Thursday, September 18, 2008

இறைவனுக்கு எது பிடிக்கும்? - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - Part 2

ஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை! ஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக வருங்காலத்தில் நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே! ஐயகோ! - ஜய விஜயர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்...கருமுகிலான் யோசிக்கிறான்! சென்ற பதிவு இங்கே!
(மன்னிக்கவும்! பாக்டிரீயாக் காய்ச்சலின் காரணமாக, ஓரிரு வாரமாய் தொடரைப் பதிய முடியவில்லை! சென்ற பகுதியை ஒரு எட்டு பார்த்து விட்டு வந்து விடுங்கள்; தொடர்ச்சி/Continuity புரிந்து விடும்)

"ஆகா! இவர்களுக்குத் திருவிளையாடல் ஆடித் தான் புரிய வைக்கணும் போல இருக்கே! பார்த்தாயா லக்ஷ்மீ, என் துவாரபாலகர்களே, என் சொல்லைக் கேட்டு நடக்க, கொஞ்சம் யோசிக்கிறார்கள்!
ஆனால் (பின்னாளில்), நம் இராமானுசனை அண்டினோர் மட்டும், அவன் சொன்ன வண்ணமே செய்கிறார்களே! இது எப்படிச் சாத்தியம் ஆகிறது?

"உம்..."

"என்ன உம்? உடையவர் சொன்ன ஒரே வார்த்தைக்காகப் பேரறிஞர் முதலியாண்டான், கொஞ்சம் கூட கூச்சம் பாராமல், யார் வீட்டுக்கோ சென்று தண்ணி இறைக்கப் போகிறார்! ஆனா என் துவார பாலகர்கள்? எனக்கு இவ்வளவு தானா மதிப்பு?"

"ஹா ஹா ஹா, பெருமாளே! உங்களுக்கு இன்னுமா காரணம் புரியவில்லை?"
"புரியவில்லையே தேவீ! நான் தான் வேதம் சொன்னேன்! நான் தான் கீதை சொன்னேன்! அதையே தானே இந்த இராமானுஜன் இன்னும் விரித்து விரித்து விலாவரியாகச் சொல்கிறான்! அவன் சொந்தமா ஒன்னும் சொல்லலை! ஆனா எனக்கு மட்டும் மதிப்பு இல்லாமப் போச்சுதே!"

"ஓ...நீங்க அப்படி வரீங்களா? சரீ....வேதம், கீதை-ல எல்லாம் என்னான்னு சொன்னீங்க சுவாமி?"

"மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என் ஒருவனையே சரணம் எனப் பற்று-ன்னு சொன்னேன்"

"சரி தான்! உங்க கால்-ல வந்து விழு விழு-ன்னு நீங்களே சொல்லிக்கிட்டா யாரு வந்து விழுவாங்க? இதே ஒரு அடியவர், அதோ அழகிய மணவாளப் பெருமாள் இருக்காரு! அவர் அன்பானவர்! அவர் கால்-ல விழுங்க-ன்னு சொன்னா அது அழகு, அடக்கம், ஆற்றுப்படுத்தல், வழிகாட்டல்! அப்போ வந்து விழுவாங்க!"

"ஓ...."

"மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என் ஒருவனையே சரணம் எனப் பற்று - இதை எப்போ எங்கே சொன்னீங்க?"

"கீதையில் பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னேன்! இது கூடவா உனக்குத் தெரியாது?"

"உக்கும்...கீதையில் எங்கோ ஒரு முக்கில், பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னா, யாரு கேட்பாங்க? யாருக்கு அம்புட்டு பொறுமை இருக்கு?
குழந்தைகளுக்கு என்ன தரப் போகிறோம்-ன்னு முன்னாடியே சொன்னா தானே, அதுங்க ஆர்வத்தோடு விளையாட்டில் கலந்துக்குங்க!"

"அட! ஆமாம்!"

"இதே ஆண்டாளைப் பாருங்க, எடுத்த எடுப்பிலேயே சொல்லிடறா, நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்-னு! - அம்மா எப்போதும் சொல்லிவிட்டுக் கொடுக்க மாட்டாள்! கொடுத்து விட்டுச் சொல்லுவாள்!
அது தான் அம்மாவின் ஹிருதயம்! அம்மாவின் ஹிருதயம் தான் ஆச்சார்ய ஹிருதயம்! அதுனால தான் ஆச்சாரியர்கள் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு!"

"ஓ..."

"என்ன ஓ...ஓ...ன்னு ஓ போடுறீங்க சுவாமி? :) பேசாம நீங்களும் அடியார் கூட்டத்தில் போய்ச் சேர்ந்துடுங்க! அப்பறம் தெரியும் அங்கே மட்டும் எப்படி வேலை டாண் டாண்-னு நடக்குதுன்னு? இப்போ நீங்க பேசாம வேடிக்கை பாருங்க! அதோ....சனகாதி ரிஷிகள் உங்களைத் தேடி வராங்க பாருங்க!"


சனகாதி ரிஷிகள், குழந்தை ரிஷிகள்! மொத்தம் நான்கு பேர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர்...
திருப்பாற்கடலை நோக்கி வருகிறார்கள்! இறைவனுக்கு உருவம் இருக்கா என்ன? போய் தான் பார்த்துடுவோமே-ன்னு சும்மா அதிரடியாகக் கிளம்பி வருகிறார்கள்...

இறைவனின் பாற்கடல் ஆலயத்துக்குள் வந்தவர்கள், துவாரபாலகரான ஜய-விஜயர்களைப் பார்க்கிறார்கள்! பார்த்தும் பார்க்காதது போல், நேரடியாக உள்ளே செல்ல எத்தனிக்கிறார்கள்!
அளந்தவனையே அளந்து பார்க்க அல்லவா வந்துள்ளார்கள்! அதான் இறைவன் ஒருவனையே குறியாகக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள்!

ஜய விஜயர்களுக்குப் பாவம் அப்போது தான் பெருமாள் தங்களைக் கீழே வருகிறீர்களா-ன்னு கேட்ட டென்ஷன்! தப-தப என்று உள்ளே நுழையும் சனகாதி ரிஷிகள் நால்வரையும் தடுக்கிறார்கள்! வரவின் காரணம் என்ன என்பதை உரைத்து விட்டுச் செல்லும்படிச் சொல்கிறார்கள்...பிடி சாபம்...

"ஜய விஜயா...சேவிக்க வந்த எங்களிடம் அதோ இறைவன் என்று வழிகாட்ட வேண்டும்! அது தானே உங்கள் கடமை? ஆனால் இறைவனுக்கு அருகில் இருக்கிறோம் என்னும் எண்ணம் உங்களுக்கு ஆணவத்தையும் திமிரையும் அல்லவா வளர்த்து இருக்கு?
அதை வளர்த்து விட்ட அந்த நெருக்கம் இனி உங்களுக்குத் தேவையில்லை! இறைவனை இக்கணமே பிரியுங்கள்! பூலோகம் சென்று திருந்தி வாருங்கள்!"

"ஐயோ...முனி சிரேஷ்டர்களே...அபயம், அபயம்! சக அடியார்களே அபயம், அபயம்! அடியோங்களை மன்னியுங்கள்! மன்னியுங்கள்!"

"உம்..."

"பெருமாள் சற்று முன்னர் தான் பூலோகம் வருகிறீரா-ன்னு கேட்டார்! அப்போது அவரிடம் தயங்கினோம்! ஆனால் இப்போது சாபம் பெற்றுச் செல்ல வேண்டியதாகப் போய்விட்டதே!
இறைவனிடம் வைக்க வேண்டிய பற்றை, மோட்சத்தில் வைத்தோமே! ஐயகோ! எங்களை மன்னித்து, விமோசனத்துக்கு வழி காட்டுங்கள் ரிஷிகளே!"

"இறைவனை நூறு பிறவிகள் பிரிந்து, ஆத்திகர்களாக வாழ்கிறீரா? இல்லை
இறைவனை மூனு பிறவிகள் பிரிந்து, நாத்திகர்களாக வாழ்கிறீரா? - எது வேண்டும்? சீக்கிரம் சொல்லுங்கள்! உங்களிடம் பேசிக் கொண்டிருக்க நாங்கள் இங்கு வரவில்லை! வேறு ஒரு முக்கியமான வேலையாக வந்துள்ளோம்!"

"முனீஸ்வரா, இறைவன் வாய் விட்டுக் கேட்ட போது யோசித்தோம்! ஆனால் இப்போது அதேயே யாசித்தோம்! அவர் சங்கல்பம் எப்படி எல்லாம் நடக்கிறது பாருங்கள்! - அப்போதே ஒப்புக் கொண்டிருந்தால் அது வரம் ஆகியிருக்கும்! இப்போதோ அது சாபம் ஆகிப் போனது!

சரி, எது எப்படியோ, எங்கள் பிரிவு அவருக்கு ஆற்றாது! அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது! ஆகவே, நாத்திகராய்ப் பிறந்தாலும், மூன்றே பிறவிகள் பிரிந்து, அவரையே சீக்கிரமாகச் சேர வேண்டும்!
சீக்கிரமான கைங்கர்ய பலனையே எங்களுக்குச் சாபமாக ஆக்கித் தாருங்கள்! நன்றி உடையவர்களாக இருப்போம்!"

முனிவர்களுக்கே வெட்கமாகிப் போனது...அவசரப்பட்டு விட்டோமோ? பாவம், இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ? அப்படி ஒன்றும் மோசமாக எல்லாம் இவர்கள் செய்து விடவில்லையே?

அப்போது மூக்கைத் துளைக்கும் ஒரு நறுமணம்! - துளசீ மணம்! காற்றோடு கலந்து வீசி வீசி வருகிறது! கூடவே ஒரு சப்தம்! ஜல், ஜல்! கல், கல்!



"ஆகா எம்பெருமான் பொற் பாதச் சலங்கைகள் ஒலிக்க நடந்து வருகிறானோ? அவன் மணம் அல்லவா இந்தத் துளசீ மணம்?
ச்சே! அவனைப் போய் உருவம் இருக்கா, அது இருக்கா, இது இருக்கா-ன்னு எல்லாம் சந்தேகப்பட்டோமே! அதைப் போக்கிக் கொள்ள இவ்வளவு தூரம் நடந்து வேறு வந்தோமே! இது என்ன வெட்கக் கேடு?

பெற்ற தாய்க்கு முலைப்பால் சுரக்குமா என்று சோதித்துப் பார்த்து விட்டா ஒரு குழந்தை பிறக்கிறது? ச்ச்சீ! இது என்ன கேவலமான சோதனைப் புத்தி நமக்கு?
அருவமான நீராவி உருவமான நீர் ஆகாதா? இல்லை உருவமான நீர் தான், அருவமான ஆவி ஆகாதா?

மெத்தப் படித்ததால் ஞான யோகமும், தினப்படி கர்மாக்கள் செய்ததால் கர்ம யோகமும், அவனைப் போற்றிப் பாடியதால் பக்தி யோகமும் கை கூடிற்றே தவிர,
இப்படிச் சோதித்துப் பார்க்கும் ஒரு எண்ணம் எப்படி நமக்கு வந்தது? அப்படியானால் இந்த மூன்று யோகங்களைத் தவிர, நமக்கு இன்னும் வேறு ஏதோ ஒன்னு குறையுதோ?"

எம்பெருமான் முனிவர்கள் முன் தோன்றி விட்டான். வாசலுக்கே வந்து விட்டான்!
மயிலிறகு அசைய அசைய, பீதாம்பரம் உருள உருள, கையில் தாமரைப் பூ சுழற்றச் சுழற்ற, இட்டடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க...இதோ ஈசன்!

அடியில் முடி வீழச் சேவிக்கிறார்கள் முனிவர்கள்! ஆகா என்ன ஆச்சரியம்!
திருவடிகளைக் காணோம்!
உருவம் சோதிக்க வந்தவர்க்கு, அடியை அருவம் ஆக்கிச் சோதிக்கிறானோ?
தவற்றினை உணர்ந்த தவ முனிகள், எம்பெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்! உய்வுக்கு வழி காட்டுமாறு வேண்டுகிறார்கள்!

"பரமாத்மா, பரம்பொருளே, ஸ்ரீயப் பதியான நாராயணா! - ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும் எங்களுக்கு இப்படிச் சோதித்துப் பார்க்கும் புத்தி வந்ததே! அப்படியானால் எங்களுக்கு வேறேதும் ஒர்ய் யோகம் இன்னும் கைவர வேண்டுமோ? அதை என்னவென்று சொல்லி அருள வேண்டும் சுவாமி!"

"சனகாதிகளே! சொல்கிறேன்! ஆனால் அதற்கு முன்னால்...இங்கிருக்கும் ஜய விஜயர்கள் ஏன் இப்படி முகம் வாடிக் களைத்துப் போயுள்ளார்கள்?"

"அவர்கள் அகம்பாவமாக நடந்து கொண்டார்கள் சுவாமி! அதனால் தான் அவர்களைச் சபித்து பூலோகம் அனுப்பத் துணிந்து விட்டோம்!"

"ஆகா! என்ன காரியம் செய்தீர்கள்? ஜய விஜயர்கள் பரம பாகவதர்கள் ஆயிற்றே! சரணாகதி செய்தவர்கள் ஆயிற்றே! அவர்களுக்கு என்னைப் பிரிய மாட்டாது, வைகுண்டத்தைப் பிரிய மாட்டாது இருக்கலாம்! ஆனால் அவர்களுக்கு அகம்பாவமா? யார் சொன்னது?"

"அவர்களே ஒப்புக் கொண்டார்கள் சுவாமி!"

"அவர்கள் ஒப்புக் கொண்டால், அது அவர்கள் சுபாவம்! ஆனால் நான் ஒப்புக் கொள்வேனா?"

"சுவாமி..."

"யாருக்கு அகம்பாவம்? அகம்-பாவம்! உங்களுக்கா? அவர்களுக்கா? இல்லை எனக்கா?"

"ஐயையோ...சுவாமி..."

"ஆலயத்துக்குள் நுழையும் போது, கண்ணில் பட்டவரை எல்லாம் தள்ளி விட்டு, நேராகக் கருவறைக்குள் சென்று விடுவீர்களா? கோபுரம் தரிசித்து, கொடிமரம் வணங்கி, சேனை முதலியாரையோ/தும்பிக்கை உடையானையோ துதித்து, கருடனையும் கண்டு, ஆலய வரிசையில் அடியார் கூட்டத்தை எல்லாம் கண்ட பின்னர் தானே, என்னைச் சேவிக்க வருவீர்கள்?
இல்லை கண்ணை மூடிக் கொண்டு, நேராகக் கருவறை வந்து தான் கண்ணைத் திறப்பீர்களா?"

"சுவாமி..."
(சனகாதிகள் வெலவெலத்துப் போகின்றார்கள்)


"அது போலத் தானே இங்கும்? ஜய விஜயர்கள் என் பணியில் இருக்கும் அடியார்கள் அல்லவா! அவர்களை வணங்கக் கூட வேண்டாம்! முகமன் கூறலாம் அல்லவா? கூடி இருந்து குளிர்ந்தேலோ தெரியாதா உங்களுக்கு?
நேரடியாக இறைவனும் நானும் மட்டுமே! மற்ற எவனும், எந்த அடியானும் எங்களுக்கு நடுவில் இல்லை என்ற அதிகாரப் போக்கை உங்களுக்கு யார் கொடுத்தது?"

"சுவாமி..."

"ஜய விஜயர்களுக்கு இறை-அணுக்க அகங்காரம் என்று சொல்லும் உமக்குத் தான் அகங்காரம் என்று நான் சொல்கிறேன்!"
(சனகாதிகள் வெலவெலத்துப் போகிறார்கள். இவ்வளவு கோபமாகச் சினப்பார் என்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை!)

"சுவாமி...எங்களை மன்னியுங்கள்! அப்போதே எங்களுக்குத் தோன்றிற்று, இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ என்று!
எங்கள் பிரிவு அவருக்கு ஆற்றாது! அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது! அதனால் நாத்திகனாய்ப் பிறந்தாலும் பரவாயில்லை! மூன்றே பிறவிகள் பிரிந்து, கைங்கர்ய சீக்கிரத்தையே அவர்கள் விரும்பினார்கள்! அவர்களைப் போய்...."
(சனகாதிகள் தேம்பித் தேம்பி அழ...)

"இப்போது நான் உங்களைச் சபிக்கட்டுமா?"

"சுவாமி..."

"வேண்டாம், போங்கள்!
கேட்டீர்களே ஞானம், கர்மம், பக்தி தவிர வேறு என்ன வேண்டும்-ன்னு! உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை!
பின்னாளில் சிவபெருமான் சொல்லப் போகிறார்! அதுவும் வாய் பேசாமல், மவுன மொழியாகவே சொல்லப் போகிறார்!
நீங்கள் சபித்த நாத்திகர்களிடம் இருந்து நீங்களே ஒரு பாடம் கற்றுக் கொள்வீர்கள்!
அந்த நாத்திகரின் வம்சக் கொழுந்து தான், அசைக்க முடியாத பக்தி என்றால் என்ன என்று, மெத்தப் படித்த உங்களுக்கு உணர்த்தப் போகிறது!
ஒன்று மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறேன்! அடியார்களுக்குச் சாபம் தெரியாது! சரணமே தெரியும்!"

"சுவாமி..."

"சென்று வாருங்கள்!"
(இறைவன் மறைந்து விடுகிறான்)

அடியவர்களை அலட்சியம் செய்த அறிஞர்கள், இறைவனிடத்தில் நமக்கு Straight Dealing, இவர்கள் என்ன இடையில் என்று அதிகாரப் போக்காய் யோசித்த யோகிகள்...
உயிர்ப் பயம் என்று வரும் போது மட்டும், தங்கள் சொந்த நலனுக்காக, தினமும் நூறு முறை "இரண்யகசிபுவே நமஹ", "இரண்யகசிபுவே நமஹ" என்று சொல்லும்படி ஆயிற்று! :)

ஆத்திக ஜய விஜயருக்கு ஒரு முறை முகமன் சொல்லத் தவறிய ஞானிகள்,
நாத்திக ஜய விஜயருக்கு ஆயிரம் முறை வணக்கம் சொல்ல வேண்டியதாகப் போயிற்று :)

எதை எதோடு, எப்போது கோர்க்க வேண்டுமோ, அதை அதோடு, அப்போது கோர்க்க வேண்டும்! - அந்தக் கலையில் ஒருவனே வல்லவன்! அவனே நல்லவன்!

ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும்.....வேறேதோ ஒன்று, எனக்கு வேண்டுமோ? அந்த வேறேதோ என்ன?
(தொடரும்)...

22 comments:

  1. ”ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே”

    ரவிஅண்ணா, ஆரம்பித்து முடிக்கும் வரை வேறொன்றும் தோன்றவே இல்லை. எம்பெருமான், தாயார் உரையாடலும், முனிவர்களுடனான பேச்சும் மறக்க முடியாதது. உண்மையிலேயே பெருமாள் இப்படித்தான் உரையாடியிருப்பாரோ ??

    ReplyDelete
  2. //கீதையில் எங்கோ ஒரு முக்கில், பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னா, யாரு கேட்பாங்க? //

    தாயார் ஒப்பிலாஅப்பனை மறந்துட்டாங்களோ ? :) எல்லாருக்கும் நல்லா தெரியற மாதிரி, Font Size கூட அதிகமா வச்சு ”மாம் ஏகம் சரணம் விரஜ” என்று பாதத்தையும் காட்டி அருளுகிறாரே..

    ReplyDelete
  3. //எனக்கு இவ்வளவு தானா மதிப்பு?" //

    இதைத்தான் முக்கூர் சுவாமிகள், ”பெருமாள் மட்டும் இருந்து என்ன பயன், அவன் பெருமைகளை சொல்ல அடியார்கள் இருந்தால் தான் சிறப்பு. அதனால் தான் பீஷ்மர் மூலமாக விஷ்ணு சகஸ்ரநாமம் தருவிக்கிறார்”
    என்று அழகாக சொல்வார்.

    ReplyDelete
  4. எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு. பிரமிக்க வைக்கிறீங்க கே.ஆர்.எஸ்.

    ReplyDelete
  5. //பிரமிக்க வைக்கிறீங்க கே.ஆர்.எஸ்.//

    ரிப்பீட்டேய்! (இப்பல்லாம் மௌலி ரிப்பீட்டே பண்ணறதில்ல. அதான் :)

    இறைவனை விட அவன் அடியவர்களுக்கே மதிப்பு அதிகம்.

    ReplyDelete
  6. கவிக்கா, இதோ வந்துட்டேன்,

    //இறைவனை விட அவன் அடியவர்களுக்கே மதிப்பு அதிகம்//


    ரீப்பிட்டே!!!! :-)

    ReplyDelete
  7. //Raghav said...
    ”ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே”//

    ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

    //ரவிஅண்ணா, ஆரம்பித்து முடிக்கும் வரை வேறொன்றும் தோன்றவே இல்லை. எம்பெருமான், தாயார் உரையாடலும், முனிவர்களுடனான பேச்சும் மறக்க முடியாதது//

    :)

    //உண்மையிலேயே பெருமாள் இப்படித்தான் உரையாடியிருப்பாரோ ??//

    :)
    அடியேன் அருகில் இருந்து பார்த்து எல்லாம் எழுதவில்லை!

    ReplyDelete
  8. //Raghav said...
    //கீதையில் எங்கோ ஒரு முக்கில், பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னா, யாரு கேட்பாங்க? //

    தாயார் ஒப்பிலா அப்பனை மறந்துட்டாங்களோ ? :)//

    :))

    //எல்லாருக்கும் நல்லா தெரியற மாதிரி, Font Size கூட அதிகமா வச்சு ”மாம் ஏகம் சரணம் விரஜ” என்று பாதத்தையும் காட்டி அருளுகிறாரே..//

    Font Size அவர் வைக்கல! அலங்காரத்தில் அடியார்கள் வச்சி விட்டாங்க! :)

    ஒப்பிலா அப்பனுக்கு அருகில் பூமிப் பிராட்டி! ஆண்டாளின் தோன்றல் அல்லவா? அதான் போலும் அவளுக்குப் பயந்து, Font Size அதிகமா வச்சிக்கிட்டு இருக்காரோ? :)

    ReplyDelete
  9. //Raghav said...
    //எனக்கு இவ்வளவு தானா மதிப்பு?" //

    இதைத்தான் முக்கூர் சுவாமிகள், ”பெருமாள் மட்டும் இருந்து என்ன பயன், அவன் பெருமைகளை சொல்ல அடியார்கள் இருந்தால் தான் சிறப்பு//

    சேஷன் = அடியவர்கள்
    சேஷி = அவன்
    சேஷத்வம் சாதிக்க, பேரிலேயே அவனுக்கு "சேஷம்" (தொண்டு) தேவைப்படுகிறது!

    தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!
    சீதையிடம் எல்லார் பெருமையும் வரிசைப்படுத்திச் சொன்ன இராமனுக்கு,
    அனுமனின் பெருமையைச் சொல்ல வந்த போது மட்டும் விக்கிற்றாம்!

    ReplyDelete
  10. //மதுரையம்பதி said...
    எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு.//

    ஆமாங்கண்ணா!
    இறைவன் முடிச்சை இறைவனே புரிந்து கொள்ள முடியும்!
    ஆனால் ஒரு தொண்டனின் மனசை ஒரு தொண்டனே புரிந்து கொள்ள முடியும்!

    //பிரமிக்க வைக்கிறீங்க கே.ஆர்.எஸ்.//

    :)
    பிரமிப்பும் அவனே!
    ரமிப்பும் அவனே!

    ReplyDelete
  11. கவிநயா said...
    //இப்பல்லாம் மௌலி ரிப்பீட்டே பண்ணறதில்ல. அதான் :)//

    ரிப்பீட்டே :)

    //இறைவனை விட அவன் அடியவர்களுக்கே மதிப்பு அதிகம்//

    குழந்தைகளின் நலமே பெற்றவர் நலம்!
    அடியார் நலமே ஆண்டவன் நலம்!

    ReplyDelete
  12. //"சுவாமி...எங்களை மன்னியுங்கள்! அப்போதே எங்களுக்குத் தோன்றிற்று, இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ என்று!//

    ஹஹ்ஹா....!

    ஆத்திகர்கள் ஆண்டாண்டு காலமாக அழுது புரண்டாலும் ஒரு நாத்திகனுக்கு கிடைப்பது கிடைக்காது என்கிறீர்கள். சரியா ?

    :))))))

    ReplyDelete
  13. //கோவி.கண்ணன் said...
    ஹஹ்ஹா....!
    ஆத்திகர்கள் ஆண்டாண்டு காலமாக அழுது புரண்டாலும் ஒரு நாத்திகனுக்கு கிடைப்பது கிடைக்காது என்கிறீர்கள். சரியா ?//

    ஹஹ்ஹா....
    கோவி அண்ணா, ஒரு சிறிய திருத்தம்!

    நாத்திக உள்ளம் கொண்ட ஆத்திகர்கள் ஆண்டாண்டு காலமாக அழுது புரண்டாலும்.....
    ஆத்திக உள்ளம் கொண்ட ஒரு நாத்திகனுக்கு (ஜய விஜயனுக்கு) கிடைப்பது போல் கிடைக்காது! :)

    ReplyDelete
  14. //எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு.//

    ஹிஹி, முழு பதிவையும், சில கும்மாங்குத்து வரிகளையும், மெளலி அண்ணாவின் உள்குத்து பின்னூட்டதை மிகவும் ரசித்தேன். :))

    ReplyDelete
  15. அப்படி என்ன வரிகள் அம்பி?னு ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்கற வேலை வேணாம் KRS அண்ணே! :))

    அப்புறம் சாம்பிள் வரிகளை எடுத்து விட வேண்டி இருக்கும். :p

    ReplyDelete
  16. சூப்பர்,

    பிரம்மாண்டமா இருக்குங்க ரெண்டு பதிவும், அப்பிடியே யாதா யாதா ஹி என்று சொல்லிக்கொண்டே கர்ணனை மோட்சத்திற்க்கு அனுப்பிய என்.டி.ஆர் அடச்சே... பெருமாள் கண்முன்னாடி வந்துட்டார். :-).

    //"ஜய விஜயா...சேவிக்க வந்த எங்களிடம் அதோ இறைவன் என்று வழிகாட்ட வேண்டும்! ... இறைவனை இக்கணமே பிரியுங்கள்! பூலோகம் சென்று திருந்தி வாருங்கள்!"//

    இந்த காட்சியை மஹாவிஷ்ணு சீரியல்ல பார்த்த ஞாபகம்!

    ஆனால் சனத்குமாரர்கள் சாபம் விடும் பொது யுகம்-தோறும் "அரக்கராய்" பிறக்க கடவது என்று தான் அதில் வந்தது! நீங்கள் சொல்வது வேறு மாதிரியாய் உளதே. ஒருவேளை சீரியல்காரர்கள் மாற்றி விட்டனரோ!

    //"பரமாத்மா, பரம்பொருளே, ஸ்ரீயப் பதியான நாராயணா! - ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும் எங்களுக்கு இப்படிச் சோதித்துப் பார்க்கும் புத்தி வந்ததே!//

    பூனைகுட்டி வெளியே வந்துரிச்சா! அப்போ கதை களைக்கட்டும்!

    //ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும்.....வேறேதோ ஒன்று, எனக்கு வேண்டுமோ? அந்த வேறேதோ என்ன?
    (தொடரும்)...//

    சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க!

    ReplyDelete
  17. @ambi
    அப்படி என்ன வரிகள் அம்பி?

    ReplyDelete
  18. //னு ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்கற வேலை வேணாம் KRS அண்ணே! :))//

    ஒன்னுமே தெரியாமத் தான் கேக்குறேன். என்ன விஷயம் அம்பி?

    //அப்புறம் சாம்பிள் வரிகளை எடுத்து விட வேண்டி இருக்கும். :p//

    ஆகா! சொல்லுங்க ப்ளீஸ்! நானும் தெரிஞ்சுக்குவேன், என்ன தப்பு பண்ணி இருக்கேன்-னு! தப்பு-ன்னா திருத்திக்குவேன்! சொல்லுங்களேன்!

    ReplyDelete
  19. // ambi said...
    //எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு.//

    ஹிஹி, முழு பதிவையும், சில கும்மாங்குத்து வரிகளையும், மெளலி அண்ணாவின் உள்குத்து பின்னூட்டதை மிகவும் ரசித்தேன். :))//

    ஹா ஹா ஹா!
    பாவம் மெளலி அண்ணா! அவரை விட்டுருங்க!

    அவர் சொன்ன - எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு - என்னான்னா:
    ஜய விஜயர்கள் மட்டும் இல்லாம முனிவர்களுக்கும் எப்படி இறைவன் கர்ம பலனைக் கோர்த்து விட்டான் என்பதைத் தான்!

    சரி தானே மெளலி அண்ணா?

    ReplyDelete
  20. //சிவமுருகன் said...
    சூப்பர்,
    பிரம்மாண்டமா இருக்குங்க ரெண்டு பதிவும்//

    நன்றி சிவா!,

    //என்.டி.ஆர் அடச்சே... பெருமாள் கண்முன்னாடி வந்துட்டார். :-)//

    சிவமுருகா, ஈ பதிவுல நூக்கு தேவுடுகாரு தர்சனம் ஆயிந்தா? எந்த பவித்ரம்! எந்த சாகசம்! ஆஹா!

    //ஆனால் சனத்குமாரர்கள் சாபம் விடும் பொது யுகம்-தோறும் "அரக்கராய்" பிறக்க கடவது என்று தான் அதில் வந்தது!//

    பத்ம புராணம், வராக புராணம் தான் இச்சம்பவத்துக்கு அடிப்படை!

    மூன்று பிறவிகள் என்று தான் சாபம் விடுவார்கள்! ஒவ்வொரு யுகமும் என்று அல்ல!
    அப்படிப் பார்த்தா கலியுகத்துக்கு ஒரு இரணியகசிபு வேணுமே!....
    அதான் அதுக்கு கேஆரெஸ் இருக்கானே-ன்னும் சொல்லலாம்! :)

    //பூனைகுட்டி வெளியே வந்துரிச்சா! அப்போ கதை களைக்கட்டும்!//

    பூனைக்குட்டியா? குரங்குக்குட்டியா? :))

    //சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க!//

    தங்கள் ஆணை மன்னா! :)

    ReplyDelete
  21. நீங்கள் கோர்த்துத் தந்துள்ளவற்றை எல்லாம் புரிந்து கொள்ள பலமுறை படிக்க வேண்டும் போலிருக்கிறது. :-)

    ReplyDelete
  22. //குமரன் (Kumaran) said...
    நீங்கள் கோர்த்துத் தந்துள்ளவற்றை//

    அடியேன் கோர்த்தேனா? ஆகா! கோர்ப்பதும் சேர்ப்பதும் கோவிந்தன் அன்றோ!

    //எல்லாம் புரிந்து கொள்ள பலமுறை படிக்க வேண்டும் போலிருக்கிறது. :-)//

    என்ன குமரன்? நடை கஷ்டமாக உள்ளதா? புரியலை-ன்னாச் சொல்லுங்க! sequencing மாத்திக்கறேன்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP