Showing posts with label கீதை. Show all posts
Showing posts with label கீதை. Show all posts

Sunday, March 22, 2009

பக்தி For Dummies - Part 3!

"I am Unfit"-இதைப் பத்தி இந்தப் பதிவில் கட்டாயம் பாத்துறலாம்! சஸ்பென்ஸ் போதும்! மக்கள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! :) சென்ற பதிவு இங்கே!

"எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கிட்டா, இன்னிக்கே மோட்சம்!" என்று "விளையாட்டாகவும்", "சீரியசாகவும்" சென்ற பதிவுகளில் சொல்லி இருந்தேன்!

அறிவினால் மட்டுமே இறைவனை அளந்துற முடியுமா?
"அறிவே தெய்வம்"-ன்னு வேணும்னா சில பேரு சொல்லிக்கலாம்! அதுக்கு பாரதியார் பாட்டு வேற இருக்கு! ஆனால் ஒருக்காலும் அறிவு தெய்வம் ஆகி விடாது! (டிஸ்கி: நம்ம சக பதிவர் பெயரைச் சொல்லலீங்கோ) "அறிவே தெய்வம் இல்லை" என்கிற அறிவே தெய்வம்! :)


பெற்றோர்கள் சொல்லித் தானே, நாம் அவர்களின் பிள்ளை என்றே நமக்குத் தெரிகிறது?
தினம் தினம் அம்மா-அப்பாவை ஆயிரம் கேள்வி கேக்குறோமே? ஆனால் "அந்தக்" கேள்வியைக் கேட்போமா? :) அதே போலத் தான் இறைவனும்!

நாம் இன்னாருக்குத் தான் பிறந்தோம் என்று நம்மில் எத்தனை பேர் "உறுதியாகச்" சொல்ல முடியும்? ஒவ்வொருவரும் பயாலாஜிக்கல் எவிடென்ஸ் கேட்டுக் கொண்டும், காட்டிக் கொண்டும் இருக்க முடியுமா? இப்படி, நம்மையே நாம் 100% அறியாத போது, நாம எப்படி இறைவனை 100% அறிய முடியும்? :)

அட, டெக்னாலஜி ரொம்ப முன்னேறிப் போச்சு, உலகம் ரொம்ப பின்னேறிப் போச்சுப்பா! யாரை நம்பறதுன்னே தெரியலை! அதுனால பள்ளியில் சேர்க்கும் முன்போ, கல்யாணத்துக்கு முன்போ, எல்லாரும் Genetic Test என்னும் மரபியல் சோதனை செஞ்சிக்கிட்டு அவங்கவங்க பெற்றோரை "உறுதிப்படுத்திக்கணும்"-ன்னு சட்டமா கொண்டாற முடியும்? :) அதே போலத் தான் இறைவனை "உறுதிப்படுத்திக்" கொள்வதும்!

அரியவனை - அரி அவனை, அறிவினால் "மட்டுமே" உறுதிப் படுத்த முடியாது!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!


சிறு வயதில் இருந்தே, இவங்க தான் உண்மையான அம்மா-அப்பா என்று எப்படி ஏற்றுக் கொள்கிறோம்? சினிமாவில் வேண்டுமானால், கர்ணன் போல கைவிட்ட குழந்தை, தத்து கொடுத்த குழந்தை-ன்னு க்ளைமாக்ஸில் கொஞ்சம் சூடு பிடிக்கும்!
* திடீர் என்று ஒரு நாள், "உண்மை" தெரிய வந்தாலும், "உண்மை இல்லாத" அம்மா அப்பாவை உதற முடிவதில்லையே! - ஏன்?
* தத்துக் குழப்பம் இல்லாத நிஜமான பெற்றோரைக் கூட, இவங்க தான் அம்மா-அப்பா என்று "உறுதிப்படுத்திக்" கொள்ளாமலேயே உறுதிப்படுத்திக் கொள்கிறோமே? - எப்படி?

அறிவே தெய்வம் இல்லீங்க! அன்பே தெய்வம்!
Knowledge is God என்று யாரும் சொல்லலை! Love is God-என்று தான் மேலை நாட்டவனும் சொன்னான்! இந்தப் பலன் கருதா அன்பினால் தானே அம்மா-அப்பா என்று "உறுதிப்படுத்திக்" கொள்கிறோம்? இல்லை அறிவினாலா? நீங்களே சொல்லுங்க!


ஆக, ஞான விசாரணையால் இறைவனை "உறுதிப்படுத்த" முடியாது!
கர்ம சாதனையால் இறைவனை "உறுதிப்படுத்த" முடியாது!


* கர்ம யோகம் = சடங்கு, மந்திர ஜபம், தந்திர பூஜை, "விதிச்சதைப் பண்ணுறது" ...
* தியான யோகம் = யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், சமாதி...
* ஞான யோகம் = சாதகம், சத்-சம்பத்து, விவேகம், வைராக்கியம், ஜீவன் முக்தி...
என்றெல்லாம் விதம் விதமா அடுக்கிட்டு போகலாம்!

ஆனால் அத்தனையும் "சம்சார துக்க நிவர்த்தி" என்ற ஒரு பொருளின் மேல் கண் வைச்சு தான் பின்னியிருக்கு! அதிலும் "சுயநலம்" உண்டு!
பற்று அறுத்துட்டேன், பற்று கொஞ்சம் கொஞ்சமா போயிரிச்சி-ன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இருக்குற பற்றெல்லாம் அங்க தான் இருக்கு! :))

சென்ற பதிவில் ஹோமம், சம்ஸ்காரம்-ன்னு கர்மா பண்ணுறதை ரொம்ப கிண்டல் அடிச்சிட்டேன்-ன்னு சில நண்பர்கள் தனிமையில் குறைபட்டுக் கொண்டார்கள்!
ஒரு அனானி அன்பர் கேட்கவே கேட்டுட்டாரு! தியான யோகம், ஞான யோகம், 5 Watts Bulb-ன்னு சொன்னது மட்டும் சிரிப்பா இருந்துச்சாம்! ஆனால் கர்ம யோகம் பற்றி மட்டும் தவிர்த்து இருக்கலாமே என்று கேட்டு இருந்தார்! :)

அந்த உரையாடல் அடியேன் சொன்னது இல்லீங்க!
கர்மவாதிகள் உட்பட இன்னிக்கி பலரும் போற்றும் பரனூர் அண்ணா (என்னும்) கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் சொன்னதைத் தான் பதிவில் கொடுத்து இருந்தேன்!
என்னிடம் வழக்கமாக கோபித்துக் கொள்ளும் சில அனுட்டான சீலர்கள், இப்போ பரனூர் அண்ணா கிட்டே போய் கோபித்துக் கொள்ள முடியுமா? :))

மக்களே...யாரையும் குற்றம் சொல்லணும்-ன்னு அடியேன் நோக்கம் அன்று!
கர்மப் பிடிப்பில் கெட்டியாக ஒட்டிக் கொண்டால் ஆத்ம சாஷாத்காரம் தான் தளும்பும்!
பரமாத்ம சாஷாத்காரம் வராது! உள்ளத்தில் பகவத் கருணை ஊறாது என்பதற்காகத் தான் அத்தனை விளக்கங்களும்!
அது உங்களுக்குக் கோபம் ஏற்படுத்தி இருந்தால், வீழ்ந்தெழுந்து கொள்கிறேன்! அடியேனை மன்னிப்பீர்களாக!



சொல்லப் போனால்...நீங்க கிருஷ்ண பரமாத்மாவைத் தான் மன்னிக்கணும்! :)

நானாச்சும் ஏதோ லைட்டாச் சொல்லிட்டுப் போயிட்டேன்! ஆனா அவர் சும்மா பிச்சிப் பிச்சி வாங்குறாரு இந்த ஸோ கால்டு ஆச்சாரத்தை!
சிலர் தனக்குச் சாதகமாகக் காட்டும் அதே பகவத் கீதையில் தான் இதுவும் இருக்கு! :))

யாம் இமாம், புஷ்பிதாம் வாசம், ப்ரவதந்தி அவிபாஸ்சித:
வேத வேத ரதா: பார்த்தா, நான்யத் அஸ்திதி வாதினா 2:42

வேதம் விதிச்சபடி நடக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், அலங்கார புஷ்பம் போல வெறும் கோஷம் தான் இடுவார்கள்! தங்களுக்குப் பிடித்தமான வேத வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, சுயநலமாகக் கையாளுவார்கள்!

காமாத்மனா, சொர்க்க பரா, ஜன்ம-கர்மா-பலப்ரதாம்
க்ரியா விசேஷ பகுலாம், போக ஐஸ்வர்ய, கதிம் ப்ரதி! 2:43

சொர்க்கம், கர்மா, இஷ்டி, ஹோமம்-ன்னு, உலகாயுதமாக, விதம் விதமான சடங்குகளையும் கர்மாக்களையும் செய்து கொண்டு, வீணே காலம் கழிப்பார்கள்!

(அதாச்சும் வேத சாகைகளில் உள்ள கர்ம காண்டங்களிலேயே உட்கார்ந்து கொள்வார்கள்! சடங்கு தாண்டி, அடுத்து, ஞான காண்டத்துக்கு, "பகவானே எல்லாம்" என்று வரவே மாட்டார்கள்! பேச மட்டும் செய்வார்கள்! ஆனால் நடைமுறைப் படுத்த மாட்டார்கள்!)

ந வேத! யக்ஞ தியாய-னைர், ந தனைர், ந ச க்ரியா-பிர்!
ந தபோ-பிர் உக்ரை! ஏவம் ரூப சாக்ய அகம்! 11:48

வேதப் படிப்பாலேயோ, யாக ஹோமங்களாலேயோ,
தட்சிணை மற்றும் கிரியைகளாலோ, தன்னலமான தான தவங்களாலோ,
என்னைக் காண முடியாது! அடைய முடியாது!
(ஏக பக்திர் விசிஷ்யதே என்னும் "ஏக பக்தி" கொண்ட உன்னால்(பக்தனால்) மட்டுமே காண முடியும்!)

உடன் பிறவா சகோதரிகள், உடன் பிறந்த அரசியல்வாதிகள்...எத்தனையோ பூஜை, ஹோமம்-ன்னு விதம் விதமாப் பண்ணுறாங்களே! "விதிச்சபடி" ஆஹூதி எல்லாம் சூப்பராக் கொடுக்கறாங்க தானே? ஆனால்.....

* ஹோமம் செய்பவர்களுக்கும் தெரியும் = ஆசாமிகள் பகவானை அண்ட முடியாது-ன்னு!
* ஹோமம் செய்து வைப்பவர்களுக்கும் தெரியும் = ஆசாமிகள் பகவானை அண்ட முடியாது-ன்னு!
இருந்தாலும் மாங்கு மாங்கு-னு செஞ்சிக்கிட்டு தான் இருப்பாய்ங்க! :))

ஆக, இந்தக் கீதையின் சுலோகங்களில் இருந்து தெரிகிறது அல்லவா?
* ஞான-கர்ம யோகங்கள் தன்னை மட்டுமே உணர்த்தும்! இறைவனை உணர்த்தாது!
* பக்தி யோகம் என்னும் இறை அன்பே பகவானை உணர்த்தும்! அதுவே "உண்மையான" கீதா சாரம்!


இப்போ "லாயக்கில்லை", "Unfit'-க்கு வருவோம்! :)

* ஞான காண்டம் அத்தனையும் எப்போ படிச்சி, கர்ம காண்டம் அத்தனையும் எப்போ பண்ணி, நீ எப்பப்பா மலையேறது?
* நம் பிறப்பையே நாம் 100% அறியாத போது, இதை எல்லாம் படிச்சா அறியப் போகிறோம்?
* அப்படியே அறிஞ்சாலும், அதையெல்லாம் 100% பண்ணவா போகிறோம்? நம்மைப் பத்தி நமக்குத் தெரியாதா? பேச்செல்லாம் பதிவில் தானே? :) பேசும் போது நல்லா இலக்கணமாப் பேசீருவோம்! பாட்டெழுதும் போது கரெக்ட்டா கோட்டை விட்டுற மாட்டோமா என்ன? :))

அதனால் தான்.....
நான் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை! I am Unfit - என்று "சொல்லிச் சொல்லி"ச் சரணாகதி செய்கிறார் மாறன் என்னும் நம்மாழ்வார்! அவரே இப்படிச் சொன்னா, நாம எல்லாம்? :))

* நோற்ற நோன்பிலேன் = கர்ம யோகம் இல்லேன்!
* நுண்ணறிவு ஒன்றிலேன் = ஞான யோகம் இல்லேன்!
* ஒன்றும் ஆற்ற கின்றிலேன் = தியான யோகம் இல்லேன்!

தெரியேன் பாவியனாய், பல தீமைகள் செய்து விட்டேன்!
பெரியேன் ஆயின பின், பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!


இப்படி ஒன்றுக்கும் லாயக்கில்லா நான்...
* அகலகில்லேன் = உன்னை அகல மாட்டேன்!
* புகல் ஒன்று இல்லா அடியேன் = போக்கிடம் வேறொன்று இல்லை!

ஞான-கர்ம-தியான யோகம்-ன்னு ஒரு யோகமும் இல்லை!
அகல மாட்டேன் என்ற அன்பு யோகம் மட்டும் தான் இருக்கு!

* எனக்கு வேற போக்கு கிடையாது! = எனக்கு நீ, உனக்கு நான்!
* உன் தன்னோடு+உறவேல்+நமக்கு = அ+உ+ம் = ஓம்! இங்கு ஒழிக்க ஒழியாது!

புகல் ஒன்று இல்லா அடியேன்...உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே! = இதுவே பரிபூர்ண சரணாகதி!
இனி வரும் பதிவுகளில் கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு, இது சாத்தியாமா-ன்னு பார்ப்போம்!


லைட்டாப் புரிஞ்சி இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! அட, ஒன்னுத்துக்கும் லாயக்கில்லா எனக்கே புரியுது! உங்களுக்குப் புரியாதா? இன்னொரு தபா பதிவை வாசிச்சா போச்சு! :)

டேய் கேஆரேஸ்ஸ்...வார்த்தை ஜாலமாப் பேசிட்டாப் போறுமா? ஆழ்வார் பாட்டில் இருந்து எடுத்துக் காட்டி, ஞான-கர்ம யோகம் எல்லாம் இல்லைன்னு சொல்லிட்டாப் போறுமா?
எங்களுக்கு வேதங்கள் தான் அடிப்படை! வேதாந்தம் தான் அடிப்படை!
ஏதோ லாயக்கு இல்லை, Unfit, இன்னிக்கே மோட்சம்-ன்னு "அ-வைதீகமாப்" பேசுகிறாயே! இதுக்கெல்லாம் ஒரு சுலோகத்தையாச்சும் உன்னால் காட்ட முடியுமா? :)

ந தர்ம நிஷ்டோஸ்மி = நியம நிஷ்டை இல்லை!
நச் ஆத்ம வேதி = வேத வழியில் ஆத்ம ஞானம் இல்லை!
ந பக்திமானு = பெருசா நான் பக்திமானும் இல்லை!
த்வத் சரணார விந்தே = ஆனால் "அன்பினால்" சரணார விந்தம், திருவடிகளைப் பற்றிக் கொண்டேன்!

அகிஞ்சனக: = எனக்கு வேறு கைம்முதல் இல்லை!
அனன்ய கதி: = எனக்கு வேறு கதியும் இல்லை!

எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு புரிந்து கொண்ட நம் ஆழ்வாருக்கு மோட்சம் என்றால்.....அப்படியே புரிந்து கொள்ளும் நமக்கும் இன்னிக்கே மோட்சம்! :))


பொதுவாக வேதங்கள் தான் ஞான பரமானவை! ஞானம் கொடுக்கும்! பேத ஸ்ருதி, அபேத ஸ்ருதி-ன்னு புத்திக்குத் தீனி போடுவது போல் பேசும்!
இந்த ஆழ்வார்-நாயன்மார்களின் பாசுரம் எல்லாம் ஒரே "பாவமா"-ன்னா இருக்கு? "ஞானமா" இதுல ஒன்னும் இல்லையே!

ஆழ்வார் அழுவறாரு! தூது விடறாரு! காதல் அது இது-ன்னு "லோக பரமா"-ல்ல பேசுறாரு? இதுல பெருசா தத்துவம் இல்லேயேப்பா!
சரி, போனாப் போவுது, இதுவும் இருக்கட்டும்! நம்ம பகவானை அவங்களும் பாடிட்டாங்க! வேற வழியில்ல!

* ஆரம்ப நிலை = ஆழ்வார்/நாயன்மார்கள்!
* இறுதி நிலை = வேதம்-ன்னு இருக்கட்டும்!
"மூட" பக்தியில் ஆரம்பிச்சி...படிப்படியா ஞானம், கர்மா-ன்னு முன்னேறி வரட்டும் = இப்படிச் சொல்பவர்களைப் போல பேதைகள் வேற யாருமே இருக்க முடியாது!

வேதாந்த தேசிகர் = பெரிய மகான்! சகல வேத சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்! தமிழில் நூல்கள் சில எழுதி இருந்தாலும், வடமொழியில் பெரும் பெரும் வித்தகர்! சுலோகம்-ன்னாலே ஆயிரம் ஆயிரமாகத் தான் வந்து விழும் இவருக்கு!

இன்னிக்கி ஆச்சாரம் பேசும் பல பேர், இவரைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவார்கள்! வடமொழியில் பல பனுவல்கள் செய்து விட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக, இவரையும் நியம நிஷ்டை என்னும் வளையத்துக்குள்ளே அடைத்து வைத்து விட்டார்கள்! :(

ஆனால் இவரைப் போல உள்ளம் கனிந்த அன்பரைக் காண முடியாது! அப்பேர்ப்பட்ட வேத வித்து!
அவருக்கே வேத வேதாந்தம் படித்து மிஞ்சியது என்னவாம்? = குழப்பம் தான் மிஞ்சியதாம்! ஹா ஹா ஹா! நான் சொல்லலைங்க! அவரே சொல்கிறார்!
"செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!"


தெளியாத மறை நிலம் = வேதம்! தெளிவே ஏற்படவில்லையாம்!
அப்புறம் ஆழ்வார்களின் ஈரப் பாசுரங்களை, ஈரமாகவே வாசித்த போது தான், "ஆகா...அதுக்குப் பொருள் இதுவா?" - என்ற தெளிவே ஏற்பட்டுச்சாம்!
இப்படிச் சொன்னதற்காக "வேதத்தைக் குறைச்சிப் பேசிட்டாரு", "வேத மாதாவை மதிக்கலை" என்று அவரைத் தள்ளியா வைக்கிறோம்? இல்லை அல்லவா? அதை நம் அன்பர்களும் மனசாட்சியால் "உணர்ந்து" பார்க்க வேணும்!

* வேதங்கள் இறைவனின் பரத்துவத்தை நிலைநாட்டும்!
அவன் ரொம்ப பெரியவன் என்று அவனை "அங்கு" வைத்து, " அங்கு" போக வழியைக் காட்டிச் சொல்லும்!
* பாசுரங்கள் இறைவனின் செளலப்யத்தை நிலைநாட்டும்!
இவன் ரொம்ப எளியவன் என்று இவனை "இங்கு" வைத்து, "இங்கு" போக வழியைக் காட்டிக் கொடுக்கும்!


மக்களே...நினைவில் வையுங்கள்!
வீர-தீர சாகசங்கள், ஞான-கர்ம சாகசங்களை வைத்து...
மற்ற சாம்ராஜ்யத்தைப் வேணும்-ன்னா பிடிக்கலாம்! ஆனால் பக்தி சாம்ராஜ்யத்தைப் பிடிக்க முடியாது!
சுய சாகசங்களால் பிடித்த சாம்ராஜ்யங்கள் கூட, கொஞ்ச தலைமுறைக்குத் தான்! ஆனால் பிரகலாத பக்தி சாம்ராஜ்யம் அப்படி அல்ல!

மோட்சம் என்னும் மந்திரச் சொல்லில் மயங்கி விடாதீர்கள்!
மோட்சம் = அப்பாடா! பிறவிக் கஷ்டமே இல்லாம ஜாலியா இருக்கலாம்-ன்னு சுயநலத்தில் கண் வைத்து ஏமாந்து போகாதீர்கள்!
சுயநலம் இருப்பது தெரிஞ்சிச்சோ...இந்தக் கர்மா செய்யுங்கள், அந்த யாகம் செய்யுங்கள்-ன்னு,
உங்கள் சுயநலத்துக்கு, சுயநலத்தைத் தான் தூக்கிக் கொண்டு வருவார்கள்! மோட்சம் அதுவல்ல!

சம்சார துக்க நிவர்த்தி என்பதே மோட்சம் ஆகி விடாது! சரி, கொஞ்சம் மாற்றி, அந்தமில் பேரின்பம் தான் மோட்சம் என்றும் சொல்லிப் பார்த்தார்கள்!
வெறுமனே அந்தமில் பேரின்பம் தான் மோட்சமா? நல்லா இல்லையே-ன்னு அதற்கும் இறைவன் ஒப்புக்கலையாம்! :)

அப்புறமா, அந்தமில் பேரின்பத்து, "அடியவர்களோடு"...கைங்கர்ய நித்ய நிரைதிஹி-ன்னு மாற்றி எழுதினாப் பிறகு தான் பாடல் ஓக்கே ஆச்சாம்! :)
கூடும் "அன்பினால்" கும்பிடலே அன்றி, வீடும் வேண்டா விறலில் விளங்கினார்!

இறை அன்பா? = அப்படின்னா என்ன? அதை எப்படிப்பா செய்யறது?
நாங்க இறைவன் கிட்ட ஏற்கனவே அன்பாத் தானே இருக்கோம்?
சுப்ரபாதம், திருப்பாவை, அலங்காரம், அந்தாதி, கந்தர் அனுபூதி, ஹ்ருதயம்-ன்னு டைப் டைப்பா எத்தனை பதிவு போடறோம்? :)
பெருசா சொல்ல வந்துட்ட? இறை அன்பு-ன்னா என்ன? சொல்லேன் பார்ப்போம்!

ஒவ்வொன்றிலும்,
* இதைச் செய்தால் எம்பெருமான் திருவுள்ளம் உவக்குமா?
* இல்லை அவன் திருமுகம் வாடுமா?

என்று எண்ணுவதே இறை அன்பு!



* தென்கலை/வடகலை, சைவம்/வைணவம், ஆலயத்தில் இந்துக்கள்/இந்துக்கள் அல்லாதார்-ன்னு விதம் விதமா கோஷ்டி கட்டறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* தங்கத்தைப் புழு என்று தரையில் வீசிய வேதாந்த தேசிகருக்கு, தங்கக் கவசம் சாத்த காசு வசூலிக்கறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* பதிகங்களை அம்பலத்தில் பாட ஆகமத் தடைன்னு சும்மானா சொல்லிட்டு, அம்பலத்தில் வழுக்கி விழுமாறு நாமே எண்ணெய் ஊற்றுகிறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* கோயிலில் மற்ற அடியார்கள் எல்லாம் கால் கடுத்து நின்று கொண்டிருக்க, நாம் மட்டும் செல்வாக்கு காட்டுறோமே! நம்மைக் கூசும் கண்களால் சக அடியார்கள் பார்க்க, சட்டையே பண்ணாமல் சிறப்புத் தரிசனம் செய்கிறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* கொல்லாமை என்பது புத்த பகவான் "விதிச்சதாச்சே"! நமக்குப் பிடிக்கலை, நம்முடன் ஒத்து வரலை என்பதற்காக, ஒரு இனத்தையே ரத்தத்தில் மிதக்க விடுகிறோமே = இதனால் புத்த பகவான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

நாம் செய்யும் பல செயல்களில்,
* இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?
என்று பகவானைப் பாவிக்கப் பழகுங்கள்!


உங்களோடு கூட பாவிக்க, பாவிக்க....திருவாய்மொழி: பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே! அவனைக் கூடுவது தானே மோட்சம்?

(பக்தி For Dummies...தொடரும், எம்பெருமான் உள்ளம் உவக்குமா?...)
Read more »

Monday, March 16, 2009

பக்தி For Dummies - Part 2!

"ஆகா.....ஞான யோகம், கர்ம யோகம் செய்பவர்களைப் பிடிக்காதா?.....எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கறவங்களைத் தான் பிடிக்குமா? ஹா ஹா ஹா! சும்மா விளையாட்டுக்குத் தானே சொல்கிறாய் கண்ணா?" முந்தைய பாகம் இங்கே!

"இல்லை அர்ச்சுனா! என்னை அறிந்து கொள்ளும் முன்னால், முதலில் உன்னை நீயே அறிந்து கொள்ளவே ஞான-கர்ம யோகங்கள்! ஆனால் அதை மட்டுமே பிடித்துக் கொண்டார்கள்! என்னை விட்டு விட்டார்கள்! இப்படிப்பட்டவர்களை எனக்குப் பிடிக்காது அருச்சுனா!"

"ஏன் கண்ணா?"

"கர்மா பண்ணுகிறேன், கர்மா பண்ணுகிறேன் என்று கர்மாவிலேயே ஊறிப் போய் விட்டார்கள்! குளிரைப் போக்கத் தானே எரியும் விறகுக் கட்டை? அதை இறுக்கி அணைத்துக் கொண்டால் என்ன ஆகும்? அதே தான் இவர்களுக்கும் ஆகிப் போனது!
ஒரு கட்டத்தில் ஆண்டவனே முன்னால் வந்து நின்றாலும், நீ ஆகமப் பிரகாரம் வந்திருக்கிறாயா? என்று கேட்கும் அளவுக்கு ஆச்சார போதை தலைக்கேறி விட்டது!"

"ஆகா! உண்மையாகவா கண்ணா???"

"* பிருகு மகரிஷி = கர்மா எல்லாத்தையும் ஒன்னு விடாமல் செய்த யோகி தானே? ஆனால் அவர் தான் திருமகள் வாழும் திருமார்பைக் காலால் எட்டி உதைத்தார்! அவர் செய்த கர்மாவின் மதிப்பு அவ்வளவு தான்!
* துர்வாச மகரிஷி = ஞான-கர்ம யோகம் செய்த ஆச்சார சீலர் தானே? ஆனால் அவர் தான், என் பரம பக்தனான அம்பரீஷனை, விரதம் முடிக்க விடாமல், துன்புறுத்தினார்! அவர் செய்த கர்மாவின் மதிப்பும் அவ்வளவு தான்!

ஞான-கர்ம யோகம் தன்னை மட்டுமே காட்டும்! என்னைக் காட்டாது! ஆத்ம சாஷாத்காரம் மட்டுமே தரும்! பரமாத்ம சாஷாத்காரம் தராது!"

"உம்ம்ம்...புரிகிறது! அப்போது இவர்களின் நிலை? இவர்கள் என்ன ஆவார்கள் கிருஷ்ணா?"

"’தானே எல்லாம்’ என்று ஆகி விடுவார்கள்! தமது கர்மாவே எல்லாம், தமது ஆச்சாரமே எல்லாம் என்று ஆகி விடுவார்கள்...துர்வாசர், பிருகுவைப் போலே!"

"ஆகா! அப்போ யாரைத் தான் உனக்குப் பிடிக்கும் கண்ணா?"

"இவர்களை எல்லாம் விட, என்னையே நினைந்து, காதலாகி, கசிந்து கண்ணீர் மல்குபவன் எவனோ.....அவனே பக்தன்!
அவனே சிறப்பானவன்! அவனே எனக்குப் பிடித்தமானவன்! இதுவே என் கருத்து அருச்சுனா!"
யோகினாம் அபி சர்வேசாம், மத் கதேன அந்தர் ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம், சமே யுக்த தமோ மதா:
6:47

"அப்படியா?"

"ஆமாம்! குகன் என்ன கர்மா செய்தான்? சபரி என்ன செய்தாள்? அனுமன் என்ன செய்தான்? வீடணன் என்ன செய்தான்? விதுரர் என்ன செய்தார்?
யாரை எல்லாம் நான் தழுவி அணைத்திருக்கேன் என்று யோசித்துப் பார்த்தால் உனக்கே தெரிந்து விடும் அர்ச்சுனா!"



என்னிடம் நான்கு வகையான மக்கள் வருகிறார்கள் அர்ச்சுனா! எதற்கு வருகிறார்கள் தெரியுமா?
சதுர் விதா பஜந்தே மாம்
ஜனா சுக்ருதோ அர்ஜூனா
ஆர்த்தோ, ஜிக்ஞாசுர், அர்தார்த்தி
ஞானீ ச பர தர்சப 7.16


* பலர் துக்கம் காரணமாக என்னை வேண்டி வருகிறார்கள்! = ஆர்த்தி!
அனுபவிக்க முடியலையே! கஷ்டப் படுறேனே! கண்ணா! காப்பாத்து! உன் மலைக்கு நடந்தே வரேன்! விரதம் இருக்கேன்! காவடி எடுக்கிறேன்! உண்டியல்ல துணி முடிஞ்சி ஒத்தை ரூவா போடுறேன் முருகா!

* பலர் சந்தோஷம் வேணும் என்பதற்காக என்னை வேண்டுகிறார்கள்! = அர்த்த ஆர்த்தி!
செல்வம், புகழ், போகம் எல்லாம் இன்னும் கொடுப்பா! இதை விடச் சிறப்பா என்னை வச்சிக்கோ! உன் உண்டியல்-ல ஆயிரத்தி ஒன்னாப் போடுறேன் பெருமாளே!

* பலர் ஆராய்ச்சி செய்ய ஆசைப்பட்டு வருபவர்கள்! = ஜிக்ஞாசு!
அது என்ன ஜீவாத்மா-பரமாத்மா? வேதம் அதைப் பத்தி என்ன சொல்லுது? ஞான பரமா யோசிப்போம்! பிரம்மத்தை அறிந்து கொள்வோம்! மாயை போயிடும்!
அப்பாடா, ஒன்னாயிட்டா, பிறவித் தொல்லை இருக்காது! ஜீவன் முக்தி! மோட்சம்!

* ஒரு சிலர் மட்டும், என்னிடம் என்னையே கேட்டு வருபவர்கள் = பக்தர்கள்! அடியவர்கள்!
இவர்களுக்கு வேண்டுவது எல்லாம் கண்ணனே! கண்ணனின் சிரிப்பே!

மோட்சம் கொடுக்கறேன், வருகிறாயா? என்று கேட்டேன்! வேண்டாம் என்று சொல்லி விட்டான் ஆஞ்சநேயன்!
தனக்குப் பாவம் வருதா? பரவாயில்லை! எங்கள் காலடி மண்ணைக் கண்ணன் தலைக்குப் பூசுங்கள்! கண்ணன் தலைவலி தீர்ந்தால் போதும் என்று சொல்லி விட்டார்கள் மாட்டுக்காரப் பெண்கள்!

என்னை அன்றி அவர்களுக்கு வேறு கேட்கக் கூடத் தெரியாது! இவர்கள் தான் உண்மையான ஞானிகள்! ஞான பரமாகப் பேசுபவன் ஞானி அல்லன்! எம்பெருமான் திருமுக உல்லாசமே தன் உல்லாசம் என்று இருப்பவன்! அவனே ஞானி!
அவனை மூட பக்தன் என்று சிலர் சொல்லலாம்! இல்லை! அவனே ஞானி!
அவனே எனக்குப் ப்ரியமானவன்!

தேசாம் ஞானி நித்ய யுக்தா, ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஞானினோ அதி அர்த்தம், அகம் சச மமப் ப்ரியஹ! 7.17

அவர்களுக்கு நானும் ஏதாச்சும் திருப்பிச் செய்யணும்-ன்னு பார்க்கிறேன்! முடியவில்லை அர்ச்சுனா! அவர்கள் என் மீது வைத்த காதலில், பாதியைக் கூட என்னால் திரும்பத் தர முடியவில்லை! நானே விக்கித்துப் போய் விடுகிறேன் அருச்சுனா!
என்ன சொல்வது? அதான் "மம ப்ரியஹ, மம ப்ரியஹ" - "எனக்குப் பிடித்தமானவர்கள், எனக்குப் பிடித்தமானவர்கள்" என்று கீதையில் சொல்லிச் சொல்லி, நானே மாய்ந்து போகிறேன்!



இனி...நம்மில் பலரும் நன்கறிந்த ஒரு குரு, அவர் சீடர்களுடன் உரையாடுவதை, எழுத்து வடிவில் தருகிறேன்! இவர் யார் என்று பின்னால் பார்க்கலாம்!

"குருவே, இறைவனைச் சென்று அடைய, "நான்".."நான்".."நான்"... ஏதாச்சும் ஞானம்/கர்மா/யோகம்-ன்னு செய்யணுமா?

"செஞ்சி கிழிச்ச போ! கர்ம யோகம் தெரியுமா?"

"ஓ தெரியுமே"

"என்ன தெரியும்?"

"கீதையில இருக்கே!"

ஹிஹி! அதான் தெரியும்! ஒரு மணி நேரம் லெக்சர் பண்ணத் தெரியும்! பத்து கட்டுரை போடத் தெரியும்! கர்ம யோகத்தில் இரு பார்ப்போம்! ஆஆஆங்! அது தெரியாது! :)
குடும்பத்தில் இருந்து கொண்டே இருப்பது தானே கர்ம யோகம்? சுக-துக்கே சமே க்ருத்வா, லாப-அலாப, ஜய-அஜயெள-ன்னு இரேன் பார்ப்போம்! ஆஆஆங்! அது ரொம்ப கஷ்டம்! :)

கர்மாவைப் பற்றி ஏதாச்சும் சொன்னாலே, கோவம் மூக்கு மேல பொத்துக்கிட்டு வருது! பக்தி மட்டுமே போதும்-ன்னு யாரோ சொன்னதைக் கேட்டு, ஐயோ காது புளிச்சிப் போச்சே-ன்னு அங்கலாய்க்கத் தெரிகிறது! அப்புறம் என்ன சமே க்ருத்வா? சமமாகப் பாவிக்கற மனப்பான்மை? அப்பறம் என்ன பெருசா கர்ம யோகம்? :)

கர்மா உன்னைக் காப்பாற்றுமா? = காப்பாற்றாது!

மொதல்ல நல்ல பூநூல் கிடையாது! யாரோ நூல் கண்டில் இருந்து அறுத்துக் கொடுத்தார்கள்! போட்டுக் கொண்டாகி விட்டது!
நல்ல தண்ணீர் கிடையாது! குழாயில் இருந்து பிடிச்சி வச்சி கர்மா செய்கிறோம்!
நல்ல அக்னி கிடையாது! அவனவன் வத்திக்குச்சி வச்சி ஏத்துறான்!
செய்து வைக்க நல்ல ஆள் கிடையாது!
அப்படியே ஆள் கிடைச்சாலும், மந்திரம் நம்ம வாயில் நுழையாது!
அப்படியே நுழைஞ்சாலும் அது அன்னிக்கு மட்டும் தான்! மற்ற நாளில் எல்லாம் நேரம் கிடையாது!

இப்படி ஆயிரம் லோபம்! = மந்திர லோபம், கிரியா லோபம், திரவிய லோபம், நியம லோபம்! அப்பறம் என்ன பெருசா நீ கர்மா பண்றது? = கர்மா உன்னைக் காப்பாற்றாது!

நீ இன்னிக்கி செய்யற கர்மா, உருப்படாத கர்மா!
விட்டுடக் கூடாதே என்பதற்காக ஏதோ காமா சோமா-ன்னு கர்மா செய்கிறோம்!
அப்போ, செய்யும் கர்மாவுக்குப் பலனில்லையா என்றால், அதுக்கும் பக்தி தான் வேண்டி இருக்கு! அவன் மானசீக அன்பு வேண்டி இருக்கு!

மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம், பக்தி ஹீனம் ஜனார்த்தனா
யத் பூஜிதம் மயம் தேவம், பரிபூர்ணம் ததஸ்து மே!

ஏதோ ஒப்புக்கு, காமா-சோமா-ன்னு கர்மாவைப் பண்ணிப்புட்டேன்! ஆனால் மார்க்கை நீ பார்த்து போடும்மா அம்பிகே, நீ பார்த்து போடுப்பா ஈஸ்வரா-ன்னு, கர்மாவிலும் பக்தி தான் வேண்டி இருக்கு!

உண்மை இப்படி இருக்க, என்ன பெருசா உனக்கு கர்மாவின் மேல் பிடிப்பு வேண்டிக் கிடக்கு?
அந்தக் கர்மாவை மீறினதாகச் சொல்லி, பெரிய பெரிய மகான்களான இராகவேந்திர சுவாமிகள், திருமழிசையாழ்வார், சித்தர்கள்-ன்னு எத்தனை பேரைத் தள்ளி வச்சோம்?
அப்படித் தள்ளி வைக்க வைச்சதெல்லாம் இந்தக் கர்மப் பிடிப்பு தானே? ஆச்சார மமதை தானே? தந்தை கர்மா மீறினார்-ன்னு சிறு குழந்தைகளைக் கூட தள்ளி வைத்தோமே! பாவம் பார்த்தோமா? :(


அடுத்து தியான யோகம்! :)

கர்ம யோகத்தில் மனசு நிலைச்சி, சித்த சுத்தி ஏற்படுத்தத் தானே தியான யோகம்?
ஆனா..."யோகா க்ளாஸ்-ல இந்த மாசம் மெம்பர்ஷிப் அவ்வளவா காணலையே! நஷ்டம் ஆயிருமோ"-ன்னு மனசு அங்கேயும் இங்கேயும் கிடந்து பறக்குது! :)
இதுல யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், ஆசனம், தாரணம், சமாதி-ன்னு அடுக்கிக்கிட்டே போவலாம்! ஆனா ஒன்னும் வராது! :)

வேணும்னா வாசல்ல ஒரு போர்டு போட்டுக்கலாம்! ஒரு குட்டி 5 watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்னரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்!
நமக்கும் ஆபீஸ்-ல இருக்குற பிக்கல் பிடுங்கல்-க்கு, இது கொஞ்சம் நிம்மதியா இருக்கு! வட்டம் வட்டமா, கருப்புச் சுழல் மாதிரி, ஏதோ ஒன்னு சுத்துதா? தானா தூக்கம் வந்துருது!
உடனே நமக்கு சமாதி நிலை வந்துருச்சி-ன்னு யோகா க்ளாஸ் மாஸ்டர் சொல்லீருவாரு! :)

படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம்! உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி! :)



அடுத்து ஞான யோகம்! :)

இப்பல்லாம் ஈஸ்வரோஹம்! ஈஸ்வரோஹம்!-ன்னு சொல்லுறது கொஞ்சம் ஃபேஷனாப் போயிருச்சி! கேட்டா, அதான் ஞான யோகமாம்! அஹம் பிரம்மாஸ்மி! நான் கடவுள்! நான் மட்டுமே கடவுள்! :)
இரண்யகசிபு கூட, தன்னைத் தானே அஹம் பிரம்மாஸ்மி-ன்னு தான் சொல்லிக்கிட்டு திரிஞ்சான்! :)

அது வேற விஷயம்-ப்பா!
பிரம்ம பூதனாய், ஆத்ம சொரூபத்தை உணர்ந்து, நான் பிராணன் இல்லை! நான் சரீரம் இல்லை! நான் உலகம் இல்லை!-ன்னு உணர்ந்து கொள்வது தான் ஞான யோகம்!
அதெல்லாம் ஒன்னுமே இல்லாம, அஹம் பிரம்மாஸ்மி-ன்னு நீ எதுக்கு ராசா கூவிக்கிட்டு இருக்கே?-ன்னு கேட்டா, அவனுக்குக் கோவம் தான் வருது! :)

ந புண்யம்! ந பாபம்! ந சௌக்யம்! ந துக்கம்!
ந மந்த்ரோ! ந தீர்த்தம்! ந வேதா! ந யக்ஞம்!-
ன்னு ஆதி சங்கரர் சொன்னது!
வேதமும் அவர் இல்லையாம்! யக்ஞமும் அவர் இல்லையாம்! - அச்சச்சோ.....நாஸ்திகமாவா பேசுறாரு பகவத்பாதர்? :) இல்லை! "உணர்ந்து" பேசுகிறார்!

பகவான் ரமணர் சொல்கிறார்! = நான் பிராணன் இல்லை! நான் சரீரம் இல்லை-ன்னு உணர்ந்து கொள்வதோட முடிஞ்சு போச்சா? சரி, ஆத்மா-வை உணர்ந்து கொண்டாய்! அடுத்து பரமாத்மாவை உணர வேண்டாமா?

இப்படிக் கேட்டா, நானே பரமாத்மா!-ன்னு சொல்றான்! அதான் ஜீவாத்மா, பரமாத்மா கூட மிக்ஸ் ஆயிருது-ன்னு வேதமே சொல்லியிருக்கே-ன்னு எடுத்து விடறான்! :)

சரிங்க சார், பிராணன் நான் இல்லை! சரீரம் நான் இல்லை-ன்னு சொல்றீங்களே...உங்க சரீர அபிமானம் போயிடுச்சான்னு பார்த்தா.....
சில்க்கு ஜிப்பா, மயில் கண் ஜரிகை வேஷ்டி, லண்டனில் இருக்கும் பிள்ளை வாங்கிக் கொடுத்த கால்வின் க்ளீய்ன் சென்ட்டு! இதெல்லாம் அடிச்சிக்கிட்டு, லெக்சர் கொடுக்கறாங்க! = கீதா சாரம்! :)

அதை நோட்ஸ் வேற எடுத்துக்கிட்டு போவாங்க சிஷ்ய கோடிகள் பல பேரு! இதையெல்லாம், இறைவன், அதே ஹாலில், மெளன சாட்சியாய் பார்த்துக்கிட்டு, சிரியோ சிரி-ன்னு சிரிக்கிறானாம்! அப்பர் சுவாமிகள் சொல்றாரு!
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு, நக்கு நிற்பார், அவர் தம்மை நாணியே! :)

காயமே இது பொய்யடா! காசு மட்டும் மெய்யடா-ன்னு பாடும் பிச்சைக்காரன் இதுக்கு எவ்வளவோ தேவலாம்! மெய்யில் வாழ்க்கையை, மெய் எனக் கொள்ளும், இவ்வையம் தன்னோடு கூடுவதில்லையாம்-ன்னு ஆழ்வார் பாடின ஞானம், இந்தப் பிச்சைக்காரனுக்கு வந்து விட்டதே! சிறப்பல்லவா! இது தான் மெய்யான ஞான யோகம்!


ஞானம், கர்மா-ன்னு ஆரம்பிப்பதே, "அவனை அவாவும்" பக்தி நிலைக்கு வருவதற்குத் தான்! என்ன தான் வேதங்களில் ஆரம்பித்தாலும்...இறுதியில் பாசுரப் பதிகங்களுக்கு வந்து தான் ஆக வேண்டும்! = ஏன்? முன்பு சொன்ன அதே காரணம் தான்!

* ஞானம்/கர்மா = அடிவாரம் வரை மட்டுமே இட்டுச் செல்லும்!
* பக்தியே மலை ஏற்றி விடும்! தரிசனம் தரும்!


"தன்" ஞானம், "தன்" கர்மா, "தன்" பக்தி என்ற "தன்னை" நீக்கி...
தொண்டர் குலம், அடியார் குலம் என்று ஆக்குவது பக்தி மட்டுமே!


வெறுமனே ஞான/கர்ம ஆட்கள் பலரை அன்றாட வாழ்க்கையில் பாருங்கள்! நல்ல ஆன்மீகத்தில்/குணானுபவத்தில், அவர்களால் ஒரு குழுவாகவே இயங்க முடியாது! அடியவர்கள் என்று அனைவரோடும் கலக்க முடியாது! "தான்", "தான்" என்ற ஆத்ம சாஷாத்காரம் மட்டுமே அவர்களிடம் தொனிக்கும்! பரமாத்ம சாஷாத்காரம் தொனிக்கவே தொனிக்காது!

தனக்குப் பிடிக்காதவர்கள் வீட்டில் அம்பாள் பூசை-ன்னா அவர்களால் கலந்து கொள்ள முடியாது! "தன் அம்பாள் தானே அங்கும் இருக்கிறாள்?" என்று தோன்ற விடாத படிக்கு, ஆத்ம சாஷாத்காரமே தளும்பி நிற்கும்! இது தான் ஞான/கர்ம யோகத்தால் கூடவே வரும் ஆபத்து! டேஞ்சர்! :)


"அப்போ என்ன தான் வழி?
ஞான/கர்ம மார்க்கங்கள் எல்லாம் வெறும் ஆத்ம அனுபவத்துக்கு மட்டுமே-ன்னு சொல்லிட்ட கண்ணா! சரியாத் தான் இருக்கு! அப்போ கடைத்தேற என்ன தான் வழி?"

":)))"

"எதுக்கு இந்த மயக்கும் சிரிப்பு? சாஸ்திரம் வேற கை கொடுக்காது-ன்னு சொல்லிட்டியே! ஆனா வழியைச் சொல்ல மாட்டேங்குறியே?"

"சாத்திரம் பொய்-ன்னு நான் சொல்லலையே! சாத்திரம் சத்தியம் தான்! மறைகள் சத்தியம் தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனா நீ லாயக்கு இல்லையே!"

"ஆகா! நான் லாயக்கு இல்லையா? என்ன கண்ணா, இப்பிடிச் சொல்லிட்ட?"

"ந தர்ம நிஷ்டோஸ்மி, நச் ஆத்ம வேதி
ந பக்திமான், த்வத் சரணார விந்தே
அகிஞ்சனக: அனன்யகதி:!"


"சுத்தமாப் புரியலை கண்ணா! நல்ல தமிழே எனக்கு ததி-கின-தோம்! இதுல தஸ்ஸூ புஸ்ஸூ-ன்னு சொல்லுறியே?"

"நோற்ற நோன்பிலேன் = கர்ம யோகம் இல்லேன்!
நுண்ணறிவு ஒன்றிலேன் = ஞான யோகம் இல்லேன்!
ஒன்றும் ஆற்ற கின்றிலேன் = தியான யோகம் இல்லேன்!
அகலகில்லேன் = அகல மாட்டேன்!
*புகல் ஒன்று இல்லா* அடியேன், புகுந்தேனே
!"

நானு எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிந்து கொண்டால், இன்னிக்கே மோட்சம்!" :))

(பக்தி For Dummies...தொடரும்.....)

Read more »

Tuesday, March 10, 2009

பக்தி For Dummies! பக்தி For Supers! - Part 1

என்ன மக்களே வித்தியாசமாப் பாக்கறீங்க? என்னடா இது, திடீர்-ன்னு பக்தி For Dummies-ன்னு பாக்குறீங்களா? ஹிஹி! ரொம்பா நாளாச் சொல்லணும்-ன்னு நினைச்சி விட்டுப் போன "$$$" பதிவுகளில் இதுவும் ஒன்னு! :)

இதைப் பற்றி முன்னரே இங்கு பேச்செடுத்து இருந்தேன்! ஆனா இப்போ தான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது!
இம்புட்டுப் பொருளாதாரப் பின்னடைவிலும் டாலர் சக்கைப் போடு போடுதுல்ல? இப்பவே டாலரை இந்தியாவுக்கு அனுப்பத் தான் இந்த டாலர் பதிவுகள்!:)) சரி மேட்டருக்கு வரேன்!


பக்தி-ன்னா என்ன? பக்தி பண்ணனுமா என்ன? - இது ஒரு பெரீய்ய்ய்ய்ய கேள்வி!
ஆனால் அதுக்கு முன்னாடி...
குழந்தையில் இருந்து கொஞ்சம் வயசுக்கு வந்துட்டாலே, பொண்ணு/பையன் எல்லார் மனசுலயும் சில அடிப்படைக் கேள்விகள் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்! ஆனா பல காரணங்களுக்காக வெளிப்படையாக் கேட்க மாட்டாங்க! :)

அதுக்குள்ளாற, பசங்க பின்னாடி பொண்ணுங்க சுத்த, பொண்ணுங்க பின்னாடி பசங்க சுத்த, அப்பறமா மொத்த உலகமும் சுத்தோ சுத்து-ன்னு சுத்தி...
திடீர்-ன்னு ஒரு நாள், ஏதாச்சும் ஒரு பதிவுல கேள்வியாக் கேட்டு வைப்பாங்க! :)

* உலகம் என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன?
* இந்த இரண்டத்துக்கும் நடுவுல நாம் என்னவா இருக்கிறோம்?
* முன்பு என்னவா இருந்தோம்? அடுத்து என்னவா இருக்கப் போறோம்?
* எதுக்கு இத்தனை ஆட்டம்?

இது மாதிரியான சிந்தனை நம்ம எல்லாருக்குமே எப்பவாச்சும் ஒரு முறையாச்சும் வந்திருக்கும் இல்லையா?
சிவா மனசுல சக்தி-ன்னும் வரும்! இந்த மாதிரி கேள்வியும் வரும்! :)
வயசு - சமயம் - ஜாதி - ஆண்/பெண் - பணம் - கொள்கை என்ற வித்தியாசமே கெடையாது! எல்லாருக்குமே எப்பவாச்சும் இது மின்னல் போல பளிச்சிட்டு ஓடிப் போயிருக்கும்!

இதுக்குப் பெரிய பெரிய தத்துவம் சொல்றவங்க எல்லாம் இருக்காங்க! அப்படிச் சொல்றதாச் சொல்லிக்கிட்டு...வேற எதையோ சொல்லிக்கிட்டு இருக்குறவங்களும் இருக்காங்க! :)
ஆனால், நாம அப்படியெல்லாம் லெக்சர் டைப்புக்கு போகாம, கலந்துரையாடல் பாணியில், நாமளே ஒன்னாச் சேர்ந்து, சில விடைகளைக் கண்டு பிடிக்கலாமா? = அதான் பக்தி For Dummies!

சரி, அப்ப எதுக்கு பக்தி For Supers?
ஹிஹி! அதாச்சும் சில பேருக்கு "ஞான பரமா" யோசிக்கறது தான் ரொம்பவும் பிடிக்கும்! பக்தி-ன்னா ஏதோ ஜனரஞ்சகமானது, உணர்ச்சி வசப்படறது, "அறிவை" உபயோகிக்காம, "மனசை" மட்டும் உபயோகிப்பது...

அதுக்கும் மேலா, அறிவுப் பூர்வமாக, வேதம் சொன்ன வழியில், ஞானம், கர்மம், சாதகம்-ன்னு பண்ணினா இறைத் தத்துவம் புரிய ஆரம்பிக்கும்-ன்னு சில பேரு சொல்வாங்கல்ல? அதையும் நாம லேசாப் பாக்கணும்-ல்ல? அதான், பக்தி For Supers! :)



உலகம் மாயை! எல்லாமே மாயை! மாயை விலகினா கடவுளைக் காணலாம் = இது அடிப்படையே தப்பு! :)

உலகம் உண்மை! எல்லாமே உண்மை!
உண்மையா இருந்தா இறைவனைத் தரிசிக்கலாம் என்பதே பொருந்தி வரக் கூடிய உண்மை!
சரி, நீங்களே சொல்லுங்க, உலகம் மாயையா? உண்மையா? :)

சில ஞானபரமான நூல்கள் "பாம்பு-கயிறு" உதாரணத்தைக் காட்டும்! அது கயிறு தான், பாம்பு போலத் தெரியுது! ஆனா பாம்பு கிடையாது = மாயை!
சில நூல்கள் "கானல் நீர்" உதாரணத்தைக் காட்டும்! வெய்யிலில் கானல் நீர்...தண்ணி போலவே தெரியும்! ஆனால் நீர் கிடையாது! = அதே போல உலகமும் மாயை- ன்னு சொல்வாங்க!

ஆனால்...கானல் நீர் என்பது ஏதோ கண் கட்டு வித்தை அல்லவே! கண் எதிரே நடக்கும் அறிவியல் உண்மை தானே?
தோற்றத்தை வச்சி அங்கே தண்ணி போல ஒன்னு இருக்கு-ன்னு நாமளே கற்பனை பண்ணிக்கறோம்! "நீர்" என்ற "எதிர்பார்ப்பு" நம்மிடம் இருக்கு!
அதுவே கற்பனையா உருவாகுது! ஆனா நீர் இல்லை-ன்னு தெரிஞ்சவுடன், உடனே மாயை-ன்னு சொல்லி விடுகிறோம்!

இப்போ சொல்லுங்க....மாயை எங்கு இருக்கு? = கானல் நீரிலா? நம்ம எதிர்பார்ப்பிலா? :)



எனவே உலகம் மாயை இல்லை! உலகம் உண்மை! உண்மை! = என்பதே வேத விளக்கம்!
இந்தத் தத்துவத்துக்குப் பேரு என்ன, இதை யாரு சொன்னாங்க என்பதை எல்லாம் இப்போதைக்கு விட்டுருவோம்! கருத்து என்ன-ன்னு மட்டும் பார்ப்போம்!

மொத்தம் மூன்று பொருட்கள்! மூன்றுமே உண்மைப் பொருட்கள்!
1. உயிர்ப்பு/ஞானம் இல்லாதவை = உலகம் (அசித்து)
2. உயிர்ப்பு/ஞானம் உள்ளவை = நாம் (சித்து)
3. இவை இரண்டுக்கும் பொதுவான = இறைவன் (ஈஸ்வரன்)

உலகம்-னா பூமி மட்டுமல்ல! அண்ட வெளி, பஞ்ச பூதம் எல்லாம்!
நாம்-னா நாம் மட்டுமல்ல! உயிர்கள் எல்லாமே!

சித்-அசித்-ஈஸ்வரன் என்று மூன்று தத்துவமாச் சொல்லுறது வழக்கம்! பல சமயங்களும் மூன்று மூன்றாகத் தான் சொல்லுது!
= சித்-அசித்-ஈஸ்வரன்! பிதா-மகன்-பரிசுத்த ஆவி! பசு-பதி-பாசம்!
ஒன்றோடு ஒன்றைத் தொடர்பு படுத்திப் பார்த்தால், பல விஷயங்கள் விளங்கும்! :)

இப்போ நாம ஞாபகம் வச்சிக்க வேண்டியது = உலகம் உண்மை!
ஒவ்வொரு பொருளும் எதிலேயோ தோன்றி, காலம் என்பதில் நீந்தி, எப்படியோ உரு மாறுது, மறையுது இல்லையா? = அறிவியல் பூர்வமா ஆற்றல்/எனர்ஜி-ன்னு இதைப் பிற்பாடு பார்க்கலாம்!

ஆக, உலகம் உண்மை-ன்னு பார்த்தாலே தெரியுது! அதுனால காதல் உண்மை! காமம் உண்மை! ஞானம் உண்மை! செயல் உண்மை! மொத்த உலகமும் உண்மை! :)
நெருப்புல கை வைச்சா சுடுது-ல்ல? உடம்புக்கு மட்டும் தான் சுடுது! ஆத்மாவுக்குச் சுடலை-ன்னு யாரும் சொல்ல முடியுமா?
உடம்புக்கும் கருப்பு கலர்ல சுடுது! அதை ஆத்மாவும் வலியால் உணருது!

நான் ஒருமுறை வெஸ்ட் வெர்ஜினியா-வில் இருக்கும் இஸ்கான் பொற்கோயிலுக்கு நண்பர்கள் கூட்டத்தோடு போயிருந்தேன்! செம கும்மாளம்!
உள்ளே தங்கத் தகடுகள் போல லேசா ஒட்டி இருந்தார்கள்! பழனி, திருப்பதி போல பெருசா ஒன்னும் இல்லை! தங்கச் சுவரைத் தொடக் கூடாது-ன்னு போர்டு எதுவும் வைக்கலை! எங்களை நடத்திச் சென்ற இஸ்கான் வெள்ளைக்காரப் பையனும் ஒன்னுமே சொல்லலை!

"Soul-ன்னா இந்தியப் பாரம்பரியத்தில் என்ன?"-ன்னு கேள்வி கேட்டான் அந்தப் பையன்! கூட வந்த ஜனங்க எல்லாம் "ஆத்மா", "ஆத்மா"-ன்னு சொன்னாங்க! அவனும் "வெரி குட், இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்களே"-ன்னு சொன்னான்!
"அடிங்க, நம்ம கிட்ட தெரிஞ்சிக்கிட்டு நம்பளுக்கேவா"-ன்னு என் நண்பனோ பக்கத்துல கிடந்து குதிக்கிறான்! :)

இந்த மாதிரி ஆன்மீக விஷயம் எல்லாம் நமக்கு எதுக்கு-ன்னு, வழக்கம் போல ஒதுங்கிட்டேன்! அங்குள்ள சுவரை லேசாத் தொட்டுப் பாத்துக்கிட்டு இருந்தேனா? அட மன்மதன்-ரதி தங்கத் தகட்டுல சூப்பரா ஜொலிக்கிறாங்க! அதான்! :)

"How dare you touch the wall?"-ன்னு அந்த வெள்ளைக்காரப் பையரு டென்சன் ஆயிட்டாரு! "Oh Sorry-nga! தொடக்கூடாது-ன்னு எங்கும் சொல்லவே இல்லையே"-ன்னு சொல்லிப் பார்த்தேன்! ஹூஹூம்! அடங்க மாட்டேன்-ன்னுட்டாரு!

கடைசியா, "My Soul didn't touch the wall! Just my Body touched it, Swami"-ன்னு அடியேன் சொன்னது தான் தாமதம்!
கூட்டம் கொல்-ன்னு சிரிக்க, அமெரிக்க ஸ்வாமி மொத்தமா அடங்கிப் போயிட்டாரு! :) நண்பர்கள் எல்லாரும் "Hurray!"..... :)))

ஆக, என்ன தான் வாயால பல தத்துவம் பேசினாலும், நமக்கு-ன்னு வரும் போது......எல்லாருக்குமே உலகம் உண்மை!



சரி, மேட்டருக்கு வருவோம்!

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே மாயை ஸ்க்ரீன் போலத் தொங்குது! காண்பதெல்லாம் மாயை! அந்த மாயை விலகினால் எல்லாம் ஒன்னாயிடும்!-ன்னு சிலர் சொல்லலாம்! ஆனால் அது சரியல்ல!
மாயை என்பதே ஒரு மாயை! அதற்கான மெய்யான வேத விளக்கத்துக்குப் பிற்பாடு வருவோம்!

மக்களே,
இப்போ அடுத்த கேள்வி! சத்-அசித்-ஈஸ்வரன் என்னும் மூன்றில், உலகம் உண்மை-ன்னு சொல்லிட்ட! அப்போ உலகத்தில்...* நாம் யார்? இறைவன் யார்?
இதுக்குப் பதில் சொல்லுறது ரொம்பவே ஈசி-ல்ல? :) ஹா ஹா ஹா!

* பல பிறவிகள் எடுத்து வந்து, உலகில் செயல் புரிவது = ஜீவாத்மா! (சித்து)
* ஞானமுள்ள இந்த ஜீவாத்மாவுக்கும், ஞானமற்ற பிரபஞ்சத்துக்கும் = சொந்தம் உடையதாய் இருப்பது பரமாத்மா! (ஈஸ்வரன்)
= இப்படி எல்லாம் சொன்னா ஒன்னுமே புரியாது! அடிக்கத் தானே வருவீங்க? :)

கொஞ்சம் புரிஞ்சவங்க, அடுத்த கேள்வி கேட்பாங்க!
* பிறவியா? நான் எதுக்குப் பிறவி எடுத்துக் கஷ்டப்படணும்?
* சரிப்பா...தெரியாம ஏதோ பாவம் பண்ணிட்டேன் போன ஜென்மத்துல! அது என்னா-ன்னு சொன்னா, சரி பண்ணிப்பேன்-ல?
* ஒன்னுமே சொல்லாம சும்மா பிறவி பிறவி-ன்னா, கடவுள் என்ன சாடிஸ்டா? :))

புத்தகம் புத்தகமாப் படிச்சவங்க, வேற மாதிரி கிராஸ் கொஸ்டின் போடுவாங்க!
* பிறவியா? அப்போ மொதல் மொதல், நான் என்னவா இருந்தேன்?
* சரி, இப்போ தான் பாவம் பண்ணேன்! அதுனால அடுத்த பிறவி-ன்னு சொல்றீங்க! ஓக்கே! ஆனா முதல் முதலா பரமாத்மா கிட்ட "ஒன்னாத்" தானே இருந்தேன்? அப்போ பாவம் பண்ணி இருக்க சான்ஸ் இல்லை-ல? அப்போ எதுக்குப் பிறவி வந்துச்சி? :)))

இப்படிப்பட்ட கேள்விக்கெல்லாம் ஒவ்வொன்னா வருவோம்!
விளையாட்டா பார்த்தாலும், சிலதைச் சீரியஸாத் தானே பார்க்கணும்? அதுனால அப்பப்போ சீரியசாப் பேசினாக் கோச்சிக்காதீங்க மக்களே! ஆன்மீகத்தைச் சீரியஸாப் பேச-லைன்னு தான் ஒரு சிலருக்கு என் மேல கொஞ்சம் கோவமும் கூட! :)

* நெருப்பு சுடும்-ன்னு, மூஞ்சைப் பயங்கரமா வச்சிக்கிட்டு, பாப்பாவுக்கு பயம் காட்டுங்க! பாப்பா பயந்தா மாதிரி தலையை ஆட்டும்!
ஆனால் சூடு-ன்னா என்னா-ன்னு, அதுக்கே ஒரு நாள் தொட்டாத் தான் தெரியும்!

* விஷம்-ன்னா ஆளு க்ளோஸ்-ன்னு, மூஞ்சைப் பயங்கரமா வச்சிக்கிட்டு பயம் காட்டுங்க! நாமும் பயந்தா மாதிரி தலையை ஆட்டுவோம்!
ஆனால் விஷம்-ன்னா என்னான்னு, நாமளே ஒரு நாள் குடிச்சிப் பாத்தா தான் தெரியும்!...............................ன்னு சொல்லுவோமா? :))

இறைத் தத்துவம் கூட அப்படித் தாங்க!
சிலதைத் தொட்டுப் பாக்கலாம்! சிலதைக் குடிச்சிப் பாக்க முடியாது! :))



அடுத்து.....பெரும்பாலும் சான்றோர்களால் மேற்கோள் காட்டப்படுவது பகவத் கீதை! ஆனால் தப்பும் தவறுமாக அவரவர் சுயநலத்துக்கு, அதிகம் மேற்கோள் காட்டப்படுவதும் இதே பகவத் கீதை தான்! :)

கீதை-ல என்ன சொல்லி இருக்கு?
* ஞான யோகம்
* கர்ம யோகம்
* தியான யோகம்
* பக்தி யோகம்

எது பண்ணாலும் ஓக்கே தான்! ஆனால் கரெக்டாப் பண்ணனும்! மோட்சம் உறுதி-ன்னு கியாரென்ட்டி கொடுப்பவர்கள் உண்டு! :) ஆனால்....
ஞான யோகம், கர்ம யோகம் = ரெண்டுமே மோட்சம் கொடுக்காது என்றே கீதை காட்டுகிறது!

என்னடா, இவன் ஒவ்வொன்னாக் கொளுத்திப் போடுறானே-ன்னு பதறக் கூடாது! முக்கியமா, எள்ளலா எடுத்துக்கிட்டு தாம் தூம்-ன்னு குதிக்காமல், என்ன தான் நடக்குது-ன்னு பொறுமையாப் படிங்க! :)

"எனக்கு ஞான பரமான விஷயம் தான் பிடிக்கும்"-ன்னு சிலர் சொல்லலாம்!
ஆனால் நம்ம ஞானத்தால் மட்டுமே, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்! வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

நாமே நம்ம ஞானத்தால் ஆராய்ச்சி பண்ணி, சடங்குகளால் கர்மா பண்ணி....அவனைத் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உங்களுக்கு உதவலாம்! ஆனால் அவற்றால் காலத்துக்கும் பசியை ஆற்ற முடியாது!

கீதையில் சொன்ன ஞான யோகம், கர்ம யோகம் அதுவல்ல!
* ஞான யோகம் என்றால் வேதம் படிப்பது, "ஞான பரமாகப்" பேசுவது! - என்பது மட்டும் அல்ல!
* கர்ம யோகம் என்றால் கர்மா பண்ணுவது! ஹோமம் பண்ணுவது! நித்ய கர்மா, ஜப தபங்கள் பண்ணுவது! நமக்கு-ன்னு "விதிச்சதை" தவறாமல் பண்ணுவது - என்பது மட்டும் அல்ல!

ஒரு சிலர் இன்னிக்கி அப்படி ஆக்கி வைத்து விட்டார்கள்! கீதையில் சொல்வது அது கிடையாது!
அவரவர் "கர்மா"/"பிழைப்பு" நல்லபடியா நடக்கணும்-ன்னு, அவரவர் செய்து கொண்ட சுயநலமான வசதிகள் எல்லாம் இந்தக் கணக்கில் வராது! :)

ஞான/கர்ம யோகம் முக்கியம் தான்! கொஞ்சம் ஞானமும் வேணும், செயலும் செய்யணும் தான்! ஆனால் ஞான யோகம் & கர்ம யோகம் இறைவனிடம் இட்டுச் செல்லாதாம்! - ஏன்?
கண்ணனே சொல்கிறான்! கேளுங்களேன்... "ஞான யோகம், கர்ம யோகம் செய்பவர்களை எனக்கு அவ்வளவாப் பிடிக்காது அருச்சுனா!"


* ஞானம்-கர்மா எதுவுமே செய்யாத பிரகலாத "அசுரன்" இறை அன்பில் விழுந்தான்!
* ஞானம்-கர்மா எல்லாம் சூப்பராச் செஞ்ச பிருகு "மகரிஷி" இறைவன் மார்பில் எட்டி உதைத்தார்! :)
= இதில் இருந்து என்ன தெரிகிறது? ஞானம்-கர்மா-ன்னே கட்டிக்கிட்டு அழுதால் என்ன ஆகும்?



ஞான/கர்ம யோகம் = ஆத்ம சாக்ஷாத்காரம்!
அதாச்சும், ஆத்மாவை அறிவிப்பது! "நான் யார்?" என்று நம்மை நமக்கே உணர்த்துவது!
அதற்கு மட்டுமே ஞான/கர்ம யோகங்கள் உபயோகப்படும்! "நாம், நமது"-ன்னு நம்மைச் சுற்றியே நிறைய பேசும்!

* நான் யார்-ன்னு தெரிஞ்சிக்கிட்டா மட்டும் போதுமா?
* அடுத்த நிலை, இறைவன் யார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
* அவனுக்கும் நமக்கும் என்ன உறவு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பழனி மலைக்கோ, திருப்பதி மலைக்கோ அடிவாரம் வரை மாவட்டப் பேருந்து இட்டுச் செல்லும்! ஆனால் அத்தோட முடிஞ்சிப் போச்சா?
அடுத்து இன்னொரு சிறு பேருந்திலோ, ரோப் காரிலோ, படிக்கட்டிலோ ஏறினாத் தானே தரிசனம்?

ஞான யோகம்/கர்ம யோகம் = ஆத்ம சாக்ஷாத்காரம் = ஆத்மாவை அறிவிப்பது! மாவட்டப் பேருந்து! அடிவாரம் வரைக்கும் தான்!
பக்தி யோகம் = பரமாத்ம சாக்ஷாத்காரம் = பரமாத்மாவை அறிவிப்பது! இதுவே உண்மையான படிக்கட்டு! இதில் ஏறினால் தான் தரிசனம்!

ஏதோ நானே "வாக்குச் சாதுர்யத்தால" கதை அடிச்சி விடலை! :) கீதையில் சொல்வதும் இதுவே! முதல் ஆறு அத்தியாயங்களில் ஞான யோகம், கர்ம யோகம் பற்றிக் கண்ணன் நிறையவே சொல்லிட்டான்! எதுக்கு?

மனம் தளர்ந்து இருக்கும் அருச்சுனனுக்கு, "மொதல்ல உன்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சிக்கோ! அப்புறம் என்னைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்!" - ஆத்மாவை முதலில் தெரிஞ்சிக்கோ! அப்புறம் பரமாத்மாவைத் தெரிஞ்சிக்கலாம்! = இதான் காரணம்!

இதி ஞான யோகஹா! இதி கர்ம யோகஹா-ன்னு அடுக்கி அடுக்கிச் சொல்லியாகி விட்டது!
* உடல் வேறு, ஆத்மா வேறு! ஆத்மாவுக்கு சுதந்திரம் உண்டு!
* ஆத்மா என்னும் நுண்-சக்தி, பல உடல்கள் எடுத்துப் பல செயல்களைச் செய்து கொள்ளலாம்!
* ஆத்மாவுக்கு அழிவே இல்ல! ஆத்மா ஆனந்த மயமானது-ன்னு எல்லாம் சொன்னவுடன்....

அருச்சுனன் இப்போ தான் யாரு, தன் லெவல் என்ன-ன்னு ஓகோ-ன்னு தெரிஞ்சிக்கிட்டான்! ஆனால் கூடவே வந்தது ஒரு ஆபத்து!
"தானே எல்லாம்" என்ற ஒரு திமிரும் கூடவே வந்து விட்டது! ஞானச் செருக்கு, கர்மச் செருக்கு! :))
அஹம் பிரம்மாஸ்மி! நானே கடவுள்! நான் மட்டுமே கடவுள்-ன்னு ஐயா நினைக்க ஆரம்பிச்சிட்டாரு! = Thanks to: ஞான யோகம், கர்ம யோகம்! :))

ஆத்மாவை அறிந்து கொண்டாயிற்று! பழனி அடிவாரம் வந்தாச்சி!
இனி பரமாத்மாவை அறிவோம்! பழனி மலை ஏறுவோம்-ன்னு இல்லாமல்...

அடிவாரமே பழனி மலை! ஞான-கர்ம யோகம் தான் சூப்பர்!
"நான்", "என்" கர்மாவைப் பண்ணிக்கிட்டே இருப்பேன்! யாரும் "என்" கர்மாவைக் கேள்வி கேட்க முடியாது! :)
"நானே" ஞான பரமாப் படிச்சி அவனை அடைஞ்சிருவேன்!
"நானே" விதிச்சதைப் பண்ணி அவனை அடைஞ்சிருவேன்! - இப்படியெல்லாம் ஐயா யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு! வந்தது விபரீதம்!

இப்போ தான் கீதையின் திருப்பு முனை, அந்த ஏழாம் அத்தியாயம் துவங்கப் போகிறது! என்ன சொல்கிறான் கண்ணன்?
"ஞான யோகம், கர்ம யோகம் செய்பவர்களை எனக்கு அவ்வளவாப் பிடிக்காது அருச்சுனா!"

யோகினாம் அபி சர்வேசாம், மத் கதேன அந்தர் ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம், சமே யுக்த தமோ மதா:
6:47

"ஆகா...அப்போ யாரைத் தான் உனக்குப் பிடிக்கும் இறைவா?"

சுபா அசுப பரித் தியாகி, பக்திமான் யச மே ப்ரியஹ! 12.17
ச்ரத்தா தன மத் பரம, பக்தாஸ் தேதிவ மே ப்ரியஹ! 12:20

"எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கறவங்களை ரொம்பவே பிடிக்கும்! அவங்களுக்கெல்லாம் இன்னிக்கே மோட்சம்!" :))

(பக்தி For Dummies, பக்தி For Supers...தொடரும்...)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP