Showing posts with label புதிர் போட்டிகள். Show all posts
Showing posts with label புதிர் போட்டிகள். Show all posts

Wednesday, July 04, 2012

Test Your PaaQ - புதிரா? புனிதமா?? தமிழ்ப் பாக்கள்!

#365பா = நண்பர்கள் வட்டத்தில் பலரும் அறிந்த ஒரு வலைப்பூ!

தினம் ஒரு பா = தினமும் தமிழ் கொஞ்சும் சோலை!
அதில் தமிழ்த்தேன் மாந்தும் தும்பிகள் பலப்பல! நானும் ஒர் தும்பி!

இன்று 365th day of 365பா!
இந்தத் தமிழ் முயற்சி, "பல்லாண்டு பல்லாண்டு" என வாழ்த்துமாறு, பந்தல் வாசகர்களை மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
இது = தினம் ஒரு பா மட்டுமல்ல!
இது = தினம் ஒரு உணவு.... பல தமிழ் ஆர்வலர்களுக்கு!

ஒவ்வொரு நாளும்.....
* ஒவ்வொரு தமிழ்ப் பாவைப் பற்றிப் பேசி,
* அதிலுள்ள இலக்கிய/ இலக்கண இன்பங்களை நுகர்ந்து,
* தமிழ் வரலாற்றிலே தோய்ந்து,
* கவிஞர்/ எழுத்தாளரைப் பற்றி மேலும் அறிந்து,
* இன்னும் பல...
மிக முக்கியமாக, தமிழைக் = கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

* தள ஆசிரியர் = நண்பர் என். சொக்கனுக்கு மனமார்ந்த "வாழ்த்துகள்"!:)
* தமிழ்த் தும்பிகளான = @RagavanG, @amas32, சிவ-ஆனந்தன், பழ.கந்தசாமி, பலப்பலருக்கும் வாழ்த்துக்கள்!


முக்கியமான நிகழ்வுகளை = புதிரா? புனிதமா?? (கேள்வி-பதில் போட்டி) வைத்துக் கொண்டாடுவது, பந்தலில் வழக்கம்!
முருகனருள்-100, கண்ணன்பாட்டு-100, போல்..... 365பா-365! Enjoy this Tamizh Quiz:)

* எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால்? போன்ற எளிய கேள்விகளும் உண்டு!:)
* சினிமாப் பாட்டில் வரும் சங்கப் பாடல் கேள்விகளும் உண்டு!
* பத்தே கேள்விகள் - காப்பி அடிப்பது உங்கள் பிறப்புரிமை!:)

அனைத்து பதில்களும் இங்கே "பாத் தேடல்" -இல் தேடினால் எளிதில் கிடைக்கும்:) = http://365paa.wordpress.com/?s=(searchterm, ex: குறுந்தொகை)
அனைத்து கேள்விகளும் 365Paa வில் வந்த தகவல்களே!

முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பரிசு உண்டு!:)
அங்கே தேர்வை முடித்து விட்டு, இங்கே உங்கள் மதிப்பெண்ணைக் கையொப்பம் இட்டுப் போகவும்:)
இதோ வினாத்தாள்! = Test Your PaaQ... Your Time Starts Now:)

Read more »

Thursday, October 21, 2010

புதிரா? புனிதமா?? - கபீர் என்னும் சீக்கிய இந்து முஸ்லீம்!

மக்களே! பந்தலில் புதிரா புனிதமா வந்து ரொம்ம்ம்ம்ம்ப நாளாச்சு இல்ல? இன்னிக்கு அதுக்கு ஒரு பதிவர் புண்ணியம் கட்டிக் கொண்டார்! -யார் அவர்?

நூறாவது பதிவும், ஐந்தாவது ஆண்டுமாய், வலம் வரும் அவரின் வலைப்பூவை வாசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்! - யார் அவர்?


* ஆன்மீகத் திருக்குறளை, ஈரடி தோஹாக்களை இந்தியில் எழுதியவர் யார்?

* இவர் ஆன்மீகவாதியா? சிறந்த கவிஞரா? - இன்னொரு கவிஞனைக் கவர்ந்த கவிதை என்பது மிகவும் அரிதாயிற்றே! கவியரசர் தாகூரே விரும்பி மொழி பெயர்த்த கவிதைக்குச் சொந்தக்காரர் யார்?

* இன்று பலரும் போற்றுகிறார்கள்! ஆனால் அன்று இவரைத் தூக்கில் போடாமல் ஊரை விட்டு மட்டும் துரத்தினார்கள், காசி நகரத்துக் குருமார்கள் - இவர் யார்?

* இவர் சொன்னது...முதலில் எட்டிக்காயாகக் கசந்தது பல பேருக்கும்! பல ஆன்மீக குழாம்களிலிருந்து ஒதுக்கப்பட்டார்!
உண்மையை எதிர்கொள்ளும் துணிவு மனிதர்களுக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை அல்லவா? உண்மை நெல்லிக்காய் போலவோ?
முதலில் ஒரு சுவை, உள் இறங்கும் போது தண்ணீரோடு இன்னொரு சுவை! அதான் உண்மையை உள்ளங்கை "நெல்லிக்கனி" என்கிறார்களோ?

* மனைவி-குழந்தைகளுடன் வாழ்ந்த தத்துவத் "துறவி"! எதைத் துறக்க வேண்டுமோ, அதை மட்டுமே துறந்தவர் - இவர் யார்?

என்னது, திடீர்-ன்னு யார் யார்-ன்னு இத்தனை "யார்" போடுகிறேன்-ன்னு பார்க்கறீங்களா? ஆத்ம விசாரணையில் "யார்" என்ற கேள்வி மிகவும் முக்கியம்-ன்னு சொல்வாங்களே!
ஏன் திடீர்-ன்னு, "யார்?" என்பதற்கு இவ்ளோ பில்ட்-அப் போடுறேன்-ன்னு பார்க்கறீங்களா?
எல்லாம் ஒரு நூறாவது பதிவு காணும் ஐந்தாண்டுப் பதிவுக்குத் தான்! :)


இவர் பதிவுகள், இவர் எடுத்துக் கொண்ட பொருள் போலவே எளிமையானவை!
* இவர் பதிவுகள், இறைவனைப் பேசுபவை அல்ல!
* இவர் பதிவுகள், அடியார்களைப் பேசுபவை! - அதனாலேயே என்னை மிகவும் கவர்ந்தவை!
* அவர்களின் பிரச்சனை, எதிர்கொள்ளல், ஆன்மீக வழித்தடங்கள், அதற்கான உபகரணங்கள் பற்றிப் பேசுபவை!

நம் வாழ்வில் அன்றாடம் காணும் நிகழ்ச்சிகளை ஒட்டிப் பதிவுகளைப் பின்னுவதில் இவர் வல்லவர்!
வீட்டு மோட்டார் ரிப்பேர், எந்த ரேட்டிங் ஒயரை எதற்குப் பயன்படுத்தினால் ஓவர் லோடு ஆகாது! சைக்கிளைத் துரத்தும் நாய், துரத்த முடியாமல் களைத்துப் போனாலும், அடுத்த சைக்கிளையும் அதே போல் துரத்தும் நாய்ப் புத்தி, நம் புத்தி...

என்று பாலு மகேந்திரா சினிமா பார்ப்பது போல் இவர் ஆன்மீகப் பதிவுகளைப் படிக்கலாம்! :)
நீங்களே வாசித்துப் பாருங்கள்!
குப்பை மேட்டிலே நாயொன்று தொங்கிய காதுகளுடன் யோகியை போல அரைக்கண் மூடி முன்னம் கால்களுக்கு இடையே தலையை வைத்து படுத்துக் கிடந்தது. எவ்வளவு நேரமாகவோ தெரியாது. விருட்டென்று அதன் காதுகள் குத்திட்டு நின்றன. தலையைத் தூக்கி ஒரு பார்வையில் நிலவரத்தைப் புரிந்து கொண்டு சத்தமாய் குரைக்கத் தொடங்கியது.

கூடவே இன்னும் சில தெரு நாய்களும் சேர்ந்து கொண்டன. யாரோ ஒருவர் தன் வளர்ப்பு நாயை பிடித்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவ்வளவுதான்.
அவர்கள் அந்த தெருவை விட்டு செல்லும் வரையிலும் எட்டி நின்று குரைத்து தீர்த்து தன் கடமை முடிந்ததென்று மீண்டும் வந்து படுத்துக் கொண்டது.

சிறிது நேரம் கழித்து அதன் மூக்கு எதையோ மோப்பம் பிடிக்க, எழுந்து சைக்கிளில் போய் கொண்டிருந்த தின்பண்டம் விற்பவன் பின்னேயே சென்றது. அவன் எங்கெல்லாம் நின்றானோ அங்கெல்லாம் ஏதோ எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்தவாறு நின்றது. அவன் தெருமுனை தாண்டியதும் தன் எல்லையை மீற முடியாமல் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டது.

இது நாம் யாவரும் அன்றாடம் காணும் காட்சி.
ஞானிகளின் பார்வையில் இந்த நாயின் வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பிறந்ததிலிருந்து ஏதேதோ ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். எதையெதையோ பின் தொடர்கிறோம். விதியால் வரையறுக்கப்பட்ட நம் எல்லைக்குள் சில கிட்டுகின்றன. பல நிராசையாய் முடிகின்றன. மனிதப் பிறவி அளிக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து மனது வேண்டாதவற்றைப் பற்றிக் கொண்டு சதா திரிகிறது!


இந்நேரம் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று உங்க எல்லாருக்கும் தெரிந்திருக்கும்! = கபீரன்பன்!



ஆன்மீகப் பதிவுலகில் ஒரு துருவ நட்சத்திரம் கபீர் வலைப்பூ! எளிய நடையில், எளிய கதைகள், எளிய கவிதை என்று எதிலுமே எளிமை!
சடங்கு சார்ந்த ஆன்மிகம் பேசுவதில்லை! மனம் சார்ந்த ஆன்மீகம் பேசுபவர்!

இந்திக் கவிதை என்ற மொழி அசூயையோ,
தத்துவக் குப்பை என்ற கருத்து அசூயையோ...
என்று பிரிவினையை ஒட்டிப் பதிவுகள் வளர்க்காது,
மன-ஒற்றுமையை ஒட்டி வளர்ப்பவர்!

ஏன்னா அவர் பேசு பொருளே அப்படி! = கபீர்!

கபீர் என்பவர்...
* கவிஞரா? ஆன்மீகவாதியா?
* தத்துவச் செம்மலா? குடும்பத் தலைவரா?
* இந்துவா? மூஸ்லீமா? சீக்கியரா?
* சாஸ்திர விற்பன்னரா?
* சுஃபியா? யோகியா? சித்தரா?
இப்படியெல்லாம் அடக்கத் தான் முடியுமா?

கபீரின் தத்துவங்களைக் கபீரன்பன் தொடர்ந்து இந்த வலைப்பூவில் சொல்லத் தான் போகிறார்!
ஆனால் கபீர் யார்? என்று அறிந்து வைத்துக் கொள்வதும் ஒரு சுகம்! கபீர் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதில் ஒரு சுகம்!
ஏனென்றால் கபீர்.....மகான் என்பதை விட மனிதர், நம்மைப் போல!
அவரால் முடிந்தால், நம்மாலும் முடியாதா என்ன? வாருங்கள் எட்டித் தான் பார்ப்போம்!
Lives of great men all remind us
We can make our lives sublime
And, departing, leave behind us
Footprints on the sands of time.

புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு!
முதன் முதலாக மாதவிப் பந்தல் அல்லாத ஒரு வெளிப்பூவில்! நான் விரும்பும் வலைப்பூவில்!
இதோ! இங்கே சென்று விளையாடுங்கள், கபீரன்பன் வலைப்பூவுக்கு!
பரிசும் கொடுக்கறாரு! லம்ப்பா வாங்கிக்கோங்க! :))
Read more »

Monday, July 13, 2009

புதிரா? புனிதமா?? - நாயன்மார்கள்!

முடிவுகள் அறிவிச்சாச்சே! விடைகள் கீழே போல்ட் செய்யப்பட்டுள்ளன! விளக்கங்கள் பின்னூட்டத்தில் அறிந்தவர்கள் கொடுக்கலாமே? சின்ன அம்மணி-க்கா? முகில்?? அடிச்சி ஆடுங்களேன் :)

அஞ்சலிப் பதிவென்பதால் வெற்றியாளர்-ன்னு யாரும் இல்லை!
சின்ன அம்மணி-க்கா தான் முதல் முயற்சியில் அதிகம் சொன்னது!
Followed by லோகன் & முகிலரசி! வாழ்த்துக்கள்!

வென்றார்க்கும், விளையாட்டில் நின்றார்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நாயன்மார்களின் நல்லருள் இசையும்-தமிழும்-இறையும் ஓங்கட்டும்!


மக்கள்ஸ்! எப்படி இருக்கீக? புதிரா புனிதமா போட்டு ரொம்ப நாள் ஆச்சுது! மதுரை மீனாட்சி விழாவில் போட்டதோடு சரி! பதிவர் அல்லாத ரெண்டு மூனு பேரு இன்னிக்கி மின்னஞ்சல்-ல மெரட்டவே மெரட்டீட்டாங்க! போடறீங்களா இல்ல, உங்கள பத்தியே நாங்க புதிரா புனிதமா, போடட்டுமா?-ன்னு :)

இந்த அளவுக்கெல்லாம் விட்டா, அப்புறம் என் கதி அதோ கதி தான்! "அதோ" கதி என்று பெருமாள் மட்டுமே எனக்கு இப்பத்திக்குத் தாங்கலா இருக்காரு! அதுனால எந்த மறுபேச்சும் பேசாம, இதோ...புதிரா புனிதமா! இன்னிக்கி ஸ்பெசல் தலைப்பு! = நாயன்மார்கள்!

இன்று.....உள்ள உறுதி அதிகம் கொண்ட நாயன்மார் ஒருவரின் குருபூசை! ஆனி மாதம் ரேவதியில் (Jul-14-2009)!

இறைவனோடான தோழமை ஒருத்தருக்கு! தன் இச்சையான காதலுக்கும் இறைவனையே தூது அனுப்புகிறார்! ஆனால் தோழமையால் செய்தது "அந்த" இன்னொரு தொண்டருக்குப் புரியவே இல்லை.....உம்ம்ம்ம்.....புரிஞ்சிக்க மாட்டேன்-ன்னு அடம் பிடிக்கிறார்!

ச்சீ...ஈசனைத் தாழ்த்திப் பிறழ்த்தி விட்டாயே என்று ஒரு நினைப்பு!
தோழமை புரியவில்லை! எப்பமே இறைவனை உசரமான பீடத்தில் ஏற்றி வைத்தே பழக்கம் அல்லவா!

இதைப் புரிய வைக்க ஈசனும் விளையாடினார்! தீராத நோயைக் கொடுத்து, தோழன் தடவினால் நோய் தீரும் என்று சொன்னார்!
ஆனால் இவருக்கோ, "நோயே தீரலை-ன்னாலும் பரவாயில்ல! ஆனா அவன் மட்டும் வரவே வேணாம்!" :)

ஆனால் தம்பிரான் தோழரோ இந்த வெறுப்பைப் பொருட்படுத்தவில்லை! தன்னை வெறுத்தாலும், அடியவர் என்னும் பாசத்தால் அவர் இடத்துக்குச் செல்கிறார்!
இந்த "மாபாவி" சிவ வேடம் பூண்டு வருகிறானே, அவனை வரவேற்கணுமே என்ற வெறுப்பில், தன் சூலை நோயைத் தானே குத்திக் கொண்டு இறந்து போகிறார்!

தம்பிரான் தோழர் அரண்மனை வந்து, இந்தக் கோரக் காட்சியைக் கண்டு வெதும்பி, தன்னையும் மாய்த்துக் கொள்ள வாளெடுத்த போது,
ஈசன் அருளால், அந்த வெறுப்பாளர் பொறுப்பாளராய் உயிர் பெற்று எழ,
தம்பிரான் தோழரின் மாசில்லா அன்பைப் புரிந்து கொண்டு தழுவிக் கொள்கிறார்!
அந்த வெறுப்பாளரான பொறுப்பாளர் தான் ஏயர் கோன் கலிக்காமர்! அவரின் குரு பூசையே இன்று!

அதான் வாங்க ஆடுவோம், புதிரா புனிதமா! - நாயன்மார்கள்! விடைகள்: நாளை இரவு....நியூயார்க் நேரப் படி!


குறிப்பு: இந்தக் குரு பூசையின் போது.....
அடியேனின் மூத்தவரான, நம் ஆன்மீகச் செம்மல் குமரன்......அவர் தம் திருத் தகப்பனார்,
இறைத் திரு. நடராஜன் மல்லி சுந்தரராமன்
அவர்களின் மறைவுக்கு இந்தக் குருபூஜைப் பதிவைக் காணிக்கையாக்கி அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்!

தொடர்பான பதிவு இங்கே! பத்தாம் நாள் தேறுதல், தனிக் கதைப் பதிவாகவும் இடுகிறேன்! நாராயண நாராயண!



1

அறுபத்து மூவருள், கால வரிசையால் வந்த முதல் நாயன்மார் யார்?

அறுபத்து மூவர் வரிசையில் முதலில் சொல்லப்படும் நாயன்மார் யார்?

1
அ) திருநீலகண்டர்/ காரைக்கால் அம்மை

ஆ) ஞானசம்பந்தர்/ திருநீலகண்டர்

இ) காரைக்கால் அம்மை/ திருநீலகண்டர்

ஈ) தில்லை வாழ் அந்தணர்/ ஞான சம்பந்தர்

2

ஆழ்வார்களின் தலைவராகக் கருதப்படுபவர் வேளாளர் குல முதல்வரான நம்மாழ்வார்!

நாயன்மார்களின் தலைவராகக் கருதப்படுபவர் யார்?

2
அ) ஞானசம்பந்தர்

ஆ) அப்பர் சுவாமிகள்

இ) சுந்தரமூர்த்தி நாயனார்

ஈ) மாணிக்கவாசகர்

3

திருக்கைலாய வாசலில் உள்ளே நுழைய முடியாமல் தடுக்கப்பட்ட நாயனார் யார்?

பின்னர் எந்த நாயன்மார் பரிந்துரையின் பேரில் உள்ளே நுழைய முடிந்தது?

3
அ) ஒளவையார்/சுந்தரர்

ஆ) மங்கையர்க்கரசி/ சம்பந்தர்

இ) நந்தனார்/ தில்லை வாழ் அந்தணர்

ஈ) சேரமான்பெருமாள்/ சுந்தரர்

4

சில பேருக்கு இறைவன் மேல் பிடிப்பு! ஒரு சிலருக்கோ பூஜா புனஸ்காரங்கள் மேல் பிடிப்பு! இறைவன் கண்ணில் ரத்தம் வந்தாலும் சற்றே வேடிக்கை பார்க்கக் கூட முடியும்! உடல் பதறாது! ஆனால் பூசைப் பொருள் களங்கமானால் மட்டும் மனம் பதறும்! - இது தான் கர்மப் பிடிப்பால் வரும் டேஞ்சர்! :))

நெற்றிக் கண்ணனுக்கே கண்ணீந்த கண்ணப்ப நாயனாரின் உண்மையான பெயர் என்ன?

கண்ணப்பரின் மாமிச பூசையைக் கண்டு கலங்கிய சிவபக்தர் பேர் என்ன?

4
அ) ?/ சிவபாதசேகரர்

ஆ) திண்ணன்/ சிவ கோசரியார்

இ) ?/ காளத்தியப்ப குருக்கள்

ஈ) ?/ நமிநந்தியடிகள்

5

நல்ல சைவக் குடும்பத்தில் பிறந்து, வைணவப் பதிவு போடும் பசங்களும் இருக்கானுங்க! :)

இவரும் வைணவ ஆயர் குலத்தில் பிறந்து, சிவபிரானைத் துதித்தவர்! அதுவும் கண்ணனைப் போல் புல்லாங்குழல் வாசித்து வாசித்தே துதித்தவர் - யார் இந்த நாயன்மார்?

5
அ) ஆனாய நாயனார்

ஆ) கணம்புல்ல நாயனார்

இ) சேரமான் பெருமாள் நாயனார்

ஈ) காரி நாயனார்

6

பிறவியிலேயே பார்வையற்ற நாயன்மார் யார்?

இவர் தொண்டினைத் தடுத்து, இவரின் மண்வெட்டியைப் பிடுங்கிய சமணர்கள் பின்னர் பார்வை இழந்து, திருவாரூர் மன்னனால் ஊரை விட்டு நீக்கப்பட்டார்கள்!

6
அ) முருக நாயனார்

ஆ) தண்டியடிகள்

இ) சுந்தரர்

ஈ) எறிபத்த நாயனார்

7

"சற்றே விலகி இரும் பிள்ளாய்" - நந்தனாருக்காக நந்தியை விலகி இருக்கச் சொன்ன ஈசன் பெயர் என்ன? எந்தத் தலம்?

7
அ) நடராஜர்/ தில்லை

ஆ) திருமூலநாதர்/ தில்லை

இ) சிவலோகநாதர்/ திருப்புன்கூர்

ஈ) அம்பலவாணர்/ திருப்புன்கூர்

8

அறுபத்து மூவர் பட்டியலில் இந்த இரண்டு பேரும் இல்லை! அதிலும் முதலாமவர் இல்லாதது மிகப் பெரும் வியப்பு! ஆனால் இவர்கள் பாடியவை மட்டும் தேவாரத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளன!

யார் இவர்கள்?

8

அ) மாணிக்கவாசகர்/ திருமூலர்

ஆ) சேரமான் பெருமாள்/ நக்கீரர்

இ) சேந்தனார்/ இசை ஞானியார்

ஈ) மாணிக்கவாசகர்/ சேந்தனார்

9

சமணர்/பவுத்தராய் இருந்து பின்னர் நாயன்மார் ஆன இந்த இருவர் யார்?

9
அ) குலச்சிறை நாயனார்/ மெய்ப்பொருள் நாயனார்

ஆ) அப்பர் சுவாமிகள்/ சாக்கிய நாயனார்

இ) அப்பர் சுவாமிகள்/ மெய்ப்பொருள் நாயனார்

ஈ) திருமூலர்/ பூசலார்

10

சங்கப் புலவர்கள் சிலரைப் பின்னாளில் "நைசாக" நாயன்மாராக ஆக்கவில்லை என்றாலும், அவர்கள் எழுதியதாகக் "கருதப்படும்" நூல்களை, தேவாரத் திருமுறைக்குள் கொண்டு வந்து வைத்துள்ளார்கள்! ஒரு சிலர், இவர்கள் சங்கப் புலவர்களே இல்லை! அதே பேர் கொண்ட வேறு புலவர்கள் என்றும் கூறுவார்கள்!

திருமுறையில் இடம் பெறும் இந்தப் "கருதப்படும்" புலவர்கள் யார்?

10
அ) நக்கீரர்/கபிலர்

ஆ) கபிலர்/பரணர்

இ) பரணர்/ காக்கைப் பாடினியார்

ஈ) திருவள்ளுவர்/ நக்கீரர்



கடைசியா ஒரு கேஆரெஸ் திருவிளையாடல்! பத்துக்கும் சரியான பதில் சொன்னாக் கூட, இந்த போனஸ் கேள்விக்கு மட்டும் நீங்க சரியான பதில் சொல்லலீன்னா, ஆள் மொத்தமாவே அவுட்டு! பரமபத விளையாட்டுக் கடைசீ நேரப் பாம்பு போல! என்ன ஓக்கேவா? :)

11. நந்தனாரை அவர் பேர் சொல்லி வரிசைப்படுத்தாமல், என்ன சிறப்புப் பெயரால், நாயன்மார் வரிசையில் வைத்துள்ளார்கள்? = திருநாளைப் போவார் நாயனார்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) திருநீலகண்டர்/ காரைக்கால் அம்மை ஆ) ஞானசம்பந்தர்/ திருநீலகண்டர் இ) காரைக்கால் அம்மை/ திருநீலகண்டர் ஈ) தில்லை வாழ் அந்தணர்/ ஞான சம்பந்தர்

2 அ) ஞானசம்பந்தர் ஆ) அப்பர் சுவாமிகள் இ) சுந்தரமூர்த்தி நாயனார் ஈ) மாணிக்கவாசகர்

3 அ) ஒளவையார்/சுந்தரர் ஆ) மங்கையர்க்கரசி/ சம்பந்தர் இ) நந்தனார்/ தில்லை வாழ் அந்தணர் ஈ) சேரமான்பெருமாள்/ சுந்தரர்
4 அ) ?/ சிவபாதசேகரர் ஆ) ?/ சிவ கோசரியார் இ) ?/ காளத்தியப்ப குருக்கள் ஈ) ?/ நமிநந்தியடிகள்
5 அ) ஆனாய நாயனார் ஆ) கணம்புல்ல நாயனார் இ) சேரமான் பெருமாள் நாயனார் ஈ) காரி நாயனார்
6 அ) முருக நாயனார் ஆ) தண்டியடிகள் இ) சுந்தரர் ஈ) எறிபத்த நாயனார்
7 அ) நடராஜர்/ தில்லை ஆ) திருமூலநாதர்/ தில்லை இ) சிவலோகநாதர்/ திருப்புன்கூர் ஈ) அம்பலவாணர்/ திருப்புன்கூர்
8 அ) மாணிக்கவாசகர்/ திருமூலர் ஆ) சேரமான் பெருமாள்/ நக்கீரர் இ) சேந்தனார்/ இசை ஞானியார் ஈ) மாணிக்கவாசகர்/ சேந்தனார்
9 அ) குலச்சிறை நாயனார்/ மெய்ப்பொருள் நாயனார் ஆ) அப்பர் சுவாமிகள்/ சாக்கிய நாயனார் இ) அப்பர் சுவாமிகள்/ மெய்ப்பொருள் நாயனார் ஈ) திருமூலர்/ பூசலார்
10 அ) நக்கீரர்/கபிலர் ஆ) கபிலர்/பரணர் இ) பரணர்/ காக்கைப் பாடினியார் ஈ) திருவள்ளுவர்/ நக்கீரர்

11. நந்தனாரின் சிறப்புப் பெயர் = _____
Read more »

Tuesday, April 07, 2009

புதிரா? புனிதமா?? - மதுரை மீனாட்சி!

முடிவுகள் அறிவிச்சாச்சே! விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன! விடைகளுக்கான விளக்கங்களைக் கெபி அக்கா, ஸ்ரீதர், குமரன் முதலான வெற்றியாளர்கள் பின்னூட்டத்தில் சொல்லுவார்கள்!

அன்னையின் குடமுழுக்கு அமைதியாக, அதே சமயம், எளிமையாக நடந்தேறியது குறித்து மகிழ்ச்சி! பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை குடமுழுக்கு என்பது வீண் ஆடம்பரச் செலவு அன்று! வாழும் வீட்டின் மராமத்துப் பணி போலத் தான் இதுவும்!

கலைச் செல்வங்களைத் தொல்பொருள் நோக்கில் மட்டுமல்லாது, ஆன்மீக உயிர்ப்பு என்னும் நோக்கத்திலும் சேர்த்தே காப்பதற்கு குடமுழுக்கு மிகவும் உதவும்! 22 ஆண்டுகளாக இல்லாமல் இருக்கும் சைவத் தலைநகராம் தில்லையிலும் இதே போல் விரைவில் நடந்தேற வேண்டுவோம்!

கும்பாபிஷேகப் படங்கள் தான் இணையம்/பத்திரிகைத் தளங்களில் கூடச் சரியாகக் கிடைக்கவில்லை!
பேசாமல் பெரும் ஆலயங்கள் தாமே ஒரு வலைப்பூ துவங்கினால் என்ன?

உத்திரப்பிரதேச தேர்தல் அலுவலர் ஒருத்தரு இப்படித் துவங்கி, பெரும் வெற்றி கண்டுள்ளார். உடனுக்குடன் தன் பணியாளர்களையும் பொதுமக்களையும் கலந்து பேச முடிகிறது!
இதுக்கு மணி கட்டும் முகமாக, அடியேன் திருக்கோவிலூர் ஜீயர் மற்றும் குன்றக்குடி அடிகளாரிடம் தொடர்பு கொள்ள முயல்கிறேன்!

வெற்றியாளர்கள்:
1. குமரன்
2. முகிலரசி தமிழரசன்
3. ஸ்ரீதர் நாராயணன்

வென்றவர்கள், உடன் நின்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

பரிசு = எந்த மருதைக்காரரு-ப்பா ஸ்பான்சர்? உபயதாரர் யார்? :)))
கீதாம்மா, தாங்கள் அறிவித்தபடி, ஆயிரம் பொற்காசுகளை கேஆரெஸ்-க்கே வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் - நக்கீரர்! :)

வெற்றியாளர்களே! இந்தாரும்! பிடியும்! பரிசு! அடியவர் குழாங்களின் தலைவர், வெள்ளி நந்திகேஸ்வரர்!
கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்குமான பொதுப் பரிசு! - காணக் கிடைக்காத படம் - மதுரை மீனாட்சியம்மை-சொக்கநாதப் பெருமான் இரவுப் பள்ளியறை சேவைப் பல்லக்கு காட்சி!

(Added this actual picture of today's kumbabishekam. Thanks: Dinamalar)



மக்கள்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? புதிரா புனிதமா போட்டு ரொம்ப நாள் ஆச்சுது! மார்கழி மாசம் திருப்பாவை Crossword போட்டதோட சரி! ஆபீஸ்-ல ரெம்ப பொறுப்பு கூடிப் போச்சுங்க! பேசாம பந்தலை அவுட் சோர்ஸ் பண்ணீறலாமா-ன்னு பாக்குறேன்! Any Takers? :)

இன்னிக்கி ஸ்பெசல் தலைப்பு! = மதுரை மீனாட்சி!
பங்குனி உத்திரம், Apr-08, 2009, காலை 09:00-10:30 மணிக்கு, எங்க வீட்டுப் பொண்ணுக்கு திருக்குட முழுக்கு நடக்குதுல்ல? அதான் ஒரு ஜாலி! :-)

"எங்க வீட்டுப் பொண்ணா"? - யூ மீன் ஆண்டாள்?
ஹா ஹா ஹா! மீனாட்சியும் எங்கூட்டுப் பொண்ணு தாங்க!

என்ன...கோதை என்பவள் தோழி! அதுனால என்னாடீ-ன்னு செல்லமா "டீ" போட்டு கூப்புடுவேன்! ஆனா மீனாட்சியை அப்படியெல்லாம் மரியாதை இல்லாமக் கூப்பிட மனசு கேக்காதுங்க! நான் ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையன்! :)
என்ன இருந்தாலும், கோதைக்கே அக்கா மாதிரி (நாத்தனார்) மீனாட்சி! அதுனால நமக்கும் மீனாச்சி "அக்கா" தாங்கோ! :)


ரெண்டு பாண்டி நாட்டுப் பொண்ணுங்களும் பார்க்க அதே போலத் தான் இருப்பாங்க!
அதே கொண்டை! அதே தொங்கல் மாலை! அதே கிளி! அதே ஸ்டைலு! அதே கள்ளச் சிரிப்பு! :)

அப்போ, எப்படித் தான் வித்தியாசம் கண்டுபுடிக்கறதாம்?
* மீனாட்சி கையில் கிளி = வலக் கரத்தில் இருக்கும்! கோதை கையில் கிளி = இடக் கரத்தில் இருக்கும்!
ஏன்? காரணம் இருக்கு! மருதைக் காரவுக வந்து செப்பட்டும்! :)
* மீனாட்சி கரும் பச்சை! ஆண்டாள் பொன் சிகப்பி!
பச்சை மா மலை போல் மேனி! குடும்பக் கலரு அண்ணனுக்கும் தங்கச்சிக்கும்! :)

வாங்க ஆடுவோம், புதிரா புனிதமா!
மதுரை மீனாட்சி பத்தி, மதுரைக் காரவுகளுக்கே எம்புட்டு தெரியுது-ன்னு பாத்துருவோமா? :)))
தருமி சார் வேற வந்து "ம்ம்ம்ம், ம்ம்ம்ம்ம்" ன்னு உறுமிட்டுப் போயிருக்காரு, போன மீனாட்சி-Simple Pendulum பதிவுல! காப்பாத்துங்க மக்கா, காப்பாத்துங்க! :) விடைகள்: நாளை இரவு....நியூயார்க் நேரப் படி!


1

அன்னை மீனாட்சி-க்கு பெற்றோர் வைத்த பெயர் என்ன?

1
அ) மீனாட்சி

ஆ) அங்கயற்கண்ணி

இ) தடாதகை

ஈ) மாதங்கி

2

மீனாட்சியைச் சொக்கநாதருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் அண்ணன் யாரு?

2
அ) கள்ளழகர்

ஆ) கூடலழகர்

இ) தல்லாக்குளம் பெருமாள்

ஈ) பவளக்கனி வாய்ப் பெருமாள்

3

மதுரை ஆயிரங்கால் மண்டபத்துக்கு எத்தனை கால்? :)

3
அ) 985

ஆ) 1000

இ) 1004

ஈ) 996

4

மதுரா விஜயம் = மதுரை மீனாட்சி ஆலயம் அன்னியர் கைகளுக்குள் சிக்கிச் சீரழிந்தது! ஏற்கனவே அகதி போலத் திரிந்து கொண்டிருந்த அரங்கன்-நம்பெருமாள் சிலையை முன்னே நிறுத்தி, போர் புரிந்து மதுரையை மீட்டதை இந்த நூல் சொல்லும்!

அரங்கன் தலைமையில் இப்படி மதுரையை மீட்டவர் யார்? உடன் இருந்து பார்த்து இந்த நூலை எழுதியவர் யார்?

4
அ) கோபண்ண உடையார்/ கம்பண்ண உடையார்

ஆ) கோபண்ண உடையார்/ கங்கா தேவி

இ) ஹரிஹரா/ புக்கா

ஈ) கம்பண்ண உடையார்/ கங்கா தேவி

5மீனாட்சியம்மன் கோயிலின் "உண்மையான" குளம் (தெப்பம் கண்டருளும் குளம்) எது?



5
அ) பொற்றாமரைக் குளம்

ஆ) சொக்கிக் குளம்

இ) வண்டியூர் மாரியம்மன் குளம்

ஈ) வைகை ஆறு

6

மீனாட்சியம்மனைக் கல்வெட்டுகள் எந்தப் பெயரால் குறிக்கின்றன?

6
அ) தடாதகைப் பிராட்டியார்

ஆ) திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சி

இ) கோமகள் குமரித் துறையவள்

ஈ) வழுதிமகள் மும்முலைப் பிராட்டி

7

மீனாட்சியின் தந்தையார் பெயர் மலையத்துவச பாண்டியன்-ன்னு பலருக்கும் தெரிஞ்சிருக்கும்! அன்னையின் அன்னை பெயர் என்ன?

7
அ) பிரசுதி

ஆ) மேனா இமவான்

இ) மாதங்கி

ஈ) காஞ்சனமாலை

8

காந்தியடிகளின் அரிஜன-ஆலய நுழைவுப் போராட்டம்! அது தமிழ்நாட்டில் பின்னாளில் சட்டமாக்கப்பட்டது! சட்டமாக்கினாலும் உள்ளே நுழையும் போது எதிர் விளைவுகள் இருக்குமோ என்று பலரும் அஞ்சினர்!

அப்போது, மீனாட்சியம்மன் கோயிலில் இந்த நுழைவுப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னின்று நடத்தியது யார்? அதைச் சட்டமாக்கியது யார்?

8

அ) தந்தை பெரியார்/ காமராசர்

ஆ) பி.டி. ராஜன்/ அறிஞர் அண்ணா

இ) தந்தை பெரியார்/ இராஜாஜி

ஈ) கக்கன்/இராஜாஜி

9

திருஞான சம்பந்தருக்குப் பெரும் புகழும், வெற்றியும் ஏற்படுத்திக் கொடுத்தது-ன்னா அது மதுரை தான்! சிவன் கோயில் கொடிமரத்தில் பொதுவா விநாயகர்/முருகன் தான் இருப்பாங்க!
ஆனா, இன்னிக்கும், சுந்தரேஸ்வரர் சன்னிதி கொடி மரத்தில் விநாயகர்/முருகனுக்குப் பதிலா, சம்பந்தரைத் தான் வச்சிருக்காங்க!

அனல் வாதம், புனல் வாதம் எல்லாம் வென்று, சைவத்தைப் பரவலாக மதுரை மண்ணில் தழைக்க விட்டவர் சம்பந்தப் பிள்ளை!

புனல் வாதம் செய்த போது, வைகை ஆற்றில் அவர் பனையோலை ஒன்றை எழுதி விட்டார்! அது மதுரைக்கு அருகில் உள்ள ஒரு ஊரில், ஆற்றுக்கு எதிராகக் கரை சேர்ந்தது! எந்த ஊர்?

9
அ) மேலூர்

ஆ) திருவேடகம்

இ) சமய நல்லூர்

ஈ) அழகர் கோயில்

10

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் மதுரையில் மட்டுமே நடந்தன! அதில் பிட்டுக்கு மண் சுமந்த கதை நம் எல்லாருக்கும் தெரியும்!

வந்திக் கிழவியிடம் பிட்டு வாங்கிச் சாப்பிட்டு விட்டு, கரையை அடைக்காமல் தூங்கிய ஈசனைப் பிரம்பால் அடித்தான் பாண்டியன்! அந்த அடி, கருவில் உள்ள குழந்தை முதற்கொண்டு, எல்லார் மீதும் பட்டது!

ஈசனை அடித்த அந்தப் பாண்டியன் யார்? (திருவிளையாடற் புராணத்தில் வரும் பெயர்)

10
அ) வரகுண பாண்டியன்

ஆ) செண்பகப் பாண்டியன்

இ) சுந்தர பாண்டியன்

ஈ) அரிமர்த்தன பாண்டியன்



கடைசியா ஒரு கேஆரெஸ் திருவிளையாடல்! பத்துக்கும் சரியான பதில் சொன்னாக் கூட, இந்த போனஸ் கேள்விக்கு மட்டும் நீங்க சரியான பதில் சொல்லலீன்னா, ஆள் மொத்தமாவே அவுட்டு! நோ சாய்ஸ்! பரமபத விளையாட்டு பாம்பு போல! என்ன ஓக்கேவா? :))

விறகு வெட்டியாக வந்து பாடும் சிவபெருமான், ஒரு வடநாட்டுப் பாடகனை, ராவோடு ராவாக மதுரையை விட்டே துரத்திய கதை பலருக்கும் தெரியும்!
* அந்த வடநாட்டுப் பாடகன் பெயர் என்ன? (பாலையா-ன்னு சொல்லக் கூடாது, சொல்லிப்பிட்டேன்) = ஹேமநாத பாகவதர்
* எந்த மதுரைக்கார பாடகருக்காக, அந்தப் பாடகரைத் துரத்தினார்? = பாணபத்திரர்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) மீனாட்சி ஆ) அங்கயற்கண்ணி இ) தடாதகை ஈ) மாதங்கி

2 அ) கள்ளழகர் ஆ) கூடலழகர் இ) தல்லாக்குளம் பெருமாள் ஈ) பவளக்கனி வாய்ப் பெருமாள்

3 அ) 985 ஆ) 1000 இ) 1004 ஈ) 996
4 அ) கோபண்ண உடையார்/ கம்பண்ண உடையார் ஆ) கோபண்ண உடையார்/ கங்கா தேவி இ) ஹரிஹரா/ புக்கா ஈ) கம்பண்ண உடையார்/ கங்கா தேவி
5 அ) பொற்றாமரைக் குளம் ஆ) சொக்கிக் குளம் இ) வண்டியூர் மாரியம்மன் குளம் ஈ) வைகை ஆறு
6 அ) தடாதகைப் பிராட்டியார் ஆ) திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சி இ) கோமகள் குமரித் துறையவள் ஈ) வழுதிமகள் மும்முலைப் பிராட்டி
7 அ) பிரசுதி ஆ) மேனா இமவான் இ) மாதங்கி ஈ) காஞ்சனமாலை
8 அ) தந்தை பெரியார்/ காமராசர் ஆ) பி.டி.ஆர்/ அறிஞர் அண்ணா இ) தந்தை பெரியார்/ இராஜாஜி ஈ) கக்கன்/இராஜாஜி
9 அ) மேலூர் ஆ) திருவேடகம் இ) சமய நல்லூர் ஈ) அழகர் கோயில்
10 அ) வரகுண பாண்டியன் ஆ) செண்பகப் பாண்டியன் இ) சுந்தர பாண்டியன் ஈ) அரிமர்த்தன பாண்டியன்

11. வடநாட்டுப் பாடகர் = _____ மதுரைப் பாடகர் = _____
Read more »

Wednesday, January 07, 2009

வை.ஏகாதசி: புதிரா? புனிதமா?? - தெய்வத் தமிழ் மொழி!

மக்கள்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீக? புதிரா புனிதமா குவிஜ் ஆடி கொஞ்சம் நாள் ஆயிருச்சா? பரவாயில்ல! வைகுண்ட ஏகாதசி அன்னிக்கி கண் முழிச்சி, ஏதாச்சும் ஆடணும்-ல? எத்தனை நாள் தான் பாம்பு-ஏணி விளையாட்டு வெளையாடிக்கிட்டு இருப்பீக? இந்த ஏகாதசிக்குப் "புதிரா? புனிதமா?" ஆடலாம் வாங்க! :)

அப்படியே தொடர் திருப்பாவைப் பதிவில் இருந்தும், ஜாலியா ஒரு விளையாட்டுக்கு ப்ரேக் அடிச்சா மாதிரியும் இருக்கும்! :)
இன்னிக்கி சிறப்புத் தலைப்பு! - தெய்வத் தமிழ் மொழி!

அது என்னாங்க தெய்வத் தமிழ்? எல்லா மொழியிலும் தான் தெய்வங்கள் இருக்கு!
இல்லீன்னா இந்த மொழி மட்டும் தான் தெய்வங்களின் பாஷை-ன்னு சில பேரு சொல்வாங்களே! அது போலச் சொல்ல வாரீங்களா? :)


ஹிஹி! அப்படியில்லை! செம்மொழி-ன்னு சொன்னா, மற்ற மொழிகளில் செம்மை இல்லை-ன்னா பொருள்? அப்படியில்லை!

குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ


* பன்னெடுங்காலமா, பல பண்பாட்டுகளுக்கும் முன்னால் இருந்தே, ஒரு வளமான சிந்தனை, சொல், செயல், சமூகம்-ன்னு பார்த்த ஒரு மொழி = செம்மொழி!
* அதே போல பன்னெடுங்காலமா, பல பண்பாட்டுகளுக்கும் முன்னால் இருந்தே, ஒரு வளமான சிந்தனை, சொல், செயல்-ன்னு "இறையியல்" கண்ட தமிழ் = தெய்வத் தமிழ்!

இன்னிக்கி நாம ஆன்மீகம்-ன்னா, பல புத்தகம் எடுத்துப் படிக்கிறோம், பதிவுகளில் விவாதிக்கறோம், இன்னும் என்னென்னமோ பண்ணறோம்!
* ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால்,
* ஒரு ஒட்டு மொத்த சமுதாயமே,
* இறை இயல், ஆன்மீகம்-ன்னு வளப்பமான கருத்துக்களையும், செயல்களையும் கொண்டு இருந்தது என்றால்?
அது சும்மாவா? எவ்ளோ பெரிய விஷயம்? அதான் தெய்வத் தமிழ்!

சில பேரு கதை மாதிரியும் தெய்வத் தமிழைச் சொல்வார்கள்! தெய்வமே அகத்தியருக்கு கொடுத்த மொழி-ன்னும் சொல்வார்கள்! அதுனாலயும் அது தெய்வத் தமிழ்! :)

* எல்லாம் கடந்த இறைவனை மொழிக் குறுகலுக்குள் அடக்குவது நம் நோக்கம் இல்லை!
* நம் நோக்கம்: நம் மொழியில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை அறிந்து கொள்வது மட்டுமே!


TY03NAMPERUMAL


இன்றைய இரவு,
தமிழ்க் கடவுள் மாயோனின் ஆலயத்தில், தமிழ் இரவு!
தமிழ்ப் பெரு விழா! திருவரங்கத்தில் இராப் பத்து திருநாள்!

மார்கழி முழுதும் வடமொழிக்கும் தடை! சுப்ரபாதத்துக்கும் தடை!
அப்படீன்னா மற்ற மாதங்களில் தமிழ் இல்லையா? மார்கழி-க்கு மட்டும் தான் தமிழா?-ன்னு அவசரப்பட வேண்டாம்!:)

மற்ற மாதங்களில் இரண்டுமே உண்டு! மற்ற மாதங்களில்,
* தமிழ்ப் பாசுரம் ஓதும் குழு முன்னே செல்ல,
* இறைவன் தமிழின் பின்னே செல்ல,
* வடமொழிக் கோஷ்டி இறைவனின் பின்னே செல்கிறது!

ஆனால் மார்கழியில்,
* தமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்!
* கோதைத் தமிழ் மட்டுமே கேட்பான் வேங்கடவன்!
* ராப்பத்தில் மாறனின் திருவாய் மொழியைத் தவிர ஒரு வாய் மொழியையும் கேட்க மாட்டான்!
இதற்கு அவனே ஓலை எழுதி அனுப்புகிறான் ஒவ்வொரு ஆண்டும்!

"யாமே, நாச்சியார்களோடு, பொன்னாசனத்தில் கொலுவிருந்து,
பகல்பத்து-ராப்பத்து நாட்களில், எல்லாத் தமிழ் வேதங்களையும்
செவிகுளிரக் கேட்கச் சித்தம்! அது போழ்தினிலே,
எவ்வொருவரும், யாது மந்திரங்களையும், தனியே சாற்ற வேண்டாம்! கோதைத் தமிழ் மட்டுமே இதற்கு விலக்கு!"
- (முத்திரையுடன்) நம்பெருமாள் ஆணைப்படி!


அவன் மட்டும் தான் தமிழோடு விளையாடுவானா? நாம கூடத் தமிழோடு விளையாடவே வந்தோம்! விளையாடலாமா? :)
இன்னிக்கி ராத்திரி நல்லா முழிச்சிக்கிட்டே ஆடுங்க! :))
விடைகள், வெள்ளி இரவு (நியூயார்க் நேரப்படி)!


Crossword-க்கு சொன்ன அதே ஸ்டோரி தான்! :)
*இங்கே போயி இந்த விளையாட்டை விளையாடுங்க மக்கா!*

புதிரை இங்கேயே இட்டிருப்பேன்! ஆனால் வரும் அத்தனை விடைகளையும் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யணும்! இது மற்ற திருப்பாவைப் பதிவுகளுக்கு இடைஞ்சலா இருக்கும்!
அதனால் "இனியது கேட்கின்" என்னும் என்னுடைய இன்னொரு வலைப்பூவில் இடுகிறேன்! அங்கிட்டு போயி ஜாலியா ஆட்டம் போடுங்க! :)
Read more »

Friday, January 02, 2009

புபு: திருப்பாவைப் போட்டியில் வெற்றி பெற்றது யார்?

மக்கா, புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் எப்படிப் போச்சு? இல்ல, இன்னும் போயிக்கிட்டே இருக்கா? :)
சரி, நேரா விசயத்துக்கு வாரேன்! திருப்பாவைப் போட்டியில் வெற்றி பெற்றது யார்? என்ன பரிசு? :)


மொதல்ல, போட்டிப் பதிவு இங்கே! சரியான விடைகள் இதோ!

[crossword_answers.jpg]

இந்தப் போட்டியில் பலரும் ஆர்வங் காட்டிக் கலந்துக்கிட்டீங்க! ரொம்ப நன்றி!
விஜய் ஒரு பின்னூட்டத்தில் அருமையாச் சொல்லி இருந்தாருங்க! அடியேனின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிச்சி இருந்தாரு!
//15க்கு விடை தெரியலை. ஆனா விடையை உங்க கிட்ட கேக்க போறது இல்ல.
முழு பாட்டையும் திரும்ப படிக்க ஒரு வாய்ப்பா எடுத்துக்க போறேன். உங்கள் சேவைக்கு என் வணக்கங்கள்//


* திருப்பாவை என்னும் ஒரு அற்புதக் கவிதையைப் பல கோணங்களில் வாசிச்சிப் பாத்திருக்கேன்! அதுவும் சிறப்புத் தமிழ்ச் சொற்கள்/வட்டாரத் தமிழ்ச் சொற்கள்!

* என் நண்பர்/நண்பிகளான நீங்களும் அந்த வாசிப்பு/சொல் தேடும் மகிழ்ச்சியைப் பெறணும்-ன்னு தான், இப்படி ஒரு ஓப்பன் புக் போட்டி!

* பிடிச்சி இருந்துச்சா? :)


நூத்துக்கு நூறு வாங்குனவங்க இதோ (22/22):

முதன் முறையிலேயே சரியாகச் சொன்னவர்கள்:
1. குமரன்
2. சின்ன அம்மிணி

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தர்கள்:
1. துளசி கோபால்
2. nAradA (சேதுராமன் சுப்ரமணியன்)



* வெற்றியாளர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!
* வென்றவர் இல்லாமல், உடன் நின்றவர் எல்லார்க்கும் தொப்பி தூக்கல்! (Hats Off) :)


போட்டியைப் பற்றிச் சில குறிப்புக்கள்...
யோவ் பரிசை வாங்கிக் கொண்டு பிறகு கேட்கிறேன்! அதற்குள் என்னய்யா அவசரம்? மன்னா...பரிசு? பரிசு? பரிசு? :))

பொதுப் பரிசு: (அனைத்து நண்பர்களுக்கும்)
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அமெரிக்காவில் வந்து ஆற்றிய,அழகுத் தமிழ்-சமயப் பேருரையின் ஒலிக்கோப்பு:
* திராவிட வேதம் - ஆழ்வார் அறிமுகம்!
Dravida_Vedam_Azhw...

* தினப்படி வாழ்வில் கீதை: The Daily Gita! (This is in English)
Daily_Gita.mp3


சிறப்புப் பரிசு:
வென்றவர் நால்வரின் பேரைச் சொல்லி,
சென்னை வள்ளுவர் குருகுலத்தில் படிக்கும் சின்னஞ் சிறார்களுக்கு,
Rs.3000/- மதிப்புள்ள அமர்-சித்ர-கதா போன்ற படம் போட்ட புத்தகங்கள்!


எங்கும் திருவருள் பெற்று இன்புறவ ரெம்பாவாய்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! :)


போட்டியின் ஹை-லைட்ஸ்
* முதன் முதலில் 21/22 சொன்ன ராகவ் - உங்களுக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்! ஏன் மீண்டும் ஆடலை?

* ஜீவ்ஸ் அண்ணன் கலக்கல்ஸ்! படம் புடிச்சி அனுப்பி இருந்தாரு புதின் விடைகளை!

* துளசி டீச்சர் கலக்கிங்ஸ்! நமீதா-ன்னு எல்லாம் விடை சொன்னாங்க! :)
திருப்பாவையை ரொம்பவும் சமய விளக்கமா இல்லாம, அன்றாட வாழ்வியலா, "லோக்கலா" எழுதிப் "புனிதத்தைக்" கெடுக்கறேன்-ன்னு ஏற்கனவே கம்ப்ளெயிண்ட்டு! இதுல நமீதா வேற ஒங்க பதில்ல வந்து ஹாய் சொன்னா எப்படி?:))

* குமரன், சின்ன அம்மிணி அக்கா - உங்க ரெண்டு பேருக்கும் டேங்கீஸ்! 22/22 வாங்கினாலும் ஒங்க பேரை உடனடியாச் சொல்லலை! Just for Others’ Participation! :)

* உற்சாக ஊற்று சேது சார் (nAradA) ஆட்டையில் பெரும் கலக்கு கலக்கினாரு! :) நீங்களே பாருங்க!
//It was Christmas Day. Still it counts for entry into KailAsam or VaikunTham as the case may be although it was neither SivarAtri nor VaikunTha EkAdasi. Get a print-out of this score to show at the gates. Ask KRS to sign it (verified by a notary public)!!//

* தத்துவ வித்தகர் ஜீவா, மற்றும் நண்பர் விஜய் = 21/22 வரை வந்து ஆடிக் கலக்கினாங்க!

* மார்கழி மாசக் கச்சேரி சீசன்-ல கூட, சிமுலேஷன் அண்ணாச்சி வந்து ஆடினாரு!

அனைவருக்கும் நன்றி & அட்வான்ஸ் பொங்க(ல்) வாழ்த்துக்கள்! :)



பந்தலில் திருப்பாவைப் பதிவுகள் பற்றிய ஒரு சிறு குறிப்பு:
(என்னிடம் தனிமையில் கோபப்பட்ட சில "புனித ஆன்மீக உள்ளங்கள்", இதைப் படித்துப் பார்த்து, அடியேனைக் கருணையோடு மன்னிப்பீர்களாக!)

பெண் சுதந்திரம் இல்லாத ஒரு காலகட்டத்தில், பெண்ணொருத்தி சொன்ன அற்புதத் தமிழ்க் கவிதை!
ஆன்மீகத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த ஒரு நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பெண்கள்! ஆனால் யாரும் தலைவி அந்தஸ்துக்கு உயரவில்லை!
வேதங்களைப் பெண்கள் வாயால் ஓதக் கூடாது என்று சொன்ன ஆண்கள், இவள் எழுதியதை மட்டும் "வேதம் அனைத்துக்கும் வித்து" என்று கொண்டாடுகிறார்களே! எப்படி?

இவள் எப்படி ஜெயிச்சிக் காட்டினா என்பது தான் ஆச்சரியமா இருக்கு! இவளை எப்படி வளர விட்டாங்க-ன்னு தான் ஆச்சரியமா இருக்கு!

இன்றைய அறிவியல் காலத்தில் கூட, சில "ஆன்மீக" நண்பர்கள் இத்தனை எதிர்ப்பு காட்டுகிறார்கள்! இறைவனின் அழகுத் திருப்படங்கள் இருக்கும் பதிவுகளில், இறையன்பர்களே தொடர்ந்து மைனஸ் குத்தவும் செய்கிறார்கள்! ஆனால் ஆர்வமாப் படித்தும் விடுகிறார்கள்! ஹா ஹா ஹா! :)))
துலக்கர் விழாவைச் சரணாகதியோடு ஒப்பிட்டு பந்தலில் போடுவது "கேவலம்/புறம் தொழல்" என்கிறார்கள்!
சினிமா பாஷையில் ஆன்மீகம் எழுதாதே, லோக்கலா எழுதாதே, மாதவிப் பந்தல் "அலர்ஜி/எங்கோ இடறுகிறது" என்கிறார்கள்!

* ஆனா இவளோ, "எலே, மச்சான், கண்ணாலம், கிரிசை, கீச்-கீச், அல்குல், பெண்டாட்டி, புனித எருமை"-ன்னு லோக்கல் சொற்களை எல்லாம் "வேதம் அனைத்துக்கும் வித்தில்" கொண்டாந்து வைக்கிறா! :)
* ஆற்ற+அனந்தல் என்று கர்மயோக/ஞானயோக கண்மூடித்தனமான பிடிப்பை, பிடி பிடிச்சி பாக்குறா! பத்மநாபனை, பற்பநாபன்-ன்னு தமிழில் மாத்தி வடமொழியாளர் கோவத்தை வேற வாங்கிக்குறா! :)

என்ன ஒரு துணிவு! தெளிவு! எளிமை! ஆழ்தல்!
வாய்ச் சொல் வீரி இல்லை இவள்!
வேதத்தில் சொன்னபடி பேசுபவள் அல்ல! "நடப்பவள்"!!
இவள் வெற்றியே வெற்றி! - வாழ்க நீ கோதை! வாழ்க என் தோழீ! வாழ்க, வாழ்கவே!



அன்பர்களே,
* அடியேன் திருப்பாவைக்கு வரி-வரி விளக்கம் சொல்லவில்லை! சமய ஆராய்ச்சியும் செய்யவில்லை! நான் சொல்வது திருப்பாவைக்கு கோனார் நோட்ஸும் அல்ல! புஸ்தகமாப் போட்டு, பாராயணம் பண்ணச் சொல்லி வினியோகம் செய்யப் போவதும் இல்லை! :)

* இந்தப் பதிவுகள் அனைத்தும், திருப்பாவை என்னும் அற்புதக் கவிதை என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் மட்டுமே! அதான் வரி விளக்கமா இல்லாம, தொடர்புடைய இன்ன பிற சேதிகளையும் சேர்த்தே சொல்கிறேன்!

* ஆன்மீக விளக்கங்களை முதன்மையா வைக்காது, அடியேன் லோக்கலா ஜாலியாச் சொல்லிக் கொண்டு போகிறேன்!
* "ஹை, இது என்ன புதுசா, ஜாலியான ஆன்மீகமா இருக்கே? " - என்று யாராவது ஒரு புதுமுகம் எம்பெருமானுக்கு ஆட்படாதா என்ன? :)

* பெரியவர்கள்/ஆச்சார்யர்களின் திருப்பாவை விளக்கங்கள் = பெருமாளுக்கு முன்பாக உள்ள குலசேகரன் படி போல!
* அடியேன் இப்படி "லோக்கல் பாஷையில்" எழுதுவது = ஆலயத்தின் மூலையில், இலவச மிதியடிக் காப்பகம் போல!

மாதவிப் பந்தலை இனி "செருப்பு வைக்கும் இடம்" என்று நினைத்துக் கொள்ளுங்கள், அன்பர்களே!

Smile & Be Happy in the New Year :)))
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
நமசிவாய! ஹரி-ஓம் நமோ நாராயணாய!



Results of the Poll:
Read more »

Tuesday, December 23, 2008

புதிரா? புனிதமா?? - திருப்பாவை கேம் விளையாடலாமா?

மக்களே, ஃபார் ஏ சேஞ்ச்...ஒரு விளையாட்டு விளையாடுவோம் வாங்க! திருப்பாவை வெளக்கமாவே கேட்டுக்கிட்டு இருந்தா உபன்யாசம் மாதிரி-ல்ல ஆயிரும்? எப்பமே லெக்சர் டைப் ஆன்மீகம் நமக்கு மிக்சர் டைப் ஆயிரும்!
ஹிஹி! இரு வழிப் பங்கேற்பு (Two Way Participation) ரொம்ப முக்கியம்!
அப்போ தான் ஆன்மீக டேபிள் டென்னிஸ் ஜாலியாப் போவும்! வாங்க ஆட்டையப் போடலாமா?

இந்த விளையாட்டு - திருப்பாவைக் குறுக்கெழுத்து! Paavai Crosswords!
*****இங்கே போயி இந்த விளையாட்டை விளையாடுங்க மக்கா!*****

புதிரை இங்கேயே இட்டிருப்பேன்! ஆனால் வரும் அத்தனை விடைகளையும் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யணும்! இது மற்ற திருப்பாவைப் பதிவுகளுக்கு இடைஞ்சலா இருக்கும்!
அதனால் "இனியது கேட்கின்" என்னும் என்னுடைய இன்னொரு வலைப்பூவில் இடுகிறேன்! அங்கிட்டு போயி ஜாலியா ஆட்டம் போடுங்க! கும்மி அடிங்க! :)

(பிகு: அங்கே இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒருத்தரு திருப்பாவை விளக்கங்களைச் சொல்லி இருந்தாரு! இப்பல்லாம் எதுவுமே சொல்லுறதில்லை! யாருக்கும் விளக்கம் சொல்லக் கூடாது, தனக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்-ன்னு சுயமான ஒரு நலத்துல இருக்காரு! :))
எல்லாம் அற, "என்னை இழந்த நலம்", சொல்லாய் முருகா! சுர பூபதியே! ஹரி ஓம்!
)

ஹா ஹா ஹா! ஓவர் டு இனியது கேட்கின்!
விடைகள் கிறிஸ்துமஸ் கழிச்சி சொல்லட்டுமா? குறுக்கெழுத்துப் பரிசும் உண்டு! :)


1 2 3
4
5 6
7
89 10
1112
1314
15
16
17 18
Read more »

Thursday, December 11, 2008

புதிரா? புனிதமா?? - அம்மன் பாட்டு 100!

விடைகள் போட்டாச்சே! (Dec-12, 11:40 pm)

கெபி அக்காவின் வேண்டுகோளைச் சிரம் மேல் கொண்டு, ஒரு நாள் நீட்டிப்புக்குப் பின், இதோ விடைகள்! கீழே போல்ட் செய்யப்பட்டுள்ளன!

வென்றவர்க்கும், உடன் நின்றவர்க்கும்.....அம்மன் பாட்டு குழுப்பதிவின் சார்பாக வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! விடைகளுக்கான விளக்கங்கள், அம்மன் அன்பர்கள் ஆரேனும் வந்து தர வேணுமாய் கேட்டுக்கறேன்!

வின்னர்களா?
1. கெக்கேபிக்குணி = 7/10
2. குமரன், மணிபாண்டி = 6/10

வாழ்த்துக்கள் வின்னர்களே! அம்மன் பாட்டு மன்னர்களே! :)


மக்கள்ஸ்! இன்று அம்மன் பாட்டு வலைப்பூவின் 100வது பதிவை முன்னிட்டு ஒரு "சிறப்புப்" புதிரா? புனிதமா?? அம்மன் கேள்விகள் + கோலிவுட் கேள்விகள்! கேஆர் விஜயா, ரம்யா கிருஷ்ணன், இன்னும் யாரெல்லாம் அம்மன் வேசம் கட்டுனாங்க? யோஜிங்க மக்கா யோஜிங்க!

அப்படியே அம்மன் பாட்டு-100 பதிவுக்குப் போய் ஒரு எட்டு எட்டிப் பாருங்க!
ஜனனி ஜனனி இஷ்டைலில் இளையராஜா போல ஒரு இளையராஜியும் SKவும் பாடுறாங்க!
பாட்டைக் கேட்டுக்கிட்டே குவிஜ் ஆடுங்க மக்கா! புதிரா புனிதமா ஆடுவமா? விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!
Happy Birthday ராபின்ஹூட் ஆழ்வார்!!


1

பண்டைத் தமிழ் இலக்கியங்களில், அம்மன், கொற்றவை என்று பேசப்படுகிறாள்! கொற்றம்=வெற்றி; எனினும் கொற்றவை என்ற சொல்லாட்சி சங்க இலக்கியத்தில் சேயோன்/மாயோன் போல அவ்வளவு அதிகம் இல்லை! தொல்காப்பியரும் நிலம்/திணைகளில் அவளை வைக்காது, உட்பிரிவான துறை ஒன்றில் மட்டும் கொற்றவை நிலை என்று வைக்கிறார்!

ஆனால் சிலப்பதிகார கால கட்டத்தில் தான் கொற்றவை வழிபாடு பற்றி அதிக தகவல்கள் கிடைக்கின்றன. சிலம்பில், கொற்றவை பூசை பற்றிய பாடல் எது?

1

அ) கொற்றவை வரி

ஆ) குரவை வரி

இ) வேட்டுவ வரி

ஈ) கானல் வரி

2

தட்சன் செய்த யாகத்தில், அவமதிப்புக்கு உள்ளான அன்னை தாட்சாயிணி உயிரை நீத்தாள். பின்னர் இமவான் மகளான பார்வதியாய்ப் பிறந்து ஈசனைச் சேர்ந்தாள்.

கோபம் கொண்ட ஈசன் தன் தலை மயிரைப் பிளந்து இருவரை உண்டாக்க, அவர்கள் தட்ச யாகத்தை அழித்தார்கள்! அவர்கள் யார்?

2

அ) சண்டிகேஸ்வரன்/ பத்ரகாளி

ஆ) வீரபத்ரன்/பத்ரகாளி

இ) ருத்ரகாளி/வீரபத்ரன்

ஈ) வீரபாகு/வீரபத்ரன்

3

தாய் மூகாம்பிகை படத்தில், இளையராஜா உருகி உருகிப் பாடும் ஜனனி ஜனனி பாடலை எழுதியது யார்? பாடல் எந்தத் தலத்தைக் குறிக்கிறது?

3

அ) வாலி-கொல்லூர்

ஆ) இளையராஜா-சிருங்கேரி

இ) வாலி-சிருங்கேரி

ஈ) இளையராஜா-கொல்லூர்

4

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்! - இந்தப் பாடல் எல்லாருக்கும் தெரியும்!

இதை எழுதிய இசை மேதை யார்? யாருக்காகப் பாடிக் காட்டி எழுதினார்?

4

அ) பாபநாசம் சிவன்/தியாகராஜ பாகவதர்

ஆ) கண்ண தாசன்/குன்னக்குடி வைத்தியநாதம்

இ) யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்/ பாபநாசம் சிவன்

ஈ) பாபநாசம் சிவன்/பெ.தூரன்

5

கேஆர் விஜயா அம்மனா நடிச்ச படம் எது-ன்னு கேட்டா, அடிக்க வருவீங்க! :) அது என்னமோ, அவிங்க மட்டும் அப்போ அம்மன் வேடத்துக்கு ஈசியா செட் ஆயிட்டாங்க!

நாகேஷ் பூசாரியாய் நடிக்க, மனைவியைக் கொலை செய்த கணவனின் மனைவியாவே அம்மன் வருவாங்க! நாகேஷும் அந்தப் பொண்ணுக்கே அபிஷேகமும் செஞ்சி வைப்பாரு!

என்ன படம்? (நோ சாய்ஸ்! :)

5 நம்ம வீட்டு தெய்வம்

6

51 (52) சக்தி பீடங்கள்! தட்ச யாக அழிவுக்குப் பின், அன்னையின் உயிரற்ற உடலின் துண்டுகள் விழுந்த இடங்களாகச் சொல்லப்படுபவை! இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ட்பெட், வங்காளம் என்று வெவ்வேறு இடங்கள்!

இதில் தமிழ்நாட்டுச் சக்தி பீடங்கள் எவை?

6

அ) காஞ்சி/மதுரை

ஆ) மதுரை/சமயபுரம்

இ) படவேடு/திருமயிலை

ஈ) கன்னியா குமரி/காஞ்சி

7

மாரியம்மனுக்கு ஆடி மாசம் தான் விசேடம்! ஆனால் வைகாசி மாதத்தில் முதல் நாள் அன்று, இந்த ஊர் வைணவர்களும் அந்தணர்களும் ஒன்று சேர்ந்து மாரியம்மனைப் பூசிக்கிறார்கள்.

பின்னர் இந்த ஊர் அம்மனுக்குத் தங்கள் சார்பாகப் பட்டுச் சீலையும், பொருளும், மலர் மாலைகளும் வரிசையாக அனுப்பி வைக்கிறார்கள்?

எந்த ஊர்கள்?

7

அ) நாகை அழகியார்-நாகை நெல்லுக்கடை அம்மன்

ஆ) திருவல்லிக்கேணி-திருமயிலை முண்டகக் கண்ணி

இ) அழகர்கோயில்-மதுரை

ஈ) திருவரங்கம்-சமயபுரம்

8

ஆதி சங்கரர் தம்முடன் வாதம் புரிந்தவரின் மனைவியான இந்தப் பெண்ணின் நினைவாகவே ஒரு அத்வைத பீடம் எழுப்பினார்; அங்கு அன்னையையும் பிரதிட்டை (திருநிலைக்காப்பு) செய்வித்தார். அதுவே சங்கரரின் முதல் மடமாகவும் கருதப்படுகிறது!

யார் இந்தப் பெண்?

8

அ) சரசவாணி

ஆ) சாரதாம்பாள்

இ) மூகாம்பாள்

ஈ) கனகதுர்க்கா

9

கொற்றவை ஆறலைக் கள்வர்களான எயினர்களின் காவல் தெய்வமாய்த் தான் முதலில் காட்டப்படுகிறாள். கிட்டத்தட்ட காளியின் உருவம்! அவளுக்குரிய பூக்கள் எவை?

9

அ) உழிஞை/நொச்சி

ஆ) வெட்சி/காந்தள்

இ) வஞ்சி/காஞ்சி

ஈ) குராப்பூ/மராப்பூ

10கட்டபொம்மனின் காவல் தெய்வமான இவள், நாயக்கர் குல மக்களின் தெய்வமும் ஆவாள்? யார் இவள்? (நோ சாய்ஸ்!)

10

ஜக்கம்மா தேவி




இது காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) கொற்றவை வரி ஆ) குரவை வரி இ) வேட்டுவ வரி ஈ) கானல் வரி

2 அ) சண்டிகேஸ்வரன்/ பத்ரகாளி ஆ) வீரபத்ரன்/பத்ரகாளி இ) ருத்ரகாளி/வீரபத்ரன் ஈ) வீரபாகு/வீரபத்ரன்

3 அ) வாலி-கொல்லூர் ஆ) இளையராஜா-சிருங்கேரி இ) வாலி-சிருங்கேரி ஈ) இளையராஜா-கொல்லூர்
4 அ) பாபநாசம் சிவன்/தியாகராஜ பாகவதர் ஆ) கண்ண தாசன்/குன்னக்குடி வைத்தியநாதம் இ) யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்/ பாபநாசம் சிவன் ஈ) பாபநாசம் சிவன்/பெ.தூரன்
5
6 அ) காஞ்சி/மதுரை ஆ) மதுரை/சமயபுரம் இ) படவேடு/திருமயிலை ஈ) கன்னியா குமரி/காஞ்சி
7 அ) நாகை அழகியார்-நாகை நெல்லுக்கடை அம்மன் ஆ) திருவல்லிக்கேணி-திருமயிலை முண்டகக் கண்ணி இ) அழகர்கோயில்-மதுரை ஈ) திருவரங்கம்-சமயபுரம்
8 அ) சரசவாணி ஆ) சாரதாம்பாள் இ) மூகாம்பாள் ஈ) கனகதுர்க்கா
9 அ) உழிஞை/நொச்சி ஆ) வெட்சி/காந்தள் இ) வஞ்சி/காஞ்சி ஈ) குராப்பூ/மராப்பூ
10
Read more »

Thursday, November 13, 2008

புதிரா? புனிதமா? இந்தக் குழந்தைப் பதிவர்கள் யார்? யார்?

விடைகளைச் சொல்லிறலாமா? அதான் சந்திராயன் சந்தோஷத்துல இருக்கேன்! ஸோ, என்ன பரிசு வேணும்னாலும் கேளுங்க! என் தங்கச்சி துர்காவைக் கொடுக்கச் சொல்லுறேன்! :)

விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!
மிக அதிகமான சரியான வடைகளைச் சுட்டவர் என்ற பெருமையைச் சின்ன அம்மிணி அக்கா, மற்றும் ரிஷான் அங்க்கிள் தட்டிச் செல்கின்றார்கள்! வாழ்த்துக்கள்-க்கா! வாழ்த்துக்கள் ரிஷான்! :)

போட்டியின் ஹைலட்டான ஐந்தாம் கேள்வி - சந்திரிகா சோப் - நம்ம தங்கத் தாரகை துளசி டீச்சர்! அவங்களின் அந்தப் படத்துக்காகவே, அவங்களுக்கு பதிவுலக நாட்டியப் பேரொளி-ன்னு பட்டம் கொடுத்துறலாம்! ஏற்கனவே அந்த ரெட்டை வால் குருவியோ ஏதோ சொன்னாங்களே - அந்த மை வைக்கும் இஷ்டைல்! அதுக்கு நிறைய பேரு ஃபேன்ஸ் வேற ஆயிட்டாங்க! வாழ்த்துக்கள் டீச்சர்! :)

ஷைலஜா அக்கா...இந்த மை பத்தி, எனி கமெண்ட்ஸ்? :)
இது மை.பா இல்லை! இது வெறும் மை! :)


மக்கா, இன்னிக்கி (நவ-14) குழந்தைகள் தினமாம்! சரி கொண்டாடிறலாம்-னு எங்க பேபி கிளப் தலைவி சிங்கையில் இருந்து ஒரு தீர்மானம் போட்டுட்டாங்க!
இப்போதைக்கு இந்த பேபி கிளப்பில் மூனே பேரு தான் உறுப்பினர்கள் - சிங்கை, நியூயார்க், ஆம்ஸ்டர்டாம்! மூனே மூனு குழந்தைப் பதிவர்களை மட்டும் வச்சிக்கிட்டு என்ன குழந்தைகள் தினம் கொண்டாடுறது? அதான் இப்படி ஒரு புதிரா புனிதமா!

இவிங்க எல்லாம் பிர-"பலமான" பதிவர்கள்!
விளையும் பயிர் முளையிலேயே பின்னூட்டுதா-ன்னு பாத்து சொல்லுங்க பார்ப்போம்

இதுல மொத்தம் ஐந்து பதிவர்கள்! ஐந்து பெரும்புள்ளிகள்!
இப்படியெல்லாம் கலந்தாத் தான் கரும்புள்ளி எல்லாம் பெரும்புள்ளி ஆகும்! :)

யார் யார் யார் இவர் யாரோ?
ஊர் பேர் தான் தெரியாதோ??

(க்ளூ தனியாக் கொடுக்கப்பட்டிருக்கு; விடைகள் நாலை மாலை, நியூயார்க் நேரப்படி)

இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்! :)
குழந்தை போல சிரிக்கப் பழகுவோம்! சிரிக்கச் சிரிக்கவும் பழகுவோம்!


1 ஆடி வரும் நாயகி! பம்பை உடுக்கைத் தலைவி! பதிவுலக ஏஞ்செல் (அப்படிச் சொல்லலீன்னா, என் கதி அதோ கதி தான் :)

1

அ) மைஃபிரெண்ட்

ஆ) G3

இ) இம்சை அரசி

ஈ) துர்கா தேவி

2அப்பாவி லுக்கு! அடிப்பதோ பெக்கு!

2

அ) E-Tamil - பாஸ்டன் பாலா

ஆ) இனியது கேட்கின் - ஜி.ராகவன்

இ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ்

ஈ) றேடியோஸ்பதி - கானா பிரபா

3
அப்பவே என்னா ஒரு மொறைப்பு? என்னா ஒரு வில்லத்தனம்? :)

3

அ) கப்பி பய - கப்பி பய

ஆ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ்

இ) மகரந்தம் - ஜி.ராகவன்

ஈ) வெயிலில் மழை - ஜி

4கொழு கொழு மொழு மொழு பொம்மை - ஆனா நமீதாவுக்கு உறவு அல்ல! (நமீதாவைச் சொல்லிவிட்டதால் கோவி கண்ணனையும் சொன்னதாகவே அர்த்தம்! :)))

4

அ) மைஃபிரெண்ட்

ஆ) மனசுக்குள் மத்தாப்பு - திவ்யா

இ) ஷைலஜா (எப்படிக்கா இப்பிடி ஒரு அப்பாவி லுக்கு? அதான் பின்னலே இல்லைல? வெறும் கிரப்பு! அதுல எம்புட்டு பெரிய பூ! :))

ஈ) ஜோதிகா

5

சந்திரிகா சோப்பின் குளுமை வெளம்பரம் பாத்து இருக்கீங்களா? :) அதுல கலக்கும் ஒரு ஐட்டம் தான் இவிங்க தனி முத்திரை! ஜகன் மோகினி மாதிரி ஜகத்துக்கே பதிவி!

5

அ) கீதா சாம்பசிவம்

ஆ) வல்லியம்மா

இ) புதுகைத் தென்றல்

ஈ) தங்கத் தாரகை, துளசி கோபால்

6பறவை மருத்துவ நிபுணர்!

6

குருவி புகழ் - டாக்டர் விஜய்

7கண்ணனும் இவரே! வடி-வேலனும் இவரே! ஆனால் உலக நாயகி அல்ல!

7

கனவுக் கன்னி ஸ்ரீதேவி

8 அசைக்க முடியாத நாற்காலிக்குச் சொந்தக்காரர்8

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்

9 பார்ட்டி நடத்தும் காசைக் கையில் கொடுக்கச் சொன்னார்!

9

அன்னை தெரேசா

(நோபெல் பரிசு வாங்கிய பின், கொண்டாட்டப் பார்ட்டிக்கான காசைக் கையில் கொடுத்தால், ஒராண்டுக்கு 150 தொழு நோயாளிகளுக்கு, நிர்மல் ஹருதய் காப்பகத்தில், சிகிச்சை செய்ய முடியும், என்று கேட்டு வாங்கினார்!)

10அப்பவே அகில இந்திய "முதல்"வர் கலைஞருக்கு முன்னோடி!

10

குழந்தைகள் தினச் சொந்தக்காரர், ஜவஹர்லால் நேரு!




இது காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) மைஃபிரெண்ட் ஆ) G3 இ) இம்சை அரசி ஈ) ________

2 அ) E-Tamil - பாஸ்டன் பாலா ஆ) இனியது கேட்கின் - ஜி.ராகவன் இ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ் ஈ) றேடியோஸ்பதி - கானா பிரபா

3 அ) கப்பி பய - கப்பி பய ஆ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ் இ) மகரந்தம் - ஜி.ராகவன் ஈ) வெயிலில் மழை - ஜி
4 அ) மைஃபிரெண்ட் ஆ) மனசுக்குள் மத்தாப்பு - திவ்யா இ) ஷைலஜா ஈ) ஜோதிகா
5 அ) கீதா சாம்பசிவம் ஆ) வல்லியம்மா இ) புதுகைத் தென்றல் ஈ) ________________
6
7
8
9
10
Read more »

Wednesday, August 20, 2008

புதிரா? புனிதமா?? - நட்சத்திரப் பதிவர் குமரனின் கிசு கிசுக்கள்!!!

மக்கள்ஸ்! இந்தப் புதிரா புனிதமா-வில் அஞ்சா நெஞ்சுடன், வீரமாகப் பதில் சொன்னது ரெண்டே பேரு தான்! சிவமுருகன் & ஸ்ரீதர் அண்ணாச்சி!
மற்ற அத்தனை பேரையும் நட்சத்திரப் பதிவர் குமரன் திரைமறைவில் மிரட்டியுள்ளதாக, திரைமறைவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன!

இருப்பினும், இதில் அதிக கிசுகிசு கேள்விகளுக்குப் பதில் சொல்லி, சாதனை படைச்ச சிவாவைப் பாராட்டி, குமரன், இந்தப் பரிசை வழங்குகிறார்!
சிவாவுக்கு வெகு விரைவில், இதே போன்று மாலை சூடி, திருமணம் நடைபெறவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்(றோம்)! :)

விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன! விரிவான விளக்கங்களைக் குமரனே வந்து சொல்லுவார்!


மக்கள்ஸ்! இன்று புதிரா புனிதமா ஒரு வரலாறு படைக்கப் போகிறது! தமிழ்ப் பதிவுகளிலேயே முதல் முறையாக....ச்சே....சன் டிவி பாக்காதே, கலைஞர் டிவிக்கு மாறு-ன்னு சொன்னாக் கேட்டா தானே?....ஒரு பதிவரைப் பற்றிய வினாடி வினா! அதான் யாருன்னு தலைப்புல சொல்லியாச்சே!

கிசுகிசு என்பது கூடிய சீக்கிரம் தமிழ் இலக்கியத்தில் ஒரு வகை ஆனாலும் ஆகி விடும்!
உலா, கலம்பகம், பள்ளு போல ஜொள்ளு, கலாய்த்தல், கிசுகிசு!
அந்த அளவுக்கு, மக்கள் அடுத்தவர் விஷயத்தில் காட்டும் ஒரு பொது அறிவு ஆர்வம்! ஒருத்தரைப் போட்டு வாங்க இதை விட ஒரு நல்ல சான்ஸ் கிடைக்குமா?
நம்ம நட்சத்திரப் பதிவர் குமரனை அடிச்சி ஆடுவமா? :)

இந்த முறை குமரன் ஐயாவே சொந்த செலவுல பரிசை வழங்குவாரு!
தங்கக் காசா கூட இருக்கலாம்! திருப்பரங்குன்றம் கோயில் கஜானாவுக்கே மேனேஜர்-ன்னா பாத்துக்குங்க!
மதுரை-ல மேல மாசி வீதியில அண்ணாச்சிக்கு சொந்தமா ஒரு வளையல் கடை! பிரபல முன்னணி நடிகைகள் எல்லாம் அங்கிட்டு தான் வளையல் வாங்க வருவாங்களாம்!

கிசுகிசு நம்பர் ஒன்:
நம்ம தங்கமான பதிவர் ஒருத்தருக்கு மரம் வளர்க்கறதுல ரொம்பவே ஆர்வம்!
தூத்துக்குடி உப்புச் சத்தியாகிரகத்துல அப்பப்ப உப்பு காய்ச்சுவாரு! அப்பல்லாம் ரஜினா உப்பு-மா மட்டுமே சாப்பிட்டு உண்ணாவெரதம் இருப்பாராம்!
அவரு சென்னை திரும்பி வரும் வழியில், மதுரைல எப்பமே ஒரு ஹால்ட் போடுவாராம்! எதுக்குங்கிறீங்களா? மேற்படி வளையல் கடைல, வளையல் போட்டு விடத் தான்! :)

குமரன் ரெடி! நீங்க ரெடியா?....
விடைகள், நாளை இரவு (மின்னசோட்டா நேரப்படி)!


1

பதிவர் குமரனின் அகவை - நல்லா கவனிக்கவும், அங்கவை இல்ல! - அகவை! அகவை!

பதிவுச் சான்றிதழ் வயது என்ன?

1

அ) 15-3/4

ஆ) 1330

இ) 1036

ஈ) 133

2

குமரன் வலைப்பூவில், தன்னைப் பற்றிய ஒரு குறிப்பில், இந்த பாட்டைக் கொடுத்துள்ளார்!

மதுரைக்காருல்ல! மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்து, அதைத் தான் எடுத்துக்கிட்டு வந்திருக்காரு! யாரு எழுதிக் கொடுத்த பாட்டு?

அடியேன் சிறிய ஞானத்தன்
அறிதல் யார்க்கும் அரியானை
அடியேன் காண்பான் அலற்றுவன்
இதனில் மிக்கோர் அயர்வுண்டே!

2

அ) ஆண்டாள்

ஆ) வெட்டிப்பயல்

இ) அபிராமி பட்டர்

ஈ) நம்மாழ்வார்

3

போறாளே பொன்னுத் தாயன், பொல பொலவென்று கண்ணீர் விட்டு! அப்படின்னு ஒரு பாட்டைக் கேட்டிருக்கீங்க தானே? குமரன் தமிழ்மணத்தை விட்டு விலகறேன்-ன்னு அறிவிப்பு வுட்டாருல்ல! அப்ப பாடுன பாட்டு தான் அது!

அப்படிப் போறப்போ, எந்தப் பதிவுகளை (வலைப்பூக்களை) மட்டும் தமிழ்மணத்துல இருந்து தூக்குனாரு?

3

அ) அபிராமி அந்தாதி

ஆ) கூடல்

இ) மதுரை மாநகரம்

ஈ) ஏதோ ஒரு செளராஷ்ட்டிர வலைப்பதிவு

4

கஷ்டமான கேள்வி!

குமரனோட கஷ்ட தெய்வம்...ச்சே...இஷ்ட தெய்வம் யாரு? :)

4

அ) முருகன்

ஆ) கண்ணன்

இ) மீனாட்சி

ஈ) குமரன் - ஆத்திகர் போல் சீன் போடும் நாத்திகர் :))

5குமரனின் பாடல் குரல், முதலில் அரங்கேறின வலைப்பூ எது? அதைக் கேட்டுவிட்டுச் சரியில்லை என்று சொன்ன பதிவர் யார்?

5

அ) கண்ணன் பாட்டு - ஜி.ராகவன்

ஆ) முருகனருள் - சர்வேசன்

இ) சிவன் பாட்டு - இலவசக் கொத்தனார்

ஈ) கண்ணன் பாட்டு - சர்வேசன்

6

குமரன் எழுதியதில் எந்தத் தொடர் அதிக நீளமானது? (ஒவ்வொரு பதிவுமே அப்படித் தான்-ன்னு புலம்பல்ஸ் நாட் அலவுட் :)

நான் கேக்குறது, அதிக பதிவு எண்ணிக்கை கொண்ட தொடர்கள்!

6

அ) உடுக்கை இழந்தவன் கை

ஆ) புல்லாகிப் பூண்டாகி

இ) சொல் ஒரு சொல்

ஈ) கோளறு பதிகம்

7

இந்த நண்பர், குமரனின் ஊருக்குப் போகும் போதெல்லாம், குமரன் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி, ஊரை விட்டு ஓடிருவார்! பார்க்க வரவே மாட்டார்!

இத்தனைக்கும் இந்தப் பதிவரிடம் குமரன் கடன் கூட வாங்கலை! யார் அந்த அப்பாவிப் பதிவர்?

7

அ) KRS

ஆ) VSK

இ) இலவசக் கொத்தனார்

ஈ) விடாதுகருப்பு

8

குமரனின் புல்லாகிப் பூண்டாகி தொடர் கதைக்கு (சுயசரிதை-ன்னும் சில பேர் பேசிக்கறாங்கப்பா!), பலர் விமர்சனம் எழுதினாங்க! அதுல ஒரே ஒரு விமர்சனம் மட்டும் மாபெரும் சூட்டைக் கிளப்பியது!

கிட்டத்தட்ட குமரனை ஒரு போதைப் பொருளாளர் (Drug Addict) ரேஞ்சுக்கு வர்ணித்த அந்த வீரமிகு பதிவர் யார்? :)

8

அ) கோவி. கண்ணன்

ஆ) வவ்வால்

இ) ரத்னேஷ்

ஈ) டிபிசிடி

9

குமரனுக்குத் திடீர்-னு இயற்கை மேல் ஆர்வம் வந்து, பதிவுல, மரம் செடி கொடி எல்லாம் வளர்க்க ஆரம்பிச்சாரு ஒரு காலத்துல! எந்த மரம்/செடி?

9

அ) கொன்றை

ஆ) கடம்பு

இ) துளசி

ஈ) முல்லை

10

கடைசிக் கேள்வி: வெவகாரமான கேள்வி!

குமரனுக்கு ஒரு ராசி உண்டு! அவர் கூட எழுதும் கூட்டுப் பதிவர்கள் எல்லாம் கொஞ்ச நாளில் பதிவுலகத்தை விட்டே ஓடிருவாங்க! (உஷார் உஷார்-ன்னு உஷா அக்கா கூவுறது எனக்கு இங்க வரைக்கும் கேட்குது :)

அப்படி விட்டுப் போன பதிவர், இவர்களில் யாரு?

10

அ) கீதா சாம்பசிவம்

ஆ) சிவமுருகன்

இ) நாமக்கல் சிபி

ஈ) சிவபுராணம் சிவா



* என்னாங்க, கிசுகிசு போதுங்களா? இல்லை, கொசுறு ஏதாச்சும் வேணுங்களா? உங்களுக்குத் தெரிஞ்ச கிசுகிசு-க்களைக் கூட நீங்க பின்னூட்டத்தில் சொல்லலாம்! "ஆண்மீகப் பதிவாளர்" - என்று உங்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்! :)

** இதுக்கு மேல வெவகாரமான கேள்விக்கு எல்லாம் நம்ம சின்னத் தலையைத் தான் கூப்டோணும்! யப்பா ராயலு! ராமு! அம்மூருகாரவுக, நம்ம ததா-வைப் பத்தி நல்ல சீட்டா நாலு எடுத்துப் போடு ராசா! :)

*** அப்படியே அந்த மேல மாசி வீதி, வளையல் கடை சமாச்சாரத்தை, மதுரையம்பதி-மெளலி அண்ணாவோ இல்லை நீயோ, களத்தில் இருந்து நேரடித் தகவல் கொடுத்தா, ப்ரைம் டயம் வெளம்பரம் காசு தேறும்! :))


இது காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) 15-3/4 ஆ) 1330 இ) 1036 ஈ) 133

2 அ) ஆண்டாள் ஆ) வெட்டிப்பயல் இ) அபிராமி பட்டர் ஈ) நம்மாழ்வார்

3 அ) அபிராமி அந்தாதி ஆ) கூடல் இ) மதுரை மாநகரம் ஈ) ஏதோ ஒரு செளராஷ்ட்டிர வலைப்பதிவு
4 அ) முருகன் ஆ) கண்ணன் இ) மீனாட்சி ஈ) குமரன் - ஆத்திகர் போல் சீன் போடும் நாத்திகர் :))
5 அ) கண்ணன் பாட்டு - ஜி.ராகவன் ஆ) முருகனருள் - சர்வேசன் இ) சிவன் பாட்டு - இலவசக் கொத்தனார் ஈ) கண்ணன் பாட்டு - சர்வேசன்
6 அ) உடுக்கை இழந்தவன் கை ஆ) புல்லாகிப் பூண்டாகி இ) சொல் ஒரு சொல் ஈ) கோளறு பதிகம்
7 அ) KRS ஆ) VSK இ) இலவசக் கொத்தனார் ஈ) விடாதுகருப்பு
8 அ) கோவி. கண்ணன் ஆ) வவ்வால் இ) ரத்னேஷ் ஈ) டிபிசிடி
9 அ) கொன்றை ஆ) கடம்பு இ) துளசி ஈ) முல்லை
10 அ) கீதா சாம்பசிவம் ஆ) சிவமுருகன் இ) நாமக்கல் சிபி ஈ) சிவபுராணம் சிவா
Read more »

Thursday, July 31, 2008

புதிரா? புனிதமா?? - குசேலன் கப்பிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

* கப்பி நிலவர்!
* ஜாவா பாவலர்!
* காஞ்சித் தலைவன்!

* குசேலனுக்கு இன்னிக்கி க்ளோபல் டிஸ்ட்ரிப்யூட்டர்!



* சாம் ஆன்டர்சனைச் சினிமா உலகத்துக்கே அறிமுகம் செய்த கப்பி ஆன்டர்சன்!!! - Kappi Anderson & Kappi Honda!


* உலகத் தர சினிமாவின் ஒன் & ஓன்லி சுப்புடு!
* ஓர்க்குட் குமரிகளின் கனவுக் கண்ணன்!
* தேன் கிண்ணத்தில் பால் வார்க்கும் ராக தேவன்!
* இன்னிக்கி டெக்ஸாஸ் மாநிலப் பசுப் பையன்!
* என்னிக்கும் தமிழ் மாநிலத் தலைப் பையன்!


புன்னகைச் சிங்கம், எங்கள் தங்கம்,
கப்பி பயலுக்கு,
...இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Jul-31)


புதிரா? புனிதமா??
1. நம்ம கப்பிக்கு பிறந்த நாள் பரிசா எதைக் கொடுக்கலாம்?
(ஒன்லி ஒன் ஆன்ஸர் இஸ் தி ரைட்டு ஆன்ஸர்!!!)

சரியான விடைகள் நாளை மாலை Dallas நேரப்படி அறிவிக்கப்படும்! தவறான விடைகள் தருபவர்கள் சுவாரஸ்யமான முறையில் தண்டிக்கப்படுவார்கள்! :-)

அதிகப்படியாக ஓட்டு விழும் விடையே கப்பிக்குப் பரிசாகக் கொடுக்கப்படும்!
அதை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு-ன்னு, அவரு மறுக்காம வாங்கிக்கிடணும்!:)
அ) Maragathavalli (alias) MAGGI - (Jumba Jumba Jumba Jumba, Jumba Jumba Jum!)

ஆ) குளிர் பானம்(கொளுத்தும் டெக்சாஸ் வெயிலுக்காக மட்டுமே)
இ) பிறந்த நாள் கேக் (கொழுப்பற்ற கேக்)

மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துகள் கப்பி!:)))
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP