கிரந்தம் தமிழுக்குத் தேவையா? ஏன்?
கிரந்தம் தேவை தானா? = தவிர்க்கணுமா? எழுதலாமா?
- இது பற்றி இணையத்தில் ஏற்கனவே பல தளங்களில் உரையாடல் நிகழ்ந்துள்ளது!
Unicode Consortium, கிரந்தத்தைத் தமிழ்ப் பலகையில் கொண்டாந்து கலந்தோ (அ) தமிழைப் புதிய கிரந்தப் பலகையில் கொண்டு போய் வைத்தோ...
இந்தக் குழப்படி பற்றி, படம் வரைந்து முன்பு விளக்கி இருந்தேன்! இராம.கி ஐயாவும் சிறப்புப் பதிவு இட்டிருந்தார்கள்!
ஆனால்.....இந்தப் பதிவு Unicode கிரந்தம் பற்றி அல்ல!
அதையும் தாண்டி....அடிப்படையிலேயே......
1. கிரந்தம் தமிழுக்குத் தேவை தானா?
2. கிரந்த எழுத்து பற்றிப் பல்வேறு தமிழர்களின் "Mood" என்ன?-என்று பார்க்கும் பதிவே இது!

ஏன் இப்படித் திடீர்ப் பதிவு-ன்னு பாக்குறீங்களா?
Twitter-இல், அப்பப்போ இது பத்திக்கும்! காரசாரம் தூள் பறக்கும்!
அண்ணன் @tbcd தலைமையில் தமிழ் ஆர்வலர் குழுவும், குழுவல்லாத சில ட்வீட்டர்களும், பிரிச்சி மேய்ஞ்சி பந்து வீசுவாங்க! IPL போட்டிகளை விட ஆர்வத்தைத் தூண்டும்!:)
அப்படித் தான் இன்னிக்கும் தூள் பறந்தது! சில பேருக்கு, அடிப்படையே தெரியாமல், தங்கள் மனசுக்குத் தோனுவதையே வைத்து உரையாடினார்கள்! பல டமால்-டுமீல் கேள்விகளும் எழுப்பப்பட்டன!
அத்தனை பேர் ஆதங்கத்தையும் ஒன்னாத் திரட்டி.....இதோ...கிரந்தம் FAQ! @twitter மக்களுக்கு நன்றி!
1. கிரந்தம் என்பது என்ன? அது வடமொழியா?
கிரந்தம் மொழி அல்ல! அது ஒரு எழுத்துரு (Notation) மட்டுமே!
வடமொழி ஓசைகளைத் தமிழில் எழுத உருவாக்கப்பட்ட ஒரு Notation!
கீழே படத்தைப் பாருங்க......கொஞ்சம் தமிழும் இருக்கும் ('யத') ! 'ஜ'-வும் இருக்கும்! புரியாத Round Round Jilebi-யும் இருக்கும் :)
பண்பாட்டுக் கலப்பு + வடமொழி வீச்சு! இவை அதிகார/அரச மட்டத்தில் தான் முதலில் பரவத் தொடங்கியது!
அந்த அயல் ஓசைகளுக்குத் தமிழில் நேரடியான எழுத்து இல்லை...அதை எழுத ஒரு Lipi (எழுத்துரு) உருவாகியது! அது பல்லவர்கள் காலம்!
பின்பு வந்த சோழர்கள் - அந்த ஆட்சியின் பண்டிதர்களால் - அரசுமுறை, கல்வெட்டு என்று எல்லாவற்றிலும் கிரந்தம் கன்னாபின்னா-ன்னு பரவியும் விட்டது!
2. கிரந்த எழுத்தக்கள் எவை?
தமிழில் கலந்து விட்ட அடிப்படைக் கிரந்த எழுத்துக்கள்: ஜ, ஸ, ஷ, ஹ! கூடவே க்ஷ, ஸ்ரீ
ஆனா இவை ஆறு மட்டும் தான் கிரந்த எழுத்து-ன்னு நினைச்சிறாதீங்க!
மொத்தம் 16 உயிர் x 34 மெய் = 500+ எழுத்துரு உண்டு!
நல்ல வேளை, எல்லாமே தமிழ்ப் பலகையில் புகுந்து விடவில்லை!
எந்தச் சில ஓசைக்கு எழுத்து இல்லையோ, அவை மட்டுமே அடிப்படையாப் புகுந்தன!
வேறு சில ஓசை, ka, kha, ga, gha, na -ன்னு இந்தியில் வருமே, அவை எல்லாம் உள்ளாறப் புகவில்லை! வேதப் படிப்பு/கல்வெட்டோடு நின்று விட்டன:)
Gaந்தம்=வாசனை! kaந்தன்=முருகன்!
அது வேற "க", இது வேற "க"! ஓசைக்காக அதையும் தமிழில் புகுத்துவோம்-ன்னு, நல்ல வேளை, புகுத்தாம விட்டாங்க!
இல்லீன்னா க, ங, ச, ஞ-க்கு பதில், நாமளும் ka, kha, ga, gha, na-ன்னு படிச்சிருப்போம்!:))

Gaந்தம்=வாசனை! kaந்தன்=முருகன்-ன்னு சொன்னேன்-ல்ல? பொதுவா "க" என்பதே, இடத்துக்கு ஏற்றவாறு ஒலிக்க வல்ல Flexibility (நெகிழ்வு) தமிழில் உண்டு! ஆங்கிலத்துக்கும் இது பொருந்தும்!
யம்மாடியோவ்...தமிழ் எழுத்துக்கள் = 247-ன்னு மலைச்சிப் போகத் தேவையே இல்ல! மொத்தம் 31 எழுத்து தான் தமிழில்!
உயிர்=12, மெய்=18 & ஆய்தம்=1! மீதியெல்லாம் உயிர்-மெய் கலவை எழுத்துக்களே!
சரி, வரலாறு போதும்! அது நடந்து முடிந்த கதை! தொடங்கிய பிரச்சனைக்கு வாரும்!:)
3. கிரந்தம் கலந்து எழுதுவது = தப்பா? சரியா?
ஆதித் தமிழ்த் தந்தையான தொல்காப்பியரைப் பொறுத்த வரை = தப்பு!
"வடசொல் ஒரீஇ"-ன்னு தான் சொல்லுறாரு!
அவர் காலத்தில், பண்பாடு ரொம்பக் கலக்கவில்லை! இருந்தாலும் பக்கத்து ஊரு, அண்டை நாட்டு வாணிப முறையில், சில சொற்கள் அங்கும் இங்கும் புழங்கின! அந்தச் சொற்களைக் கையாள, அவர் வகுத்துக் குடுத்தது:
* தற்சமம்: கமலம் = அப்படியே எழுத முடிபவை
* தற்பவம்: பங்கயம் (பங்கஜம்) = தமிழுக்கு ஏற்றவாறு, மாற்றி எழுதுபவை

தொல்காப்பியம், இன்று கிடைக்கும் தமிழ் நூல்களிலேயே மிகப் பழமையானது!
தொல்காப்பியர் மாயோன், சேயோன் (திருமால், முருகன்) என்று இருவரையுமே தமிழ்க் கடவுளாத் தான் காட்டுறாரு! = ஆனா நாம ஒத்துப்போமா? நம்ம மனசுக்குப் எது பிடிச்சி இருக்கோ அதானே "வரலாற்று உண்மை"! :)
அட போப்பா, தொல்காப்பியர் சொன்னதெல்லாம் இன்னிக்கி செல்லாது-ன்னு சொல்லீருவோம்-ல்ல? :) அதே போல் தான், அவர் சொன்ன "வடசொல் ஒரீஇ" என்பதும் செல்லாமப் போயிருச்சோ? :(
4. கிரந்தம் இல்லாம, இலக்கியத் தமிழை எழுதவே முடியாதா?
முடியும்!
சங்கப் புலவர்கள் தொட்டு, வள்ளுவர், இளங்கோ, ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன்-ன்னு யாருமே கிரந்தம் பயன்படுத்தவில்லை!
பிராகிருத மொழி (சமஸ்கிருதம் அல்ல) விரவி வரும் சமண சமயம் கூட, அதன் தமிழ் இலக்கியத்தில் கிரந்தம் தவிர்த்து, தமிழையே தாங்கியது!
அவ்வளவு ஏன்? பின்பு வந்த எளிமையான பாரதியார் கவிதையில் கூட கிரந்தம் காண்பது கொஞ்சம் அரிது தான்! ஆனால்...ஆனால்...
5. கிரந்தம் இல்லாம, இன்னிக்கி தமிழை எழுதவே முடியாதா?
இது ரொம்பச் சிக்கலான கேள்வி!
அதுவும்.........பல சமயங்கள், பல மொழிகள்-ன்னு கலந்து, "தமிழர்" என்னும் ஒரே குடையின் கீழ் வாழ்கிறார்கள்!
அவரவருக்குப் பேர்கள், ஊர்கள்-ன்னு அமைஞ்சிப் போச்சி! "Santosh" என்பதைச் "சந்தோசு"-ன்னு எழுதினால், அவர் கோவிச்சிப்பாரா-ன்னு தெரியாது!
என்னை "இரவிசங்கர்" என்று எழுதுவதையே நான் விரும்புகிறேன்! நண்பர்களிடமும் அப்படியே புழங்கச் சொல்கிறேன்! அவரவர்களே ஒத்துக்கிட்டா, அப்போ பிரச்சனையில்ல! ஆனால்.....
குஷ்பு-வுக்கு என்ன தான் வயசானாலும், கோயில் கட்டிய கொலவெறி ரசிகர்கள் இன்னும் இருக்காங்களே....குசுபு-ன்னு எழுதினா என்னைக் கொலை பண்ணவே வந்துருவாங்களோ? :))
இதுக்கு, என்ன தான் வழி?
ஆலயங்களில் தமிழை முன்னிறுத்திய இராமானு'ஜ'ர், தன்னை "இராமானுசன்" என்றே கையொப்பம் இட்டார்!
இலக்கியங்களிலும் அவரை "இராமானுசன்" என்றே குறித்து வைத்தார்கள்! இது அவரே விருப்பமுடன் செய்து கொண்டது!
ஆனாலும் எல்லாரும் இராமானுசர் ஆகி விட விரும்புவதில்லை! அதே சமயம் தமிழும் கலப்படம் இல்லாமல் இருக்கணும்! அதுக்கு என்ன வழி?
* Mr. Santosh என்பதை, அவர் விரும்பவது போல், திரு. சந்தோஷ் என்று எழுதலாம்!
* ஆனால், "எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று புழங்காமல்...."எனக்கு ரொம்ப மகிழ்ச்சி"-ன்னே புழங்கலாம்! :)
* தமிழால், தனி மனித உரிமை பாதிக்கிறது-ன்னு பேச்சும் எழாது!
* அதே சமயம், மொழிக்கு வளஞ் சேர்க்கும் தமிழ்ச் சொற்களும் தேய்ந்து போகாது!
6. இப்படியெல்லாம் மெனக்கெட்டு கிரந்தம் தவிர்க்கணுமா? ஏன்?
உம்ம்ம்ம்...இது நல்ல கேள்வி!
* க'ஷ்'டம்-ன்னு எழுதினாத் தான், நான் சந்தோசமா இருக்கேன்! "துன்பம்"-ன்னு எழுதறது ரொம்ப துன்பம்-ப்பா!:)
* க'ஷ்'டத்தில் இருக்கக் கூடிய ஒரு அதிர்வு, "துன்பத்தில்" இல்லை!
- இப்படியெல்லாம் சில இலக்கியவாதிகள் பேசக் கூடும்! பேசியும் உள்ளார்கள்! தமிழில் அர்ச்சனை பண்ணா "அதிர்வு" இல்லை-ன்னு சொல்றா மாதிரி தான் இதுவும்:)
தமிழுக்கு எப்போதுமே "நெகிழ்வுத் தன்மை" உண்டு!
தனி மனிதர்களின் பெயர்ச் சொற்களுக்குக் கொடுக்கப்படும் நெகிழ்வை, எல்லாவற்றுக்குமே தவறாப் பயன்படுத்த நினைச்சா எப்படி?
எப்படியோ கிரந்த எழுத்து உள்ளே வந்து விட்டது! முதலிலேயே இடம் குடுத்திருக்கக் கூடாது! குடுத்தாச்சு!........இடத்தைக் குடுத்தா மடத்தையும் புடுங்குவேன்-ன்னா எப்படி? :(
7. அதுக்காக கிரந்த எழுத்தை வெறுக்கணுமா? Is Grantham Untouchable?

Nopes! கிரந்தத்தை வெறுக்கச் சொல்லவில்லை! கிரந்தத்தை ஒழித்தால், நம்மளோட பாதி வரலாறு காணாமப் போயீரும்!
சரியோ/தவறோ...பழஞ் சுவடி, கல்வெட்டையெல்லாம் அரசர்கள் கிரந்தத்தில் எழுதி வச்சிட்டாங்க! அரசாங்கத்தை ஒட்டி வாழ்ந்த "அந்நாளைய படித்தவர்களின்" பின்புலம் அப்படி!
நாம், ஒருக்காலும் மரபியல் பதிவுகளை அழித்து விடக் கூடாது!
கல்வெட்டுப் படிப்புக்கு கிரந்தம் தேவை தான்! ஆனால் அவை துறை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே!
மற்ற தமிழர்கள், இயன்ற வரை, இயல்பான தமிழில் புழங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேணும்!
"கஷ்டம்" என்பதைக் "கடினம்"-ன்னு சொல்வதில் கடினம் இல்லை! கொஞ்சம் மெனக்கெடணும்! அவ்ளோ தான்!
"தஸ்தாவேஜ்"-ன்னு முன்பு எழுதினாங்க! ஆனா, இப்போ "ஆவணம்"-ன்னு எழுதினாத் தான் நமக்கே பிடிச்சிருக்கு, இல்லீயா?:)
நம் தலைமுறையில் மெனக்கெட்டால், அடுத்த தலைமுறையில் நல்ல தமிழ் பரவும்!
நம்மால் இயன்ற வரையில் மெனக்கெடுவோமே! ஒன்னும் கொறைஞ்சிப் போயீற மாட்டோம்!

8. Dai krs, எல்லாம் நல்லாத் தான் சொல்லுற! ஆனா அதே கேள்வியைத் தான் நான் திருப்பித் திருப்பிக் கேக்குறேன்! = ஏன் இப்படி மெனக்கெட்டு கிரந்தம் தவிர்க்கணும்? அதனால் தமிழுக்கு என்ன பெருசா நன்மை? ஆங்கிலம் எல்லாத்தையும் ஏத்துக்கிடுது-ல்ல? அதனால் தானே அதுக்குச் சிறப்பு?
உம்ம்ம்ம்...இதுக்குப் பதிலைச் சுருக்கமாச் சொல்லுறேன்!
Read more »
- இது பற்றி இணையத்தில் ஏற்கனவே பல தளங்களில் உரையாடல் நிகழ்ந்துள்ளது!
Unicode Consortium, கிரந்தத்தைத் தமிழ்ப் பலகையில் கொண்டாந்து கலந்தோ (அ) தமிழைப் புதிய கிரந்தப் பலகையில் கொண்டு போய் வைத்தோ...
இந்தக் குழப்படி பற்றி, படம் வரைந்து முன்பு விளக்கி இருந்தேன்! இராம.கி ஐயாவும் சிறப்புப் பதிவு இட்டிருந்தார்கள்!
ஆனால்.....இந்தப் பதிவு Unicode கிரந்தம் பற்றி அல்ல!
அதையும் தாண்டி....அடிப்படையிலேயே......
1. கிரந்தம் தமிழுக்குத் தேவை தானா?
2. கிரந்த எழுத்து பற்றிப் பல்வேறு தமிழர்களின் "Mood" என்ன?-என்று பார்க்கும் பதிவே இது!
ஏன் இப்படித் திடீர்ப் பதிவு-ன்னு பாக்குறீங்களா?
Twitter-இல், அப்பப்போ இது பத்திக்கும்! காரசாரம் தூள் பறக்கும்!
அண்ணன் @tbcd தலைமையில் தமிழ் ஆர்வலர் குழுவும், குழுவல்லாத சில ட்வீட்டர்களும், பிரிச்சி மேய்ஞ்சி பந்து வீசுவாங்க! IPL போட்டிகளை விட ஆர்வத்தைத் தூண்டும்!:)
அப்படித் தான் இன்னிக்கும் தூள் பறந்தது! சில பேருக்கு, அடிப்படையே தெரியாமல், தங்கள் மனசுக்குத் தோனுவதையே வைத்து உரையாடினார்கள்! பல டமால்-டுமீல் கேள்விகளும் எழுப்பப்பட்டன!
அத்தனை பேர் ஆதங்கத்தையும் ஒன்னாத் திரட்டி.....இதோ...கிரந்தம் FAQ! @twitter மக்களுக்கு நன்றி!
1. கிரந்தம் என்பது என்ன? அது வடமொழியா?
கிரந்தம் மொழி அல்ல! அது ஒரு எழுத்துரு (Notation) மட்டுமே!
வடமொழி ஓசைகளைத் தமிழில் எழுத உருவாக்கப்பட்ட ஒரு Notation!
கீழே படத்தைப் பாருங்க......கொஞ்சம் தமிழும் இருக்கும் ('யத') ! 'ஜ'-வும் இருக்கும்! புரியாத Round Round Jilebi-யும் இருக்கும் :)
அந்த அயல் ஓசைகளுக்குத் தமிழில் நேரடியான எழுத்து இல்லை...அதை எழுத ஒரு Lipi (எழுத்துரு) உருவாகியது! அது பல்லவர்கள் காலம்!
பின்பு வந்த சோழர்கள் - அந்த ஆட்சியின் பண்டிதர்களால் - அரசுமுறை, கல்வெட்டு என்று எல்லாவற்றிலும் கிரந்தம் கன்னாபின்னா-ன்னு பரவியும் விட்டது!
2. கிரந்த எழுத்தக்கள் எவை?
தமிழில் கலந்து விட்ட அடிப்படைக் கிரந்த எழுத்துக்கள்: ஜ, ஸ, ஷ, ஹ! கூடவே க்ஷ, ஸ்ரீ
ஆனா இவை ஆறு மட்டும் தான் கிரந்த எழுத்து-ன்னு நினைச்சிறாதீங்க!
மொத்தம் 16 உயிர் x 34 மெய் = 500+ எழுத்துரு உண்டு!
நல்ல வேளை, எல்லாமே தமிழ்ப் பலகையில் புகுந்து விடவில்லை!
எந்தச் சில ஓசைக்கு எழுத்து இல்லையோ, அவை மட்டுமே அடிப்படையாப் புகுந்தன!
வேறு சில ஓசை, ka, kha, ga, gha, na -ன்னு இந்தியில் வருமே, அவை எல்லாம் உள்ளாறப் புகவில்லை! வேதப் படிப்பு/கல்வெட்டோடு நின்று விட்டன:)
Gaந்தம்=வாசனை! kaந்தன்=முருகன்!
அது வேற "க", இது வேற "க"! ஓசைக்காக அதையும் தமிழில் புகுத்துவோம்-ன்னு, நல்ல வேளை, புகுத்தாம விட்டாங்க!
இல்லீன்னா க, ங, ச, ஞ-க்கு பதில், நாமளும் ka, kha, ga, gha, na-ன்னு படிச்சிருப்போம்!:))
Gaந்தம்=வாசனை! kaந்தன்=முருகன்-ன்னு சொன்னேன்-ல்ல? பொதுவா "க" என்பதே, இடத்துக்கு ஏற்றவாறு ஒலிக்க வல்ல Flexibility (நெகிழ்வு) தமிழில் உண்டு! ஆங்கிலத்துக்கும் இது பொருந்தும்!
யம்மாடியோவ்...தமிழ் எழுத்துக்கள் = 247-ன்னு மலைச்சிப் போகத் தேவையே இல்ல! மொத்தம் 31 எழுத்து தான் தமிழில்!
உயிர்=12, மெய்=18 & ஆய்தம்=1! மீதியெல்லாம் உயிர்-மெய் கலவை எழுத்துக்களே!
சரி, வரலாறு போதும்! அது நடந்து முடிந்த கதை! தொடங்கிய பிரச்சனைக்கு வாரும்!:)
3. கிரந்தம் கலந்து எழுதுவது = தப்பா? சரியா?
ஆதித் தமிழ்த் தந்தையான தொல்காப்பியரைப் பொறுத்த வரை = தப்பு!
"வடசொல் ஒரீஇ"-ன்னு தான் சொல்லுறாரு!
அவர் காலத்தில், பண்பாடு ரொம்பக் கலக்கவில்லை! இருந்தாலும் பக்கத்து ஊரு, அண்டை நாட்டு வாணிப முறையில், சில சொற்கள் அங்கும் இங்கும் புழங்கின! அந்தச் சொற்களைக் கையாள, அவர் வகுத்துக் குடுத்தது:
* தற்சமம்: கமலம் = அப்படியே எழுத முடிபவை
* தற்பவம்: பங்கயம் (பங்கஜம்) = தமிழுக்கு ஏற்றவாறு, மாற்றி எழுதுபவை

தொல்காப்பியம், இன்று கிடைக்கும் தமிழ் நூல்களிலேயே மிகப் பழமையானது!
தொல்காப்பியர் மாயோன், சேயோன் (திருமால், முருகன்) என்று இருவரையுமே தமிழ்க் கடவுளாத் தான் காட்டுறாரு! = ஆனா நாம ஒத்துப்போமா? நம்ம மனசுக்குப் எது பிடிச்சி இருக்கோ அதானே "வரலாற்று உண்மை"! :)
அட போப்பா, தொல்காப்பியர் சொன்னதெல்லாம் இன்னிக்கி செல்லாது-ன்னு சொல்லீருவோம்-ல்ல? :) அதே போல் தான், அவர் சொன்ன "வடசொல் ஒரீஇ" என்பதும் செல்லாமப் போயிருச்சோ? :(
4. கிரந்தம் இல்லாம, இலக்கியத் தமிழை எழுதவே முடியாதா?
முடியும்!
சங்கப் புலவர்கள் தொட்டு, வள்ளுவர், இளங்கோ, ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன்-ன்னு யாருமே கிரந்தம் பயன்படுத்தவில்லை!
பிராகிருத மொழி (சமஸ்கிருதம் அல்ல) விரவி வரும் சமண சமயம் கூட, அதன் தமிழ் இலக்கியத்தில் கிரந்தம் தவிர்த்து, தமிழையே தாங்கியது!
அவ்வளவு ஏன்? பின்பு வந்த எளிமையான பாரதியார் கவிதையில் கூட கிரந்தம் காண்பது கொஞ்சம் அரிது தான்! ஆனால்...ஆனால்...
இது ரொம்பச் சிக்கலான கேள்வி!
அதுவும்.........பல சமயங்கள், பல மொழிகள்-ன்னு கலந்து, "தமிழர்" என்னும் ஒரே குடையின் கீழ் வாழ்கிறார்கள்!
அவரவருக்குப் பேர்கள், ஊர்கள்-ன்னு அமைஞ்சிப் போச்சி! "Santosh" என்பதைச் "சந்தோசு"-ன்னு எழுதினால், அவர் கோவிச்சிப்பாரா-ன்னு தெரியாது!
என்னை "இரவிசங்கர்" என்று எழுதுவதையே நான் விரும்புகிறேன்! நண்பர்களிடமும் அப்படியே புழங்கச் சொல்கிறேன்! அவரவர்களே ஒத்துக்கிட்டா, அப்போ பிரச்சனையில்ல! ஆனால்.....
குஷ்பு-வுக்கு என்ன தான் வயசானாலும், கோயில் கட்டிய கொலவெறி ரசிகர்கள் இன்னும் இருக்காங்களே....குசுபு-ன்னு எழுதினா என்னைக் கொலை பண்ணவே வந்துருவாங்களோ? :))
இதுக்கு, என்ன தான் வழி?
ஆலயங்களில் தமிழை முன்னிறுத்திய இராமானு'ஜ'ர், தன்னை "இராமானுசன்" என்றே கையொப்பம் இட்டார்!
இலக்கியங்களிலும் அவரை "இராமானுசன்" என்றே குறித்து வைத்தார்கள்! இது அவரே விருப்பமுடன் செய்து கொண்டது!
ஆனாலும் எல்லாரும் இராமானுசர் ஆகி விட விரும்புவதில்லை! அதே சமயம் தமிழும் கலப்படம் இல்லாமல் இருக்கணும்! அதுக்கு என்ன வழி?
* Mr. Santosh என்பதை, அவர் விரும்பவது போல், திரு. சந்தோஷ் என்று எழுதலாம்!
* ஆனால், "எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று புழங்காமல்...."எனக்கு ரொம்ப மகிழ்ச்சி"-ன்னே புழங்கலாம்! :)
* தமிழால், தனி மனித உரிமை பாதிக்கிறது-ன்னு பேச்சும் எழாது!
* அதே சமயம், மொழிக்கு வளஞ் சேர்க்கும் தமிழ்ச் சொற்களும் தேய்ந்து போகாது!
6. இப்படியெல்லாம் மெனக்கெட்டு கிரந்தம் தவிர்க்கணுமா? ஏன்?
உம்ம்ம்ம்...இது நல்ல கேள்வி!
* க'ஷ்'டம்-ன்னு எழுதினாத் தான், நான் சந்தோசமா இருக்கேன்! "துன்பம்"-ன்னு எழுதறது ரொம்ப துன்பம்-ப்பா!:)
* க'ஷ்'டத்தில் இருக்கக் கூடிய ஒரு அதிர்வு, "துன்பத்தில்" இல்லை!
- இப்படியெல்லாம் சில இலக்கியவாதிகள் பேசக் கூடும்! பேசியும் உள்ளார்கள்! தமிழில் அர்ச்சனை பண்ணா "அதிர்வு" இல்லை-ன்னு சொல்றா மாதிரி தான் இதுவும்:)
தமிழுக்கு எப்போதுமே "நெகிழ்வுத் தன்மை" உண்டு!
தனி மனிதர்களின் பெயர்ச் சொற்களுக்குக் கொடுக்கப்படும் நெகிழ்வை, எல்லாவற்றுக்குமே தவறாப் பயன்படுத்த நினைச்சா எப்படி?
எப்படியோ கிரந்த எழுத்து உள்ளே வந்து விட்டது! முதலிலேயே இடம் குடுத்திருக்கக் கூடாது! குடுத்தாச்சு!........இடத்தைக் குடுத்தா மடத்தையும் புடுங்குவேன்-ன்னா எப்படி? :(
7. அதுக்காக கிரந்த எழுத்தை வெறுக்கணுமா? Is Grantham Untouchable?

Nopes! கிரந்தத்தை வெறுக்கச் சொல்லவில்லை! கிரந்தத்தை ஒழித்தால், நம்மளோட பாதி வரலாறு காணாமப் போயீரும்!
சரியோ/தவறோ...பழஞ் சுவடி, கல்வெட்டையெல்லாம் அரசர்கள் கிரந்தத்தில் எழுதி வச்சிட்டாங்க! அரசாங்கத்தை ஒட்டி வாழ்ந்த "அந்நாளைய படித்தவர்களின்" பின்புலம் அப்படி!
நாம், ஒருக்காலும் மரபியல் பதிவுகளை அழித்து விடக் கூடாது!
கல்வெட்டுப் படிப்புக்கு கிரந்தம் தேவை தான்! ஆனால் அவை துறை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே!
மற்ற தமிழர்கள், இயன்ற வரை, இயல்பான தமிழில் புழங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேணும்!
"கஷ்டம்" என்பதைக் "கடினம்"-ன்னு சொல்வதில் கடினம் இல்லை! கொஞ்சம் மெனக்கெடணும்! அவ்ளோ தான்!
"தஸ்தாவேஜ்"-ன்னு முன்பு எழுதினாங்க! ஆனா, இப்போ "ஆவணம்"-ன்னு எழுதினாத் தான் நமக்கே பிடிச்சிருக்கு, இல்லீயா?:)
நம் தலைமுறையில் மெனக்கெட்டால், அடுத்த தலைமுறையில் நல்ல தமிழ் பரவும்!
நம்மால் இயன்ற வரையில் மெனக்கெடுவோமே! ஒன்னும் கொறைஞ்சிப் போயீற மாட்டோம்!

8. Dai krs, எல்லாம் நல்லாத் தான் சொல்லுற! ஆனா அதே கேள்வியைத் தான் நான் திருப்பித் திருப்பிக் கேக்குறேன்! = ஏன் இப்படி மெனக்கெட்டு கிரந்தம் தவிர்க்கணும்? அதனால் தமிழுக்கு என்ன பெருசா நன்மை? ஆங்கிலம் எல்லாத்தையும் ஏத்துக்கிடுது-ல்ல? அதனால் தானே அதுக்குச் சிறப்பு?
உம்ம்ம்ம்...இதுக்குப் பதிலைச் சுருக்கமாச் சொல்லுறேன்!
மெனக்கெட்டு கிரந்தம் தவிர்ப்பதால் வரும் பயன் என்ன?-ன்னு நம்ம @nchokkan சரியான நேரத்தில் கேள்வி கேட்டு, என் சிந்தனையைத் தூண்டி விட்டார்! அவருக்கு நன்றி!
a) ஆங்கிலம் எல்லாத்தையும் ஏத்துக்கிடுது-ல்ல?
ஆங்கிலம் எல்லாமும் ஏற்றுக் கொள்வதில்லை!
Alphabets are now 26! You cannot change that! It only accepts punctuation, diacritical marks etc.......to spell French Names and similar stuff!
α,β,γ are all notations in Scientific English! But they dont become English Alphabets!
Even in Scientific Tamizh medium, we use only angles=α,β,γ Not angles=க,ங,ச!:)
மற்றபடி ஆங்கிலத்தின் Universal Acceptability, அந்நாட்டின் அரசியல் பரவலால் தானே தவிர, மொழித் தன்மையால் அல்ல! இது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்!
'உற்றார்' என்று ஒலிக்கும் 'ற்று' ஓசை ஆங்கிலத்தில் இல்லை! அதுக்காக ஒரு புது எழுத்தைப் புகுத்தி விடுவார்களா?
They write uppercase "R" for ற்று!
They only "adapt".....NOT "adopt"! - Gotcha?
b) வடமொழித் தாக்கம் எல்லா இந்திய மொழிகளிலும் உண்டு! தமிழால் தனித்து இயங்க இயலுமா?
இயலும்! இயலும்! இயலும்!
தமிழில் வடமொழித் தாக்கம் போல், வடமொழியிலே தமிழ்த் தாக்கமும் உண்டே! அதை ஏன் யாரும் பேசுவதில்லை?
பண்டைத் தமிழ்க் கடவுள்களான மாயோன்(திருமால்), சேயோன்(முருகன்) அல்லவா, அங்கு விஷ்ணு/ஸ்கந்தன்-ன்னு ஆனார்கள்?
பூவை-நிலை என்னும் திணை/துறை, அங்கு போய் பூ'ஜை' ஆகவில்லையா? அது வரை அங்கே பலி குடுத்த யாகம் தானே?
கொடுக்கல்-வாங்கல்.....எல்லா மொழிகளிலும் உண்டு!
தொல்காப்பியரும் ஒதுக்கவில்லை! தற்சமம்/தற்பவம்-ன்னு அவரு குடுத்த Flexibility-யை முன்பே பார்த்தோம் அல்லவா!
ஆனால் Fundamental-யே கொடுக்கல்-வாங்கல் பண்ண முடியாது! அது மொழி என்னும் தனித்த அடையாளத்துக்கே கேடு!
c) மொழி வெறும் கருவி தானே? அதுக்கு எதுக்கு இம்புட்டு.......?
மொழி கருவி தான்! ஆனால் கருவி மட்டுமே அல்ல! அதையும் தாண்டி...
* இனத்தின் அடையாளம்,
* பண்பாட்டின் அடையாளம்,
* பெரும் தொன்மத்தின் அடையாளம்!
Children are NOT born "for" you! Children are just born "through" you!-ன்னு பேசலாம்! உண்மையும் கூட!
ஆனா.....அம்மா-அப்பா உறவு just natural convenience, அவிங்க வெறும் கருவி தானே, விட்டுத் தள்ளுறா-ன்னு ஒருத்தன் சொன்னா, அவனை நாம என்ன செய்வோம்?
அம்மா-அப்பா, நம் வேர்களின் அடையாளம்! மொழியும் அப்படியே!
அண்டை வீட்டாரிடம் அன்பாப் பழகலாம்! ஆனால் அங்கு போய் புதுப் பெண்டாட்டியுடன் படுக்க முடியாது!
இல்ல, எனக்கு அங்கே படுத்தால் தான் நல்லா இருக்கு, அதிர்வா இருக்கு-ன்னு சொன்னா? :((
"சந்தோஷம்" என்பதில் உள்ள அதிர்வு, "மகிழ்ச்சியில்" இல்லை-ன்னு நாமளே சொன்னா? = குடும்பம் என்னும் இல்லம் சிதைந்து போகும்! நம் இல்லறமே நமக்கு நல்லறம்!
d) தவிர்த்து எழுதுவதால் தமிழுக்கு என்ன நன்மை?
கிரந்தச் சொற்களின் புழக்கம், தெரிந்தோ தெரியாமலோ, ஆதிக்க சாதி அரசியல் மூலமாகப் பெருத்து விட்டது! அதை இப்போது பேசிப் பயனில்லை!
ஆனால் தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய் விடக் கூடாது! மொழியில் உள்ள சொற்கள் எல்லாம் வழக்கொழிந்து போனால், தொன்மமும் சேர்ந்தே தொலைந்து போகும்!
a) ஆங்கிலம் எல்லாத்தையும் ஏத்துக்கிடுது-ல்ல?
ஆங்கிலம் எல்லாமும் ஏற்றுக் கொள்வதில்லை!
Alphabets are now 26! You cannot change that! It only accepts punctuation, diacritical marks etc.......to spell French Names and similar stuff!
α,β,γ are all notations in Scientific English! But they dont become English Alphabets!
Even in Scientific Tamizh medium, we use only angles=α,β,γ Not angles=க,ங,ச!:)
மற்றபடி ஆங்கிலத்தின் Universal Acceptability, அந்நாட்டின் அரசியல் பரவலால் தானே தவிர, மொழித் தன்மையால் அல்ல! இது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்!
'உற்றார்' என்று ஒலிக்கும் 'ற்று' ஓசை ஆங்கிலத்தில் இல்லை! அதுக்காக ஒரு புது எழுத்தைப் புகுத்தி விடுவார்களா?
They write uppercase "R" for ற்று!
They only "adapt".....NOT "adopt"! - Gotcha?
b) வடமொழித் தாக்கம் எல்லா இந்திய மொழிகளிலும் உண்டு! தமிழால் தனித்து இயங்க இயலுமா?
இயலும்! இயலும்! இயலும்!
தமிழில் வடமொழித் தாக்கம் போல், வடமொழியிலே தமிழ்த் தாக்கமும் உண்டே! அதை ஏன் யாரும் பேசுவதில்லை?
பண்டைத் தமிழ்க் கடவுள்களான மாயோன்(திருமால்), சேயோன்(முருகன்) அல்லவா, அங்கு விஷ்ணு/ஸ்கந்தன்-ன்னு ஆனார்கள்?
பூவை-நிலை என்னும் திணை/துறை, அங்கு போய் பூ'ஜை' ஆகவில்லையா? அது வரை அங்கே பலி குடுத்த யாகம் தானே?
கொடுக்கல்-வாங்கல்.....எல்லா மொழிகளிலும் உண்டு!
தொல்காப்பியரும் ஒதுக்கவில்லை! தற்சமம்/தற்பவம்-ன்னு அவரு குடுத்த Flexibility-யை முன்பே பார்த்தோம் அல்லவா!
ஆனால் Fundamental-யே கொடுக்கல்-வாங்கல் பண்ண முடியாது! அது மொழி என்னும் தனித்த அடையாளத்துக்கே கேடு!
c) மொழி வெறும் கருவி தானே? அதுக்கு எதுக்கு இம்புட்டு.......?
மொழி கருவி தான்! ஆனால் கருவி மட்டுமே அல்ல! அதையும் தாண்டி...
* இனத்தின் அடையாளம்,
* பண்பாட்டின் அடையாளம்,
* பெரும் தொன்மத்தின் அடையாளம்!
Children are NOT born "for" you! Children are just born "through" you!-ன்னு பேசலாம்! உண்மையும் கூட!
ஆனா.....அம்மா-அப்பா உறவு just natural convenience, அவிங்க வெறும் கருவி தானே, விட்டுத் தள்ளுறா-ன்னு ஒருத்தன் சொன்னா, அவனை நாம என்ன செய்வோம்?
அம்மா-அப்பா, நம் வேர்களின் அடையாளம்! மொழியும் அப்படியே!

இல்ல, எனக்கு அங்கே படுத்தால் தான் நல்லா இருக்கு, அதிர்வா இருக்கு-ன்னு சொன்னா? :((
"சந்தோஷம்" என்பதில் உள்ள அதிர்வு, "மகிழ்ச்சியில்" இல்லை-ன்னு நாமளே சொன்னா? = குடும்பம் என்னும் இல்லம் சிதைந்து போகும்! நம் இல்லறமே நமக்கு நல்லறம்!
d) தவிர்த்து எழுதுவதால் தமிழுக்கு என்ன நன்மை?
கிரந்தச் சொற்களின் புழக்கம், தெரிந்தோ தெரியாமலோ, ஆதிக்க சாதி அரசியல் மூலமாகப் பெருத்து விட்டது! அதை இப்போது பேசிப் பயனில்லை!
ஆனால் தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய் விடக் கூடாது! மொழியில் உள்ள சொற்கள் எல்லாம் வழக்கொழிந்து போனால், தொன்மமும் சேர்ந்தே தொலைந்து போகும்!
* பல தமிழ்ச் சொற்கள் இப்படிச் செத்து விட்டன!
ஒருபுடை உருவகம்= ஏகதேச உருவகம்,ரேழி=வெராண்டா, பாழ்=பூஜ்ஜியம், சோறு=சாதம், சாளரம்=ஜன்னல், இதழ்=பத்திரிகை, பொருள்=அர்த்தம்....
ஒருபுடை உருவகம்= ஏகதேச உருவகம்,ரேழி=வெராண்டா, பாழ்=பூஜ்ஜியம், சோறு=சாதம், சாளரம்=ஜன்னல், இதழ்=பத்திரிகை, பொருள்=அர்த்தம்....
* இன்னும் பல தமிழ்ச் சொற்கள் செத்துக் கொண்டே இருக்கின்றன! பண்பாடு=கலாச்சாரம்! முகவரி=விலாசம்! காட்டு=உதாரணம்
எவனும் தமிழ்ப் பண்பாடு-ன்னு சொல்லுறது இல்ல! தமிழ்க் "கலாச்சாரமாம்"! அந்த அளவுக்கு கலப்படம் செய்து விட்டார்கள்!
பாடநூல்களிலேயே, "ஏக-தேச" உருவகம்-ன்னு தான் இருக்கு! ஏக்-தோ-தீன் உருவகம்-ன்னு மாத்தாம இருந்தாச் சரி!:(
இப்படி ஒவ்வொரு எழுத்தாய், சொல்லாய், பொருளாய் விட்டுக் கொண்டே இருந்தால்...
கடைசியில் துளு, செளராட்டிர மொழிகளுக்கு ஆன கதி தான், தமிழுக்கும் நேரும்!
இப்படி ஒவ்வொரு எழுத்தாய், சொல்லாய், பொருளாய் விட்டுக் கொண்டே இருந்தால்...
கடைசியில் துளு, செளராட்டிர மொழிகளுக்கு ஆன கதி தான், தமிழுக்கும் நேரும்!
அதனால் தான்.....கிரந்தக் கலப்பால், ஒவ்வொரு தமிழ்ச் சொல்லாக் காணாமல் போவதைத் தவிர்ப்போம்-ன்னு உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறது! மற்றபடி இதுல அரசியல் ஒன்னுமில்லை!
தமிழ்ச் சொற்கள் செத்துருக் கூடாது = அதான் இந்த முயற்சியில் கிடைக்கும் "நன்மை"!
நல்ல வேளை, நம் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் தொன்மத்துக்கும், பண்பாட்டுக்கும் அரணாய் இருக்கின்றன!
நாமும் ஆற்றின் கரையை அப்பப்போ வலுப்படுத்துவோம்! ஆற்றிலே மணலை அள்ளி அல்ல! :(

முடிப்பாக.....
தமிழுக்கு எப்போதும் நெகிழ்வுத் தன்மை உண்டு!
பெயர்ச் சொற்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம் (இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே)! - ஏன்னா அவை தமிழ் மொழிக்கு வளஞ் சேர்க்கும் சொற்கள் அல்ல!
ஆனால்...
இந்த விலக்கு தனி நபருக்கும், சில நிறுவனக் குறியீடுகளுக்கும் மட்டுமே!
ஸ்ரீரங்கம் என்ற இடத்தின் பெயரை, திருவரங்கம் என்று புழங்கலே அழகு! அவனையே எண்ணி வாழ்ந்த ஆழ்வார்கள் எங்காவது ஸ்ரீரங்கம்-ன்னு பாடி இருக்காங்களா?.........தேடினாலும் கிடைக்காது!
"ஆவியே அமுதே, திருவரங்கத்து அரவணைப் பள்ளியானே"-ன்னு தான் இருக்கும்! ஆவியே அமுதே, ஸ்ரீரங்க ஸ்ரீவத்ஸ ஸ்ரீநிவாஸா -ன்னு இருக்காது :)
* Mr. Gnana Skandan என்ற நண்பரை, ஞானக் கந்தன் என்று நான் அழைக்க முயல்கிறேன்! ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை! என்ன செய்ய?
= அவர் பெயருக்கு நான் கட்டாயம் மதிப்பளிப்பேன்! I want to respect his name! ஞானஸ்கந்தன் என்றே அழைப்பேன்!
* அதே சமயம், இராமானுசன் என்று தானே விரும்பி எழுதுபவரை, எழுந்து நின்று, கரம் கூப்பி, வரவேற்பேன்!
மற்றபடி, பெயர்ச் சொல் அல்லாத பலப்பல கிரந்தச் சொற்கள்
- தஸ்தாவேஜ், கஷ்டம், சந்தோஷம்
இவற்றையெல்லாம்
- ஆவணம், கடினம், மகிழ்ச்சி
-ன்னு ஒலிக்கப் பழகிக் கொள்வதில் தவறே இல்லை!
கொஞ்சம் ஈடுபாடு தான் தேவை!.....நான் ஈடுபடப் போகிறேன்! நீங்கள்???
யானே தவமுடையேன்!
யானே தமிழ்ச் சொல்லால் சொன்னேன்!
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!!! (ஆழ்வார் பாசுரம்)
நல்ல வேளை, நம் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் தொன்மத்துக்கும், பண்பாட்டுக்கும் அரணாய் இருக்கின்றன!
நாமும் ஆற்றின் கரையை அப்பப்போ வலுப்படுத்துவோம்! ஆற்றிலே மணலை அள்ளி அல்ல! :(

முடிப்பாக.....
தமிழுக்கு எப்போதும் நெகிழ்வுத் தன்மை உண்டு!
பெயர்ச் சொற்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம் (இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே)! - ஏன்னா அவை தமிழ் மொழிக்கு வளஞ் சேர்க்கும் சொற்கள் அல்ல!
ஆனால்...
இந்த விலக்கு தனி நபருக்கும், சில நிறுவனக் குறியீடுகளுக்கும் மட்டுமே!
ஸ்ரீரங்கம் என்ற இடத்தின் பெயரை, திருவரங்கம் என்று புழங்கலே அழகு! அவனையே எண்ணி வாழ்ந்த ஆழ்வார்கள் எங்காவது ஸ்ரீரங்கம்-ன்னு பாடி இருக்காங்களா?.........தேடினாலும் கிடைக்காது!
"ஆவியே அமுதே, திருவரங்கத்து அரவணைப் பள்ளியானே"-ன்னு தான் இருக்கும்! ஆவியே அமுதே, ஸ்ரீரங்க ஸ்ரீவத்ஸ ஸ்ரீநிவாஸா -ன்னு இருக்காது :)
* Mr. Gnana Skandan என்ற நண்பரை, ஞானக் கந்தன் என்று நான் அழைக்க முயல்கிறேன்! ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை! என்ன செய்ய?
= அவர் பெயருக்கு நான் கட்டாயம் மதிப்பளிப்பேன்! I want to respect his name! ஞானஸ்கந்தன் என்றே அழைப்பேன்!
* அதே சமயம், இராமானுசன் என்று தானே விரும்பி எழுதுபவரை, எழுந்து நின்று, கரம் கூப்பி, வரவேற்பேன்!
மற்றபடி, பெயர்ச் சொல் அல்லாத பலப்பல கிரந்தச் சொற்கள்
- தஸ்தாவேஜ், கஷ்டம், சந்தோஷம்
இவற்றையெல்லாம்
- ஆவணம், கடினம், மகிழ்ச்சி
-ன்னு ஒலிக்கப் பழகிக் கொள்வதில் தவறே இல்லை!
கொஞ்சம் ஈடுபாடு தான் தேவை!.....நான் ஈடுபடப் போகிறேன்! நீங்கள்???
யானே தவமுடையேன்!
யானே தமிழ்ச் சொல்லால் சொன்னேன்!
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!!! (ஆழ்வார் பாசுரம்)