Thursday, April 18, 2013

இளையராஜா-"ஒனப்புத் தட்டு"-தமிழ்ச் சினிமாவில் Folk!

உங்கள் காதலி, இளையராஜா ரசிகையாக இருந்தால்...???
ஒரு "ஒனப்புத் தட்டு" வாங்கி,
இளையராஜா படம் போட்ட பேழையில் வச்சிக்,
குடுத்துப் பாருங்களேன்; Sure Love Workout:)

ஒத்த ரூவா தாரேன் - ஒரு
ஒனப்புத் தட்டும் தாரேன்;
ஒத்துக்கிட்டு வாடீ - நம்ம
ஓடைப் பக்கம் போவோம்

மிகவும் பரவலான (பிரபலமான) பாட்டு; ராஜா இசைக்கே உரிய தெம்மாங்கழகு;
திராவிட முன்னேற்றத் திலகம், நம்ம கு"ஷ்"பு அக்கா வளைஞ்சி வளைஞ்சி ஆடிய பாட்டு:)
இந்த பாட்டில் வரும் "ஒனப்புத் தட்டு" = இதை யாராச்சும் பார்த்து இருக்கீகளா?

இதே ராஜா, இதே ஒனப்புத் தட்டைச்...
சின்ன "ஜ"மீன் படத்திலும் போட்டிருக்காரு - "ஒனப்புத் தட்டு புல்லாக்கு" என்னும் பாடல்!
என் தோழி ஆண்டாள், "உக்கமும் தட்டொளியும்" -ன்னு பாடுவா; தட்டு+ஒளி = கண்ணாடி;
அந்தத் தட்டுக்கும் - ஒனப்புத் தட்டுக்கும் என்ன தொடர்பு?

காதுக்கும்-மூக்குக்கும் பாலம் போட்டாற் போல் அமையும், ஒரு அழகான நகை; வனப்பு!
கண்ணாடி (தட்டொளி) போல் மின்னும் - வனப்புத் தட்டு - ஒனப்புத் தட்டு!

இது நாட்டுப்புறத்துக்கே உரிய நகை; அதான் "நாட்டுப்புறப் பாட்டில்" மட்டும் மின்னுது; பட்டணத்துக் காரவுக, பாடுபட்டுத் தான் இதைப் பார்க்க முடியும்:)


நாட்டுப்புறப் பாடல்கள் - தமிழ்ச் சினிமாவில்?
= ரொம்ப அதிகம் கிடையாது; ஆனா அங்கொன்னும் இங்கொன்னுமா மின்னும்;

முழுப் பாடலும் நாட்டுப்புற இசையா வச்சா, என்ன ஆயீருமோ? -ன்னு பயந்துக்கிட்டு...
முதல் பத்தி மட்டும் "நாட்டுப்புறமா" வச்சி,
மீதியை அந்தக் கவிஞர்-இசையமைப்பாளரே மாத்தீருவாங்க! (பாடறியேன் படிப்பறியேன் போல)

ஆனா, முழுக்க முழுக்க, கிராமத்து மணம் வீசுறாப் போல ஒரு பாட்டு?
= அதுவும், செயற்கையா இல்லாம, இயற்கையா?
= டேய், தமிழ்ச் சினிமா -ன்னு சொல்லிட்டு, "செயற்கை இல்லாம" -ன்னு bit போடுறியே; ஒனக்கு ஏன் இந்த பொழப்பு ரவீ? ன்னு வையாதீக:)

* "இயற்கையா" = இருக்கே, "தண்ணீர் தண்ணீர்" -ங்குற படத்துல!
* "இயற்கையா" = இசையும் போட்டாரு, திரையிசைச் சக்கரவர்த்தி, MSV

இந்தப் படத்துல, எல்லாமே பெரிய பெரிய தலைங்க!
= சரிதா, பாலச்சந்தர், கோமல் சுவாமிநாதன், கண்ணதாசன், வைரமுத்து, சுசீலாம்மா, ஜானகி, MSV
= ஆனா, ஒருத்தரும், தன் "Stamp"ஐப் படத்துல நுழைக்கலை; படத்தைப் படமா இருக்க விட்டாங்க! அதான் "இயற்கை" வாசனை;

இந்த ஒரு பாட்டு = சின்ன வயசில் இருந்தே என் உசுருல கலந்துட்ட பாட்டு;
நெஞ்சாங் கூட்டில், குத்திக் குத்தி நிக்கும்!

ஒரு பாட்டுக்கு - பாடல் காட்சி எப்படி அமையணும்-ங்கிற "சோடிப் பொருத்தம்"... Made For Each Other - நீங்களே பாருங்க!


மானத்திலே மீன் இருக்க
மதுரையிலே நீ இருக்க
சேலத்திலே நான் இருக்க
சேருவது எக் காலம்?
(How many sleepless nights under countless stars? இந்த ஏக்கத்தை = நாலே வரியில்?)

அத்து வானக் காட்டுக்கள்ளே
ஆயக் குழல் ஊதையிலே
சாடை சொல்லி ஊதினாலும்
சாடையிலே நான் வருவேன்...
(Just asking him for one signal = "என் கிட்ட வந்துரு"
I will run away to him; நாலே வரியில்?)

காதை வுடு புள்ள; மனசையும்-ல்ல தீண்டிருச்சி?


நாட்டுப்புறப் பாடல்கள் vs சங்க இலக்கியம் = என்ன வேறுபாடு?
* சங்க இலக்கியம் = உடுத்தி நிக்கும்
* நாட்டுப் பாட்டு = அம்மணமா நிக்கும்;

இதைப், "பண்ணத்தி" -ன்னு காட்டும் தொல்காப்பியம்!

என்னடா இவன்..., சினிமாப் பாட்டுக்குக் கூட, தொல்காப்பியர் கிட்ட இருந்தே தொடங்குறான்-ன்னு முணுகாதீங்கப்பா:)
"Old Xerox Man" & krs are deep friends:)


தமிழ்த் தொன்மத்தை, யார் யாரோ, எப்படி எப்படியோ அழிச்சாலும்.., 
அதெல்லாம் தாங்கிக்கிட்டு,
இன்னிக்கி வரை, காத்துக் குடுக்கும் ஒரே நூல் = "தொல்காப்பியம்"; பாருங்க 2000 yrs முன்னாடியே இருக்கும் நாட்டுப்புறப் பாடல்களைக் காட்டுது;

தமிழைச் சட்டம் போட்டு அடைக்காம, 
* Standardization-ன்னு இலக்கணமும் அமைத்து,
* Flexibility-ன்னு, அதே சமயம் புழங்கி விளையாட இடமும் குடுத்து...
Thol Kaapiyar = Hez a True Parent! You can always be on your own & still count on him, in need;

பாட்டு இடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே

இந்தப் பண்ணத்தி (பண் + நத்தி) தான் நாட்டுப்புறப் பாடல்; தனியாப் பண் (ராகம்) அமைக்க வேணாம்....  தானே, பண் - நத்தும்;
குறுந்தொகை போல், இதுக்கு அடி வரை எல்லாம் கிடையாது; Freelance!

அதுவே தானும் பிசியொடு மானும்
அடி இகந்து வரினும் கடிவரை இன்றே

கரிசல் காட்டு எழுத்தாளர் கி ராஜநாராயணன், "கிசி"-ன்னு சொல்லுவாரு உடம்பின் காதல் பசியை;
வயிற்றில் = பசி; உடலில் = கிசி;
தொல்காப்பியர் காட்டுவதோ = பிசி!

எந்த வரையறையும் இல்லாத = புற உறுப்புப் பாட்டைப் "பண்ணத்தி" என்பர்;
இது நாட்டுப்புற மக்களுக்கே உரியது; இது சங்க காலத்தில் இருந்தே இருக்கு!

ஆசைக்கு மயிர் வளர்த்து - மாமா
அழகுக்கொரு கொண்டை போட்டுச்
சோம்பேறிப் பயலுக்கு நான் - மாமா
சோறாக்க ஆளானேனே...

மாமா மேல் ஆசை வச்சவ...
காலத்தின் கோலத்தால், வேற எவனுக்கோ சோறு பொங்க ஆகிப் போச்சே-ன்னு பாடுறா;
கொண்ட கொழுநனைச் "சோம்பேறிப் பய" -ன்னு  பாட முடியுமா சங்கத் தமிழில்?:))

= பாட முடியும்; ஆனா "வரையறை" உண்டு!

உடலால் ஒன்னு, மனசால் ஒன்னு -ன்னு வாழும் வாழ்வையும் சங்கத் தமிழ் காட்டும்; "கைக்கிளை" பற்றிய ஆய்வுப் பதிவு = இங்கே
சங்கத் தமிழ், எந்த மனித உணர்ச்சியும் ஒதுக்காது; "மதங்கள்" இல்லாமல் இயற்கை வாழ்வு வாழ்ந்தவங்க இல்லீயா?

இன்றைய மாற்றுப் பாலினக் காதல், Male பரத்தை (பரத்தன்) எல்லாம் சங்கத் தமிழ் மறைக்காது காட்டும்;
* பெரும்பான்மை உணர்வே = மனிதம்;
* சிறுபான்மை உணர்வு = மனிதம் அல்ல -ன்னு சொல்லாது சங்கத்தமிழ்!

ஆனா, "சோம்பேறிப் பயலுக்கு, மாமா, சோறாக்க ஆனேனே" -ன்னு நேரடியாச் சொல்ல முடியாது சங்கத் தமிழில்..
மாமனை எண்ணி, "உள்ளுறை/ இறைச்சிப் பொருள்" -ன்னு பாட முடியும்!

அதான் சொன்னேன்;
* சங்கத் தமிழ் = உடுத்திக் கிட்டு நிக்கும்
* நாட்டுப் பாடல் = அம்மணமா நிக்கும்



ஒரு சின்ன வேறுபாடு பார்க்கலாமா? ரெண்டு பாட்டுலயும் "நிலா" திட்டு வாங்குது:)
* sanga tamizh song = decent scolding; * folk song = abrupt scolding

(குறுந்தொகை 47 - நெடுவெண் நிலவனார்)
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டு இடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண் ணிலவே

(Hey Moon, Hez coming to see me in the night = Only "see"?:)
இந்த நேரம் பார்த்து, ஏன் இப்பிடி மினுக்குற? கொஞ்சம் வெளிச்சம் கொறைச்சாத் தான் என்ன? = for our puNarchi privacy:)

பாவம், அவனே வேங்கை மரக் காட்டு வழியா, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை-ன்னு, எனக்கு மெத்தை போட வரான்;
எங்கள் களவுக்கு நீ நற்பொருள் அல்ல! = நல்லை அல்லை! நடுவெண் நிலவே)

இதையே பண்ணத்தி (நாட்டுப் பாடல்) எப்படிப் பாடும்?

வெள்ளை வெண் நிலாவே - வெள்ளி
வெளிச்சமான பால் நிலாவே
கள்ள நிலாவே நீ - கருக்கலிட்டால் ஆகாதோ?

ஆலம் விழுது போலே - குட்டி
அந்தப் பிள்ளைத் தலை மயிரை
ஆளு ஒண்ணும் பார்க்காம - குட்டி ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே;

"நல்லை அல்ல"-ன்னு polished-ஆச் சொல்லாம,
"கள்ள நிலா" -ன்னே திட்டுறா;
"குட்டி ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே" -ன்னு குறுந்தொகையில் பாட முடியுமா?:) நம்ம மக்கள், "குட்டித்" தொகை-ன்னு பேரு வச்சிருவாக:)

ஆனா பாருங்க, இது வரை யாரும் காட்டாத உவமை, நாட்டுப்புறத்தில்;
பெண்ணின் கூந்தல் முடிச்சு = ஆலம் விழுது போல!

இருட்டில், அவன் இன்ப ஆட்டத்துக்கு, அவன் கையில், அந்த விழுதே ஊஞ்சலாகிப் போனதோ?
ச்ச்ச்சீ போ, இதுக்கு மேல எழுத எனக்கு வெட்கமா இருக்குடா முருகா!:)


நண்பர்கள் @kanapraba, @kuumuttai அளவுக்கு இல்லாட்டாலும்...
Youtube-இல், இன்னும் சில "தமிழ்ச் சினிமா - நாட்டுப்புறப் பாடல்"-களை எப்பவோ வலை ஏத்தினேன்;  கேட்டுட்டுச் சொல்லுங்க!

ஓடுகிற தண்ணியில், ஒரசி விட்டேன் சந்தனத்தை 
சேந்துச்சோ சேரலையோ, செவத்த மச்சான் நெத்தியிலே? 

ஓலை ஒன்னு நான் எழுதி, ஓட விட்டேன் தண்ணியிலே 
சேந்துச்சோ சேரலையோ, செவத்த மச்சான் கைகளிலே? 

When susheelamma sings ஒரசி விட்டேன், watch the gap; It will be like real உரசி விட்டேன் effect:)
Lyrics: வைரமுத்து Voice: மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா
Music: VS நரசிம்மன் Film: அச்சமில்லை அச்சமில்லை

பொதுவா, பொண்ணுங்க, புருசன் காலடி மண்ணை எடுத்துப் பொட்டு வச்சிப்பாக; ஆனா, என்ன ரவுசு பாருங்க கிராமத்து மண்ணுக்கு? "
ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து, நான் பல்லு வெளக்கப் போறதெப்போ?" :))

இதே பாட்டை, இதே சுசீலாம்மா, முன்னாடியே பாடி இருக்காங்க, ஆனா சீர்காழியோடு:)

என்னாது? சீர்காழி குரலில் நாட்டுப்புறப் பாட்டா? = அதுவும் "ஓடுகிற தண்ணியல ஒரசி விட்டேன்" பாட்டா?
பிள்ளைக் கனியமுது-ன்னு படம்; KV Mahadevan இசை; பாட்டு கெடைச்சா யாராச்சும் குடுங்க Please!


நாட்டுப்புறப் பாட்டில் தான் "Call & Response" ஆக இசை அமையும்;
பக்தி இலக்கியத்தில், பெரும்பாலும் One sided Flow மட்டுமே! (exceptions: ஆண்டாள் & மாணிக்கவாசகர்)
முதல் மரியாதை படத்தில், இந்த நாட்டுப் பாட்டைப் பாருங்க = Call & Response Type!

(he) ஏறாத மலை மேலே - எலந்தை பழுத்து இருக்கு; 
ஏறி உலுப்பட்டுமா? எலுமிச்சம் கண்ணுகளா, எஞ்சோட்டுப் பொண்ணுகளா!

(she) ஏறாத மலை மேலே - எலந்தை பழுத்து இருக்கு; 
ஏறி உலுப்புங்களேன், எளைய கொழுந்தனாரே, என்னாசை மச்சினரே! 

Lyrics: folk (paras added by வைரமுத்து) voice: மலேசியா & ஜானகி
Music: இளையராஜா film: முதல் மரியாதை


குருவிக்கரம்பை சண்முகம் -ன்னு அற்புதமான கவிஞர்;
இது நாட்டுப் பாட்டு அல்ல; ஆனா அந்தவொரு "Feeling"; ராஜா, வேணும்-ன்னே நாட்டுப் பாட்டுல, சரிகமபதநி-யும் கொண்டாந்து சேத்து இருப்பாரு:)

One of the forgotten masterpieces of Ilayaraja!
See how Raja teaches music to folk kids - ஐயோ...ஐயோ... நல்லாக் கேளுங்க; வச்ச மரம் கீழே:)

ஏரியில எலந்தை மரம் - தங்கச்சி வச்ச மரம் 
வச்ச மரம் - தங்கச்சி வச்ச மரம் 
 பூவுமில்ல காயுமில்ல - தங்கச்சி வச்ச மரம் 



தொடர்புடைய பதிவு: தமிழ்ச் சினிமாவில் சங்க இலக்கியப் பாடல்கள்

சங்கத் தமிழும் - உங்க(த்) தமிழும்...
இன்னும் வரும்...
Read more »

Sunday, April 14, 2013

சங்கத் தமிழ் "விஜய வருஷத்" தமிழ்ப் புத்தாண்டு!

அனைவருக்கும் "விஜய வருஷத் தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகள்!

சென்ற ஆண்டின் "தமிழ்ப் புத்தாண்டு" பதிவு பத்தி, ரெண்டு-மூனு பேரு, மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டுக்கிட்டே இருக்காங்க;
தமிழன்பர்கள் போலத் தான் தெரியுறாங்க; Dunno, why ppl. drill down in panthal & getting old posts;

அந்தப் பதிவைப் படிக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்;
அப்போ, ஏதோ "தெரியாத்தனமா" எழுதிட்டேன்;

I don't have much internet in this camp; So a real quickie below;
* "ஜயம்" = வெற்றி;
* "விஜயம்" = "பிரமாண்டமான" வெற்றி;

உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி வேணுமா? வேண்டாமா?
வேணும்-ன்னா, "விஜய வருஷம்" தான் = தமிழ்ப் புத்தாண்டு!


இந்த "விஜய வருஷத்தில்" எந்தக் "காரியம்" துவக்கினாலும், அது "க்ஷேமமா" நடக்கும்;
"சத் காரியங்களும்" வரிசை கட்டி வந்தே தீரும் என்று முன்னோர்கள் வாக்கு;

மண்ணில் விஜய , வருடமழை மிகுதி
எண்ணுசிறு தானியங்கள் எங்குமே - நண்ணும்
பயம்பெருகி  நொந்த  பரிவாரம் எல்லாம்
நயங்களின்றி வாடுமென நாட்டு
- இது "சர்வ முகூர்த்த பஞ்சாங்க" வெண்பா(ம்)

இது எட்டுத் தொகையா? எட்டாங் கிளாஸ் தொகையா?.. யாரு எழுதினது?-ன்னு எல்லாம் கேட்கப் படாது;
பாருங்க, "வருஷத்துக்கு" தமிழ் வெண்பாவே இருக்கு; இதுல இருந்தே தெரியலையா? - "விஜய வருஷமும்" தமிழ் ஆண்டு தான் ஐயா;

"ஜிம்"-க்குப் போவதற்குக் கூட வெண்பா(ம்) இருக்கு; உடல் "ஆரோக்கியம்";
ஜிம்மிலே ஓடிபின், ஜம்மென்று கண்டதையும்
சும்மாச் சவைக்கா திருப்பாயே – நண்பாநீ
உப்பைக் குறைத்த உணவினை உண்டுயினி
தப்பான வாழ்வைத் தவிர்
- இதுல இருந்தே தெரியலையா?- "ஜிம்" சங்கத் தமிழிலேயே இருந்துச்சி-ன்னு?

புத்தாண்டு, புத்தாண்டு-ன்னு கூறு கெட்ட "டுமீல் & டுமீலன்ஸ்" பேத்திக்கிட்டு இருக்காங்க; "ஓவரா"த் தமிழார்வம் தலை விரிச்சி ஆடுது;

1st of all,  தமிழை, எழுத்துப் பிழை இல்லாம எழுத முடியுமா, இவனுங்களால?
2nd of all, "அனர்த்தம்" வந்துறாம, தமிழ் பேசத் தெரியுமா, இவங்களுக்கு?

இலக்கணம் முக்கியமா? தமிழுணர்ச்சி முக்கியமா?
= எலக்கணம் தான்-யா முக்கியம்; சகரிக-மநிநிச;
= ரீதி கெளளையில், "நிஷாதத்தை" அசைக்கலாமோ?
சின்னக் கண்ணன் "அசைக்கிறான்":))



இந்த "விஜய வருஷத்தின் ராஜா" = "குரு பகவான்";
குரு பார்க்க, கோடி "தோஷம்" விலகும்;
வாழ்க்கை-ல்ல நல்லா இருக்கணும்-ன்னு ஆசை இருக்கு தானே? எதுக்கு வீணா, "குரு பகவானை", பகைச்சுக்கிட்டு?

எவர் ஒருவர், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்,  தமிழ்ப்-"பஞ்சாங்கம்" வாசிப்பதைக் கேட்கிறாரோ,
* அவருக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது "ஐதீகம்"
* அவர்களின் "விரோதிகள்" அழிவார்கள்;
* "துஷ்ட" கனவுகள் ஏதும் இல்லாமல் வாழ்வார்கள்;
* "கங்கா ஸ்நானம்" பண்ணின பலன் கிடைக்கும்;

இந்த ஆண்டு "ஆதாயம் 53, விரையம் 56" எனக் கூறப்பட்டுள்ளது;
"ஆதாயத்தை" விட "விரையம்" கூடுதலாக இருப்பதால் அரசுக்கு வருவாய் குறையும்; (even better than CAG forecast)
எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் இருந்தாலும், ஆளும் கட்சியை பாதிக்காது; கருப்புப் பணம் கிடைக்கும்;
நல்ல மழை பெய்யும். அரசாங்க "கஜானா" நிறையும்;

சுக்ல பட்சம், சதுர்த்தி திதி, 
ரிஷப ராசி, மகர லக்னம்,
நவாம்சத்தில் மேஷ லக்னம் 
= இப்படித் தான், "தமிழ்ப்" புத்தாண்டு பிறக்கிறது; ஒங்க கண்ணுக்குத் தெரிகிறதா?

"தன் மானம்" மிகுந்தவர் நீங்கள் (??) ;
உங்களுக்கு 2-வது ராசியில் "வருஷம்" பிறப்பதால், பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள்;
பணப் புழக்கம் கூடும்; உங்களின் "பூர்வ புண்யாதிபதி" சாரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்கள் "அந்தஸ்து" கூடும்;

இதெல்லாம் வாழ்க்கை நன்மைக்கே!
ஏற்கனவே வாழ்க்கையில் ஆயிரம் "கஷ்டங்கள்"; இதுல, நல்லா வாழறதை விட்டுட்டு....
தமிழ்ப் புத்தாண்டு எது? -ன்னு யாராச்சும் கேள்வி கேட்டுக்கிட்டு இருப்பாங்களோ?


சென்ற ஆண்டு,  இங்கே = "தமிழ்ப் புத்தாண்டு" பற்றி ஏதோ "அறியாமையில்" எழுதிட்டேன்;


இன்றைய "இலக்கிய" உலகில்: மேற்கண்ட தமிழ் அறிஞர்கள் எல்லாம் தேவையில்லை; 
= "வணிகத் தமிழ்" அறிஞர்களே, ’அறி’ஞர்கள்! 

"விஷ்ணுபுரம்" தான் தமிழின் ஒரே நாவல்-ன்னு ட்வீட்டத் தெரிஞ்சிருக்கணும்; 
= தமிழ் முனைப்பை விடத், "தன் முனைப்பே" பெரிது; 

தரவு குடுத்தாலே / ஆதாரம் காட்டினாலே...
* ட்விட்டர் பெரிய மனுஷங்க பகையைச் சம்பாதிச்சிக்க வேண்டி இருக்கும்;
* வசவாப் பேசினாக் கூடத் தப்பில்லை; பொண்ணு கூடச் சேந்து, போலீசில் மாட்டி விட்டாக் கூடத் தப்பில்லை; அவங்க கிட்ட கூட உறவாடுவோம்;

ஆனா, வெறுமனே தரவு குடுக்குறவனை?
* ஆயுசுக்கும் மன்னிக்க மாட்டோம்;
* துன்ப காலத்தில் கூட நலம் விசாரிக்க மாட்டோம்;

என் தமிழ்ப் பதிவுகள் = தப்பு தான்!
பெரியவங்க எல்லாரும் மன்னிக்கணும்;

வெறுமனே, "காகைக்கா காகூகை"  -ன்னு சொல் விளையாட்டுப் பதிவுகளா/ கம்ப ரசங்களா இட்டிருக்கணும்; அது மட்டும் தானே தமிழ்??
தமிழ் உணர்ச்சி/ தமிழ் அன்பு -ன்னு, "உணர்ச்சி"யைப் பற்றும் பதிவுகள் தவறல்லவா? உள்-மனதைத் தேடுதலில் ஈடுபடுத்தலாமோ?

அது மட்டுமா? "பகவான் பார்வை - குரு பார்வை".. இதெல்லாம் எனக்கும் வேணும்;
வாழ்க்கையில் நல்லா இருக்கத் தானே ஆசைப்படுவாங்க? பட்ட "கஷ்டம்" எல்லாம் போதும்;

இனிமேல், "சம்போகம்", "சந்தோஷம்" -ன்னு எனக்கு ஒரு வாழ்வைக் குடு முருகா!
இப்பிடி மாறுபட்ட மனசா என்னைப் படைச்சிட்டியே; ஒன்னையே நம்பி வந்துட்டேனே... முருகவா;



குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

மேலே, சிவப்புச் சிவப்பா எழுத்து எதுக்கு? -ன்னு பாக்குறீங்களா?
= அவையெல்லாம் தமிழ்ச் சொற்களே!
நல்லாப் பாருங்க.... சர்வ முகூர்த்த விஜய விருஷம் = இது தமிழ் தானே?

(மனசாட்சி): "இல்ல..."ஸர்வ/ முகூர்த்த/ விஜய/ வருஷ" தமிழ் மாதிரி தெரியல; அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு";

தயக்கமா??? என்ன ஸ்வாமி பேசறீரு?

*சங்கத் தமிழ்க் கடவுள், மாயோன் (எ) திருமால் = முன்னை மரபின் முதுமொழி முதல்வ! 
ஷ் போட்டு-ஷ் போட்டே, "விஷ்ணு" -ன்னு வெற்றிகரமா மாத்தீட்டோம்-ல்ல?

*சங்கத் தமிழ்க் கடவுள், சேயோன் (எ) முருகன் = அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக! 
இவனைத் தான் இன்னும் "பரிபூர்ணமா" மாத்தலை;
ஆனாலும் சுப்ரமணிய ஸ்வாமி தேவஸ்தானம் -ன்னு அறுபடை வீடெல்லாம் எப்பவோ ஆயிருச்சே!

*சங்கத் தமிழ்க் கடவுள், கொற்றவை (எ) சமயபுரத்தாள்;
கொற்றம் + அவ்வை; அவ்வா-ன்னு தெலுங்கிலும் உண்டு = முதுமகள்;
பூர்வகுடி/ நாட்டார் வழக்கமா? போயே போயிருச்சி; "ஸமயபுர ஸ்தல புராணம்" உருவாகி, அங்கும் அஷ்டோத்திர அர்ச்சனை தானே?

Wait Wait Wait, சமயபுர-ஆத்தாளா?
"ஆத்தாள்"??? = ட்விட்டரில் செட்டு (set) சேர்த்துக்கிட்டு... பேசிப் பேசியே நாம தான் அதை bad word ஆக்கிட்டோமே; "அம்பாள்" -ன்னு சொல்லுங்க!

லேசு மாசா, தமிழ் இலக்கணம் எதுக்குப் படிச்சிருக்கோம்?
எவனாச்சும் தமிழ் உணர்ச்சி-ன்னு பேசி, அறியாமல் எழுத்துப் பிழை பண்ணினா, விளாசீற மாட்டோம்?
" டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா, அப்பறம் டுமீல் கோஷம் போடப் போவலாம்"

சுப்ரமணியன் = தமிழ் இல்லீயா?
அப்படீன்னா தமிழ்க் கடவுள் = தமிழ் இல்லீயா?
-ன்னு கேட்டு "பேஜார்" பண்ணீறலாம் ஓய்; ஆடிப் பூடுவாங்க;

* திருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி = தமிழ் தான்!
* அதே போல், சர்வ முகூர்த்த விஜய விருஷம் = தமிழ் தான்; அதுவே தமிழ்ப் புத்தாண்டு!

(மனசாட்சி:) இல்ல... அது அப்பிடியில்ல; தொல்காப்பியம், தொன்மம் -ன்னு தரவு... அதெல்லாம் உண்மை போலத் தான் தெரியுது; அதான்...

யோவ்..
ஆயிரம் "தரவு" இருக்கு ஈழத்துக்கு; ஆனா, எதுனா "புடுங்க" முடிஞ்சுதா?
.......... புரிஞ்சிக்கோ!
சர்வ முகூர்த்த - விஜய வருஷ - "தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகள்;
Read more »

Wednesday, March 27, 2013

சங்கத் தமிழில் காவடி இருக்கா?

பங்குனி உத்திரம் (Mar 27, 2013)
அவன் திருமண நாள் -ன்னு "புராணம்"

புராணம் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை;
எது-ன்னாலும், அவனுக்கும் அவளுக்கும் = திருமணம்! Happy 1st Night, Muruga:)

இன்று, பழனி மலை முழுதும், பலப்பல காவடிகள்;
* சாஸ்திரம் அறியாத எளிய மக்களுக்கும்-முருகனுக்கும் உள்ள நேரடித் தொடர்பு = "காவடி"!
* காவடியை, ஆச்சாரக்காராள் தூக்குவதில்லை; எளிய அன்பர்கள் மட்டுமே தூக்குறாங்க!

வாங்க, இன்னிக்கி... காவடியின் "உண்மையான" கதையைப் பார்க்கலாமா? = சங்கத் தமிழில் காவடி!
* என்னாது, சங்கத் தமிழ்-லயே காவடி இருக்கா?
* அதியமானை எதிர்த்து, ஒளவை காவடி தூக்கினாளா?:)


ஆமாம்!
இலங்கை அரசாங்கத்துக்கு, இந்தியா "காவடி தூக்குது" -ன்னு பொருளே -veஆ மாறிப் போச்சி, இன்னிக்கி;
ஆனா, அன்று?
தன் எதிர்ப்பைக் காட்டவே, ஒரு தமிழச்சி, காவடி தூக்கினாள்!

எதிர்ப்பைக் காட்ட, மாணவர்கள், தங்கள் மனசாட்சிக் கொந்தளிப்பை இன்று தூக்குகிறார்கள்;
முருகா, எத்தனை நாள்...? நான் மடிவதற்குள், ஈழத்தின் மானத்தை ஒரு துளியேனும் காண்பேனோ?

ஈழத் தவிப்பு = உலகம் அறிஞ்ச உண்மை; ஆனாலும் நிலை நாட்ட முடியலையே;
வெளித் தேசம் கூட வேணாம்; சொந்த பாரத தேசத்திலேயே நிலைநாட்ட முடியலையே!

*"சமயப் பொய்"-யெல்லாம் நிலை நாட்ட முடியுது; ஆனா ஒரு உண்மையை நிலைநாட்ட இத்தனை பாடா?
*ஆயிரம் தரவுகள் இருந்தும், நிலைநாட்ட இத்தனை மெனக் கெடணுமா?

= இதுவொரு மனத் தோல்வி-இனத் தோல்வி... தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும்!
= கந்தனுக்குப் பதிலாக, கண்டுகொள்ளாமைக்கு நாம் "காவடி தூக்கி" விட்டோமோ?:(

("காவடி" பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை, murugan.org -இல், ஆசிரியர் Patrick Harrigan கேட்டுக் கொள்ள எழுதியது; அங்கே பதிப்பித்து உள்ளார்கள்)


அரும்பெறல் "மரபின்" = பெரும்பெயர் முருக!
அந்த "மரபின்" தனித்த அடையாளம் = காவடி!


* மொட்டை போடுதல் = திருப்பதியிலும் உண்டு; சமணக் குடும்பங்களில் கூட உண்டு;
* அலகு குத்தல் = அம்மன் கோயில்களில் உண்டு; வெறியாடலும் உண்டு!
* ஆனா காவடி??? = வேற எங்காச்சும் இருக்கா?

நீங்களே யோசிச்சிப் பாருங்க!
இந்த நாட்டார் வழக்கம் = முருகனோடு மட்டும் உறவாடுவது ஏனோ?

இடும்பன் (எ) அசுரன், அகஸ்திய மகரிஷியின் இரண்டு மலைகளைத் தூக்கி வந்தான்; 
பாதி வழியில் கீழே வச்சிட்டுத் தூங்கும் போது...
அது மேல மாம்பழச் சுப்பிரமணியன் aka முருகன், ஏறி நின்னுக்கிட்டான்;

தூங்கி எழுந்த அசுரனோ, மறுபடியும் தூக்க முடியாமல், முருகனை இறங்கச் சொல்ல, Caretaker of the Mountain = ஆளு "க்ளோஸ்";
இன்னொருத்தர் சொத்து மேல முருகன் ஏறி நின்னதும் இல்லாம, அவனைச் சாவடித்தலே = "தர்மம்"":)
அசுரன் சாகும் போது, தன்னைப் போலவே, பக்தர்களும் காவடி தூக்கிட்டு வரணும்-ன்னு வேண்டிக்கிட்டான்; டொட்ட டொய்ங்க்... End of Puranam:)


இதனால் தான் முருகனுக்குக் காவடியா???

= எத்தனை சுலபமா, பூர்வகுடி மக்களின் வாழ்வியல் - தொன்மவியல், அடிபட்டுப் போயிருச்சே???:(
= பண்டைத் தமிழ் மக்களின்/ குறிஞ்சி நில மக்களின் தொன்மம் = காவடி; தமிழ்க் கடவுளின் முருகவியல்!
நினைவில் நிறுத்துங்க: 
"புராணம்" -ன்னு கதையைக் கட்டினா, தமிழ்த் தொன்மம் அழிஞ்சீரும்!:(

போதாக் குறைக்கு, ஒளவை (எ) பெருமை மிக்க சங்கத் தமிழ்ப் பெண்;
ஆனா அவ மேலயும் "புராணக்" கப்சா;

மொத்தம் 6 ஒளவையார்கள், தமிழ் இலக்கியத்தில் (Refer here)
அதிலே, முதலாம் ஒளவை = அதியமான் காலம் (3rd BCE - 2nd CE);

அதியமான் காலத்தில், எப்படி ஒருவர் கைலாஸத்துக்குப் போய், "பழம் நீ அப்பா" பாட முடியும்? அப்படீன்னா...
...இயேசு பிறந்து, கிபி 2 க்குப் பிறகு தான், முருகனே வளர்ந்தான்; பெரியவன் ஆனான்-ன்னு ஆயீருமே?:))

ha ha ha; "புராணத்துக்கு" அம்புட்டு Continuity போதாதுங்க:))

தப்பில்லை! புராணம், புராணமா இருக்கட்டும் (Mythology)! ஆனா, அதை, வாழும் தமிழ்ச் சான்றோர் மேல், "இட்டுக் கட்டக்" கூடாது;
Will you include Great English Poet, Shakespeare in Harry Potter "story" & make him do pooja for Potter?:)
நக்கீரர், ஒளவை = சங்கத் தமிழ் மாண்பு; அதை நாம மதிச்சி நடக்கணும்! "மனசில்" ஓரமா இருத்துவோம்;

(Pl Note: Only the movie is based on such "puranams"; We cannot blame KBS amma for this; She just 'acted' in the movie; She is so immaculate; Her life repeats in my life)
-----
= (திருவிளையாடற் புராணம்);
அ to ஹ = 48 சம்ஸ்கிருத எழுத்தும் 48 சங்கப் புலவரா ஆச்சி; கூடவே 49ஆவதா, சிவபெருமானும் சங்கத்தில் உட்கார்ந்தாரு;
= Are all my great tamizh poets formed from Sanskrit??

இப்படியெல்லாம், தமிழைப் பின்னுக்குத் தள்ளும் "சமயக் கதைகள்"?
அதுவும் கருணை வள்ளலான ஈசனின் பேரைச் சொல்லி? இந்தச் சமயப் போக்கு, மனசுல ஒட்டவே மாட்டேங்குது முருகா...
ஈசனா? மதமா? = எனக்கு ஈசனே போதும்;

= Sorry da Muruga, Even if it is You or Your dubakoor stories, Not at the cost of Tamizh Dignity! அன்றில் இருந்து இன்று வரை, இப்பிடியே இருக்கேனே:( எதுக்கு ஊரார் பகை? என்னை மாத்திறக் கூடாதா, முருகய்யா?
-----
அப்போ, "காவடி" -ன்னா என்னய்யா?
அது எப்படி, தமிழ்த் தொன்மமான முருகனுக்கே உரியதாச்சு? பார்க்கலாமா?


புறநானூற்றில் காவடி?

தமிழ் அகராதியில் சும்மா போயி, பொருள் பாருங்க; காவுதல் = தூக்குதல்;
காவு + அடி = காவடி!
அதாச்சும், தூக்கும் தண்டு = "காவும்" தடி!
மலையில் பாரம் சுமக்க, பூர்வ குடி மக்களுக்கு, இது ஓர் எளிய கருவி (Simple Machine)

Physics-ல படிச்சிருப்பீங்களே? Fulcrum, Lever -ன்னுல்லாம் நெட்டுரு போட்ட ஞாபகம் இருக்கா?:)
A lever is a beam connected to a hinge, called a fulcrum;
Human Fulcrum ஆகும் போது = அதே Lever காவடி ஆகின்றது! இரு புறமும் (எடை) சமன் செய்தல் = Balancing!

Mechanical Advantage of a lever (MA) = Balance of Torque, about the fulcrum = m1/m2 = a2/a1
பயந்துறாதீக; ஒங்கொப்பராண, ஒங்கள 8th Std கூட்டிப் போவ மாட்டேன்:)

இப்படி, எடையைச் சமன் செய்யும், பூர்வ குடிகளின் கருவியே = காவடி!

குறிஞ்சி மக்கள், பாரம் தூக்கிக்கிட்டு, மலை ஏறுவது கடினம்; அதான் எடையைப் பரவி, பின்பு சுமந்து செல்லுதல்!
(மலைப் பிரதேசங்களில், ரெண்டு ஆளுங்களையே இரு புறமும் உட்கார வச்சி, எளிதாகச் சுமந்து விடலாம், காவடியின் உதவியால்)

சரி புரிஞ்சுது; ஆனா காவடி = ஏன் முருகனுக்கு மட்டுமே ஆனது?

* ஏன்னா, முருகன்= குறிஞ்சிக் கடவுள் = மலையும் மலை சார்ந்த இடமும்!
* திருமால்= முல்லைக் கடவுள் = காடும் காடு சார்ந்த இடமும்!

மலைப் பாதையில், இம்புட்டு நீளமாத் தூக்கிச் செல்லலாம்;
ஆனா அடர்ந்த காட்டிலே? =  அந்த நீளத்துக்கு வழியெல்லாம் செடிகொடியில் முட்டும்:)
(#jokeonly: காதலன் முருகன் முட்ட மாட்டான்; அப்பா திருமால் முட்டுவாரு:))

செங்குத்தான மலை; நடந்தாலே மூச்சு வாங்கும்; அதில் பாரம் சுமக்க, எளிய வழி!
அந்த மரபே, அந்த மக்களின் கடவுள் = சேயோன் (எ) முருகனுக்கும் ஆனது;

மற்ற இரண்டு தமிழ்க் கடவுளான திருமாலுக்கோ/ கொற்றவைக்கோ, காவடி ஆகவில்லை! "மலைத்" தெய்வத்துக்கு மட்டுமே ஆனது!

காவடியின் பல்வேறு பெயர்கள், தமிழ் இலக்கியத்தில்!
* காமரம்,
* காத் தண்டு, காவடித் தண்டு,
* காவணப் பத்தி
* காவுப் பொருட்டு

புறநானூற்றிலும் காவடி வருகிறது; தூக்குறது யாரு? = ஒளவை-யாரு!:)


அதியமான் நாடு = தகடூர் (மலை நாடு); 
அதனால், ஒளவையாரும் காவடி எடுக்கின்றார்!

ஒளவையைத் தன் நாட்டிலேயே இன்னும் கொஞ்சம் நாள் வச்சிக்கிடணும்-ன்னு அதியனுக்கு ஆசை;
So, அவளுக்கு மட்டும் இன்னும் பரிசில் குடுக்கலை:)

இது தெரியாமல், ஒளவைக்கோ கோவம்; "போடா, உன் பரிசிலே வேணாம்; நீயாச்சி, நானாச்சி;
கெளம்புறேன்" -ன்னு மூட்டை கட்டுறா, தன் Luggage-ஐ! எதில்? = ஒரு காவடியில்:)

வாயி லோயே வாயி லோயே
பரிசிலர்க்(கு) அடையா வாயி லோயே
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! 

(புறநானூறு 206; வாயில் நீட்டித்த அதியமான் நெடுமான் அஞ்சியை, ஒளவை பாடியது)

* எத்திசை செலினும் அத்திசைச் சோறே = நான் எங்கிட்டு போனாலும் சோறு கெடைக்கும்டா; ஒன்னைய நம்பி என் தமிழ் இல்லை!
* காவினம் கலனே = என் பொருட்களையெல்லாம் காவுகிறேன் (தூக்குகிறேன்); காவு தடியில் (காவடியில்) இதோ தூக்குறேன்; Tata; Bye:)

என்ன வீறாப்பு பாருங்க, செந்தமிழ்க் கிழவிக்கு:)

* இன்னிக்கி "காவடி தூக்குறான்" -ன்னா பொருளே வேற:(  டில்லிக்குக் காவடி எடுக்கும் அமைச்சர் -ன்னா, குனிந்து குனிந்து கெஞ்சுதல்!
* ஆனா, அன்னிக்கி பாருங்க... "காவடி எடுக்கறேன்" -ன்னா, ஒன்னை நம்பி நான் இல்ல, கெளம்பறேன் -ன்னு மான உணர்ச்சி!

ஒளவை மட்டுமா காவடி? பின்னாளில், கம்பனும் காவடி எடுக்குறான்!

அரத்த நோக்கினர். அல் திரள் மேனியர்.
பரித்த காவினர். பப்பரர் ஏகினார் -
திருத்து கூடத்தைத் திண் கணையத்தொடு
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே

(பால காண்டம் - எழுச்சிப் படலம் 768; தயரதன், திருமணத்துக்கு வரும் வழியிலே கண்ட மலைக் காட்சிகள்)

* "பரித்த கா"வினர் = காவடித் தண்டைச் சுமந்து சென்றார்கள்;
* யார்? = பப்பரர் என்னும் மலைவாழ் மக்கள்;
* அரத்த நோக்கினர் = சிவந்த கண்கள்;
* அல் திரள் மேனியர் = கருத்த உடம்பு;
காவடியில் பாரம் தூக்கிக்கிட்டு மலையேறுகின்றனர்;

இது தாங்க, "புராணம் கலவாத", தமிழ்க் காவடியின் கதை!
வாங்க, நாம காவடிச் சிந்துக்குப் போவோம்! 
அங்கே தானே என் மனசுக்குப் பிடிச்ச = இசை = இருக்கு?:)


மொத்தம் எத்தனை விதமான காவடிகள்?

"பால் மணக்குது, பழம் மணக்குது" -என்னும் பாட்டில், ரமணி அம்மாள், பல காவடிகளின் பேரைப் பட்டியல் போடுவாங்க; செம குத்துப் பாட்டு:)

பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்!
சக்கரக் காவடி, சந்தனக் காவடி, சேவற் காவடியாம்!
சர்ப்பக் காவடி, மச்சக் காவடி, புஷ்பக் காவடியாம்!

இது இல்லாம...
பூங் காவடி, காசுக் காவடி, அன்னக் காவடி, விபூதிக் காவடி -ன்னு சுமந்து செல்வார்கள், அவரவர் மனசு வேண்டுதலின் படி!
இப்பல்லாம் பறவைக் காவடி-ன்னு ஒன்னு பிரபலம் ஆயிருச்சி, குறிப்பா மலேசிய - சிங்கையில்;
அதாச்சும் தான் எதுவும் சுமக்காமல், முழுக்கக் குத்திக் கொண்டு, அவரை Crane (அ) Machine சுமக்கும்; பறவை போல் இவர் ஊசலாடுவதால், பறவைக் காவடி!

இப்படியான "அதீத உடல் வருத்திக் கொள்ளல்" பற்றி நான் ஒன்னும் தப்பாச் சொல்லலை;
ஆனா இதிலிருந்து சிறுவர்களுக்கு மட்டுமாச்சும் விலக்கு அளித்து விடுங்கள், Please...

முருகனை, மனசால் எண்ணியெண்ணிச் "சுமக்கும்" இன்பத்தை விட, பேரின்பம் வேறு இல்லை!
மனசால் "சுமந்து" செல்லுதலே நலம்; மெஷின் நம்மைச் சுமத்தல் அத்தனை நலம் அன்று; (என் தனிப்பட்ட கருத்து மட்டுமே; மன்னிக்க)

காவடியாட்டம் இரண்டு வகை:
1) பக்திக் காவடி
2) ஆட்டக் காவடி

பக்திக் காவடி பற்றி மேலே பேசினோம்;
ஆட்டக் காவடி அப்படியல்ல! அது ஒரு நாட்டுப்புறக் கலை!

ஒரு தண்டிலே, அலங்காரமாக் கூடு கட்டியிருக்கும்; மயில் இறகுகள் சொருகியிருக்கும்; விதம் விதமாய் ஆட்டம்!
* தலை, நெற்றி, தோள்
* முதுகு, கழுத்து, வயிறு
இப்படிப் பல உறுப்பிலும் வச்சி வச்சி, முன்னும் பின்னும் ஆட்டும் கலை!

நாதசுரம்-தவில் இசை!
சில சமயம்... பம்பை, கிடுகிட்டி, தமுக்கும் அடிப்பாங்க; ஆனா மெட்டு எப்பமே அந்தப் புகழ் பெற்ற மெட்டு தான் = காவடிச் சிந்து;

தோளில் தான் காவடியை நிறுத்துவாங்க;
கையால அடவு செஞ்சிக்கிட்டே, காவடியைத் தலைக்குக் கொண்டாந்து, சுழற்று சுழற்று -ன்னு சுழற்றுவாங்க;
கையில் பிடிக்காமலேயே, இத்தினி சுத்து சுத்தினாலும், அது கீழே விழாது!

என்னால இப்பிடியெல்லாம் ஆட முடியாது:)
கிராமத்துப் பூசையில், ஆயா(பாட்டி) பாடி, ஊருக்கே எடுத்துக் குடுப்பாங்க போல;
ஒவ்வொருத்தராச் சுமந்து போறதோட சரி;

தோழனோடு எப்பவாச்சும் ஒரு முறை போகும் போது, முருகனுக்குக் காவடி எடுக்கணும்-ன்னு மனசுக்குள்ள ஒரு ஆசை!


* பின்னாளில் வந்த சிற்றிலக்கியங்கள் = ஒன்னுல கூடக் காவடி பற்றிப் பேச்சில்லை!
* சந்தம் செய்யவே வந்த நம் சொந்தக் கவி = அருணகிரியும், ஏனோ காவடி பற்றி ஒன்னுமே பாடலை;

அதனால் என்ன?
19th CE-இல் புண்ணியம் கட்டிக் கொண்டார் ஒரு "தெலுங்கர்" = தமிழ்க் கடவுளை!
அவர் பேரு = அண்ணாமலை ரெட்டியார்;
காவடிச் சிந்தைப் பாடிப் பாடிப், பிரபலம் ஆக்கினார்;
* அதுக்காக, காவடி பிறந்ததே = 19th CE-இல் தான்-ன்னு அவசரப்பட்டு முடிவு கட்டீறக் கூடாது;
* அதற்கும் முன்பே, எளிய மக்கள் - நாட்டார் வழக்கில் இருந்தது தான்; ஆனா இலக்கிய எல்லைக்குள் வரலை;

திருமங்கை என்ற முன்னாள் கள்வன் - பின்னாள் ஆழ்வார் (7th-9th CE); இதை இலக்கியத்துக்குள் கொண்டு வந்து கொடுத்தார்;
நந்திபுர விண்ணகரம் என்னும் ஊருக்குப் போவும் போது, வழியில் அலுப்பு தட்டாம இருக்க, எசப்பாட்டாய், பெருமாள் மேல் பாடிய "சிந்துப் பாடல்கள்"!

= இதுக்குப் பேரு வழிநடைச் சிந்து!
= இதையே, காவடி தூக்கிக்கிட்டு பாடினா, காவடிச் சிந்து!

"சிந்து" என்றால்  3x3  சீராய், அடுக்கும்!
= குறளடி, சிந்தடி, அளவடி, நெடில் அடி, கழிநெடில் அடி -ன்னு தமிழிசைக் கூறுகள்; யாப்பு இலக்கணமும் கூட;

செந்திலில் பொங்கிடும் அலைகள்  (3) - திருச்
செந்தூர் முருகனின் கலைகள் (3) - கந்த
வேல் ஆனது  சூரா திபன்  (4),
மேல் ஆனதைக்  கூறா க்கிய (4)

வீரா அதி தீரா (3)

பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு) -ன்னு "சாஸ்த்ரீயமா" இருக்காது; நேரடியாச் சரணம்; முருகனே சரணம்:)

இந்த மெட்டு பிரபலமாகி விட்டதால், இன்று கர்நாடக இசையிலும் பாடுறாங்க; ஆனா, உன்னி கிருஷ்ணன் முதலான பல பேரும் "இழுத்து இழுத்து"ப் பாடுறாங்க; அந்தோ!
காவடிச் சிந்தின் அடிநாதமே அந்த "வேகம்" தான்; சும்மாக் குத்துப் பாட்டு கணக்கா, காலு தானாவே ஆடணும்!:)
கழுகுமலைக் கோயிலின் முன்பு...
சென்னிக் குளநகர் வாசன் - புகழ்
தேறும் அண்ணாமலைத் தாசன் - செப்பும்
செகம் மெச்சிய மதுரக்கவி
அதனைப்புது வரையில் புனை 
தீரன் அயில் வீரன்!

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழி போதினில்
அமராவதி இமையோர் செவி 
அடைக்கும் அண்டம் உடைக்கும்!

"உடைக்கும்" -ன்னு உடைக்குறா மாதிரிப் பாடணும்; இழுக்கக் கூடாது:)
ரெட்டியார், அப்படித் தான் மெட்டு போட்டாரு!
கழுகுமலை முருகன் மீதும், சென்னிக்குள முருகன் மீதும், அவரு போட்டுள்ள பாடல்கள், சும்மா "கும்"-ன்னு இருக்கும்!

பின்னால் வந்த தமிழ்த்-தேசியக் கவி, நம்ம சுப்பிரமணிய பாரதியும், இந்த மெட்டில் சில கண்ணிகளைச் செஞ்சிருக்கான்;
எல, ரெட்டியாரு-பாரதியாரு எல்லாரும் ஒரே ஊர்க்காருவக தானே-ல்ல?:)

பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கெளமாரன்
பணிசுப்பிர,  மணியற் கருள் அணிமிக் குயர், தமிழைத் தரு
பக்தர்க் கெளிய சிங்காரன் ...


தூக்கு மேடையில் ஒரு காவடிச் சிந்து:

"ஆர்மோனியம்" காதர் பாட்சா -ன்னு ஓர் இசைக் கலைஞர்;
அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப் பாட்டிலே அவருக்கு ஓர் ஈர்ப்பு;

இசுலாமியர் தான்; ஆனாலும், கழுகுமலை முருகன் மீது ஈடுபாடு;
"காதர்" பாட்சா = "காவடிச் சிந்து" பாட்சா ஆகிவிட்டார்:)

ஆனா, பாவம் ஏதோவொரு வழக்கில் சிக்கிக்கிட்டாரு போல; அப்பாவிக்குத் தூக்குத் தண்டனை;
"உன் கடைசி விருப்பம் என்ன?" = தூக்கு மேடையில் அதிகாரி கேட்ட போது,
"காவடிச் சிந்தை ஆர்மோனியத்தில் ஆசை தீரப் பாடணும்" என்றார் பாட்சா;

சுருளிமலை மேவும் சீலா - உனைத்
தோத்தரித்தேன் சுப்ரமண்ய வேலா - பசுந்
தோகை மயில் - மீதில் ஏறி
வாகுடனே - காத்(து) அருளும்
துய்யா முரு கைய்யா!

கேட்டார்கள், மனம் மயக்கும் தமிழிசையை; ஒரு தாள வாத்தியமும் இல்லாம, தானாவே இசை கூட்டும் சந்தம்!
நேரம் கடந்து போனதே தெரியாமல், அதிகாரிகள் ரசித்துக் கொண்டிருக்க... முடிவில் தூக்கு மேடை ஏறினார் காதர் பாட்சா!

ஆனால், உடன் இருந்த வழக்கறிஞர், ஒரு புதுப் பிரச்சனையைக் கிளப்பினாரு...

"காதர் பாட்சா என்னும் இவரை, மாலை சரியாக 6:00 மணிக்குக், உயிர் பிரியும் வரை, தூக்கில் தொங்க விடுங்கள்" - இதுவே நீதிபதியின் தீர்ப்பு;

ஆனால் காலம் கடந்து விட்டது; 6:45 pm
"தண்டனை உரிய காலத்தில் நிறைவேற்றப்படாததால், ஒன்று ரத்து செய்ய வேண்டும், இல்லை அப்பீல் செய்ய வேண்டும்"
- விதிகளை அந்த அலுவலர் சுட்டிக் காட்ட... அன்று "தலை" தப்பிய பாட்சா, பின்பு நீதிமன்றத்திலும் "தலை" தப்பினார்!

என் "தலை" வைத்து... உன் இணையடி காக்க!
முருகா, என் தலையை வைத்தாச்சும், உன்னை நான் காப்பேன்-டா, நீ என்னைக் காக்காவிடினும்...


பங்குனி உத்திரக் காவடிப் பதிவு இதுவே;
காவும் = (தூக்கும்)
காவு + தடி = காவடி!

அந்தக் காவடிக்கு நாயகனே! என் காதலுக்கும் நாயகனே!


* அரும் பெறல் மரபின் பெரும் பெயர் =  காவடி!
* பூர்வ குடிகளின் தமிழ்த் தொன்மம் = காவடி!

சங்கத் தமிழ்க் கடவுளாம் முருகனின்,
சங்கத் தமிழ்க் காவடி வாழி!
Read more »

Friday, August 10, 2012

முருகனின் கடைசி "வகுப்பு"!

(ஆடிக் கிருத்திகைப் பதிவு: Aug-10)

"அருணகிரி" = இது, முருகனைப் பாடவே பொறந்த ஒரு பேரு!
பாடும் பணியே பணியாய் அருள்வாய் -ன்னு... தானே குடுக்கும் வாக்குமூலம்!

* முதலில் பாடத் துவங்கியது = முத்தைத் தரு = திருப்புகழ்
* கடைசியில் பாடி நிறைந்தது = சிவ லோகமே = திருவகுப்பு

திருப்புகழில் சந்தம் கொஞ்சும்;
ஊர் ஊராகச் சென்று பாடின அனுபவம் தெரியும்;
பழசை மறக்க மாட்டாது கணிகையரைத் திட்டும் கோபம் புரியும்;
தன் நூலைத் தான் பாடிப், பிறரும் பாடுகிறார்கள் என்று பெருமை கூடத் தொனிக்கும்...

ஆனால் திருவகுப்பிலோ, இவை ஒன்றுமே இராது!
தான் பாடியது என்று சொல்லாமல், ஒரு பக்தன் முற் பிறவியில் பாடிய திருப்புகழ் -ன்னு, யாரோ பாடியது போல் சொல்லுவார் - ஏன்?

ஏன்-ன்னா, அருணகிரி, திருவகுப்பை...
 "கிளியாய் இருந்து பாடினார்"
என்பது வழக்கு! = இது ஒரு கதை! பார்ப்போமா?

சம்பந்தாண்டான் என்ற காளி உபாசகனுக்கு அருணகிரியைக் கண்டாலே ஆகாது; ஏன்?

காரணம் தெரியாது! கருத்துக்கள் பிடிக்காது!
மனசிலே இனம் புரியாத அசூயை!
இப்படி முருக உள்ளம் கொண்டார்களுக்கு எதிரிகள் தானே அமைந்து விடுவது ஒரு வாடிக்கை! வேடிக்கை!

* மாற்று சமயத்தவர் = வில்லிபுத்தூரார் திருத்திக் கொண்டார்!
* ஒரே சமயத்தவர் = சம்பந்தாண்டான் திருத்திக் கொள்ளவில்லை!

நோயுற்ற மன்னனின் பிணி தீர்க்க, பாரிஜாத மலரை, அருணகிரியால் கொண்டு வர முடியும் -ன்னு மன்னனிடம் போட்டுக் கொடுத்தான் சம்பந்தாண்டான்;

வேறு வழியின்றி அருணகிரியும் செல்ல வேண்டிய நிலைமை;
ஆனால் தேவர் உலகுக்கு உடலோடு செல்ல முடியாதே;
தன் உடலை அண்ணாமலைக் கோபுரத்தில் கிடத்திவிட்டு, உயிர் ரூபத்தில் சென்று, மலர் கொண்டு வந்தார் அருணகிரி!

ஆனால் அதற்குள், சம்பந்தாண்டான் கூட்டம், கோபுரத்தில் கிடத்திய உடலை இறக்கி, மண்ணிலே புதைத்து விட்டது;
மீண்டு வந்தவருக்கு மறுபடி உடல் கிடைக்கவில்லை; எத்தனையோ சுகித்த உடல், சுகித்துப் பின்பு சகித்த உடல்!

அருகே இருந்த மாண்ட கிளி ஒன்றின் உடலில் புகுந்து, மலரை ஈய,
மன்னன் பிணி தீர,
அருணகிரிக்குப் பிறவிப் பிணியும் தீர்ந்தது! = "உத்தமக்" கிளி!

ஆம், கிளியாய் இருந்து, அருணகிரி பாடிய கடைசிப் பாடல்களே = திரு வகுப்பு!
கிளி உருவிலேயே, களி கொண்டார்!
அதன் பின்னர், கந்தனின் கைத்தலத்தில் போய்க் கிளியாய் அமர்ந்து விட்டார் அடிகள்! "சிவலோகமே" என்று அவரே சொல்லி முடிக்கிறார்!


சேவலும் - மயிலும் மட்டுமே அவன் பறவைகள் என்னாது, தோழி கோதையின் கிளியும், அவனுடைய பறவையே ஆகி விட்டது!
ஆடும் பரி - வேல் - அணி சேவல் என
பாடும் கிளியே, நானாய் அருள்வாய்!


"முருகு" என்னும் பொருளைப் பலவிதமாக வகுத்துச் சொல்லுதல் = வகுப்பு!

* வேல் வகுப்பு
* மயில் வகுப்பு
* சேவல் வகுப்பு
* வேடிச்சி வகுப்பு (வள்ளி)
* சீர் பாத வகுப்பு
* ஆலய வகுப்பு

-ன்னு மொத்தம் 18 வகுப்புகள்!
நமக்கும் இந்தக் காலத்தில் 18 வகுப்புகள் இருக்கு-ல்ல? 12 ஆண்டுகள் பள்ளியில், 4 ஆண்டுகள் கல்லூரியில், 2 ஆண்டுகள் முதுகலையில்
= மொத்தம் 18 வகுப்புகள் நமக்கும் வருகிறது அல்லவா?:)

திருவகுப்பில் இன்னும் சில வகுப்புகள் பின்னாளில் எழுதிச் சேர்க்கப் பட்டதாகச் சொல்லுவார்கள், 25 வகுப்புகளாக!
ஆனால், இறுதி வகுப்பு = சிவலோக வகுப்பு!
"அரு-உரு கெட, இரு வினை கெட, இன்பம் தேக்கிய அன்பின் சிவலோகமே" என்று சேர்ந்து விட்டார் அருணகிரி!

இன்று நாம் பார்க்கப் போவது, திருப்பழனி வகுப்பு!
* எந்த வினையும் அணுகாமலே -ன்னு தொடங்கி
* தென் பழனி முருகேசனே -ன்னு முடிவுபெறும்


இந்தப் பாடல், பசும்பொன் தேவர் திருமகனின் விருப்பப் பாடல்;
பல மேடைகளில் இதைப் பாடி விட்டே, தன் உரையைத் துவங்குவார் முத்துராமலிங்கர்!
அவருடைய கணீர் குரலுக்கும், ஏற்ற இறக்கங்களுக்கும், இந்தத் திருவகுப்பு ஒரு பெருவகுப்பு!

இதற்குப் பொருள் சொல்ல வேணும் என்பது...
தில்லி வாழ் நண்பர் பாலசுந்தரம் (@bala_bose) அவர்களின் நெடுநாள் கோரிக்கை!
இன்று ஆடிக் கிருத்திகையின் போது, கை கூடியது! இதோ:


எந்த வினையும் பவமும் ; எந்த விடமும் படரும்
எந்த இகலும் பழியும் ; எந்த வழுவும் பிணியும்
எந்த இகழ்வும் கொடிய ; எந்த வசியும் சிறிதும் - அணுகாமலே

வினை = செயல்
அடுத்தவர் நமக்குச் செய்யும் செயல், நாம் அடுத்தவருக்குச் செய்யும் செயல் = நல்ல செயல் செய்யுறோமா? கெட்ட செயல் செய்யுறோமா?

பவம் = பிறப்பு
அனு-பவம் = பிரதியாக, ஞானம் பிறப்பது

வினை செஞ்சாத் தான், பிறப்பு வரும்; வினை இல்லையேல் பிறப்பும் இல்லை!
ஆனா, வினை செய்யாம இருக்க முடியுதா?
"சும்மா" இருங்களேன் பார்ப்போம் ஒரு அஞ்சு நிமிசம்:)

சும்மா இருக்கும் திறம் அறியேம்!
அப்போ என்ன தான்யா வழி? = என்னால சும்மா இருக்கவும் முடியாது; ஆனா பிறக்கவும் கூடாது:))
தன் வினை தவிர்த்து, உன் வினை போதும் முருகா!
இந்த வினையால், கந்த வினையால், பிறப்பு வாராது.....

எந்த வினையும், எந்தப் பிறப்பும் வேணாம்!
எந்த விடமும், எந்த இடரும் வேணாம்!
எந்தச் சண்டையும் (இகல்), எந்தப் பழியும் வேணாம்!
எந்த வழுவும் (குற்றமும்), எந்தப் பிணியும் வேணாம்!
எந்த இகழ்ச்சியும், எந்த வசியும் (பிளவும்) வேணாம்!

= முருகா, இவை யாவும் என்னை அணுகாமலே...


எந்த இரவும் தனிமை ; எந்த வழியும் புகுத
எந்த இடமும் சபையில் ; எந்த முகமும் புகலும்
எந்த மொழியும் தமிழும் ; எந்த இசையும் பெருமை - சிதறாமலே

இரவில் தனிமை = ரொம்ப கொடியது!
அனுபவித்தவன் சொல்லும் போது தெரியும்! இந்த வரியை அப்படித் தான் எழுதுகிறேன்! (3:30 am)

எது தனிமை? 
= உடன் இருக்க வேண்டியவர்கள் இல்லாமல் போவது;
இருக்கிறேன் -ன்னு சத்தியம் செய்து குடுத்தவர்கள், இல்லாமல் போவது!

இப்படித் தனிமை புகுந்து வாடினாலும்...
எந்த மொழியிலும், என் சொந்த மொழியிலும் (தமிழிலும்)..
இசை = மானம்/ புகழ்; "ஈதல் - இசைபட வாழ்தல்"
எந்த இடத்திலும், எந்தச் சபையிலும்..
என் மானம் சிதறாமல்...

வந்தனை செய்து ; உன்சரண - நம்புதல் புரிந்த அருள்
வந்து அநுதினம் தனிலும் ; நெஞ்சில் நினைவின் படி
வரம் தர உவந்தருள் ; இதம் பெறுவது அன்றி நெடு - வலைவீசியே

கந்தனை வந்தனை செய்து
உன் சரணமே சரணம் என்று நம்புதல் புரிந்து, நெஞ்சிலே அவனையே தேக்கி
நான் இப்படியே வாழ்ந்து விட...
வரம் குடு முருகா! வரம் குடு முருகா! = இதுவே எனக்கு இதம்!

வஞ்ச விழி சண்டன் ; உறுகின்ற பொழுதும், "குமர
கந்த" என நன்கு அறையவும் ; தெளிவு தந்து உயிர்
வருந்து பயமும் தனிமை-யும் தவிர, அஞ்சல் என வரவேணுமே!!

பெரிய வலை (பாசக் கயிற்றை) வீசி, கோபப் பார்வை பார்க்கும் எமன் (சண்டன்)..
அவனைச் சொல்லித் தப்பில்லை; பண்ணது நானு! அவன் என்னை வாட்டும் போது கூட,
"ஐயோ" என அலறாமல், "ஐயா" என அழைக்கணும்!
குமரா, கந்தா -ன்னு உன்னைப் பேர் சொல்லிக் கூப்பிடும் இன்பம்!

முருகா, இனி ஒரு கணம், என்னைத் "தனிமையில்" இருக்க விடாதே! அஞ்சல் என வர வேணுமே!
நீ வா முருகா, என் தனிமை போயீரும்!
நீ வா முருகா, அஞ்சல் என வர வேணுமே!



தந் -தனன தந் -தனன ; டிண் -டிகுடி டிண் -டிகுடி

குண்ட மட குண்ட மட ; மண்டம் என நின்றும் உர
சந்தி மிலை பம்பை துடி ; திண்டிமம் முழங்கும் ஒலி - திசை வீறவே

தந் தனன, டின் டிகுடி -ன்னு தாளம் இசைக்க, ஆடி வா முருகா!
அணையில் ஓடி வரும் நீர் போல்,
சந்தி, பம்பை, துடி (உடுக்கை), திண்டிமம் (முரசு) -ன்னு பல ஒலிகள் கொட்ட, ஓடி வா முருகா!

தண்ட அமர் மண்ட அசுரர் ; மண்டை நிணம் என்று அலகை
உண்டு உமிழ்தல் கண்டு அமரர் ;  இந்திரன் வணங்கு பத
தண்டை சிறு கிங்கிணி ; பலம்பிட வரும்பவனி - மயில்வாகனா

மாண்ட அசுர சக்திகளின் கொழுப்பை, அலகால் உண்டு உமிழும் உன் மயில்!
அது கண்டு, அமரர்கள் பலரும் வணங்க..
உன் பாதங்களில்...
தண்டை, கிங்கிணி, சதங்கைகள் பலம்பிட, பவனி வா, மயில் வாகனா!


செந் தளிரை முந்து படம் ; என்றுள மருண்டு நிறை

சந்தன வனம் குலவு ; மந்தி குதி கொண்டு அயல்
செறிந்த கமுகின் புடைப ; துங்கிட வளைந்து நிமிர் - மடல்சாடவே

குளத்தில் உள்ள தாமரைத் தண்டுகள்; அதைப் பாம்பு -ன்னு நினைத்துப் பயந்து...
குரங்குகள் குதிக்கின்றன சந்தன வனத்திலே!
அருகிருந்த பாக்கு மரத்தில் தாவி, பாம்பு தானா? என்று நிமிர்ந்து பார்க்க, அந்தக் குதியலில் பாக்கு மடல் எல்லாம் சிதறி வீழ..

சிந்திய அரம்பை ; பல-வின் கனியில் வந்துவிழ
மென் கனி உடைந்த சுளை ; விண்ட நறை கொண்டு சிறு
செண்பக வனங்கள் வளர் ; தென்பழனி அம்பதியின் - முருகேசனே!!

* இளங் கமுகு (மெல்லிய பாக்கு), மரத்தின் மேலே இருக்கு!
* வெடித்த பலா, மரத்தின் கீழே இருக்கு!
* செண்பகப் பூக்களின் தேன், கொடிக்கும் கீழே இருக்கு!

குரங்குக் குதியலில் பாக்கு சிதறி, வெடித்த வேர்ப்பலாவில் வீழ,
பாக்கும் பலாவும் சேர்ந்து செண்பகப் பூந்தேனில் வீழ
சுவை கூட்டும் காடு! அப்படியான காடுகள் நிறை பழனி மலை!
என் அய்யா முருகா! அந்தக் காட்டிலே தொம் தொம் என்று ஆடி வா! என் முன்னே ஓடி வா!

என்னை இனியொரு கால்...
தனிமையில் வைக்காமல், தனிமயில் கொண்டு,
என் ஆவிக்குத் துணைவனாய்...
என் கூடவே இரு முருகா! - திரு முருகா, இரு முருகா!!


madhavipanthal.podbean.com
Read more »

Wednesday, July 04, 2012

Test Your PaaQ - புதிரா? புனிதமா?? தமிழ்ப் பாக்கள்!

#365பா = நண்பர்கள் வட்டத்தில் பலரும் அறிந்த ஒரு வலைப்பூ!

தினம் ஒரு பா = தினமும் தமிழ் கொஞ்சும் சோலை!
அதில் தமிழ்த்தேன் மாந்தும் தும்பிகள் பலப்பல! நானும் ஒர் தும்பி!

இன்று 365th day of 365பா!
இந்தத் தமிழ் முயற்சி, "பல்லாண்டு பல்லாண்டு" என வாழ்த்துமாறு, பந்தல் வாசகர்களை மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
இது = தினம் ஒரு பா மட்டுமல்ல!
இது = தினம் ஒரு உணவு.... பல தமிழ் ஆர்வலர்களுக்கு!

ஒவ்வொரு நாளும்.....
* ஒவ்வொரு தமிழ்ப் பாவைப் பற்றிப் பேசி,
* அதிலுள்ள இலக்கிய/ இலக்கண இன்பங்களை நுகர்ந்து,
* தமிழ் வரலாற்றிலே தோய்ந்து,
* கவிஞர்/ எழுத்தாளரைப் பற்றி மேலும் அறிந்து,
* இன்னும் பல...
மிக முக்கியமாக, தமிழைக் = கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

* தள ஆசிரியர் = நண்பர் என். சொக்கனுக்கு மனமார்ந்த "வாழ்த்துகள்"!:)
* தமிழ்த் தும்பிகளான = @RagavanG, @amas32, சிவ-ஆனந்தன், பழ.கந்தசாமி, பலப்பலருக்கும் வாழ்த்துக்கள்!


முக்கியமான நிகழ்வுகளை = புதிரா? புனிதமா?? (கேள்வி-பதில் போட்டி) வைத்துக் கொண்டாடுவது, பந்தலில் வழக்கம்!
முருகனருள்-100, கண்ணன்பாட்டு-100, போல்..... 365பா-365! Enjoy this Tamizh Quiz:)

* எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால்? போன்ற எளிய கேள்விகளும் உண்டு!:)
* சினிமாப் பாட்டில் வரும் சங்கப் பாடல் கேள்விகளும் உண்டு!
* பத்தே கேள்விகள் - காப்பி அடிப்பது உங்கள் பிறப்புரிமை!:)

அனைத்து பதில்களும் இங்கே "பாத் தேடல்" -இல் தேடினால் எளிதில் கிடைக்கும்:) = http://365paa.wordpress.com/?s=(searchterm, ex: குறுந்தொகை)
அனைத்து கேள்விகளும் 365Paa வில் வந்த தகவல்களே!

முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பரிசு உண்டு!:)
அங்கே தேர்வை முடித்து விட்டு, இங்கே உங்கள் மதிப்பெண்ணைக் கையொப்பம் இட்டுப் போகவும்:)
இதோ வினாத்தாள்! = Test Your PaaQ... Your Time Starts Now:)

Read more »

Sunday, June 10, 2012

தமிழ்: ஊர்-பேர்-விகுதிகள்!

வணக்கம் மக்கா!
சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க!
ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அள்ளிப் போடுறது வழக்கம்! ஏன்?:)

Fresh மாவு, புளிக்கத் துவங்கும் போது, தூவுற உப்புக்கு மகத்துவம் அதிகம்!
கெட்டிப்படும் போது கலந்தா, "குப்பு"ன்னு பூக்கும் = இட்லி நம்பிக்கையோ, தோசை விஞ்ஞானமோ... நாம் அறியோம்:)

அதே போல, பல ஊர்களின் பெயர்கள், ஆரம்பத்திலேயே வந்து விடுவதில்லை!
குடியேறிய பின், ஏதோவொன்று கெட்டிப்பட்டு, அதுவே அந்த ஊரின் பேராகத் தூவப்படுகிறது! நாளடைவில், "குப்பு"-ன்னு பூத்து, அழகுடன் பரிணமிக்கிறது!

ஊர்ப் பெயர் விகுதிகள் = பட்டி, பாளையம், குடி, புரம், பட்டினம்....

* ஊர் = வேற வேற பேரா இருந்தாலும்,
* ஊர்களின் விகுதி = ஒன்னே போல இருக்கும் மாயம் என்ன?
யோசிச்சிப் பார்த்து இருக்கீங்களா?

ஊர்ப் பேரில் இருக்கும் விகுதியை வச்சிக்கிட்டே, அந்தூரு...தெக்கத்தியா-வடக்கா? செட்டிநாடா-கவுண்டம் பாளையமா?...
அட அம்புட்டு ஏன்...., முல்லை - குறிஞ்சி - மருதம் - நெய்தாலா?-ன்னு கூடக் கண்டுபுடிச்சீறலாம்!:))
தமிழக ஊர்களை எடுத்துக் கொள்ளுங்கள்!
- பட்டி ன்னு முடிஞ்சா... பெரும்பாலும் மருதைப் பக்கம்
- பாளையம் ன்னு முடிஞ்சா... கோவைப் பக்கம்
- குடி ன்னு முடிஞ்சா... தெக்கத்தி (அ) செட்டிநாட்டுப் பக்கம்
- பட்டினம் ன்னு முடிஞ்சா... கடற்கரை ஓரம்

தமிழகம் மட்டுமல்ல!
* ஈழத்திலும் இது உண்டு - துறை, மலை, இறவு ன்னு..
* மலையாளத்தில் = குளம், சேரி
* கன்னடத்தில் = ஹள்ளி, சந்த்ரா
* தெலுங்கிலும் உண்டு = பேட்(டை), கொண்டா ன்னு

இப்படி.... ஊர்ப் பெயர்களில் ஏதோவொரு ஒழுங்கு ஒளிஞ்சிக்கிட்டுத் தான் இருக்கு!
அதைச் சன்னமா, நறுவிசா, பிட்டுப் பிட்டுத் தின்பதே... இப்பதிவின் நோக்கம்! = தமிழ்: ஊர்-பேர்-விகுதிகள்!


தொல்காப்பியம் = 2000+ ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் காலக் கண்ணாடி!
தொல்காப்பியரு, அவரா நாலு பேரை எழுதி, இதான்டா ஒங்க எல்லை ன்னு இட்டுட்டுப் போவல! ஏற்கனவே மக்களிடம் வழங்கியதைத், தொகுத்துத் தருகிறார்!

* முல்லை
* குறிஞ்சி
* மருதம்
* நெய்தல்
எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே!

முதலில் முல்லை! பின்னரே குறிஞ்சி! - வியப்பா இருக்கு-ல்ல?:)

நாம, இன்னிக்கி மனப்பாடப் பாட்டுல சொல்லுற வரிசை வேற! பின்னாளில் இலக்கியத்தில் கலந்த சமய அரசியல்!
ஆனா, தொல்காப்பியர் பதிஞ்சி வைச்சது, அறிவியல் பூர்வமான sequence; சிறுபொழுது/ பெரும் பொழுது

* முல்லையின் பொழுது = மாலை/ மழைக் காலம்
* குறிஞ்சி்யின் பொழுது   = யாமம் (இரவு)/ குளிர் காலம்

மாலைக்கு அப்பறம் தானே இரவு?
மழைக்கு அப்பறம் தானே குளிர் காலம்?
= அதான் முல்லைக்குப் பிறகு குறிஞ்சி!

* முல்லை = காத்து இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
* குறிஞ்சி = புணர்தலும், புணர்தல் நிமித்தமும்

காத்திருந்து, ஏங்ங்ங்கி..... அப்புறம் புணர்தலின் இன்பம் ஒங்களுக்குத் தெரியுமா?:))

இப்படித் தான்... முல்லை, குறிஞ்சி ன்னு இயற்கையா வச்சாரு தொல்காப்பியர்! ஆனா நாம...
* முல்லை = திருமால்
* குறிஞ்சி = முருகன்
ன்னு வருவதால், வரிசையையே மாத்தீட்டோம்:) பின்னாள் பதிப்பகங்கள்/ பண்டிதர்கள் செய்த வேலை! எதை ஒன்னுமே சமய நோக்கோடவே சங்கத் தமிழில் கலந்தால் வரும் ஆபத்து இதான்!:(

இந்த முல்லை-குறிஞ்சி & மற்ற திணைகளில் வரும் கருப்பொருட்கள் = ஊர்ப் பேரு விகுதிகள்;
இன்னிக்கி, அதெல்லாம் இருக்கா? போயிந்தே, போயேபோச்சு ன்னு போயிருச்சா?
ஒவ்வொரு ஊராத் தொட்டுப் போவோம், கூடவே வாங்க! :)


குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

1) முல்லை (காடும், காடு சார்ந்த நிலம்):

* காடு ஆர்க்காடு, ஏர்க்காடு, ஆலங்காடு, களக்காடு

* பட்டி = ஆநிரை (ஆடு/மாடு) மேய்த்தல் என்பதால் பட்டி
கோயில்பட்டி, செவல்பட்டி, ஆண்டிப்பட்டி, வாடிப்பட்டி, தி. கல்லுப்பட்டி

(மதுரைக்காரன், மதுரைக்காரன் தான்யா! புதுசா வந்த ஊருக்கும் HarveyPatti ன்னே பேரு வைக்குறான்!
நாமத் தான் Sunrise City, Temple Towers ன்னு சென்னையில் கண்ட பேரையும் வச்சி, காலாவதி ஆவுறோம்:))

* பாடி = ஆநிரைகளைக் காக்க, பாடி வீடு அமைத்துத் தங்குதல்
வேலப்பாடி, மேலப்பாடி, ஆயர்ப்பாடி

* காவு = கா (சோலை) என்று பொருள்
ஆரியங் காவு, புல்லிக் காவு, கொல்லிக் காவு (கேரளத்தில்);

கா+விரி = பல சோலைகளை விரித்துப் பாய்வதால் காவிரி!
ஆனா, இந்தக் "காடு"/"கா" என்பதை "வனம்" ஆக்கி விட்டது, சம்ஸ்கிருதப் பரவல்!:(
* புளியங் காடு = திண்டி வனம்! (வடமொழியில், திண்டி-ன்னா புளி)
* முல்லைக்கா = மல்லீவனம்!
* மரைக் காடு = வேதாரண்யம்

மரைக் காடு = மான்கள் வாழும் காடு!
மரை ஆன் கறந்த, நுரை கொள் தீம் பால், 
மான் தடி புழுக்கிய, புலவு நாறு குழிசி

ஆனா "தல" புராணம் உருவாக்கணுமே? என்ன செய்யலாம்? = ஒத்தை எழுத்தை அசைப்போம்...
மரை = மறை ன்னு ஆக்கீருவோம்...

வேதங்களே வந்து வழிபட்ட 'ஸ்'தலம்! => வேதக் காடு => வேதாரண்யம் ன்னு ஆக்கியாச்சு! பேஷ் பேஷ்!:))
இப்படித் தான் எழுத்து-க்-கள் = போதை தரும் எழுத்து ன்னு, ஒத்தை எழுத்தைக் கிளப்பி விட்டு, அந்தத் தமிழ்ச் சொல்லே இல்லாமப் பண்ணிடுவாங்கோ:( "நகரம்" தமிழா? ன்னு கேட்டவுங்க தானே!:(

* தோப்பு, பொழில் என்ற ஊர்களும் உண்டு!
பைம்பொழில் (பம்புளி), சேத்தியாத் தோப்பு

* மந்தை = முல்லை நிலத்து ஆடு/மாடுகளை ஒட்டி வந்த பெயர்
புஞ்சை மந்தை, நஞ்சை மந்தை ன்னு, எங்க வடார்க்காடு பக்கம் உண்டு!
ஒத்தைக் கல் மந்தை (Ooty) = தோடர்கள் வாழும் மந்தைப் பகுதி!

இங்கிலீசுக்காரன் வாயில் சிக்கி, ஒத்தக் கல் மந்தை =  Oota ca Mund ஆகி விட்டது:)
இது குறித்த தனித்த கட்டுரைகள் உண்டு! இப்படியே, வேர்ச்சொல் ஆய்வாளர்களும் கருதுகின்றனர்!

2) குறிஞ்சி (மலையும், மலை சார்ந்த நிலம்)

* மலை: மலை என்ற நேரடிப் பெயர்; ஆனைமலை, கொல்லிமலை, திரிகோணமலை (ஈழம்), அண்ணாமலை, கழுகுமலை

* கோடு = மலை முகடு என்ற பொருள்
திருச்செங்கோடு, திருவித்துவக்கோடு, கோழிக்கோடு (கேரளம்), கசரக்கோடு (Kasseragode, Kerala)

ஆங்கிலத்தில் எழுதும் போது, kodu->Kassera-gode ஆகி விட்டது; இங்கிலீஷ்காரன் செஞ்சது;
அதை எள்ளி நகையாடுறோமா? இல்லை AdaiyaaRu Ananda Bhavan ன்னு வாங்கித் திங்குறோமா?
ஆனா, Mulla Periyar -ன்னா மட்டும், பெரியார்-குல்லா போட்ட முல்லாவா? -ன்னு ட்விட்டரில், "இலவச" நையாண்டி நர்த்தனங்கள்:( 

Triplicane Fine Arts -ன்னு தான் இன்னிக்கும் சங்கீதம் பாடுறான்; அங்கே Thiruvallikeni Fine Arts ன்னு பாடத் துப்பில்லை!
ஆங்கிலத்தில், Adaiyaaru -ன்னு எழுத மாட்டோம்; Adyar தான்! ஆனா Mulla Periyar ன்னா மட்டும் எகத்தாளம்; 
தமிழ் இலக்கணம் படிச்சதே, அன்பர்களின் "தமிழ் உணர்ச்சி"யை மட்டம் தட்டத் தானே? என்ன பொழைப்போ? முருகா:(

* குன்றம் = சிறிய மலை
திருப்பரங் குன்றம், திருக்கழுக் குன்றம், நெற் குன்றம், பூங் குன்றம்

* குறிச்சி = குன்றக் குறவர்களின் வாழ்விடம்
பாஞ்சாலங் குறிச்சி, ஆழ்வார் குறிச்சி, கள்ளக் குறிச்சி

* பாறை = மலையை ஒட்டிய பெருங் கற்கள்
வால்பாறை, பூம்பாறை, அம்பாறை (ஈழம்), சிப்பிப் பாறை

* கல் = திண்டுக்கல், நாமக்கல், வாரங்கல் (ஆந்திரம்), ஒகேனக்கல்

(ஹொகே-ன-கல் = புகை எழும் கல்,
கன்னடத்தில் ஹொகே = புகை; அருவியால்.. புகை எழும் கல்)

3) மருதம் (வயலும், வயல் சார்ந்த நிலம்):

* ஆறு = நேரடிப் பெயர்; திருவையாறு, மணிமுத்தாறு, ஆழியாறு, கயத்தாறு,
எங்கூரு வாழைப்பந்தல் பக்கம் செய்யாறு

* துறை = Banks ன்னு ஆங்கிலத்தில் சொல்வது வழக்கம்!
=> வெறுமனே இருந்தா = கரை
=> மக்கள் இறங்குறாப் போல இருந்தா = துறை

காங்கேசன் துறை (ஈழம்), மயிலாடுதுறை (மாயவரம்), திருவாவடுதுறை, சிந்து பூந்துறை, செந்துறை
# மயிலாடு துறை = மயிலை வெரட்டிட்டு,  "மாய" வரம் ஆக்கீட்டோம்:)
# குரங்காடு துறை = குரங்கை வெரட்டிட்டு, வெறும் ஆடுதுறை ஆக்கீட்டோம்

பொருநை (தாமிரபரணி) யின் கரையில் = குறுக்குத் துறை ன்னே ஒரு ஊரு! அம்புட்டு அழகு!
என் முருகன் ஆத்துக்குள்ள மூழ்கி, வெளிய வருவான் = Scuba Diving Guy:)

மொத்த ஆலயமே, தண்ணிக்குள் மூழ்கி, வெளிய வரும்.... இங்கெல்லாம் இன்னொரு முறை போகணும்..... மனசுக்குப் பிடிச்சவங்களோடு, தோளில் சாய்ஞ்சிக்கிட்டு, முருகன் கதையைப் பேசிக்கிட்டே..!
---------------

அரங்கம்:  ஒரே ஆறு, இரண்டாய்ப் பிரிந்து, மீண்டும் ஒன்றாய்க் கூடும், இடைப்பட்ட திட்டு/ துருத்திக்கு = "அரங்கம்" ன்னு பெயர்!

திருவரங்கம் = எந்தை, அரவணை மேல் துயில் அமரும் அரங்கம்! ஆழ்வார்கள் பதின்மரும் பாடிய ஒரே தலம்!

மொழிமுதல் "அ"கரத்தை வெட்டி, அதை ரங்கம்-ன்னு ஆக்கி, ஸ்ரீ சேத்துருங்கோ:)
ஆனா எந்த ஆழ்வாரும் சீரங்கம், ஸ்ரீரங்கம்-ன்னே பாடவே மாட்டாரு! அணி, திரு-வரங்கம் அய்யோ! அரவணை அழகில் பட்டேன்!

அரங்கம் = எப்படி நாடக மேடையில், ஒரு பக்கமா நுழைந்து, இன்னொரு பக்கமா, நாடக மாந்தர்கள் வெளியேறுவாங்களோ....
அதே போல், ஆறு.... ஒரு பக்கமாய் விரிந்து, இன்னொரு பக்கமாய் இணைவதால் = அரங்கம் என்ற தீந்தமிழ்ப் பெயர்!
---------------

* கூடல் = ஆறுகளின் கூடல்! திருமுக்கூடல், கூடலூர், பவானிக் கூடல்

* ஓடை, மடை = வயலுக்குப் பாயும் நீர்; காரனோடை, பத்தமடை, பாலாமடை

* ஏரி = பாசனத்துக்குச் சேமிக்கப்படும் நீர்; மாறனேரி, சீவலப்பேரி, பொன்னேரி, நாங்குநேரி

*ஏந்தல், தாங்கல் = சிற்றேரி; மழை நீரை ஓட விட்டு ஏந்துவதால் = ஏந்தல்!
கொம்புக்காரனேந்தல், வேடந்தாங்கல், பழவந்தாங்கல்

* குளம் = மக்களின் அன்றாட நீர்த் தேவைக்குச் சேமிக்கப்படும் நீர் (குளிக்க, குடிக்க, துவைக்க..)
பெரியகுளம், விளாத்திகுளம், பெருங்குளம், கருங்குளம்

* ஊருணி = குளம் போலவே! ஆனால் குடிக்க மட்டும்!
பேராவூருணி, மயிலூருணி

* கேணி, கிணறு = இது ஊற்று நீரால் சுரப்பது! (மழை நீர் அல்ல)
திருவல்லிக்கேணி, கிணத்துக்கடவு, ஏழுகிணறு, நாழிக்கிணறு

* வயல், விளை = இது நேரடி வேளாண் நிலங்கள்!
புதுவயல், நெல்வயல், திசையன்விளை, ஆரன்விளை

* பழனி, கழனி = இதுவும் வயலே! ஆனால் நீர் நிறைந்த வயல்!
தென்பழனி, நடுக்கழனி
(மேலே வயல் சூழ்ந்த பழனிமலைப் படத்தைப் பாத்துக்கோங்க:)

Important Question: பழனியா? பழநியா??
பழம் + நீ = பழநி என்பதெல்லாம் வெறும் புராணக் கதையே!:))

என் முருகனைத் தோத்தவனாக் காட்டுறதல, உங்களுக்கு என்னய்யா அப்படியொரு இன்பம்? All Cheaters!:)
Hey honey! Everytime when I come to your temple, I bring only Mango for u!You are the Winner da!:)

Jokes apart..
பழனம் = வேளாண் நிலம்!
சேல் உலாம் பழனம், செங்கழு நீர்ப் பழனம்
இதான் பழனி, கழனி ன்னு ஆகும்!
"இயற்கை" கொஞ்சும் முருகனை, "பழனி" ன்னே எழுதலாம்! பழம் நீ அல்ல!

4) நெய்தல் ( கடலும், கடல் சார்ந்த நிலம்) 

கரை = நேரடிப் பெயர்; கோடியக்கரை, கீழக்கரை, சேதுக்கரை, மணக்கரை

துறை = துறைமுகத்தை ஒட்டிய பெயர்; குமரித் துறை, கொற்கைத் துறை, காயல் துறை
(இது மருத நிலத்துக்கும் உண்டு! அங்கே ஆற்றுத் துறை, இங்கே கடல் துறை)

பட்டினம் = கடற்கரை நகரம்
காவிரிப் பூம் பட்டினம், குலசேகரப் பட்டினம், நாகைப் பட்டினம், காயல் பட்டினம்
(பட்டணம் = பெரு நகரம்; பட்டினம் = கடற்கரை நகரம்)

பாக்கம் = சிற்றூர்
பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், வில்லிப்பாக்கம், புரசைப்பாக்கம்....
அடடா....சென்னையில் தான் எம்புட்டு பாக்கங்கள்!:))

(பட்டினம் = Seaside Town, பாக்கம் = Seaside Hamlet
மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்றே சிலப்பதிகாரம் பேசும்)

குப்பம் = கடற்கரைக் குடியிருப்புப் பகுதிகள்
காட்டுக் குப்பம், நொச்சிக் குப்பம், சோலைக் குப்பம்...
(மீனவர் பகுதி என்றும் கொள்ளலாம்; ஆனா பரதவர்/ மீனவர்களே இருக்கணும் ன்னு அவசியம் இல்லை; மருத்துவர், அலுவலர் பலரும் உண்டு)


5) பாலை:

பாலை-ன்னு தனித்த நிலம் இல்லை!
அந்தந்த நிலங்களே, அவற்றின் இயல்பு கெடின், பாலை ஆகும்!

* காடான திருவேங்கடம், காட்டுத் தீ பற்றி எரிஞ்சா = பாலை!
* துறைமுகப் பட்டினம்,  கடல் கொண்டு போனால் = பாலை!

சேர நாடு முழுக்கவே மலை->குறிஞ்சி -ன்னு முடிவு கட்டீற முடியாது!
அதான் தொல்காப்பியர், "அரசியல் அடிப்படையில்" பிரிக்காம, "இயற்கை அடிப்படையில்" பதிஞ்சி வைச்சாரு!

எல்லா ஊர்களிலும், நால்வகை நிலங்களும் இருக்கலாம்! (அ) ஒரு சிலது மட்டுமேவும் இருக்கலாம்!
அடிப்படையில் முல்லை-குறிஞ்சி = ஒன்னுக்குள்ள ஒன்னு; மலையில் காடு உண்டு! காட்டில் மலை உண்டு!

முல்லை-குறிஞ்சி = ஆதி குடி!
காட்டு மக்களே இடம் பெயர்ந்து, நாகரிகம் கண்டனர்;

சேயோன்-முருகன்

மாயோன்-பெருமாள்

* முன்னை மரபின் முதுமொழி முதல்வ = திருமால்
* அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக = முருகன்

பண்டைத் தமிழ்த் தெய்வங்கள்!
ஆறு-தலை, நாலு-கை ன்னு கதைகள் ஏற்றப்படாத, நடுகல்-இயற்கை வழிபாட்டில் அமைந்த தமிழ்த் தொன்மங்கள்!

காட்டைத் திருத்தி நாட்டாக்கிய போழ்து => மருதம் = வயல்!
பண்பாடு வளர வளர, முல்லை-குறிஞ்சி மக்களே, இடம் பெயர்ந்து, மருதம் கண்டார்கள்!
தங்கள் தொன்மமான திருமாலும், முருகனும்..., முல்லை-குறிஞ்சிக்குள் மட்டும் அடைபடாமல், எல்லா நிலங்களிலும் பரவியது, இதனால் தான்!

* திருச்செந்தூரில் இருப்பது முருகனே அல்ல! நெய்தலில் எப்படி முருகன் இருப்பான்?
* திருமலையில் இருப்பது திருமாலே அல்ல! குறிஞ்சி-ல எப்படித் திருமால் இருப்பாரு?
- ன்னு டைப் டைப்பாக் கிளப்பும் "அறி-வாளி"கள் நம்மிடையே உண்டு:))

அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் = எந்தச் சார்பும் இல்லாத, சமணப் பெருமகனாரான இளங்கோ அடிகள் தான்!
திருப்பதி மலை மேல் நிற்கும் மாயவனையும், செந்தூரில் கொஞ்சும் முருகனையும் சிலம்பில் படம் பிடித்துக் காட்டுகிறார்!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மாமலை உச்சியின் மீமிசை
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்திச்
செங்கன் மால் நெடியோன் நின்ற வண்ணமும்
...
...
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே!

கொற்றவை என்பவளும் தமிழ்க் கடவுளே!
ஆனால், இவளைப் பாலை நிலத்தில் வைத்து விட்டனர் = ஏன்னா இவள் பாலை நிலத்தில் வாழ்ந்த கள்வர் - எயினர்களின் தெய்வம்!

கொடுமையான கள்வர் வாழ்க்கை, நாகரீக மேம்பாடு இல்லாத காரணத்தால், இவள் சங்கத் தமிழில் சற்றே அடைபட்டுப் போனாள்!
ஆனால், பின்னாளில், ஊர் தோறும் ஆலயம் கண்டாள்!

வேந்தன் = அரசன்! வருணன் = கடல் காற்று!
மாறிக் கொண்டே இருப்பதால், இவர்கட்கு தனித்த அடையாளமோ, ஆலயமோ, கூத்தோ, துறையோ இல்லை!
மக்கள் வாழ்வியலில் கிடையாது! வெறும் நில அடையாளங்கள் மட்டுமே; வேந்தனை இந்திரன் ஆக்கியது, பின்னாள் "புராணம்":)


பொதுவான "ஊர்" விகுதிகள்:

மேலே பார்த்த ஐந்திணை விகுதி மட்டுமில்லாமல், பல பொது விகுதியும் இருக்கு!

* ஊர் = இது எல்லா இடங்களுக்கும் வரும்!
திருவாரூர், திங்களூர், கஞ்சனூர், நாவலூர், மூவலூர், குறையலூர்... ன்னு அளவே இல்ல!
ஆழ்வார் - நாயன்மார் பாடல் பெற்ற ஊர்களுக்குத், "திரு" ன்னு முன்னால் சேர்த்துக் கொள்வதும் வழக்கம்:)

* நாடு = ஒரத்தநாடு, வழுதிநாடு, வயநாடு (கேரளம்)

* புரம்/ புரி = காவலை உடைய நகர்;
காஞ்சிபுரம், பல்லவபுரம் (பல்லாவரம்), சோழபுரம், திருவனந்தபுரம் (கேரளம்)

* குடி = சான்றோர்கள் ஒன்றி வாழும் இடம்; குடி-இருப்பு!

நல்ல "குடி"யில் பிறக்கணும், "குடிப்" பிறந்தார் ன்னு சொல்றோம்-ல்ல? குடி-ன்னா சாதி அல்ல! குடி = சான்றோர் சமூகம்!
தூத்துக்குடி, இளையான்குடி, காரைக்குடி, குன்றக்குடி
(என் தோழனின் ஊரும் தூத்துக்குடி தான்! எனவே அவனும் சான்றோன் தான்:))
----------------

வீட்டின் பல அமைப்புகளைக் குறிக்கும் ஊர்கள்:

* இல் = இல்லம்; மருதில், அன்பில், செந்தில்! => சேந்தன் + இல் = செந்தில்!

* அகம் = திருவேடகம், பாடகம், ஏர்-அகம் (சுவாமிமலை)

* வாயில்/ வாசல் = வீட்டுக்கு வாயாக (நுழைவு) இருப்பதால் = வாய் + இல்;
திருமுல்லை வாயில், சித்தன்ன வாசல், குடவாசல்

* முற்றம் = சத்திமுற்றம், குளமுற்றம்

* பள்ளம், மேடு= பீளமேடு, பெரும்பள்ளம்

* சேரி = பல குடிகள் "சேர்ந்து" வாழ்வதால் சேரி; இன்னிக்கி Slum ன்னு ஆக்கீட்டோம்:(
புதுச்சேரி, பறைச்சேரி, சாவகச்சேரி


கடேசீயா....போரை/ தொழிலை அடிப்படையா வைத்தும் பல ஊர்கள்....

பாளையம் = படை வீரர்கள் தங்கும் ஊர்; பாளையக் காரர் ன்னே பேரு!
பெரிய பாளையம், பாப்பா நாயக்கன் பாளையம், இராச பாளையம், கோபிசெட்டிப் பாளையம், மேட்டுப் பாளையம்....

கோவை/ கொங்கு பகுதியில் பாளையங்கள் நிறைய; பின்னூட்டத்தில் கொட்டுங்க மக்கா:))

படைவீடு = முருகனின் படை வீடு வேற! அது ஆற்றுப்படுத்தும் வீடு = ஆற்றுப்படை!
இது, மெய்யாலுமே "படை"-வீடு (Soldiers Barracks)!
படவேடு (ஆரணி) = படைவீடு! மணப்பாடு (Manappad) = மணற் படை வீடு

கோட்டை = படைகள் சூழ, மன்னனின் அரண்
செங்கோட்டை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை...

பேட்டை = தொழில் சார்ந்த ஊர்கள்
செவ்வாய்ப்பேட்டை, சூளூர்ப்பேட்டை, வண்ணாரப்பேட்டே, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை...

"பேட்டை ராப்" என்று புகழ் பெற்ற சங்க இலக்கியப் பாடலை, இயக்குநர் சங்கர் கிட்ட கேட்டு வாங்கிக்குங்கப்பா!:)
எனக்கு மூச்சு முட்டுது...dei muruga, panneer soda open; வர்ட்டா?:))

நன்றி:

1) Twitter-இல் இந்த சுவையான உரையாடலைக் கிளப்பிய சக ட்வீட்டர்களுக்கு நன்றி!
குறிப்பாக, @ArulSelvan, @nRadhakn, @rexArul, @scanman, @drTRM, @spineSurgeon, @mayilSK, @ezharai, @psankar, @0SGR, @dheepakG

2) டாக்டர். ரா.பி. சேதுப் பிள்ளை - ஊரும் பேரும் - Published by: Palaniappa Brothers, திருச்சி

3) பல தகவல்கள் பகிர்ந்து கொண்ட, நல்-நண்பர், ஐயா, தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP