பக்தி For Dummies - Part 3!
"I am Unfit"-இதைப் பத்தி இந்தப் பதிவில் கட்டாயம் பாத்துறலாம்! சஸ்பென்ஸ் போதும்! மக்கள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! :) சென்ற பதிவு இங்கே!
"எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கிட்டா, இன்னிக்கே மோட்சம்!" என்று "விளையாட்டாகவும்", "சீரியசாகவும்" சென்ற பதிவுகளில் சொல்லி இருந்தேன்!
அறிவினால் மட்டுமே இறைவனை அளந்துற முடியுமா?
"அறிவே தெய்வம்"-ன்னு வேணும்னா சில பேரு சொல்லிக்கலாம்! அதுக்கு பாரதியார் பாட்டு வேற இருக்கு! ஆனால் ஒருக்காலும் அறிவு தெய்வம் ஆகி விடாது! (டிஸ்கி: நம்ம சக பதிவர் பெயரைச் சொல்லலீங்கோ) "அறிவே தெய்வம் இல்லை" என்கிற அறிவே தெய்வம்! :)
பெற்றோர்கள் சொல்லித் தானே, நாம் அவர்களின் பிள்ளை என்றே நமக்குத் தெரிகிறது?
தினம் தினம் அம்மா-அப்பாவை ஆயிரம் கேள்வி கேக்குறோமே? ஆனால் "அந்தக்" கேள்வியைக் கேட்போமா? :) அதே போலத் தான் இறைவனும்!

நாம் இன்னாருக்குத் தான் பிறந்தோம் என்று நம்மில் எத்தனை பேர் "உறுதியாகச்" சொல்ல முடியும்? ஒவ்வொருவரும் பயாலாஜிக்கல் எவிடென்ஸ் கேட்டுக் கொண்டும், காட்டிக் கொண்டும் இருக்க முடியுமா? இப்படி, நம்மையே நாம் 100% அறியாத போது, நாம எப்படி இறைவனை 100% அறிய முடியும்? :)
அட, டெக்னாலஜி ரொம்ப முன்னேறிப் போச்சு, உலகம் ரொம்ப பின்னேறிப் போச்சுப்பா! யாரை நம்பறதுன்னே தெரியலை! அதுனால பள்ளியில் சேர்க்கும் முன்போ, கல்யாணத்துக்கு முன்போ, எல்லாரும் Genetic Test என்னும் மரபியல் சோதனை செஞ்சிக்கிட்டு அவங்கவங்க பெற்றோரை "உறுதிப்படுத்திக்கணும்"-ன்னு சட்டமா கொண்டாற முடியும்? :) அதே போலத் தான் இறைவனை "உறுதிப்படுத்திக்" கொள்வதும்!
அரியவனை - அரி அவனை, அறிவினால் "மட்டுமே" உறுதிப் படுத்த முடியாது!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!
சிறு வயதில் இருந்தே, இவங்க தான் உண்மையான அம்மா-அப்பா என்று எப்படி ஏற்றுக் கொள்கிறோம்? சினிமாவில் வேண்டுமானால், கர்ணன் போல கைவிட்ட குழந்தை, தத்து கொடுத்த குழந்தை-ன்னு க்ளைமாக்ஸில் கொஞ்சம் சூடு பிடிக்கும்!
* திடீர் என்று ஒரு நாள், "உண்மை" தெரிய வந்தாலும், "உண்மை இல்லாத" அம்மா அப்பாவை உதற முடிவதில்லையே! - ஏன்?
* தத்துக் குழப்பம் இல்லாத நிஜமான பெற்றோரைக் கூட, இவங்க தான் அம்மா-அப்பா என்று "உறுதிப்படுத்திக்" கொள்ளாமலேயே உறுதிப்படுத்திக் கொள்கிறோமே? - எப்படி?
அறிவே தெய்வம் இல்லீங்க! அன்பே தெய்வம்!
Knowledge is God என்று யாரும் சொல்லலை! Love is God-என்று தான் மேலை நாட்டவனும் சொன்னான்! இந்தப் பலன் கருதா அன்பினால் தானே அம்மா-அப்பா என்று "உறுதிப்படுத்திக்" கொள்கிறோம்? இல்லை அறிவினாலா? நீங்களே சொல்லுங்க!
ஆக, ஞான விசாரணையால் இறைவனை "உறுதிப்படுத்த" முடியாது!
கர்ம சாதனையால் இறைவனை "உறுதிப்படுத்த" முடியாது!
* கர்ம யோகம் = சடங்கு, மந்திர ஜபம், தந்திர பூஜை, "விதிச்சதைப் பண்ணுறது" ...
* தியான யோகம் = யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், சமாதி...
* ஞான யோகம் = சாதகம், சத்-சம்பத்து, விவேகம், வைராக்கியம், ஜீவன் முக்தி...
என்றெல்லாம் விதம் விதமா அடுக்கிட்டு போகலாம்!
ஆனால் அத்தனையும் "சம்சார துக்க நிவர்த்தி" என்ற ஒரு பொருளின் மேல் கண் வைச்சு தான் பின்னியிருக்கு! அதிலும் "சுயநலம்" உண்டு!
பற்று அறுத்துட்டேன், பற்று கொஞ்சம் கொஞ்சமா போயிரிச்சி-ன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இருக்குற பற்றெல்லாம் அங்க தான் இருக்கு! :))
சென்ற பதிவில் ஹோமம், சம்ஸ்காரம்-ன்னு கர்மா பண்ணுறதை ரொம்ப கிண்டல் அடிச்சிட்டேன்-ன்னு சில நண்பர்கள் தனிமையில் குறைபட்டுக் கொண்டார்கள்!
ஒரு அனானி அன்பர் கேட்கவே கேட்டுட்டாரு! தியான யோகம், ஞான யோகம், 5 Watts Bulb-ன்னு சொன்னது மட்டும் சிரிப்பா இருந்துச்சாம்! ஆனால் கர்ம யோகம் பற்றி மட்டும் தவிர்த்து இருக்கலாமே என்று கேட்டு இருந்தார்! :)
அந்த உரையாடல் அடியேன் சொன்னது இல்லீங்க!
கர்மவாதிகள் உட்பட இன்னிக்கி பலரும் போற்றும் பரனூர் அண்ணா (என்னும்) கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் சொன்னதைத் தான் பதிவில் கொடுத்து இருந்தேன்!
என்னிடம் வழக்கமாக கோபித்துக் கொள்ளும் சில அனுட்டான சீலர்கள், இப்போ பரனூர் அண்ணா கிட்டே போய் கோபித்துக் கொள்ள முடியுமா? :))
மக்களே...யாரையும் குற்றம் சொல்லணும்-ன்னு அடியேன் நோக்கம் அன்று!
கர்மப் பிடிப்பில் கெட்டியாக ஒட்டிக் கொண்டால் ஆத்ம சாஷாத்காரம் தான் தளும்பும்!
பரமாத்ம சாஷாத்காரம் வராது! உள்ளத்தில் பகவத் கருணை ஊறாது என்பதற்காகத் தான் அத்தனை விளக்கங்களும்!
அது உங்களுக்குக் கோபம் ஏற்படுத்தி இருந்தால், வீழ்ந்தெழுந்து கொள்கிறேன்! அடியேனை மன்னிப்பீர்களாக!

சொல்லப் போனால்...நீங்க கிருஷ்ண பரமாத்மாவைத் தான் மன்னிக்கணும்! :)
நானாச்சும் ஏதோ லைட்டாச் சொல்லிட்டுப் போயிட்டேன்! ஆனா அவர் சும்மா பிச்சிப் பிச்சி வாங்குறாரு இந்த ஸோ கால்டு ஆச்சாரத்தை!
சிலர் தனக்குச் சாதகமாகக் காட்டும் அதே பகவத் கீதையில் தான் இதுவும் இருக்கு! :))
யாம் இமாம், புஷ்பிதாம் வாசம், ப்ரவதந்தி அவிபாஸ்சித:
வேத வேத ரதா: பார்த்தா, நான்யத் அஸ்திதி வாதினா 2:42
வேதம் விதிச்சபடி நடக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், அலங்கார புஷ்பம் போல வெறும் கோஷம் தான் இடுவார்கள்! தங்களுக்குப் பிடித்தமான வேத வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, சுயநலமாகக் கையாளுவார்கள்!
காமாத்மனா, சொர்க்க பரா, ஜன்ம-கர்மா-பலப்ரதாம்
க்ரியா விசேஷ பகுலாம், போக ஐஸ்வர்ய, கதிம் ப்ரதி! 2:43
சொர்க்கம், கர்மா, இஷ்டி, ஹோமம்-ன்னு, உலகாயுதமாக, விதம் விதமான சடங்குகளையும் கர்மாக்களையும் செய்து கொண்டு, வீணே காலம் கழிப்பார்கள்!
(அதாச்சும் வேத சாகைகளில் உள்ள கர்ம காண்டங்களிலேயே உட்கார்ந்து கொள்வார்கள்! சடங்கு தாண்டி, அடுத்து, ஞான காண்டத்துக்கு, "பகவானே எல்லாம்" என்று வரவே மாட்டார்கள்! பேச மட்டும் செய்வார்கள்! ஆனால் நடைமுறைப் படுத்த மாட்டார்கள்!)
ந வேத! யக்ஞ தியாய-னைர், ந தனைர், ந ச க்ரியா-பிர்!
ந தபோ-பிர் உக்ரை! ஏவம் ரூப சாக்ய அகம்! 11:48
வேதப் படிப்பாலேயோ, யாக ஹோமங்களாலேயோ,
தட்சிணை மற்றும் கிரியைகளாலோ, தன்னலமான தான தவங்களாலோ,
என்னைக் காண முடியாது! அடைய முடியாது!
(ஏக பக்திர் விசிஷ்யதே என்னும் "ஏக பக்தி" கொண்ட உன்னால்(பக்தனால்) மட்டுமே காண முடியும்!)
உடன் பிறவா சகோதரிகள், உடன் பிறந்த அரசியல்வாதிகள்...எத்தனையோ பூஜை, ஹோமம்-ன்னு விதம் விதமாப் பண்ணுறாங்களே! "விதிச்சபடி" ஆஹூதி எல்லாம் சூப்பராக் கொடுக்கறாங்க தானே? ஆனால்.....

* ஹோமம் செய்பவர்களுக்கும் தெரியும் = ஆசாமிகள் பகவானை அண்ட முடியாது-ன்னு!
* ஹோமம் செய்து வைப்பவர்களுக்கும் தெரியும் = ஆசாமிகள் பகவானை அண்ட முடியாது-ன்னு!
இருந்தாலும் மாங்கு மாங்கு-னு செஞ்சிக்கிட்டு தான் இருப்பாய்ங்க! :))
ஆக, இந்தக் கீதையின் சுலோகங்களில் இருந்து தெரிகிறது அல்லவா?
* ஞான-கர்ம யோகங்கள் தன்னை மட்டுமே உணர்த்தும்! இறைவனை உணர்த்தாது!
* பக்தி யோகம் என்னும் இறை அன்பே பகவானை உணர்த்தும்! அதுவே "உண்மையான" கீதா சாரம்!
இப்போ "லாயக்கில்லை", "Unfit'-க்கு வருவோம்! :)
* ஞான காண்டம் அத்தனையும் எப்போ படிச்சி, கர்ம காண்டம் அத்தனையும் எப்போ பண்ணி, நீ எப்பப்பா மலையேறது?
* நம் பிறப்பையே நாம் 100% அறியாத போது, இதை எல்லாம் படிச்சா அறியப் போகிறோம்?
* அப்படியே அறிஞ்சாலும், அதையெல்லாம் 100% பண்ணவா போகிறோம்? நம்மைப் பத்தி நமக்குத் தெரியாதா? பேச்செல்லாம் பதிவில் தானே? :) பேசும் போது நல்லா இலக்கணமாப் பேசீருவோம்! பாட்டெழுதும் போது கரெக்ட்டா கோட்டை விட்டுற மாட்டோமா என்ன? :))
அதனால் தான்.....
நான் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை! I am Unfit - என்று "சொல்லிச் சொல்லி"ச் சரணாகதி செய்கிறார் மாறன் என்னும் நம்மாழ்வார்! அவரே இப்படிச் சொன்னா, நாம எல்லாம்? :))

* நோற்ற நோன்பிலேன் = கர்ம யோகம் இல்லேன்!
* நுண்ணறிவு ஒன்றிலேன் = ஞான யோகம் இல்லேன்!
* ஒன்றும் ஆற்ற கின்றிலேன் = தியான யோகம் இல்லேன்!
தெரியேன் பாவியனாய், பல தீமைகள் செய்து விட்டேன்!
பெரியேன் ஆயின பின், பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!
இப்படி ஒன்றுக்கும் லாயக்கில்லா நான்...
* அகலகில்லேன் = உன்னை அகல மாட்டேன்!
* புகல் ஒன்று இல்லா அடியேன் = போக்கிடம் வேறொன்று இல்லை!
ஞான-கர்ம-தியான யோகம்-ன்னு ஒரு யோகமும் இல்லை!
அகல மாட்டேன் என்ற அன்பு யோகம் மட்டும் தான் இருக்கு!
* எனக்கு வேற போக்கு கிடையாது! = எனக்கு நீ, உனக்கு நான்!
* உன் தன்னோடு+உறவேல்+நமக்கு = அ+உ+ம் = ஓம்! இங்கு ஒழிக்க ஒழியாது!
புகல் ஒன்று இல்லா அடியேன்...உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே! = இதுவே பரிபூர்ண சரணாகதி!
இனி வரும் பதிவுகளில் கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு, இது சாத்தியாமா-ன்னு பார்ப்போம்!
லைட்டாப் புரிஞ்சி இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! அட, ஒன்னுத்துக்கும் லாயக்கில்லா எனக்கே புரியுது! உங்களுக்குப் புரியாதா? இன்னொரு தபா பதிவை வாசிச்சா போச்சு! :)
டேய் கேஆரேஸ்ஸ்...வார்த்தை ஜாலமாப் பேசிட்டாப் போறுமா? ஆழ்வார் பாட்டில் இருந்து எடுத்துக் காட்டி, ஞான-கர்ம யோகம் எல்லாம் இல்லைன்னு சொல்லிட்டாப் போறுமா?
எங்களுக்கு வேதங்கள் தான் அடிப்படை! வேதாந்தம் தான் அடிப்படை!
ஏதோ லாயக்கு இல்லை, Unfit, இன்னிக்கே மோட்சம்-ன்னு "அ-வைதீகமாப்" பேசுகிறாயே! இதுக்கெல்லாம் ஒரு சுலோகத்தையாச்சும் உன்னால் காட்ட முடியுமா? :)
ந தர்ம நிஷ்டோஸ்மி = நியம நிஷ்டை இல்லை!
நச் ஆத்ம வேதி = வேத வழியில் ஆத்ம ஞானம் இல்லை!
ந பக்திமானு = பெருசா நான் பக்திமானும் இல்லை!
த்வத் சரணார விந்தே = ஆனால் "அன்பினால்" சரணார விந்தம், திருவடிகளைப் பற்றிக் கொண்டேன்!
அகிஞ்சனக: = எனக்கு வேறு கைம்முதல் இல்லை!
அனன்ய கதி: = எனக்கு வேறு கதியும் இல்லை!
எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு புரிந்து கொண்ட நம் ஆழ்வாருக்கு மோட்சம் என்றால்.....அப்படியே புரிந்து கொள்ளும் நமக்கும் இன்னிக்கே மோட்சம்! :))
பொதுவாக வேதங்கள் தான் ஞான பரமானவை! ஞானம் கொடுக்கும்! பேத ஸ்ருதி, அபேத ஸ்ருதி-ன்னு புத்திக்குத் தீனி போடுவது போல் பேசும்!
இந்த ஆழ்வார்-நாயன்மார்களின் பாசுரம் எல்லாம் ஒரே "பாவமா"-ன்னா இருக்கு? "ஞானமா" இதுல ஒன்னும் இல்லையே!
ஆழ்வார் அழுவறாரு! தூது விடறாரு! காதல் அது இது-ன்னு "லோக பரமா"-ல்ல பேசுறாரு? இதுல பெருசா தத்துவம் இல்லேயேப்பா!
சரி, போனாப் போவுது, இதுவும் இருக்கட்டும்! நம்ம பகவானை அவங்களும் பாடிட்டாங்க! வேற வழியில்ல!
* ஆரம்ப நிலை = ஆழ்வார்/நாயன்மார்கள்!
* இறுதி நிலை = வேதம்-ன்னு இருக்கட்டும்!
"மூட" பக்தியில் ஆரம்பிச்சி...படிப்படியா ஞானம், கர்மா-ன்னு முன்னேறி வரட்டும் = இப்படிச் சொல்பவர்களைப் போல பேதைகள் வேற யாருமே இருக்க முடியாது!

வேதாந்த தேசிகர் = பெரிய மகான்! சகல வேத சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்! தமிழில் நூல்கள் சில எழுதி இருந்தாலும், வடமொழியில் பெரும் பெரும் வித்தகர்! சுலோகம்-ன்னாலே ஆயிரம் ஆயிரமாகத் தான் வந்து விழும் இவருக்கு!
இன்னிக்கி ஆச்சாரம் பேசும் பல பேர், இவரைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவார்கள்! வடமொழியில் பல பனுவல்கள் செய்து விட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக, இவரையும் நியம நிஷ்டை என்னும் வளையத்துக்குள்ளே அடைத்து வைத்து விட்டார்கள்! :(
ஆனால் இவரைப் போல உள்ளம் கனிந்த அன்பரைக் காண முடியாது! அப்பேர்ப்பட்ட வேத வித்து!
அவருக்கே வேத வேதாந்தம் படித்து மிஞ்சியது என்னவாம்? = குழப்பம் தான் மிஞ்சியதாம்! ஹா ஹா ஹா! நான் சொல்லலைங்க! அவரே சொல்கிறார்!
"செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!"
தெளியாத மறை நிலம் = வேதம்! தெளிவே ஏற்படவில்லையாம்!
அப்புறம் ஆழ்வார்களின் ஈரப் பாசுரங்களை, ஈரமாகவே வாசித்த போது தான், "ஆகா...அதுக்குப் பொருள் இதுவா?" - என்ற தெளிவே ஏற்பட்டுச்சாம்!
இப்படிச் சொன்னதற்காக "வேதத்தைக் குறைச்சிப் பேசிட்டாரு", "வேத மாதாவை மதிக்கலை" என்று அவரைத் தள்ளியா வைக்கிறோம்? இல்லை அல்லவா? அதை நம் அன்பர்களும் மனசாட்சியால் "உணர்ந்து" பார்க்க வேணும்!
* வேதங்கள் இறைவனின் பரத்துவத்தை நிலைநாட்டும்!
அவன் ரொம்ப பெரியவன் என்று அவனை "அங்கு" வைத்து, " அங்கு" போக வழியைக் காட்டிச் சொல்லும்!
* பாசுரங்கள் இறைவனின் செளலப்யத்தை நிலைநாட்டும்!
இவன் ரொம்ப எளியவன் என்று இவனை "இங்கு" வைத்து, "இங்கு" போக வழியைக் காட்டிக் கொடுக்கும்!
மக்களே...நினைவில் வையுங்கள்!
வீர-தீர சாகசங்கள், ஞான-கர்ம சாகசங்களை வைத்து...
மற்ற சாம்ராஜ்யத்தைப் வேணும்-ன்னா பிடிக்கலாம்! ஆனால் பக்தி சாம்ராஜ்யத்தைப் பிடிக்க முடியாது!
சுய சாகசங்களால் பிடித்த சாம்ராஜ்யங்கள் கூட, கொஞ்ச தலைமுறைக்குத் தான்! ஆனால் பிரகலாத பக்தி சாம்ராஜ்யம் அப்படி அல்ல!
மோட்சம் என்னும் மந்திரச் சொல்லில் மயங்கி விடாதீர்கள்!
மோட்சம் = அப்பாடா! பிறவிக் கஷ்டமே இல்லாம ஜாலியா இருக்கலாம்-ன்னு சுயநலத்தில் கண் வைத்து ஏமாந்து போகாதீர்கள்!
சுயநலம் இருப்பது தெரிஞ்சிச்சோ...இந்தக் கர்மா செய்யுங்கள், அந்த யாகம் செய்யுங்கள்-ன்னு,
உங்கள் சுயநலத்துக்கு, சுயநலத்தைத் தான் தூக்கிக் கொண்டு வருவார்கள்! மோட்சம் அதுவல்ல!
சம்சார துக்க நிவர்த்தி என்பதே மோட்சம் ஆகி விடாது! சரி, கொஞ்சம் மாற்றி, அந்தமில் பேரின்பம் தான் மோட்சம் என்றும் சொல்லிப் பார்த்தார்கள்!
வெறுமனே அந்தமில் பேரின்பம் தான் மோட்சமா? நல்லா இல்லையே-ன்னு அதற்கும் இறைவன் ஒப்புக்கலையாம்! :)
அப்புறமா, அந்தமில் பேரின்பத்து, "அடியவர்களோடு"...கைங்கர்ய நித்ய நிரைதிஹி-ன்னு மாற்றி எழுதினாப் பிறகு தான் பாடல் ஓக்கே ஆச்சாம்! :)
கூடும் "அன்பினால்" கும்பிடலே அன்றி, வீடும் வேண்டா விறலில் விளங்கினார்!
இறை அன்பா? = அப்படின்னா என்ன? அதை எப்படிப்பா செய்யறது?
நாங்க இறைவன் கிட்ட ஏற்கனவே அன்பாத் தானே இருக்கோம்?
சுப்ரபாதம், திருப்பாவை, அலங்காரம், அந்தாதி, கந்தர் அனுபூதி, ஹ்ருதயம்-ன்னு டைப் டைப்பா எத்தனை பதிவு போடறோம்? :)
பெருசா சொல்ல வந்துட்ட? இறை அன்பு-ன்னா என்ன? சொல்லேன் பார்ப்போம்!
ஒவ்வொன்றிலும்,
* இதைச் செய்தால் எம்பெருமான் திருவுள்ளம் உவக்குமா?
* இல்லை அவன் திருமுகம் வாடுமா?
என்று எண்ணுவதே இறை அன்பு!
* தென்கலை/வடகலை, சைவம்/வைணவம், ஆலயத்தில் இந்துக்கள்/இந்துக்கள் அல்லாதார்-ன்னு விதம் விதமா கோஷ்டி கட்டறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...
* தங்கத்தைப் புழு என்று தரையில் வீசிய வேதாந்த தேசிகருக்கு, தங்கக் கவசம் சாத்த காசு வசூலிக்கறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...
* பதிகங்களை அம்பலத்தில் பாட ஆகமத் தடைன்னு சும்மானா சொல்லிட்டு, அம்பலத்தில் வழுக்கி விழுமாறு நாமே எண்ணெய் ஊற்றுகிறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...
* கோயிலில் மற்ற அடியார்கள் எல்லாம் கால் கடுத்து நின்று கொண்டிருக்க, நாம் மட்டும் செல்வாக்கு காட்டுறோமே! நம்மைக் கூசும் கண்களால் சக அடியார்கள் பார்க்க, சட்டையே பண்ணாமல் சிறப்புத் தரிசனம் செய்கிறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...
* கொல்லாமை என்பது புத்த பகவான் "விதிச்சதாச்சே"! நமக்குப் பிடிக்கலை, நம்முடன் ஒத்து வரலை என்பதற்காக, ஒரு இனத்தையே ரத்தத்தில் மிதக்க விடுகிறோமே = இதனால் புத்த பகவான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...
நாம் செய்யும் பல செயல்களில்,
* இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?
என்று பகவானைப் பாவிக்கப் பழகுங்கள்!
உங்களோடு கூட பாவிக்க, பாவிக்க....திருவாய்மொழி: பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே! அவனைக் கூடுவது தானே மோட்சம்?
(பக்தி For Dummies...தொடரும், எம்பெருமான் உள்ளம் உவக்குமா?...)
Read more »
"எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கிட்டா, இன்னிக்கே மோட்சம்!" என்று "விளையாட்டாகவும்", "சீரியசாகவும்" சென்ற பதிவுகளில் சொல்லி இருந்தேன்!
அறிவினால் மட்டுமே இறைவனை அளந்துற முடியுமா?
"அறிவே தெய்வம்"-ன்னு வேணும்னா சில பேரு சொல்லிக்கலாம்! அதுக்கு பாரதியார் பாட்டு வேற இருக்கு! ஆனால் ஒருக்காலும் அறிவு தெய்வம் ஆகி விடாது! (டிஸ்கி: நம்ம சக பதிவர் பெயரைச் சொல்லலீங்கோ) "அறிவே தெய்வம் இல்லை" என்கிற அறிவே தெய்வம்! :)
பெற்றோர்கள் சொல்லித் தானே, நாம் அவர்களின் பிள்ளை என்றே நமக்குத் தெரிகிறது?
தினம் தினம் அம்மா-அப்பாவை ஆயிரம் கேள்வி கேக்குறோமே? ஆனால் "அந்தக்" கேள்வியைக் கேட்போமா? :) அதே போலத் தான் இறைவனும்!

நாம் இன்னாருக்குத் தான் பிறந்தோம் என்று நம்மில் எத்தனை பேர் "உறுதியாகச்" சொல்ல முடியும்? ஒவ்வொருவரும் பயாலாஜிக்கல் எவிடென்ஸ் கேட்டுக் கொண்டும், காட்டிக் கொண்டும் இருக்க முடியுமா? இப்படி, நம்மையே நாம் 100% அறியாத போது, நாம எப்படி இறைவனை 100% அறிய முடியும்? :)
அட, டெக்னாலஜி ரொம்ப முன்னேறிப் போச்சு, உலகம் ரொம்ப பின்னேறிப் போச்சுப்பா! யாரை நம்பறதுன்னே தெரியலை! அதுனால பள்ளியில் சேர்க்கும் முன்போ, கல்யாணத்துக்கு முன்போ, எல்லாரும் Genetic Test என்னும் மரபியல் சோதனை செஞ்சிக்கிட்டு அவங்கவங்க பெற்றோரை "உறுதிப்படுத்திக்கணும்"-ன்னு சட்டமா கொண்டாற முடியும்? :) அதே போலத் தான் இறைவனை "உறுதிப்படுத்திக்" கொள்வதும்!
அரியவனை - அரி அவனை, அறிவினால் "மட்டுமே" உறுதிப் படுத்த முடியாது!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!
சிறு வயதில் இருந்தே, இவங்க தான் உண்மையான அம்மா-அப்பா என்று எப்படி ஏற்றுக் கொள்கிறோம்? சினிமாவில் வேண்டுமானால், கர்ணன் போல கைவிட்ட குழந்தை, தத்து கொடுத்த குழந்தை-ன்னு க்ளைமாக்ஸில் கொஞ்சம் சூடு பிடிக்கும்!
* திடீர் என்று ஒரு நாள், "உண்மை" தெரிய வந்தாலும், "உண்மை இல்லாத" அம்மா அப்பாவை உதற முடிவதில்லையே! - ஏன்?
* தத்துக் குழப்பம் இல்லாத நிஜமான பெற்றோரைக் கூட, இவங்க தான் அம்மா-அப்பா என்று "உறுதிப்படுத்திக்" கொள்ளாமலேயே உறுதிப்படுத்திக் கொள்கிறோமே? - எப்படி?
அறிவே தெய்வம் இல்லீங்க! அன்பே தெய்வம்!
Knowledge is God என்று யாரும் சொல்லலை! Love is God-என்று தான் மேலை நாட்டவனும் சொன்னான்! இந்தப் பலன் கருதா அன்பினால் தானே அம்மா-அப்பா என்று "உறுதிப்படுத்திக்" கொள்கிறோம்? இல்லை அறிவினாலா? நீங்களே சொல்லுங்க!
ஆக, ஞான விசாரணையால் இறைவனை "உறுதிப்படுத்த" முடியாது!
கர்ம சாதனையால் இறைவனை "உறுதிப்படுத்த" முடியாது!
* கர்ம யோகம் = சடங்கு, மந்திர ஜபம், தந்திர பூஜை, "விதிச்சதைப் பண்ணுறது" ...
* தியான யோகம் = யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், சமாதி...
* ஞான யோகம் = சாதகம், சத்-சம்பத்து, விவேகம், வைராக்கியம், ஜீவன் முக்தி...
என்றெல்லாம் விதம் விதமா அடுக்கிட்டு போகலாம்!
ஆனால் அத்தனையும் "சம்சார துக்க நிவர்த்தி" என்ற ஒரு பொருளின் மேல் கண் வைச்சு தான் பின்னியிருக்கு! அதிலும் "சுயநலம்" உண்டு!
பற்று அறுத்துட்டேன், பற்று கொஞ்சம் கொஞ்சமா போயிரிச்சி-ன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இருக்குற பற்றெல்லாம் அங்க தான் இருக்கு! :))
சென்ற பதிவில் ஹோமம், சம்ஸ்காரம்-ன்னு கர்மா பண்ணுறதை ரொம்ப கிண்டல் அடிச்சிட்டேன்-ன்னு சில நண்பர்கள் தனிமையில் குறைபட்டுக் கொண்டார்கள்!
ஒரு அனானி அன்பர் கேட்கவே கேட்டுட்டாரு! தியான யோகம், ஞான யோகம், 5 Watts Bulb-ன்னு சொன்னது மட்டும் சிரிப்பா இருந்துச்சாம்! ஆனால் கர்ம யோகம் பற்றி மட்டும் தவிர்த்து இருக்கலாமே என்று கேட்டு இருந்தார்! :)
அந்த உரையாடல் அடியேன் சொன்னது இல்லீங்க!
கர்மவாதிகள் உட்பட இன்னிக்கி பலரும் போற்றும் பரனூர் அண்ணா (என்னும்) கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் சொன்னதைத் தான் பதிவில் கொடுத்து இருந்தேன்!
என்னிடம் வழக்கமாக கோபித்துக் கொள்ளும் சில அனுட்டான சீலர்கள், இப்போ பரனூர் அண்ணா கிட்டே போய் கோபித்துக் கொள்ள முடியுமா? :))
மக்களே...யாரையும் குற்றம் சொல்லணும்-ன்னு அடியேன் நோக்கம் அன்று!
கர்மப் பிடிப்பில் கெட்டியாக ஒட்டிக் கொண்டால் ஆத்ம சாஷாத்காரம் தான் தளும்பும்!
பரமாத்ம சாஷாத்காரம் வராது! உள்ளத்தில் பகவத் கருணை ஊறாது என்பதற்காகத் தான் அத்தனை விளக்கங்களும்!
அது உங்களுக்குக் கோபம் ஏற்படுத்தி இருந்தால், வீழ்ந்தெழுந்து கொள்கிறேன்! அடியேனை மன்னிப்பீர்களாக!

சொல்லப் போனால்...நீங்க கிருஷ்ண பரமாத்மாவைத் தான் மன்னிக்கணும்! :)
நானாச்சும் ஏதோ லைட்டாச் சொல்லிட்டுப் போயிட்டேன்! ஆனா அவர் சும்மா பிச்சிப் பிச்சி வாங்குறாரு இந்த ஸோ கால்டு ஆச்சாரத்தை!
சிலர் தனக்குச் சாதகமாகக் காட்டும் அதே பகவத் கீதையில் தான் இதுவும் இருக்கு! :))
யாம் இமாம், புஷ்பிதாம் வாசம், ப்ரவதந்தி அவிபாஸ்சித:
வேத வேத ரதா: பார்த்தா, நான்யத் அஸ்திதி வாதினா 2:42
வேதம் விதிச்சபடி நடக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், அலங்கார புஷ்பம் போல வெறும் கோஷம் தான் இடுவார்கள்! தங்களுக்குப் பிடித்தமான வேத வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, சுயநலமாகக் கையாளுவார்கள்!
காமாத்மனா, சொர்க்க பரா, ஜன்ம-கர்மா-பலப்ரதாம்
க்ரியா விசேஷ பகுலாம், போக ஐஸ்வர்ய, கதிம் ப்ரதி! 2:43
சொர்க்கம், கர்மா, இஷ்டி, ஹோமம்-ன்னு, உலகாயுதமாக, விதம் விதமான சடங்குகளையும் கர்மாக்களையும் செய்து கொண்டு, வீணே காலம் கழிப்பார்கள்!
(அதாச்சும் வேத சாகைகளில் உள்ள கர்ம காண்டங்களிலேயே உட்கார்ந்து கொள்வார்கள்! சடங்கு தாண்டி, அடுத்து, ஞான காண்டத்துக்கு, "பகவானே எல்லாம்" என்று வரவே மாட்டார்கள்! பேச மட்டும் செய்வார்கள்! ஆனால் நடைமுறைப் படுத்த மாட்டார்கள்!)
ந வேத! யக்ஞ தியாய-னைர், ந தனைர், ந ச க்ரியா-பிர்!
ந தபோ-பிர் உக்ரை! ஏவம் ரூப சாக்ய அகம்! 11:48
வேதப் படிப்பாலேயோ, யாக ஹோமங்களாலேயோ,
தட்சிணை மற்றும் கிரியைகளாலோ, தன்னலமான தான தவங்களாலோ,
என்னைக் காண முடியாது! அடைய முடியாது!
(ஏக பக்திர் விசிஷ்யதே என்னும் "ஏக பக்தி" கொண்ட உன்னால்(பக்தனால்) மட்டுமே காண முடியும்!)
உடன் பிறவா சகோதரிகள், உடன் பிறந்த அரசியல்வாதிகள்...எத்தனையோ பூஜை, ஹோமம்-ன்னு விதம் விதமாப் பண்ணுறாங்களே! "விதிச்சபடி" ஆஹூதி எல்லாம் சூப்பராக் கொடுக்கறாங்க தானே? ஆனால்.....

* ஹோமம் செய்பவர்களுக்கும் தெரியும் = ஆசாமிகள் பகவானை அண்ட முடியாது-ன்னு!
* ஹோமம் செய்து வைப்பவர்களுக்கும் தெரியும் = ஆசாமிகள் பகவானை அண்ட முடியாது-ன்னு!
இருந்தாலும் மாங்கு மாங்கு-னு செஞ்சிக்கிட்டு தான் இருப்பாய்ங்க! :))
ஆக, இந்தக் கீதையின் சுலோகங்களில் இருந்து தெரிகிறது அல்லவா?
* ஞான-கர்ம யோகங்கள் தன்னை மட்டுமே உணர்த்தும்! இறைவனை உணர்த்தாது!
* பக்தி யோகம் என்னும் இறை அன்பே பகவானை உணர்த்தும்! அதுவே "உண்மையான" கீதா சாரம்!
இப்போ "லாயக்கில்லை", "Unfit'-க்கு வருவோம்! :)
* ஞான காண்டம் அத்தனையும் எப்போ படிச்சி, கர்ம காண்டம் அத்தனையும் எப்போ பண்ணி, நீ எப்பப்பா மலையேறது?
* நம் பிறப்பையே நாம் 100% அறியாத போது, இதை எல்லாம் படிச்சா அறியப் போகிறோம்?
* அப்படியே அறிஞ்சாலும், அதையெல்லாம் 100% பண்ணவா போகிறோம்? நம்மைப் பத்தி நமக்குத் தெரியாதா? பேச்செல்லாம் பதிவில் தானே? :) பேசும் போது நல்லா இலக்கணமாப் பேசீருவோம்! பாட்டெழுதும் போது கரெக்ட்டா கோட்டை விட்டுற மாட்டோமா என்ன? :))
அதனால் தான்.....
நான் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை! I am Unfit - என்று "சொல்லிச் சொல்லி"ச் சரணாகதி செய்கிறார் மாறன் என்னும் நம்மாழ்வார்! அவரே இப்படிச் சொன்னா, நாம எல்லாம்? :))

* நோற்ற நோன்பிலேன் = கர்ம யோகம் இல்லேன்!
* நுண்ணறிவு ஒன்றிலேன் = ஞான யோகம் இல்லேன்!
* ஒன்றும் ஆற்ற கின்றிலேன் = தியான யோகம் இல்லேன்!
தெரியேன் பாவியனாய், பல தீமைகள் செய்து விட்டேன்!
பெரியேன் ஆயின பின், பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!
இப்படி ஒன்றுக்கும் லாயக்கில்லா நான்...
* அகலகில்லேன் = உன்னை அகல மாட்டேன்!
* புகல் ஒன்று இல்லா அடியேன் = போக்கிடம் வேறொன்று இல்லை!
ஞான-கர்ம-தியான யோகம்-ன்னு ஒரு யோகமும் இல்லை!
அகல மாட்டேன் என்ற அன்பு யோகம் மட்டும் தான் இருக்கு!
* எனக்கு வேற போக்கு கிடையாது! = எனக்கு நீ, உனக்கு நான்!
* உன் தன்னோடு+உறவேல்+நமக்கு = அ+உ+ம் = ஓம்! இங்கு ஒழிக்க ஒழியாது!
புகல் ஒன்று இல்லா அடியேன்...உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே! = இதுவே பரிபூர்ண சரணாகதி!
இனி வரும் பதிவுகளில் கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு, இது சாத்தியாமா-ன்னு பார்ப்போம்!
லைட்டாப் புரிஞ்சி இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! அட, ஒன்னுத்துக்கும் லாயக்கில்லா எனக்கே புரியுது! உங்களுக்குப் புரியாதா? இன்னொரு தபா பதிவை வாசிச்சா போச்சு! :)
டேய் கேஆரேஸ்ஸ்...வார்த்தை ஜாலமாப் பேசிட்டாப் போறுமா? ஆழ்வார் பாட்டில் இருந்து எடுத்துக் காட்டி, ஞான-கர்ம யோகம் எல்லாம் இல்லைன்னு சொல்லிட்டாப் போறுமா?
எங்களுக்கு வேதங்கள் தான் அடிப்படை! வேதாந்தம் தான் அடிப்படை!
ஏதோ லாயக்கு இல்லை, Unfit, இன்னிக்கே மோட்சம்-ன்னு "அ-வைதீகமாப்" பேசுகிறாயே! இதுக்கெல்லாம் ஒரு சுலோகத்தையாச்சும் உன்னால் காட்ட முடியுமா? :)
ந தர்ம நிஷ்டோஸ்மி = நியம நிஷ்டை இல்லை!
நச் ஆத்ம வேதி = வேத வழியில் ஆத்ம ஞானம் இல்லை!
ந பக்திமானு = பெருசா நான் பக்திமானும் இல்லை!
த்வத் சரணார விந்தே = ஆனால் "அன்பினால்" சரணார விந்தம், திருவடிகளைப் பற்றிக் கொண்டேன்!
அகிஞ்சனக: = எனக்கு வேறு கைம்முதல் இல்லை!
அனன்ய கதி: = எனக்கு வேறு கதியும் இல்லை!
எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு புரிந்து கொண்ட நம் ஆழ்வாருக்கு மோட்சம் என்றால்.....அப்படியே புரிந்து கொள்ளும் நமக்கும் இன்னிக்கே மோட்சம்! :))
பொதுவாக வேதங்கள் தான் ஞான பரமானவை! ஞானம் கொடுக்கும்! பேத ஸ்ருதி, அபேத ஸ்ருதி-ன்னு புத்திக்குத் தீனி போடுவது போல் பேசும்!
இந்த ஆழ்வார்-நாயன்மார்களின் பாசுரம் எல்லாம் ஒரே "பாவமா"-ன்னா இருக்கு? "ஞானமா" இதுல ஒன்னும் இல்லையே!
ஆழ்வார் அழுவறாரு! தூது விடறாரு! காதல் அது இது-ன்னு "லோக பரமா"-ல்ல பேசுறாரு? இதுல பெருசா தத்துவம் இல்லேயேப்பா!
சரி, போனாப் போவுது, இதுவும் இருக்கட்டும்! நம்ம பகவானை அவங்களும் பாடிட்டாங்க! வேற வழியில்ல!
* ஆரம்ப நிலை = ஆழ்வார்/நாயன்மார்கள்!
* இறுதி நிலை = வேதம்-ன்னு இருக்கட்டும்!
"மூட" பக்தியில் ஆரம்பிச்சி...படிப்படியா ஞானம், கர்மா-ன்னு முன்னேறி வரட்டும் = இப்படிச் சொல்பவர்களைப் போல பேதைகள் வேற யாருமே இருக்க முடியாது!

வேதாந்த தேசிகர் = பெரிய மகான்! சகல வேத சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்! தமிழில் நூல்கள் சில எழுதி இருந்தாலும், வடமொழியில் பெரும் பெரும் வித்தகர்! சுலோகம்-ன்னாலே ஆயிரம் ஆயிரமாகத் தான் வந்து விழும் இவருக்கு!
இன்னிக்கி ஆச்சாரம் பேசும் பல பேர், இவரைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவார்கள்! வடமொழியில் பல பனுவல்கள் செய்து விட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக, இவரையும் நியம நிஷ்டை என்னும் வளையத்துக்குள்ளே அடைத்து வைத்து விட்டார்கள்! :(
ஆனால் இவரைப் போல உள்ளம் கனிந்த அன்பரைக் காண முடியாது! அப்பேர்ப்பட்ட வேத வித்து!
அவருக்கே வேத வேதாந்தம் படித்து மிஞ்சியது என்னவாம்? = குழப்பம் தான் மிஞ்சியதாம்! ஹா ஹா ஹா! நான் சொல்லலைங்க! அவரே சொல்கிறார்!
"செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!"
தெளியாத மறை நிலம் = வேதம்! தெளிவே ஏற்படவில்லையாம்!
அப்புறம் ஆழ்வார்களின் ஈரப் பாசுரங்களை, ஈரமாகவே வாசித்த போது தான், "ஆகா...அதுக்குப் பொருள் இதுவா?" - என்ற தெளிவே ஏற்பட்டுச்சாம்!
இப்படிச் சொன்னதற்காக "வேதத்தைக் குறைச்சிப் பேசிட்டாரு", "வேத மாதாவை மதிக்கலை" என்று அவரைத் தள்ளியா வைக்கிறோம்? இல்லை அல்லவா? அதை நம் அன்பர்களும் மனசாட்சியால் "உணர்ந்து" பார்க்க வேணும்!
* வேதங்கள் இறைவனின் பரத்துவத்தை நிலைநாட்டும்!
அவன் ரொம்ப பெரியவன் என்று அவனை "அங்கு" வைத்து, " அங்கு" போக வழியைக் காட்டிச் சொல்லும்!
* பாசுரங்கள் இறைவனின் செளலப்யத்தை நிலைநாட்டும்!
இவன் ரொம்ப எளியவன் என்று இவனை "இங்கு" வைத்து, "இங்கு" போக வழியைக் காட்டிக் கொடுக்கும்!
மக்களே...நினைவில் வையுங்கள்!
வீர-தீர சாகசங்கள், ஞான-கர்ம சாகசங்களை வைத்து...
மற்ற சாம்ராஜ்யத்தைப் வேணும்-ன்னா பிடிக்கலாம்! ஆனால் பக்தி சாம்ராஜ்யத்தைப் பிடிக்க முடியாது!
சுய சாகசங்களால் பிடித்த சாம்ராஜ்யங்கள் கூட, கொஞ்ச தலைமுறைக்குத் தான்! ஆனால் பிரகலாத பக்தி சாம்ராஜ்யம் அப்படி அல்ல!
மோட்சம் என்னும் மந்திரச் சொல்லில் மயங்கி விடாதீர்கள்!
மோட்சம் = அப்பாடா! பிறவிக் கஷ்டமே இல்லாம ஜாலியா இருக்கலாம்-ன்னு சுயநலத்தில் கண் வைத்து ஏமாந்து போகாதீர்கள்!
சுயநலம் இருப்பது தெரிஞ்சிச்சோ...இந்தக் கர்மா செய்யுங்கள், அந்த யாகம் செய்யுங்கள்-ன்னு,
உங்கள் சுயநலத்துக்கு, சுயநலத்தைத் தான் தூக்கிக் கொண்டு வருவார்கள்! மோட்சம் அதுவல்ல!
![]() | ![]() |
சம்சார துக்க நிவர்த்தி என்பதே மோட்சம் ஆகி விடாது! சரி, கொஞ்சம் மாற்றி, அந்தமில் பேரின்பம் தான் மோட்சம் என்றும் சொல்லிப் பார்த்தார்கள்!
வெறுமனே அந்தமில் பேரின்பம் தான் மோட்சமா? நல்லா இல்லையே-ன்னு அதற்கும் இறைவன் ஒப்புக்கலையாம்! :)
அப்புறமா, அந்தமில் பேரின்பத்து, "அடியவர்களோடு"...கைங்கர்ய நித்ய நிரைதிஹி-ன்னு மாற்றி எழுதினாப் பிறகு தான் பாடல் ஓக்கே ஆச்சாம்! :)
கூடும் "அன்பினால்" கும்பிடலே அன்றி, வீடும் வேண்டா விறலில் விளங்கினார்!
இறை அன்பா? = அப்படின்னா என்ன? அதை எப்படிப்பா செய்யறது?
நாங்க இறைவன் கிட்ட ஏற்கனவே அன்பாத் தானே இருக்கோம்?
சுப்ரபாதம், திருப்பாவை, அலங்காரம், அந்தாதி, கந்தர் அனுபூதி, ஹ்ருதயம்-ன்னு டைப் டைப்பா எத்தனை பதிவு போடறோம்? :)
பெருசா சொல்ல வந்துட்ட? இறை அன்பு-ன்னா என்ன? சொல்லேன் பார்ப்போம்!
ஒவ்வொன்றிலும்,
* இதைச் செய்தால் எம்பெருமான் திருவுள்ளம் உவக்குமா?
* இல்லை அவன் திருமுகம் வாடுமா?
என்று எண்ணுவதே இறை அன்பு!
![]() | ![]() |
* தென்கலை/வடகலை, சைவம்/வைணவம், ஆலயத்தில் இந்துக்கள்/இந்துக்கள் அல்லாதார்-ன்னு விதம் விதமா கோஷ்டி கட்டறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...
* தங்கத்தைப் புழு என்று தரையில் வீசிய வேதாந்த தேசிகருக்கு, தங்கக் கவசம் சாத்த காசு வசூலிக்கறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...
* பதிகங்களை அம்பலத்தில் பாட ஆகமத் தடைன்னு சும்மானா சொல்லிட்டு, அம்பலத்தில் வழுக்கி விழுமாறு நாமே எண்ணெய் ஊற்றுகிறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...
* கோயிலில் மற்ற அடியார்கள் எல்லாம் கால் கடுத்து நின்று கொண்டிருக்க, நாம் மட்டும் செல்வாக்கு காட்டுறோமே! நம்மைக் கூசும் கண்களால் சக அடியார்கள் பார்க்க, சட்டையே பண்ணாமல் சிறப்புத் தரிசனம் செய்கிறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...
* கொல்லாமை என்பது புத்த பகவான் "விதிச்சதாச்சே"! நமக்குப் பிடிக்கலை, நம்முடன் ஒத்து வரலை என்பதற்காக, ஒரு இனத்தையே ரத்தத்தில் மிதக்க விடுகிறோமே = இதனால் புத்த பகவான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...
நாம் செய்யும் பல செயல்களில்,
* இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?
என்று பகவானைப் பாவிக்கப் பழகுங்கள்!
உங்களோடு கூட பாவிக்க, பாவிக்க....திருவாய்மொழி: பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே! அவனைக் கூடுவது தானே மோட்சம்?
(பக்தி For Dummies...தொடரும், எம்பெருமான் உள்ளம் உவக்குமா?...)

























