விருத்தாச்சலம் ஈ) ராமேஸ்வரம்

9

ஆழ்வார்க்கடியான் செய்யும் அடிதடி வம்பு தும்புகள் எல்லாம் படிக்கும் போது ஒரே சிரிப்பாய் இருக்கும். ஆனால் அவன் தமையனார் (அண்ணா) ஒரு சிவ நெறிச் செல்வர்! சோழ தேசத்து ராஜகுருவாகவும் இருந்தவர். யார் தெரிகிறதா?

9


அ) திருநாரையூர் நம்பி
ஆ) ஈசான சிவபட்டர்
இ) குடந்தை சோதிடர்
ஈ) திருக்கோவிலூர் மலையமான்

10

கதையின் கடைசியில் சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்! அருண்மொழி தானே பட்டமேறப் போவதாகப் பிரகடனம் செய்து விட்டு, திடீர் என்று விழாவில், மகுடத்தை சேந்தன் அமுதன் தலையில் அருண்மொழியே சூட்டி விடுகிறார். அப்போது சேந்தன் அமுதன் மறுப்பேதும் சொல்லாமல் இருக்க, அவர் தோள்களை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது யார்?

10


அ) சின்னப் பழுவேட்டரையர்
ஆ) பூங்குழலி
இ) பிரம்மராயர்
ஈ) வந்தியத் தேவன்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!


1 அ) அருண்மொழிப் பட்டன் ஆ) ராமன் கிருஷ்ணன் இ) வைணவதாசர் ஈ) கிருஷ்ணன் ராமன்

2 அ) பார்த்திபேந்திரன் - பூங்குழலி ஆ) கந்தமாறன் - மணிமேகலை இ) பினாகபாணி - வானதி ஈ) முருகையன் - பூங்குழலி

3 அ) யாழ்ப்பாணம் ஆ) அனுராதபுரம் இ) மாதோட்டம் ஈ) திருக்கேதீசுவரம்

4 அ) மந்தாகினி தேவி ஆ) செம்பியன் மாதேவி இ) வானவன் மாதேவி ஈ) இலாட மாதேவி

5 அ) குடந்தை வைத்தியர் மகன் ஆ) மதுராந்தகத் தேவர் இ) மதுராந்தக உத்தம சோழர் ஈ) சேந்தன் அமுதன்

6 அ) சின்னப் பழுவேட்டரையர் ஆ) இடும்பன் காரி இ) பெரிய பழுவேட்டரையர் ஈ) நந்தினி

7 அ) ரவிதாசன் ஆ) குந்தவை இ) பழுவேட்டரையர் ஈ) பாண்டிய ஆபத்துதவிகள்

8 அ) திருவையாறு ஆ) நாகைப் பட்டினம் இ) விருத்தாச்சலம் ஈ) ராமேஸ்வரம்

9 அ) திருநாரையூர் நம்பி ஆ) ஈசான சிவபட்டர் இ) குடந்தை சோதிடர் ஈ) திருக்கோவிலூர் மலையமான்

10 அ) சின்னப் பழுவேட்டரையர் ஆ) பூங்குழலி இ) பிரம்மராயர் ஈ) வந்தியத் தேவன்

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP