Tuesday, March 18, 2008

***நட்சத்திரப் போட்டி: புதிரா? புனிதமா?? - தமிழ்ப் பெண்கள்!

சொல்லிடலாமா? வேணாமா?
அடச்சே....ஆண் ஈயம்/பெண் பித்தளை-ன்னு பதிவர்களைப் பதிவர்களே இப்படிப் பயமுறுத்தி வைக்கலாமா? :-)

10/10 பட்டியல்:
பெண்கள்=1 ஆண்கள்=4
அதுனால, இன்னும் கொஞ்சம் நேரம் வெயிட்டீஸ் பண்ணலாமா-ன்னு எனக்கு ரொம்பவே ஆசை தான்! ஆனாலும் this moderation thingie....தாவு தீருது! பேன்ட் கிழியுது!

அதுனால நண்பிகளே, உங்க செல்லக் கேஆரெஸ் கிட்ட கோச்சிக்காம இருக்கணும் சரியா? முடிவுகள் இதோ மகளிர் சக்தியின் பரிபூரண ஆசீர்வாதங்களுடன் அறிவிக்கப்படுகின்றன! கீழே விடைகளை Bold செய்துள்ளேன்! தனியான விளக்கம்ஸ் பின்னூட்டத்தில்! நெறைய விளக்கத்தைக் கெக்கேபிக்குணி அக்காவே கொடுத்துட்டாங்க! என் வேலை மிச்சம்! நன்றிக்கோவ்! :-)


இதோ, சுயம்வர வைர அட்டிகைக்குச் சொந்தக்காரர்:
கெக்கேபிக்குணி = மாதர்குல மாண்பு காத்த மாதரசி
(இனி வரலாற்றில் நீங்கள் மா.மா.கா.மா என்றே வழங்கப்படுவீர்களாக! - 23ஆம் புலிகேசி இஷ்டைலில் படிக்கவும்)



இதோ, சுயம்வரப் பூமாலைக்குச் சொந்தக்காரர்கள்:
ஆணழகன் அரைபிளேடு
அறிவழகன் கொத்தனார்
தமிழழகன் தமிழ்ப் பிரியன்
கிரிக்கழன் கிரிக்கெட் ரசிகன்

வென்றவர்க்கும், உடன் நின்றவர்க்கும், எல்லாருக்குமே வாழ்த்துக்கள்!

என்னாது பரிசா?
பெண்களே மனித குலத்துக்கு மாபெரும் பரிசு! மற்றெல்லாம் அதன் முன் சிறுசு! இப்படிச் சொன்னா என்ன கிடைக்கும்? (அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேஆரெஸ் கேட்பதாக Mind Movie ஓட்டிக்குங்க!)
சரி இந்தாங்க! மாபெரும் "மாமாகாமா" பரிசு!

இது வழக்கமாக ஒவ்வொரு போட்டியும் முடிந்தவுடன் தரப்படும் புத்தகப் பரிசு! வாழ்த்துக்கள்!
Mother Teresa - A Biography
Mother Teresa - A ...
Hosted by eSnips



மக்கள்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? புதிரா புனிதமா இல்லாம ஒரு நட்சத்திர வாரமா? இன்னிக்கி ஸ்பெசல் தலைப்பு! - தமிழ்ப் பெண்கள்!
அதாச்சும் தாரகை வாரத்தில் தாரகையர் பற்றி! என்னா சரியா? :-)

பொதுவா இலக்கியத்தில், சினிமாவில் எல்லாத்திலும் ஒரு வசனம் வரும்! - இந்தப் பொண்ணுங்க மனசை மட்டும் தெரிஞ்சிக்கவே முடியலைப்பா!
ஆறு அது ஆழமில்ல! அது சேரும் கடலும் ஆழமில்ல!
ஆழம் எது ஐயா? - அது பொம்பளை மனசு தான்யா!
இது எந்தப் படத்துல வரும் பாட்டுன்னு யாராச்சும் சொல்லுங்கப்பு!
வலையுலகக் காதல் விஞ்ஞானிகளும் கண்டு புடிக்க முடியாமல் வலைக்குள் சிக்கிக் கவிதைகள், காவியங்கள் படைக்கும் அளவுக்குப்
புதிரானதா என்ன ஒரு பெண்ணின் மனம்?-புதிரா? புனிதமா?? :-)

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா
பங்கையக் கைநலம் பார்த்து அல்லவோ, பாரில் அறங்கள் வளருதம்மா!

இப்பிடிப் பாடிட்டுப் போனார் கவிமணி!
சும்மா கற்பனை பண்ணிப் பாத்துக்குங்க! ஒரு தேவதை உங்க முன்னாடி வந்து, "சாரி பிரதர், உனக்கு இன்னொரு பிறவி இருக்கு! ஆனா அதுல ஆணா, பெண்ணா-ன்னு மட்டும் நீ இப்பவே தேர்ந்தெடுத்துக்கலாம்"-அப்பிடின்னு சொல்லுதுன்னு வையுங்க!
பசங்க எதைத் தேர்ந்தெடுப்பாய்ங்க? பெண்கள் எதைத் தேர்ந்தெடுப்பீங்க? சும்மா ஒளிக்காம, மறைக்காமச் சொல்லுங்க பார்ப்போம்! :-)


என்னை மிகவும் கவர்ந்த பெண்மணி என்றால் இவர் தான்!
நோபல் பரிசுக்குப் பின் தரப்படும் மொத்த விருந்தையும் கான்செல் செய்து, அதையும் காசாக்கிக் கொண்டு வந்த CEO.

கன்னிப் பருவத்திலே

காப்புப் பருவத்திலே


இவரைப் பற்றிய பள்ளிப்பருவ மனப்பதிவுகள், இவரை ஒரு முறையாச்சும் நேராகப் பார்க்க மாட்டோமா என்ற தாக்கத்தை உருவாக்கியது! அண்ணா பல்கலை ப்ளேஸ்மென்ட்டில் கிடைத்த முதல் வேலை கொல்கத்தாவில். முதல் ஊக்கத்தொகை நாளன்று அன்னையைச் சந்தித்த அந்தச் சம்பவம், இன்றும் நினைத்தாலே இனிக்கும்...

சகோதரிகளை மட்டும் பார்த்துவிட்டு, கையெழுத்து போட்டு்விட்டு வரும் போது, வலப்பக்க அறையொன்றில் அன்னை தட்டுப்பட்டார். கேட்டுத் தான் பார்ப்போமே என்று சும்மா நப்பாசையில் கேட்டு வைக்க, கிட்டே செல்லும் வாய்ப்பும் கிட்டியது!
சிறு பேச்சுக்குப் பின்...என் நெற்றியில் அன்னையின் திருக்கரத்தால் கிடைத்த ஸ்பரிசம்...
நெற்றியில் குங்குமம் துலங்கியதால், அது அழியாத வண்ணம், ஸ்தோத்தரித்துப் போட்ட சிலுவைக்குறி...அந்த ஸ்பரிசம் மட்டும் மறக்கவே மறக்காது!

பார்த்த மாத்திரத்தில், முகத்தில் ஜொலிக்கும் பணிவுக் களை, வெகு சிலரிடம் தான் கண்டுள்ளேன்.
அன்னை தெரேசாவும், எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவும் அதில் இருவர்!
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து!


இன்னிக்கி கேள்விகள் எல்லாம் பெண்களைப் பற்றி மட்டுமே!
- 100% ஒதுக்கீடு! பார்க்கலாம் யாரு வெற்றி பெறப் போறாங்க-ன்னு! என்ன ஆர்க்குட் ஆணழகர்களே ரெடியா?

அதுக்காகப் பெண்கள் பற்றிய போட்டியில் பெண்களே கலந்துக்க முடியாது-ன்னு நினைச்சி நைசா எஸ்கேப் ஆயிடாதீங்க! நீங்களும் தான் போட்டியில்! பார்க்கலாம் பெண்களைப் பற்றிப் பெண்களுக்கே எவ்வளவு தூரம் தெரிஞ்சிருக்கு-ன்னு! ஓவர் டு தமிழ்ப் பெண்கள்!
(முடிந்த வரை தமிழ்ப் பெண்களாகத் தொகுத்துள்ளேன். அப்படி இல்லாத போது, அவர்கள் தமிழோடு தொடர்புள்ள பெண்களாக இருப்பர்!) விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!


1

"புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்" என்று வீரத்தாய் பாடினதாகப் படிச்சி இருக்கோம். இந்தப் பாட்டை எழுதிய பெண் கவிஞர் யார்?

1

அ) ஒளவையார்

ஆ) ஒக்கூர் மாசாத்தியார்

இ) காக்கைப்பாடினியார்

ஈ) பொன்முடியார்

2

பக்தி இலக்க்கியப் பெண் கவிஞர்கள் என்றால் உடனே நினைவுக்கு வருபவர்கள் இருவர் = ஆண்டாள், காரைக்கால் அம்மையார்!

ஆண்டாள் பன்னிரு ஆழ்வார்களில் ஒருத்தி (8%)

நாயன்மார்கள் அறுபத்து மூவருள், மூன்று பேர் பெண்கள் (4%). அதில் ஒருவர் காரைக்கால் அம்மையார். மற்ற இருவர் யார்?

1

அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்

ஆ) மங்கையர்க்கரசியார்/ தண்டியடிகள்

இ) தண்டியடிகள்/ கவுந்தியடிகள்

ஈ) திலகவதியார்/ வாயிலார்

3

இந்தப் புதுக்கோட்டைப் பெண்மணி தான் இந்தியாவின் முதல் பெண் டாக்டர்!

தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுப்பட்ட இவர், தம் இறுதி நாட்களில் கேன்சர் ஆராய்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டார்! - இவர் பெயர் என்ன?

3

அ) டாக்டர். வி. சாந்தா

ஆ) டாக்டர். பத்மா சுப்ரமணியம்

இ) டாக்டர். கமலா செல்வராஜ்

ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி

4

பாரதியார் தன் குருநாதராக இந்தப் பெண்மணியை ஏற்றுக் கொண்டார்!

இவர் பெயர் என்ன?

4

அ) அன்னி பெசன்ட்

ஆ) சாரதா மணி தேவி

இ) சரோஜினி நாயுடு

ஈ) நிவேதிதா தேவி

5

அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தத் தமிழ்ப் பெண்ணின் பெயர் என்ன? (சாரி, நோ சாய்ஸ் :-)

5

Capt. Lakshmi Seghal

6

பரதநாட்டியம் என்றாலே தேவதாசிகள் ஆடுவது என்ற நிலையை மாற்றி, நாட்டியக் கலைஞர்களுக்குச் சமூக மதிப்பு பெற்றுத் தந்த தமிழ்ப் பெண் இவர்! சிருங்கார ரசம் எனப்படும் காதல் சுவையை நாட்டியத்தில் சென்சார் செய்த போது, சபாக்களை எதிர்த்த பெண்மணி.

தமிழிசைக்கு இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி "இசைப் பேரறிஞர்" என்ற விருதைத் தமிழிசைச் சங்கம் இவருக்கு அளித்தது! இந்த "அழகிய" பெண்மணி யார்?

6

அ) ருக்மணி தேவி அருண்டேல்

ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி

இ) பாலசரஸ்வதி

ஈ) கே.பி. சுந்தராம்பாள்

7

இந்தத் தமிழ்ப் பெண் முரடனாய் இருந்த தன் கணவனைப் பக்தனாக மாற்றினாள். பின்னர் ஆழ்வாராகவே உயர்த்தினாள். பேரழகியான இவள், அழகை ஆபத்தான ஆயுதமாக இல்லாமல், ஆன்மீக அயுதமாக மாற்றிக் காட்டினாள்.

அந்த நன்றிக் கடனாக, இன்றைக்கும் ஆலயங்களில், மனைவியோடு காட்சி தரும் ஆழ்வார் இவர் ஒருவரே - திருமங்கையாழ்வார்! இவர் மனைவியான அந்த புரட்சிப் பெண்மணி யார்?

7

அ) அத்துழாய்

ஆ) அமுதவல்லி

இ) தடாதகை

ஈ) குமுதவல்லி

8

இன்று அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் பயிற்சி பெற்று கருவறை நுழையலாம் என்ற அளவுக்குத் தான் வந்திருக்கு! ஆனால் பல நூற்றாண்டுக்கு முன்னரே இது வழக்கில் இருந்தது தான்! இன்னும் ஒரு படி மேலே போய், பெண்களும் கருவறைக்குள் சென்று பூசை செய்த நிகழ்வுகள் நம் சைவ சமயத்தில் உண்டு!

இவள் பூசைக்குச் செல்கிறாள். கருவறை லிங்கத்தின் மேல் மாலை சார்த்த எக்கிய போது சேலை நழுவுகிறது. முழங்கைகளால் சேலையைத் தாங்கிக் கொண்டு, மாலை போட முடியாமல் கசிந்துருக, லிங்கம் தன் தலையை அவள் உயரத்துக்குச் சாய்த்து மாலையை ஏற்றுக் கொள்கிறது. இந்தப் பெண் யார்?

(கொஞ்சம் கடினமான கேள்வியா இருந்தா, க்ளூ கேளுங்க :-)

8

அ) திலகவதியார் (அப்பரின் தமக்கை)

ஆ) மண்டோதரி

இ) தாடகை

ஈ) புனிதவதி (காரைக்கால் அம்மையார்)

உ) பரவை நாச்சியார்

ஊ) சங்கிலி நாச்சியார்

9

இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த ஆசிய விளையாட்டுகளில் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற பெண் இவர். ஆனால் இவர் பெண்ணல்ல என்ற ஒரு விவகாரம் கிளம்பி, விசாரணைக்குப் பின், பாலியல் மருத்துவச் சோதனையில் தவறியதாகச் சொல்லி, பதக்கத்தைப் பறித்துக் கொண்டார்கள். :-(

இவர் முழுப்பெயர் என்ன? (நோ சாய்ஸ்!)

9

செல்வி. சாந்தி செளந்திரராஜன்
Better Luck next time, Shanthi! We wish you all the best! Just dont give up your logical fight!

10

இந்தச் சென்னைப் பெண்மணி, அமெரிக்காவைக் கை நடுவிரலுக்கு ஒப்பிட்டுப் பேசப் போய், உலகெங்கும் உள்ள வலைப்பதிவர்கள் இவருக்கு கண்டனம் தெரிவித்துக் களேபரம் செய்தார்கள். பதிவுலகில் அப்பவே ஒரே அடிதடி தான் போல!:-)

கடைசியில் இந்தத் தமிழ்ப் பெண்மணி மன்னிப்பு கேட்ட பின் எல்லாச் சர்ச்சைகளும் அடங்கியது! இவர் யாரு-ன்னு தெரியுதுங்களா?

10

அ) பத்திரிகையாளர், வாசந்தி

ஆ) இந்திரா நூயி

இ) திலகவதி IPS

ஈ) கனிமொழி



இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) ஒளவையார் ஆ) ஒக்கூர் மாசாத்தியார் இ) காக்கைப்பாடினியார் ஈ) பொன்முடியார்

2. அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார் ஆ) மங்கையர்க்கரசியார்/ தண்டியடிகள் இ) தண்டியடிகள்/ கவுந்தியடிகள் ஈ) திலகவதியார்/ வாயிலார்

3 அ) டாக்டர். வி. சாந்தா ஆ) டாக்டர். பத்மா சுப்ரமணியம் இ) டாக்டர். கமலா செல்வராஜ் ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
4 அ) அன்னி பெசன்ட் ஆ) சாரதா மணி தேவி இ) சரோஜினி நாயுடு ஈ) நிவேதிதா தேவி
5
6 அ) ருக்மணி தேவி அருண்டேல் ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி இ) பாலசரஸ்வதி ஈ) கே.பி. சுந்தராம்பாள்
7 அ) அத்துழாய் ஆ) அமுதவல்லி இ) தடாதகை ஈ) குமுதவல்லி
8 அ) திலகவதியார் (அப்பரின் தமக்கை) ஆ) மண்டோதரி இ) தாடகை ஈ) புனிதவதி (காரைக்கால் அம்மையார்) உ) பரவை நாச்சியார் ஊ) சங்கிலி நாச்சியார்
9
10 அ) பத்திரிகையாளர், வாசந்தி ஆ) இந்திரா நூயி இ) திலகவதி IPS ஈ) கனிமொழி

214 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ////எத்தனை தப்போ தெரியலை! ////

    தப்பாது வி.எஸ்.கே சார்!
    தப்பினாலும், 2வ்து தடவையா ஒரு சிகிச்சை
    அளிச்சிட்டா போச்சு!:-))))

    துளசி டீச்சர் எனக்கும் சேர்த்து பதில் சொல்வாங்கன்னு நான் பதில் எதுவும் சொல்லவில்லை!

    ReplyDelete
  3. மறந்துட்டேன்...வல்லியம்மா வேற இருக்க்காங்க - பதில் சொல்றதுக்கு!

    அடடே, கீதா சாம்பசிவம், ஷைலஷா கயல்விழி முத்துலெட்சுமின்னு இன்னும் எத்தனை பேர் இருக்காங்க - அதோட கூகுள் ஆண்டவர் வேற உதவி செய்ய உக்காந்திருக்காரு!

    எல்லாத்தையும் அவங்க பார்த்துக்குவாங்க!

    ReplyDelete
  4. அச்சச்சோ!
    மறந்தே போச்சு!
    ஸ்டார் வீக்-ல, Comment Moderation disable பண்ணி வச்சிருந்தேன்!
    அதுனால விஎஸ்கே விடைகள் வெளிய தெரிஞ்சி போச்சி! மன்னிச்சிருங்க!

    I am enabling comment moderation again till the puthir potti is complete!
    SK, let me save and then delete your pinootam for now.
    I am really sorry for the goof-up! :-(

    ReplyDelete
  5. //ஆறு அது ஆழமில்ல! அது சேரும் கடலும் ஆழமில்ல!
    ஆழம் எது ஐயா? - அது பொம்பளை மனசு தான்யா!
    இது எந்தப் படத்துல வரும் பாட்டுன்னு யாராச்சும் சொல்லுங்கப்பு!//


    பாடல் வரும் படம் முதல் வசந்தம்

    கதாநாயகன் மறைந்த நடிகர் பாண்டியன்.

    கதாநாயகி ரம்யா கிருஷ்ணன்.

    கதாநாயகி கதாநாயகனை காதலித்து கைவிட...

    இந்த பாடலை திரையில் பாடி நடிப்பவர் சந்திரசேகர். (நியாயப்படி ஹீரோதான பாடணும். என்ன கொடுமை இது :))

    ReplyDelete
  6. 1) காக்கைப்பாடினியார்
    2)இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்
    3)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
    4) நிவேதிதா தேவி
    5) டாக்டர் லட்சுமி சைகல்
    6) ருக்மணி தேவி அருண்டேல்
    7) குமுதவல்லி
    8) தாடகை (நல்லா சுத்த விட்டுட்டீங்க! ஆனாலும் கூகிளாண்டவர் கருணை இருக்குல்ல!)
    9) சாந்தி
    10) இந்திரா நூயி

    ReplyDelete
  7. பதில்கள்..

    1 இ) காக்கைப்பாடினியார்
    2. அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்
    3 ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
    4 ஈ) நிவேதிதா தேவி
    5 கேப்டன் லஷ்மி ஷெகல்.
    6 இ) பாலசரஸ்வதி
    7 ஈ) குமுதவல்லி
    (உங்க ராபின்ஹுட் ஆழ்வார் பதிவுல படிச்சதுதான்.)
    8 இ) தாடகை
    (சாய்ந்தது திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி)
    9 சாந்தி செளந்தர்ராஜன்
    10 ஆ) இந்திரா நூயி

    ReplyDelete
  8. SK 12346 correct!
    9th-kku full name chollanaum :-)
    5.5/10

    ReplyDelete
  9. 1. இ. காக்கைப்பாடினியார்
    2. அ. இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்??
    3. ஈ. டாக்டர் முத்துலட்சும் ரெட்டி
    4. ஈ) நிவேதிதா தேவி
    5. லெப்ட். லஷ்மி
    6.
    7.
    8. அ. திலகவதியார்??
    9. சாந்தி
    10. ஆ.இந்திரா நூயி

    ReplyDelete
  10. koths-kalakkal
    all correct except 6
    9th kku full name chollunga plz

    8.5/10

    ReplyDelete
  11. அரை பிளேடு!
    பின்னிப் பெடல் எடுத்திருக்கீங்க!
    10/10
    மங்கையர் மனங்கவர் கள்வன்-நீ தான்! :-))

    எல்லாரும் எப்படி ஆடுறாங்கன்னு பார்ப்போம்! உங்க கூட எத்தினி பேர் 10/10 வாங்கறாங்க சுயம்வரத்துல-ன்னு பார்த்திட்டுத் தான் முடிவுகள் அறிவிக்கப்படும்! :-)

    ReplyDelete
  12. கொத்ஸ்/நண்பர்களே
    ஒரு சின்ன உதவி: இந்த இடுகைக்கு மட்டும் comment moderation வச்சிட்டு, மத்ததுக்கெல்லாம் தூக்குற option ஏதாச்சும் இருக்கா?

    ReplyDelete
  13. கப்பி - goof up சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

    12345&10 சரி
    9thkku full name chollunga!
    =6.5/10

    ReplyDelete
  14. 6) பாலசரஸ்வதி

    இவங்க, ருக்மணிதேவி அருண்டேல் ரெண்டு பேருமே நீங்க சொன்ன எல்லா தகுதிகளுக்கும் பொருத்தமானவங்கதான். ஆனால் இசைப் பேரறிஞர் என்பது பாலசரஸ்வதிக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது என நினைக்கிறேன். என் முதல் பதில் தவறுதான்.

    9) முழுப் பெயர் வேண்டும் என்பதைப் பார்க்காமல் விட்டுவிட்டேனே!! அது

    சாந்தி சவுந்திரராஜன்.

    எல்லா பதிலும் சொல்லிட்டேனே, இன்னமுமா நம்மளை ப்ரொபைல் செய்வாங்க? :))

    ReplyDelete
  15. ரவி,

    காப்புப்பருவ அன்னையின் படம் அருமை. மழலையும் முதுமையும் - சிம்ப்ளி சுப்பர்ப்ப். முதல் ஊக்கத்தொகை அன்று நடந்த சந்திப்பில் குங்குமத்திற்குப் பங்கமில்லாமல் ஸ்தோத்ரத்துடன் கூடிய சிலுவை இட்டது அன்னையின் கருணை,

    வாழ்த்துகள்

    ReplyDelete
  16. இந்த சதவிகித ஒப்பீடல்லாம் தேவையா?;-)


    1 ஆ) ஒக்கூர் மாசாத்தியார்
    2. அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்
    3 ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
    4 ஈ) நிவேதிதா தேவி
    5 லக்ஷ்மி சேகள்
    6 அ) ருக்மணி தேவி அருண்டேல்
    7 ஈ) குமுதவல்லி
    8 க்ளூ வேற தரேன்னு சொல்லறீங்க, கஷ்டமா கீது தலைவா!
    9 சாந்தி
    10 ஆ) இந்திரா நூயி

    ReplyDelete
  17. கொத்ஸ் அண்ணாச்சி
    என்னிக்குமே நீரு ஆண் ஈயம் தான்யா! :-)
    உம்மைப் ப்ரொபைல் செய்வதல்லாமல் வேறொன்று அறியார் பராபரமே! :-)

    கொத்தானார் ரெண்டாம் ஆட்டம் ஆடி கெலிச்சிட்டாரு! = 10/10

    போச்சு சுயம்வரத்தில் இருப்பது ஒரு மாலை!
    இப்பவே வின்னர்கள் ரெண்டு பேரு! என்ன செய்யலாம்? :-))

    ReplyDelete
  18. எனக்குத் தெரிந்து ஒரு இடுகைக்கு மட்டும் மட்டுறுத்தல் வசதி என்பது பிளாக்கரில் நேரடியாக இல்லை.

    ReplyDelete
  19. ஜீவா,
    சதவிகத ஒப்பீடு தேவை தான்!
    ஏன்னா எனக்குத் தான் பெருமாளுக்கு மட்டூமே கொடை பிடிக்கும் hidden agenda இருக்கே! :-))))

    1,6,8 தவிர எல்லாமே சரி!
    8kku க்ளூ கேக்கறீங்க! சரி தாரேன்!

    ReplyDelete
  20. அரை பிளேடு முதல் வசந்தம் எல்லாம் சொன்னதுனால அவருக்கே மாலை! அதுக்கு அப்புறமாவது மனுசன் அடங்கறாரான்னு பார்ப்போம்!! :)))


    பிகு. மாலை மட்டும்தான் அவருக்கு, ஆனா வரும் பரிசுப் பொருட்கள் எல்லாம் நமக்கு தந்திடணும்.

    ReplyDelete
  21. //அடடே, கீதா சாம்பசிவம், ஷைலஷா கயல்விழி முத்துலெட்சுமின்னு இன்னும் எத்தனை பேர் இருக்காங்க -//

    வாத்தியாரின் பெண்கள் மட்டுமே சரியான பதில் சொல்வார்கள் என்ற பித்தளை மனப்பான்மைக்கு கண்டனங்கள்.

    ReplyDelete
  22. மக்கள்ஸ்!
    ஒன்பதாம் விடைக்கு எல்லாரும் பெண்ணின் முதல் பேர் மட்டுமே கொடுக்கறீங்க! தலைவர் அரைபிளேடு மட்டுமே full name கொடுத்தாரு!

    அதனால், ஆட்டத்தை மாத்தி, ஏதாச்சும் ஒரு பேர் சொன்னாலே போதும்-னு ஆக்கிடறேன்! ஓக்கேவா?

    புது மதிப்பெண் பட்டியல்
    sk=6/10
    arai blade=10/10
    koths=10/10
    kappi=7/10
    jeeva=7/10

    ReplyDelete
  23. //பெருமாளுக்கு மட்டூமே கொடை பிடிக்கும் hidden agenda இருக்கே!//

    நீர் பெருமாளுக்குக் குடை பிடிக்கிறீரு. அவரு உமக்கு கொடை குடுக்கறாரு.

    பெருமாள் கோவிலுக்கு போங்க எனப் பதிவு போட்டு அதன் மூலமாக மற்றவர்கள் சென்று அங்கு உண்டியலில் பணம் போட்டு அதன் மூலம் பெருமாளுக்கு 'கொடை' பிடிக்கும் அஜெண்டாவைச் சொன்னீரானால் அதுவும் சரிதான். ஆனாலும் நாம குடுக்கறது எல்லாம் கொடையா?

    அப்புறம் எங்க ஊர் பக்கம் எல்லாம் சுடலை மாட சாமிக்கு கொடை விழா நடக்கும். ஆனா அது வேற!

    ReplyDelete
  24. என்ன கொடுமை சரவணன்!
    இது வரை வந்து விடை சொன்ன எல்லாப் பதிவர்களும் ஆண்கள்!

    பெண்கள் எங்கே? வீரத்தின் விளைநிலங்கள் எங்கே?
    மகளிர் சக்தி எங்கே? :-))

    மகளிர் சக்தி-ல சொல்லி இந்தப் போட்டிக்கு அறிவிப்பு கொடுக்கச் சொல்லுங்கப்பா!

    ReplyDelete
  25. வேண்டாம். முழுப் பெயரே கேளுங்க. மக்கள் கொஞ்சமாவது முயற்சி செய்யட்டும்.

    அநாவசியமாக கூடுதலாக ஒரு கூகிள் தேடுதல் செய்த அப்பாவி

    இலவசக்கொத்தனார்

    ReplyDelete
  26. Clue for 8th question
    இவர் நாயன்மார்களுள் ஒருவர் அல்லர்!

    ReplyDelete
  27. 1 ஆ) ஒக்கூர் மாசாத்தியார்

    2. அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்

    3 ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
    4 ஈ) நிவேதிதா தேவி
    5 லட்சுமி செகால்
    6 அ) ருக்மணி தேவி அருண்டேல்
    7 தெரியவில்லை. ஆனா குமுதவல்லிங்குற பேர்தான் வைணவங்க வைக்கிற பேர் மாதிரி இருக்கு. ஆகையால அதையே தேர்ந்தெடுக்குறேன்.
    8 ஆ) மண்டோதரி - இதுவும் தெரியலை. காரைக்காலம்மையாருக்கோ பரவை, சங்கிலியாருக்கோ இப்பிடி நடந்துச்சான்னு தெரியலை. மண்டோதரி பத்தித் தெரியாது. ஆகையால அவங்களை தேர்ந்தெடுக்கிறேன்.
    9 சாந்தி
    10 அ) பத்திரிகையாளர் வாசந்தி

    ReplyDelete
  28. அது சரி... தமிழ்ப் பெண்கள் பத்துன கேள்விகள் சொன்னீங்க. அதான் முருகன் தொடர்பான எந்தக் கேள்வியும் வரலையோ.. சரி. சரி. புரியுது.

    ReplyDelete
  29. //வேண்டாம். முழுப் பெயரே கேளுங்க. மக்கள் கொஞ்சமாவது முயற்சி செய்யட்டும். //

    -வழிமொழிகிறேன்.
    கூகிள் தேடுதல் செய்த இன்னொரு அப்பாவி.

    //அரை பிளேடு முதல் வசந்தம் எல்லாம் சொன்னதுனால அவருக்கே மாலை! //

    நன்றி கொத்தனாரே.

    நாம இரண்டு பேரும் ஒத்துக்கிட்டாதாலே மாலை கூகிளுக்குத்தான் போகணும். :)

    ReplyDelete
  30. 1 இ) காக்கைபாடினியார் நச்செள்ளையார்

    3 ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி (ஆனந்திபாய் ஜோஷி (1865) என்று பல இணைய தளங்கள் சொல்லுகின்றன. நம்மூரம்மணியை விட்டு கொடுத்திருவோமா?)
    4 ஈ) நிவேதிதா தேவி (பாரதி தன் மனைவியையும் தனக்கு சமமாகப் பார்க்கத் தொடங்கியது இதுக்கப்புறம் தான்.)
    5 காப்டன் லக்ஷ்மி ஸ்வாமிநாதன் செகல். (சுபாஷினி அலி அவங்களோட அம்மா)
    6 இ) பாலசரஸ்வதி
    7 ஈ) குமுதவல்லி (திருமங்கை மன்னன் மணவாட்டி)
    8 இ) தாடகை
    9 சாந்தி சொந்தராஜன் (Santhi Soundarajan) :-((
    10 ஆ) இந்திரா நூயி

    ReplyDelete
  31. சே, ஒரு ரெண்டு மணிநேரம் முன்னால பாத்திருந்தா, இந்த் கட்/பேஸ்ட் வேலை மிச்சமாயிருந்திருக்கும்:‍) அட்லீஸ்ட் இந்த அரை/கொத்துபவர்களுக்கு (பேரை சொன்னேன்பா!) முன்னால, என் கரெக்டு பதில் வந்திருக்கும்...!

    மகளிருக்கு வழி விட்டு நில்லுங்கப்பா!

    ReplyDelete
  32. என்னய்யா, இதிலும் கொஞ்சம் விளையாடி 50 - 100 அடிக்கலாமுன்னு பார்த்தா பதிலே சொல்ல மாட்டேங்கறீரே. நானே ஒத்தை ஆளா எம்புட்டுதான் ஆடறது? :P

    ReplyDelete
  33. இம்புட்டுக்கும் 40க்கு பயந்து ஆட வேண்டிய கட்டாயம் எல்லாம் இல்லை! அப்படி இருந்தும் கூடவா...

    ReplyDelete
  34. இவ்வளவு லேட்டா கேள்வி கேட்டுட்டு, மகளிர் சக்தி எங்கேன்னு கேள்வி?!! பேயாடற வேளையில... வேண்டாம் சாமி, பரிசை கொடுத்துடுங்க, நாம் பாட்டுக்கு போறேன்.

    ReplyDelete
  35. இ.கொ., என் பின்னூட்டம் எல்லாம் ப்ளாக் அவுட்.... ப்ளாக்டு அவுட். பெரும் சதி

    ReplyDelete
  36. அய்யா ஜி.ரா., முருகு என்றால் அழகு. அழகு என்பதில் பெண்களுக்கு இணையுண்டா? (தைரியம் இருந்தால் இல்லை என்று சொல்லவும்) எனவே, எல்லா கேள்விகளுமே முருகைப்(முருகனைப்) பற்றி தான். சரியா?

    ReplyDelete
  37. //இலவசக்கொத்தனார் said...
    என்னய்யா, இதிலும் கொஞ்சம் விளையாடி 50 - 100 அடிக்கலாமுன்னு பார்த்தா பதிலே சொல்ல மாட்டேங்கறீரே//

    ஹிஹி
    இந்தப் பின்னூட்டக் கலை தெரியாத என்னைப் போயி நட்சத்திரமாக்கி...சேச்சே...எனக்கே வெக்கமாக் கீது!

    //நானே ஒத்தை ஆளா எம்புட்டுதான் ஆடறது?//

    கோச்சிக்காத தல!
    இனி அடிச்சி ஆடிற்றேன்! :-)

    ReplyDelete
  38. எவ்வளவு கரெக்டு?
    எவ்வளவு சரி?

    ReplyDelete
  39. @கெபி அக்கா!
    தெய்வமே! கையைக் கொடுங்க!

    பக்தன் கேஆரெஸ்ஸின் வேட்டியை உருவ வந்த ஜிரா-விடம் இருந்து
    பக்தனை வேட்டி சப்ளை செய்து காப்பாற்றிய பரந்தாமா=கெபி அக்கா!
    நின் தாள் சரண் :-)))

    @ஜிரா
    யக்கா கேட்கும் கேள்விக்கு வில் இருந்தா விடையிறுங்கள், தில் இருந்தா திரையறுங்கள் பார்ப்போம்! :-))

    ReplyDelete
  40. //இந்தப் பின்னூட்டக் கலை தெரியாத என்னைப் போயி நட்சத்திரமாக்கி...சேச்சே...எனக்கே வெக்கமாக் கீது!//

    ஒத்துக்கறேன். அந்தக் கலை எல்லாம் தெரிஞ்சு இருந்தா இப்படி ஒரே பின்னூட்டத்தில் ரெண்டு பேருக்கு @ போட்டு பதில் சொல்லி இருப்ப?

    ReplyDelete
  41. கெபி அக்கா
    ரெண்டாம் கேள்விக்கு விடை சொல்லலியே! உங்களுக்குத் தெரியும்-னு எனக்குத் தெரியும்! கவனக் குறைவா?

    மற்ற எல்லா விடைகளும் சரி!
    =9/10

    விடைகள் பலவற்றுக்குச் சுட்டியும் கொடுத்திருக்கீங்க! ஸ்பெசல் நன்றி!

    ReplyDelete
  42. 1 1 இ) காக்கைபாடினியார் நச்செள்ளையார்

    3 ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி (ஆனந்திபாய் ஜோஷி (1865) என்று பல இணைய தளங்கள் சொல்லுகின்றன. நம்மூரம்மணியை விட்டு கொடுத்திருவோமா?)
    4 ஈ) நிவேதிதா தேவி
    5 காப்டன் லக்ஷ்மி ஸ்வாமிநாதன் செகல். (சுபாஷினி அலி அவங்களோட அம்மா)
    6 இ) பாலசரஸ்வதி
    7 ஈ) குமுதவல்லி (திருமங்கை மன்னன் மணவாட்டி)
    8 இ) தாடகை
    9 சாந்தி சொந்தராஜன் (Santhi Soundarajan) :-((
    10 ஆ) இந்திரா நூயி

    ReplyDelete
  43. அதே பதிலை திருப்பி கட்/பேஸ்டிட்டேன். ரெண்டாவது பதில் இருக்கு. இப்பிடி, அக்கா, கை கொடு காலை காமி ந்னு சொன்ன போதே எனக்கு சந்தேகம். இதுல மகளிர் சக்தி யாம்.

    உங்க தங்கச்சிக்கு ஃபோன் போடவா?

    ReplyDelete
  44. //விடைகள் பலவற்றுக்குச் சுட்டியும் கொடுத்திருக்கீங்க! ஸ்பெசல் நன்றி!//

    நமக்கெல்லாம் விடை மனதிலேயே இருக்கா அதான் சுட்டி எல்லாம் தேவைப் படலை. இருந்தாலும் அந்த 8ஆவது கேள்விக்கு ரொம்பவே சுத்த விட்டுட்டீரு!

    ReplyDelete
  45. ஹே! எங்க ஜிரா அண்ணாத்த சினம் தணிந்து மீள் பதிவுக்கு...ச்சே மீண்டும் பதிவுக்கு வந்திருக்காரு!
    வாங்க ஜிரா பரந்தாமா! உங்கள் அத்யந்த சிஷ்யனும் நண்பனுமான அர்ஜூனன் நமஸ்கரிக்கின்றேன்! :-)))

    ஜிராவா முதல் கேள்விக்கு தப்பான விடை சொல்வது! OMG!
    234579 சரி ஜிரா
    1-உங்களுக்குத் தெரியும். கவனக்குறைவோ?
    6-konjam tricky, but easy thaan
    8-tough
    10-ithuvum easy thaan, just few years back

    = 6/10

    ReplyDelete
  46. இருட்டடிப்பு. கண் துடைப்பு. சதி.

    (எதுக்கும் ரெண்டு ஸ்மைலி:-))

    ReplyDelete
  47. //நமக்கெல்லாம் விடை மனதிலேயே இருக்கா அதான் சுட்டி எல்லாம் தேவைப் படலை// மீசையில மண் ஒட்டலை.

    ReplyDelete
  48. எப்படி எல்லாமோ தேடிப் போயி திருவிளையாடற் புராணத்தில் தாடகை மானம் இருக்கிறதைக் கண்டு பிடிச்சு அதுக்குள்ள போய் தேடி

    கோடு நான்கு உடைய வேழம் தானவன் குறைத்த
    கோட்டைப்
    பாடு அற நோற்றுப் பெற்ற பதி இது மாலை சாத்தும்
    தாடகை மானம் காப்பான் தாழ்ந்து பூம் கச்சு இட்டு
    ஈர்க்கும்
    பீடு உறு கலயன் அன்பின் நிமிர்ந்த எம் பிரான் ஊர்
    ஈதல்.

    என்ற பாடலைக் கண்டுபிடிச்சு.....அப்பாடா! இதுக்கு நடுவில் ஒருங்குறி திஸ்கி அப்படின்னு ஒரே படுத்தல்.

    விடை தெரிஞ்ச பின்னாடி வேற மாதிரி தேடினா இது சிக்குது!

    http://www.aaraamthinai.com/aanmeegam/2008/01aanmeegam25.asp

    ReplyDelete
  49. @கெபி
    யக்கா...பச்சைப் புள்ள மேல இப்படிப் பாயலாமா? உங்கள் கருணை தேயலாமா? உங்கள் அன்பு ஓயலாமா?

    நானும் தேடித் தேடிப் பாக்குறேன்!
    1, next 3 தான் இருக்கு!
    2 இல்லவே இல்ல உங்க பின்னூட்டத்தில்! :-(

    ReplyDelete
  50. கொத்ஸ்
    அந்த எட்டாம் கேள்விக்கு எட்டோ எட்டு-ன்னு எட்டி இருக்கீங்க போல!
    அச்சோ பாவம்! :-))

    ReplyDelete
  51. சுட்டிக்கு நடுவுல ஒரு ஸ்பேஸ் ஷிப். அதான்.

    ReplyDelete
  52. // கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    அய்யா ஜி.ரா., முருகு என்றால் அழகு. அழகு என்பதில் பெண்களுக்கு இணையுண்டா? (தைரியம் இருந்தால் இல்லை என்று சொல்லவும்) எனவே, எல்லா கேள்விகளுமே முருகைப்(முருகனைப்) பற்றி தான். சரியா? //

    அடடா! தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்களே.... வேண்டிய வேலை ஆகுறதுக்காக அழகே அமுதேன்னு நாங்க பொய் சொல்றதுதான். (நீங்க இப்ப உதவுற கே.ஆர்.எஸ்சையும் சேத்துத்தான்) அதையெல்லாம் உண்மைன்னு நம்பீட்டீங்களா!!!!! இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே..

    உலக ஆண்களின் சார்பாக ஒரு சுயதம்பட்டம்... ஆண்யானைக்குத்தான் தந்தம் உண்டு. ஆண்குயில்தான் கூவும். ஆண் மயிலுக்குத்தான் தோகை உண்டு. ஆண்களுக்குத்தான் வலிமையுண்டு. ஆகையால என்னதான் பெண்களை நாங்க அழகேன்னு பாராட்டினாலும்... அதெல்லாம் கவிதைக்குப் பொய்யழகுதான்.

    என்ன ரவி, இந்த வேட்டியும் கிழிஞ்சு போச்சே... என்ன செய்யப் போறீங்க? பேசாம சரணடைஞ்சிருங்க. மன்னிச்சிர்ரேன். ;) வீண் போட்டி வேலைக்காகது என்பதைப் புரிந்து கொள்ளவும்.

    ReplyDelete
  53. //இருட்டடிப்பு. கண் துடைப்பு. சதி.//

    இதுல இவரு நான் ஈயம் பித்தளைன்னு பேசறாரு. என்னாத்த சொல்ல! எல்லாம் நேரம்டா சாமி! (பெருமாளே!)

    ReplyDelete
  54. @கொத்ஸ்!

    எட்டாம் கேள்வி ரொம்பவும் சுத்த வுட்டிரிச்சி போல!
    பாட்டெல்லாம் எடுத்துக் கொடுத்து பின்னி இருக்கீங்களே தல!

    ReplyDelete
  55. கொத்ஸ் எட்டாம் கேள்விக்குத் தேவாரம் பாடி இருக்காருப்பா!
    தலை வணங்குகிறேன் கொத்தனாரே உம் தமிழ்ப் பற்றுக்கும் தமிழ்த் தொண்டுக்கும்!

    ReplyDelete
  56. எலே கொத்ஸ்!
    இங்கன பாடுன தேவாரத்தைத் தில்லையில் போயி உன்னால பாட முடியுமா?
    அப்ப ஒத்துக்கறோம் நீ தமிழ்ப் பற்றாளன்-ன்னு!

    அதுக்குள்ளாற கொத்தனாருக்கு தமிழ்ப் பற்று விருதைத் தூக்கித் தரத் துடிக்கும் கேஆரெஸ்ஸே! அடங்கு! இல்லையேல் அடக்கப்படுவாய்! :-)))

    ReplyDelete
  57. //இப்படிப் பாயலாமா? உங்கள் கருணை தேயலாமா? உங்கள் அன்பு ஓயலாமா?//

    பாய - லாமா, கருணை தேய - லாமா, அன்பு ஓய -லாமா

    கருணையும் அன்புமே பண்பாகக் கொண்ட லாமாவை பற்றிய இப்படிப்பட்ட திரிதல்களை முன்வைத்து திபேத்தியர்களை எதிர்த்து வன்முறை வெறியாட்டம் போடும் சீன அரசுக்கு உம் ஆதரவை தெரிவிப்பது நன்றாகவே புரிகிறது. உம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

    ReplyDelete
  58. //கொத்தனாரே உம் தமிழ்ப் பற்றுக்கும் தமிழ்த் தொண்டுக்கும்!//

    இதுக்காக ஏற்கனவே ஒருத்தர் எனக்கு தமிழறிஞர் அப்படின்னு பட்டம் குடுத்து இருக்காரு. நீரெல்லாம் எங்க, வெறும் ஜுஜுப்பி!

    ReplyDelete
  59. KRS, //அடக்கப்படுவாய்! :‍)))// தெரிஞ்சா சரி.

    இ.கொ., //இதுல இவரு நான் ஈயம் பித்தளைன்னு பேசறாரு// அய்யா, உமக்கு ஏன் கோவம் வருது? நெருப்பில்லாமல் புகையுமா? :-)

    ReplyDelete
  60. @கெபி அக்கா
    வாராது வந்த மாமணியே
    இரண்டாம் வடை வந்து சேர்ந்து விட்டது!

    மகளிர் சக்தியில்,முதலில் 10/10 வாங்கிச் சாதனை புரிந்த சாதனைச் செல்வி கெக்கேபிக்குணி வாழ்க! வாழ்க!!

    ReplyDelete
  61. //இ.கொ., //இதுல இவரு நான் ஈயம் பித்தளைன்னு பேசறாரு// அய்யா, உமக்கு ஏன் கோவம் வருது? நெருப்பில்லாமல் புகையுமா? :-)//

    என்னதான் இருந்தாலும் யாரு யாரு எங்க என்ன பேசறதுன்னு ஒரு வரைமுறை இருக்கு இல்லையா....

    இவரு எவ்வளவு நல்லவரு. அப்பேர்பட்டவரு இந்த மாதிரி ப்ரொபைலிங் எல்லாம் செய்யலாமா? அதுக்குன்னு ஸ்பெஷலிஸ்ட்டுங்க இருக்காங்க இல்ல. அதான் அம்புட்டுக் கோவம்.

    ReplyDelete
  62. ஜிரா, கல்வெட்டில் வடித்தீரே: //உலக ஆண்களின் சார்பாக ஒரு சுயதம்பட்டம்// இன்னொரு நாள் உதவாம போயிடும்....:-)

    ReplyDelete
  63. 10/10 வெற்றியாளர்களில்...இது வரை....
    ஆண்களில் இருவர்
    பெண்களில் ஒருவர் தானா?

    ஒரு கெபி பதின்மருக்குச் சமானம் தான்! அதனால் பெண் வெற்றியாளர்கள் பதின்மர்-ன்னு சொல்லிடலாம் தான்!

    என்றாலும் சுயம்வர விதிகள் படி ஹெட் கவுண்ட் தானே சரி வரும்!
    என் செய்வேன்! என் செய்வேன்!
    அடுத்த 10/10 பெண் வெற்றியாளர் யாரோ?

    ReplyDelete
  64. யப்பா! நன்றி. கிளம்பறேன்.

    ReplyDelete
  65. என்னதான் கேபி அக்கா சரியான பதில்களைச் சொல்லி இருந்தாலும் மாலையை அவங்க கிட்ட குடுத்துடாதேடே. அப்புறம் லக்கியார் வந்து பதிவு போட்டுட போறாரு! :))

    ReplyDelete
  66. //ஆண்யானைக்குத்தான் தந்தம் உண்டு. ஆண்குயில்தான் கூவும். ஆண் மயிலுக்குத்தான் தோகை உண்டு. ஆண்களுக்குத்தான் வலிமையுண்டு. ஆகையால என்னதான் பெண்களை நாங்க அழகேன்னு பாராட்டினாலும்... அதெல்லாம் கவிதைக்குப் பொய்யழகுதான்//

    ஐயகோ...
    கெபி யக்கோவ்! போயிறாதீங்க! ஜிராவின் கொட்டம் அடக்கிட்டுச் செல்லுங்கள்! இதற்குத் தக்க பதில் காட்டி விட்டுச் செல்லுங்கள்! ஜிராவின் ஆணியப் பேயை ஓட்டி விட்டுச் செல்லுங்கள்!

    //என்ன ரவி, இந்த வேட்டியும் கிழிஞ்சு போச்சே... என்ன செய்யப் போறீங்க?//

    அக்கா இருக்க கவலை ஏன்?
    பட்டு வேட்டி சப்ளை, பரந்தாமன் கெபி அக்கா கைகளில் இருந்து கங்கை போல் காவிரி போல் சுரந்து கொண்டே இருக்கும்!

    //பேசாம சரணடைஞ்சிருங்க//
    மாட்டேன்! அடியேன் சரணாகதி மட்டுமே செய்வேன்! :-))

    //வீண் போட்டி வேலைக்காகது என்பதைப் புரிந்து கொள்ளவும்//

    வேலை வணங்குவதே என் வேலை!
    வேலுக்கும் ஆகும்! வேலைக்கும் ஆகும்!
    வெற்றி வேல்! வீர வேல்!
    No saran adanjufying with gira!
    Por Drums kottatum! :-))

    ReplyDelete
  67. நானும் ஒத்தேல எம்புட்டுதாண்டே ஆடறது.... இந்த வெட்டி பயலுவ வேண்டாத பொழுதுக்கு இங்ஙனதானே சுத்திக்கிட்டு இருப்பானுங்க. இன்னைக்குன்னு என்ன கேடு வந்துச்சோ தெரியல. எவனையும் காங்கலையே.
    மக்கா எவனாச்சும் வாங்கடே. ஆட்டயப் போடுவோம்...

    ReplyDelete
  68. //அரை பிளேடு said...
    நாம இரண்டு பேரும் ஒத்துக்கிட்டாதாலே மாலை கூகிளுக்குத்தான் போகணும். :)//

    I want to work for Google now! :-)))

    ReplyDelete
  69. //I want to work for Google now! :-)))//

    NO!!!

    'Cos I want google to work!! :))

    ReplyDelete
  70. அப்பூ, பதில்தான் சொல்லறது இல்லை. இப்போ என்ன என் பின்னூட்டத்தை வெளியிடக்கூட மாட்டேன்னு அடம் பிடிச்சா எப்படி? :(

    ReplyDelete
  71. //ஆண்யானைக்குத்தான் தந்தம் உண்டு. ஆண்குயில்தான் கூவும். ஆண் மயிலுக்குத்தான் தோகை உண்டு. //

    ஜிராண்ணா, ஒரு டவுட்டுங்கண்ணா, அப்போ அழகா இருக்கிற ஆம்பளைங்க யாருக்குமே ஆறறிவு இல்லீங்களாண்ணா?

    என்னைப் பார்த்து எவனும் இப்படி எல்லாம் சொல்ல முடியாது என்கிற தைரியத்தில்

    இலவசக்கொத்தனார்

    ReplyDelete
  72. // கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    ஜிரா, கல்வெட்டில் வடித்தீரே: //உலக ஆண்களின் சார்பாக ஒரு சுயதம்பட்டம்// இன்னொரு நாள் உதவாம போயிடும்....:-)//

    என்னக்கா இது! இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க. அப்ப நாங்க சொல்றதுக்கு வேற கெடைக்காமலா இருக்கும்? தமிழ்க்கடவுள் முருகவேள் கொடுத்த முத்தமிழும் எக்கச்சக்கமா இருக்கு. அதுல எடுத்து விட்டாலே போதும். நீங்க கே.ஆர்.எஸ் கூடச் சேராம இருங்க. நமக்குள்ள எதுக்கு சண்டை. அக்கா தம்பி பாசத்துக்குள்ள கே.ஆர்.எஸ் வரனுமா. யோசிச்சுப் பாருங்க. ஒங்க மேல எவ்ளோ மரியாதை வெச்சிருக்கேன்னு ஒங்களுக்கே தெரியும்.

    ReplyDelete
  73. @கொத்ஸ்
    ஒங்களுக்கு இன்னிக்கி ஆட்டைக்குத் தோழன் அரை பிளேடு தான்! தோழி கெபி தான்!

    வெட்டி இஸ் கொட்டி இன் தி கிச்சன்! ஆல் ஸ்பில்ட்! ஸோ மறத் தமிழன் மண்தரை துடைத்துக் கொண்டு இருக்கான்!

    ReplyDelete
  74. //என்ன ரவி, இந்த வேட்டியும் கிழிஞ்சு போச்சே... என்ன செய்யப் போறீங்க?//

    வேட்டி கிழிஞ்சா என்ன டவுசர்தான் இருக்கே. அதையும் கிழிக்கிற ஆள் இன்னும் வரலை. அவரு வந்தாருன்னாதான் அதுக்கும் டேஞ்சர். அப்போ பார்த்துக்கலாம். இல்லை பார்க்காம இருக்கலாம். :))

    ReplyDelete
  75. //பேசாம சரணடைஞ்சிருங்க//

    என்னது சரணை அடையறதுக்கா இம்புட்டுப் போட்டி? என்னடா எல்லாம் பொம்பளப் பிள்ளைங்க கேள்வியா இருக்கேன்னு நினைச்சேன். எல்லாம் அந்த படுபாவியை அடையத்தானா?

    யோவ் அரைபிளேடு, நம்மளைக் கவுத்துட்டாங்கய்யா! வந்து என்னான்னு கேளு!

    ReplyDelete
  76. //வீண் போட்டி வேலைக்காகது என்பதைப் புரிந்து கொள்ளவும்//

    கல்யாணமே ஆகலை. ஆனா இந்த தத்துவம் எல்லாம் மட்டும் சரியாச் சொல்லறீரு. ஜிரா சும்மாச் சொல்லக்கூடாது அறிவாளிதான்யா நீரு!

    ReplyDelete
  77. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ஐயகோ...
    கெபி யக்கோவ்! போயிறாதீங்க! ஜிராவின் கொட்டம் அடக்கிட்டுச் செல்லுங்கள்! இதற்குத் தக்க பதில் காட்டி விட்டுச் செல்லுங்கள்! ஜிராவின் ஆணியப் பேயை ஓட்டி விட்டுச் செல்லுங்கள்! //

    கொட்டமாவது சட்டமாவது.... அக்கா தம்பிக்குள்ள பிரச்சனைய மூட்டி விடுறீங்க. இந்த மாதிரி தப்பெல்லாம் செய்யாதீங்க.

    நீங்க ஏன் தமிழ்ப் பெண்களை வெச்சிப் போட்டி வெச்சீங்கன்னு சொன்னத இப்ப ஊருக்கே சொல்லீர்ரேன். அப்பத்தெரியும் ஆணீயம் யாரு பெண்ணீயம் யாரு பித்தளை யாருன்னு...

    பெண்களே...இதோ இந்தக் கே.ஆர்.எஸ்....போட்டீன்னா பெண்கள்தான் அடிச்சிக்கிட்டு வருவாங்க. அவங்க வந்து சண்டை போட்டாத்தான் பதிவுல குழாயடி எபெக்ட் இருக்கும்னு சொன்னாரு. அதுனாலதான் பின்னூட்டத்துல கூட. ஆண் -2 பெண்-1தானான்னு ஏத்தி விடுறதெல்லாம்.

    ////என்ன ரவி, இந்த வேட்டியும் கிழிஞ்சு போச்சே... என்ன செய்யப் போறீங்க?//

    அக்கா இருக்க கவலை ஏன்?
    பட்டு வேட்டி சப்ளை, பரந்தாமன் கெபி அக்கா கைகளில் இருந்து கங்கை போல் காவிரி போல் சுரந்து கொண்டே இருக்கும்! //

    அக்கா சொக்கா கொடுத்ததெல்லாம் அந்தக் காலம். இப்ப நாங்க்தான் அவங்களுக்குக் கூட்டணி. தெரிஞ்சிக்கோங்க. கங்கைதான் அழுக்கோ அழுக்காமே. காவிரியில தண்ணியே விட மாட்டேங்குறாங்க. நீங்க உள்குத்து வெச்சி கெபி அக்காவைத் திட்டுவதை நான் கண்டமானிக்கக் கண்டிக்கிறேன்.

    ////பேசாம சரணடைஞ்சிருங்க//
    மாட்டேன்! அடியேன் சரணாகதி மட்டுமே செய்வேன்! :-))//

    கதியாவது சொதியாவது. உங்க விதியிலேயே அப்படிக் கெடையாதே. மதியில்லாம நடந்துக்காதீங்க. என்னைச் சரணடைஞ்சிருங்க. பாவ மன்னிப்பும் கூடச் சேத்துக் குடுக்கிறேன்.

    ////வீண் போட்டி வேலைக்காகது என்பதைப் புரிந்து கொள்ளவும்//

    வேலை வணங்குவதே என் வேலை!
    வேலுக்கும் ஆகும்! வேலைக்கும் ஆகும்!
    வெற்றி வேல்! வீர வேல்!
    No saran adanjufying with gira!
    Por Drums kottatum! :-)) //

    என்னாது... வேலை வணங்குவது உங்க வேலையா....இப்பிடியெல்லாம் பொய் சொல்லக் கூடாது. அபத்தம் செப்பினேவாரிக்கி புவ்வா தொரகலேது. மீரு அரவம்லோ அபத்தம் செப்தாரு. அதி மஞ்சிதிகாது.
    டரம்ஸ் கிழிஞ்சி தொங்குது. அத ஓரமா வெச்சிட்டு கொஞ்சம் தண்ணி குடிங்க.

    ReplyDelete
  78. @கொத்ஸ்
    நீர் அனுப்பிய தேவாரப் பாட்டுப் பின்னூட்டத்தை இன்னும் வெளியிடாம வச்சிருக்கேனே!

    தேவாரத்தை மாதவிப் பந்தல் அம்பலத்தில் இன்னும் ஏற்றாததன் காரணம் என்ன? அப்படி, இப்படின்னு எல்லாம் நுண்ணரசியல் பண்ற ஐடியாவே இல்லையா உமக்கு?
    இதுக்கு மேல நானே எப்படி எடுத்துக் கொடுக்க முடியும்? :-))

    மாதவிப் பந்தல் அம்பலம் ஏறுவோம்!
    மாசிலாப் பதிகம் என்றும் கூறுவோம்
    அப்படி-ன்னு ஒரு அறிக்கை வுடறது! :-))

    ReplyDelete
  79. //யோசிச்சுப் பாருங்க. ஒங்க மேல எவ்ளோ மரியாதை வெச்சிருக்கேன்னு ஒங்களுக்கே தெரியும்.//

    ஆனாலும் குசும்பு ஜாஸ்திதான்யா உமக்கு. மரியாதைன்னா சும்மா அப்படிப் பார்த்தாலே தெரியணும். நம்ம சின்ன சரத்குமார் பெரிய சரத்குமார் முன்னாடி வர மாதிரி. நீர் என்னடான்னா யோசிச்சுப் பாருங்க ஒங்களுக்கே தெரியும் அப்படின்னு சொல்லறீரு.

    ரொம்பத்தான் நக்கலு!!

    ReplyDelete
  80. // இலவசக்கொத்தனார் said...
    //ஆண்யானைக்குத்தான் தந்தம் உண்டு. ஆண்குயில்தான் கூவும். ஆண் மயிலுக்குத்தான் தோகை உண்டு. //

    ஜிராண்ணா, ஒரு டவுட்டுங்கண்ணா, அப்போ அழகா இருக்கிற ஆம்பளைங்க யாருக்குமே ஆறறிவு இல்லீங்களாண்ணா?

    என்னைப் பார்த்து எவனும் இப்படி எல்லாம் சொல்ல முடியாது என்கிற தைரியத்தில்

    இலவசக்கொத்தனார் //

    கொத்ஸ்... நல்லா யோஜிஜ்ஜு பாருங்க. அழகா இருக்குற ஆண்களுக்கு அறிவு மட்டுந்தான் இல்லைன்னு வெச்சிக்கிட்டாலும் கூட... அந்தப் பக்கம் ரெண்டுமே இல்லையே ;)

    ReplyDelete
  81. // இலவசக்கொத்தனார் said...
    //பேசாம சரணடைஞ்சிருங்க//

    என்னது சரணை அடையறதுக்கா இம்புட்டுப் போட்டி? என்னடா எல்லாம் பொம்பளப் பிள்ளைங்க கேள்வியா இருக்கேன்னு நினைச்சேன். எல்லாம் அந்த படுபாவியை அடையத்தானா?

    யோவ் அரைபிளேடு, நம்மளைக் கவுத்துட்டாங்கய்யா! வந்து என்னான்னு கேளு! //

    இப்பவாச்சும் ரவி எங்க வர்ரார்னு புரிஞ்சிக்கிட்டீங்களா... இங்க வந்து ஆற அமர விடை சொல்லி வடையச் சுடுறீங்களே... எம் பேச்சை நீங்க கூட கண்டுக்கலையே கொத்ஸ்.....எப்படியோ இப்பவாச்சும் உண்மை புரிஞ்சதே...

    ReplyDelete
  82. //நீங்க கே.ஆர்.எஸ் கூடச் சேராம இருங்க. நமக்குள்ள எதுக்கு சண்டை. அக்கா தம்பி பாசத்துக்குள்ள கே.ஆர்.எஸ் வரனுமா//

    அக்கா...
    உங்களை அக்கா-ன்னு மொதலில் கூப்பிட்டது நான் தான்!
    அதனால் பழம் எனக்கே கொடுக்க வேண்டும்!

    நான் தான் இளைய பிள்ளை!
    அதனால் பழம் எனக்கே கொடுக்க வேண்டும்!

    ஜிராவின் ஏமாற்று வார்த்தைகளில் மயங்கிட வேண்டாம்!
    கொஞ்சிக் கொஞ்சிக் பேசி மதி மயக்கும்
    ஜிராவின் உலகம் வலை விரிக்கும்-ன்னு மயில்பாடினியார் பாட்டை நினைவு கூருங்கள்! :-))

    ReplyDelete
  83. //நீர் அனுப்பிய தேவாரப் பாட்டுப் பின்னூட்டத்தை இன்னும் வெளியிடாம வச்சிருக்கேனே!//

    ஒரு ஊரில் ஒருத்தன் இருந்தானாம். அவன் வசந்த் அண்ட் கோ போய் அங்க பார்த்த டிவி ஒண்ணை விலைக்குக் கேட்டானாம். நம்ம அண்ணாச்சி உனக்கெல்லாம் கிடையாது இடத்தைக் காலி பண்ணுன்னு சொன்னாராம்.

    இவனும் விடாக்கண்டனா அடுத்த நாள் மாறுவேஷம் போட்டுக்கிட்டுப் போயி அந்த டிவியை விலைக்குக் கேட்டானாம். அண்ணாச்சி எலே நீ நேத்து வந்தவந்தானே. உனக்குத்தான் அதெல்லாம் விலைக்கு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேனே அப்படின்னாராம்.

    இவனும் வேற வேற வேஷத்தில் எல்லாம் போய் பார்த்தானாம். ஆனா அண்ணாச்சி சரியாக் கண்டுபிடிச்சு துரத்தி விட்டுக்கிட்டே இருந்தாராம். கடைசியாப் போயி அண்ணே நீங்க அந்த டீவியை விலைக்குத் தரலைன்னா கூடப் பரவாயில்லை எப்படிண்ணே என்னை கண்டுபிடிக்கறீங்க? அதை மட்டும் சொல்லுங்க அப்படின்னு சொன்னாராம்.

    அண்ணாச்சி உடனே எல எடுப்பட்ட பயலே நீ விலைக்குக் கேட்கறது டீவி இல்லடா அது மைக்ரோவேவ் அவன் அப்படின்னாராம்.

    தேவாரப் பாட்டு தேவாரப் பாட்டு அப்படின்னு நீர் கூவும் போது எல்லாம் எனக்கு இந்தக் கதைதான் ஞாபகத்துக்கு வருது. ஏன்னே தெரியலை!

    ReplyDelete
  84. //தேவாரத்தை மாதவிப் பந்தல் அம்பலத்தில் இன்னும் ஏற்றாததன் காரணம் என்ன? அப்படி, இப்படின்னு எல்லாம் நுண்ணரசியல் பண்ற ஐடியாவே இல்லையா உமக்கு?
    இதுக்கு மேல நானே எப்படி எடுத்துக் கொடுக்க முடியும்? :-))//

    தேவாரம் மாதவிப்பந்தல் அம்பலத்தில் ஏறுதோ இல்லையோ ஆனா வேற என்னமோ அம்பலத்தில் ஏறது. அது நல்லாத் தெரியுது!! :))

    இதுக்கும் மேல நீர் எடுத்துக் குடுக்கணுமா? வேண்டவே வேண்டாம்.

    ReplyDelete
  85. //வேட்டி கிழிஞ்சா என்ன டவுசர்தான் இருக்கே.//

    நோ, ஐ புட்டிங் ஒன்லி ஃபுல் ஃபேன்ட் ஈவன் இன் ஹவுஸ்!

    //அதையும் கிழிக்கிற ஆள் இன்னும் வரலை.//

    யாரு அவரு?
    வூ ஹி இஸ்?
    எவரு அவரு?
    கோன் ஹைன் ஹோ?

    //அப்போ பார்த்துக்கலாம். இல்லை பார்க்காம இருக்கலாம். :))//

    அடச்சே! ......

    ReplyDelete
  86. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //நீங்க கே.ஆர்.எஸ் கூடச் சேராம இருங்க. நமக்குள்ள எதுக்கு சண்டை. அக்கா தம்பி பாசத்துக்குள்ள கே.ஆர்.எஸ் வரனுமா//

    அக்கா...
    உங்களை அக்கா-ன்னு மொதலில் கூப்பிட்டது நான் தான்!
    அதனால் பழம் எனக்கே கொடுக்க வேண்டும்! //

    ரவி.... யாரு மொதல்ல கூப்டாங்கங்குறது பெரிசில்லை. யாரு கடைசி வரைக்கும் கூப்புடுறாங்கங்குறதுதான் பெருசு. எனக்கு இருக்குறது ஆறுமுகம். அத இதுவரைக்கும் காட்டுனதில்லை. காட்ட வெச்சிராதீங்க. தாங்கமாட்டீங்க..

    // ஜிராவின் ஏமாற்று வார்த்தைகளில் மயங்கிட வேண்டாம்!
    கொஞ்சிக் கொஞ்சிக் பேசி மதி மயக்கும்
    ஜிராவின் உலகம் வலை விரிக்கும்-ன்னு மயில்பாடினியார் பாட்டை நினைவு கூருங்கள்! :-)) //

    அன்புக்கு நான் அடிமை
    தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை

    அன்பு மலர்களே
    நம்பி இருங்களேன்
    நாளை நமதே

    நானே என்றும் ராஜா
    ஆனால் முள்ளில் ரோஜா
    ரவியா என்னை வெல்லக் கூடும்!!!!!

    ReplyDelete
  87. என் அறிவுக் கண்ணைத் தொறந்த கொத்தனாரே!
    வாழிய நீவிர்!

    திருவிளையாடற் புராணம் பன்னிரு திருமுறைகளுள் ஒன்னு-ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்!...இப்ப தான் தெரியுது, இல்ல-ன்னு!

    சேக்கிழாரின் பெரிய புராணம் மட்டுமே பன்னிரண்டாம் திருமுறை
    பரஞ்சோதியின் திருவிளையாடற் புராணம் திருமுறைகளுள் இல்லை!

    ReplyDelete
  88. //திருவிளையாடற் புராணம் பன்னிரு திருமுறைகளுள் ஒன்னு-ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்!...இப்ப தான் தெரியுது, இல்ல-ன்னு!//

    இந்த மாதிரி க்ளூ எல்லாம் தரக்கூடாதுன்னு எவ்வளவு கஷ்டப்பட்டு பின்னூட்டம் போடறேன். நீர் வந்து எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு இப்படி போட்டு உடைக்கறீரு!

    என்னதான் பின்னூட்ட விளையாட்டு விளையாடினாலும் அதிலும் நேர்மை வேணும். இந்தியா போன உடனே ஹமாம் சோப் வாங்கி தேய்ச்சுக் குளியுங்க. அப்பவாவது இதெல்லாம் வருதான்னு பார்ப்போம்.

    ReplyDelete
  89. //எனக்கு இருக்குறது ஆறுமுகம். அத இதுவரைக்கும் காட்டுனதில்லை. காட்ட வெச்சிராதீங்க. தாங்கமாட்டீங்க....//

    உமக்கோ வெறும் ஆறுமுகம்!
    எம் தலைவனின் எதிரிக்கும் கூடப் பத்து முகம்!
    எம் தலைவனுக்கோ நூறு முகம்!

    பெகாவத் கீதை சொன்ன ஜிரா பரந்தாமனிடம் கேட்டுத் தெளியுங்கள்! போர்க்களத்தில் விஸ்வரூப தரிசனத்தின் போது எத்தனை எத்தனை முகங்கள் தெரிந்தன என்று கவுண்டி விட்டுச் சொல்லுவார்! :-)))

    ReplyDelete
  90. //அன்புக்கு நான் அடிமை
    தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை//

    அடிமைத்தனத்தை தமிழனுக்கு இன்னும் கற்பித்துக் கொண்டிருக்கும் ஜிராவை எதிர்த்துப் பகுத்தறிவுப் படைகள் திரளட்டும்! :-))

    ReplyDelete
  91. /நானே என்றும் ராஜா//

    வாரிசு முறை எப்போதோ ஒழித்தாகி விட்டது! இது மன்னராட்சி அல்ல!
    மக்களாட்சி! தமிழ்த் திருச்சபையில் எல்லாரும் இப்பதிவு மன்னர்!

    ReplyDelete
  92. //ஆனால் முள்ளில் ரோஜா//

    யப்பா...முள்ளு-ன்னு ஒத்துகிட்டீங்களே! வெற்றி முரசு கொட்டட்டும்! நாமே வென்றோம்! வெற்றி நமக்கே!

    ReplyDelete
  93. /ரவியா என்னை வெல்லக் கூடும்!!!!!
    //

    அதான் முந்தைய பதிவிலேயே வென்றாகி விட்டதே! :-))))))))))))

    ச்ச்ச்ச்சும்மாஆஆஆஆஆ

    ReplyDelete
  94. //திருவிளையாடற் புராணம் பன்னிரு திருமுறைகளுள் ஒன்னு-ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்!...இப்ப தான் தெரியுது, இல்ல-ன்னு!

    சேக்கிழாரின் பெரிய புராணம் மட்டுமே பன்னிரண்டாம் திருமுறை
    பரஞ்சோதியின் திருவிளையாடற் புராணம் திருமுறைகளுள் இல்லை!//

    ஐயா சாமி, நீர் பாட்டு திருப்பாவை திருவெம்பாவை அப்படின்னு பேசிட்டுப் போகலாமுல்ல.

    சைவத்திருமுறைகள் பன்னிரெண்டு இருந்தாலும் அவைகளில் முதலேழு திருமுறைகளே தேவாரம்.

    பெரிய புராணம் பன்னிரெண்டாம் திருமுறை. அதனால அது தேவாரம் இல்லை. பன்னிரெண்டு திருமுறைகளில் திருவிளையாடற் புராணம் இல்லை. ஆகவே அதையும் தேவாரம் எனச் சொல்வது சரி இல்லை.

    உதவிக்கு

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    ReplyDelete
  95. @ கொத்ஸ்
    //இந்த மாதிரி க்ளூ எல்லாம் தரக்கூடாதுன்னு எவ்வளவு கஷ்டப்பட்டு பின்னூட்டம் போடறேன். நீர் வந்து எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு இப்படி போட்டு உடைக்கறீரு!//

    நீங்க அடிக்கும் கும்மியில், மக்கள் க்ளூவைத் தேடினாலும் கிடைக்காது! ;-))

    ReplyDelete
  96. //வெற்றி முரசு கொட்டட்டும்! நாமே வென்றோம்! வெற்றி நமக்கே!//

    இன்னும் இல்லைய்யா. 85தான் வந்திருக்கு. இன்னும் 15 வேணுமே!!

    ReplyDelete
  97. //இந்தியா போன உடனே ஹமாம் சோப் வாங்கி தேய்ச்சுக் குளியுங்க. அப்பவாவது இதெல்லாம் வருதான்னு பார்ப்போம்//

    ஹிஹி
    மீ ஒன்லி லிரில் சோப்பு! :-)
    ஹமாம் இஸ் நேர்மை - dangerous to health :-))

    ReplyDelete
  98. //நீங்க அடிக்கும் கும்மியில், மக்கள் க்ளூவைத் தேடினாலும் கிடைக்காது! ;-))//

    நம்ம மக்கள் பதிவைப் படிக்கறாங்களோ இல்லையோ பின்னூட்டங்களைச் சரியா படிப்பாங்க. அதுவும் இந்த மாதிரி நிறையா இருந்தா நல்லாப் படிப்பாங்க. அதெல்லாம் குறைச்சு எடை போடாதீங்க.

    ReplyDelete
  99. //இன்னும் இல்லைய்யா. 85தான் வந்திருக்கு. இன்னும் 15 வேணுமே!!//

    எவ்ளோ பண்ணிட்டோம்! இது முடியாதா என்று இயம்பிய இளநி விக்கும் இளா எங்கே? :-))

    ReplyDelete
  100. //இன்னும் இல்லைய்யா. 85தான் வந்திருக்கு. இன்னும் 15 வேணுமே!!//

    எவ்ளோ பண்ணிட்டோம்! இது முடியாதா என்று இயம்பிய இளநி விக்கும் இளா எங்கே? :-))

    ReplyDelete
  101. //நம்ம மக்கள் பதிவைப் படிக்கறாங்களோ இல்லையோ பின்னூட்டங்களைச் சரியா படிப்பாங்க.//

    அது என்னமோ சரி
    பதிவுலகப் பின்னூட்டச் சர்க்கரை வத்தி நீங்க சொன்னாச் சரி தான்! :-))

    ReplyDelete
  102. //எவ்ளோ பண்ணிட்டோம்! இது முடியாதா என்று இயம்பிய இளநி விக்கும் இளா எங்கே? :-))//

    மீண்டும் நேர்மையின்மை. நெர்வஸ் 90களில் அவுட் ஆகும் சச்சினாய் இருக்கவேண்டும் இந்த மாதிரி டூப்ளிகேட் பின்னூட்டம் எல்லாம் போட்டு கவுண்ட் ஏற்றுவது என்பது பின்னூட்ட விளையாட்டு விதிகளின் படி கயமைத்தனம்.

    ReplyDelete
  103. //அதுவும் இந்த மாதிரி நிறையா இருந்தா நல்லாப் படிப்பாங்க. அதெல்லாம் குறைச்சு எடை போடாதீங்க//

    எங்க வீட்டுல எடை மெஷினே இல்லை!
    இந்த டயத்துக்குப் பக்கத்து வூட்ல போயி கேட்டேன்னு வைங்க! என்னை எடைக்கு எடை போட்டுருவாங்க!

    ReplyDelete
  104. புதிர் போட்டியா ?

    மைனஸ் மதிப்பீடு கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுமா ?
    :)

    நான் வரலை. புதிர் எனக்கு எப்போதும் புதிராகவே இருக்கு.

    ReplyDelete
  105. //எவ்ளோ பண்ணிட்டோம்! இது முடியாதா என்று இயம்பிய இளநி விக்கும் இளா எங்கே? :-))//

    கஷ்டப்பட்டு இம்புட்டு தூரம் பதிவைக் கொண்டு வந்த நான் இங்கேயே இருக்க 100 அடிக்க மட்டும் இளாவைத் தேடும் உம் எண்ணத்தின் பின்னால் உள்ள மேட்டுக்குடி மனோபாவம், நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள், பார்ப்பனீயம் ஆகிய பூனைப்பண்ணையே வெளியே வருகிறது!

    ReplyDelete
  106. இம்புட்டு நேரம் இருந்த ஜிரா பரந்தாமன் எங்க போனாருன்னு தெரியலையே!
    கட்ச்சீ நேரத்துல பரந்தாமனை நம்புவதற்குப் பதிலா முருகனையே நம்பலாம் போலக் கீதே! ;-)

    ReplyDelete
  107. கொத்ஸ்
    கோவி உள்ளார வந்திருக்காரு!
    அப்படியே லபக்குங்க!

    ReplyDelete
  108. 97 வந்திருச்சு. இப்போ மட்டும் எதாவது சதி பண்ணி என்னை 100 அடிக்காம செஞ்சீரு, உமக்கு இருக்கய்யா ஆப்பு!

    ReplyDelete
  109. 100

    பெருமாளே!
    கோவிந்தா! கோவிந்தா!

    ReplyDelete
  110. நட்சத்திரம் பிரகாசிக்க
    எத்தனை
    எண்ணைக் கிணறுகள்
    வற்றுகின்றன!!

    ஆகா 99ஆவது கவுஜ!!

    ReplyDelete
  111. தனது பதிவில் மைல்கல் பின்னூட்டங்கள் தன்னால் போடப்படமாட்டாது என்ற விதியை மீறிய நட்சத்திரப் பதிவர் ரவிக்கு என் வன்முறையான கண்டனங்கள்.

    இது வரை நான் போட்ட அனைத்துப் பின்னூட்டங்களையும் அழிக்கப் போகிறேன்.

    ReplyDelete
  112. நூறாம் பின்னூட்டம் பெருமாள் பேர்-லயா?
    ஆகா கண்ணா! உன் மகிமையே மகிமை! :-)))

    ஜிரா!
    பாத்துக்குங்க! கண்ணனே வென்றான்!
    தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும்!
    தருமம் 100-இல் வெல்லும்!

    ReplyDelete
  113. //ஜிரா!
    பாத்துக்குங்க! கண்ணனே வென்றான்!
    தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும்!
    தருமம் 100-இல் வெல்லும்!//

    ஆமாம் கவ்வும் கவ்வும்.

    என் பின்னூட்டங்களை அழித்த பின் 50 கூடத் தேறாது. அப்புறம் மண்ணைத்தான் கவ்வும்.

    ReplyDelete
  114. கொத்ஸ்!
    நடு ராத்திரி-ல எனக்கு நானே சிரிச்சிக்கிட்டு இருக்கேன்!
    இது வரைக்கும் இப்படி எல்லாம் வெளையாண்டதே இல்லை!
    முருகா! முருகா!!
    :-)))

    தூக்கம் வரலையா உமக்கு?

    ReplyDelete
  115. ///Koths Said: வாத்தியாரின் பெண்கள் மட்டுமே சரியான பதில் சொல்வார்கள் என்ற பித்தளை மனப்பான்மைக்கு கண்டனங்கள்.///

    துளசி டீச்சரின் சீடரா இப்படிச் சொல்வது?

    டீச்சர் எங்க் இருக்கீங்க........?

    சீக்கிரமா வந்து, கொத்தனாரை ஒரு மாத்து மாத்துஙக!

    கண் குளிரப் பார்க்கணும்!

    ReplyDelete
  116. //கொத்ஸ்!
    நடு ராத்திரி-ல எனக்கு நானே சிரிச்சிக்கிட்டு இருக்கேன்!
    இது வரைக்கும் இப்படி எல்லாம் வெளையாண்டதே இல்லை!
    முருகா! முருகா!!
    :-)))//


    சந்தோஷமா இருக்கும் போது வாயில் முருகன் பேருதான் வருது. ஜிரா நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்.

    ரவி, இந்த மாதிரி அப்பட்டமான சுத்தமான கலப்பில்லாத பின்னூட்ட விளையாட்டு விளையாண்டு ரொம்ப நாள் ஆச்சு. உம்ம தயவால ரொம்ப ரிலாக்ஸிங்கா இருந்தது. இங்க எல்லாம் இதெல்லாம் செய்யக்கூடாதுன்னு விரட்டாம ஈடு குடுத்து விளையாடினதுக்கு நன்னி. :))

    //தூக்கம் வரலையா உமக்கு?//

    செட் செஞ்ச டார்கெட் ஆச்சு, இனி தூங்கலாம். இதுவரை தூக்கம் வந்திருக்குமா? :))

    ReplyDelete
  117. //உலக ஆண்களின் சார்பாக ஒரு சுயதம்பட்டம்...//
    மனிதனை விட்டா எல்ல மிருக இனங்களிலும் ஆண்தான் அழகு!

    ReplyDelete
  118. //சைவத்திருமுறைகள் பன்னிரெண்டு இருந்தாலும் அவைகளில் முதலேழு திருமுறைகளே தேவாரம்.
    //

    சாரி கொத்ஸ்!
    1 2 3 = சம்பந்தர், திருக்கடைக்காப்பு
    4 5 6 = அப்பர், தேவாரம்
    7 = சுந்தரர், திருப்பாட்டு
    8 = மணிவாசகர், திருவாசகம்/திருக்கோவையார்
    9 = திருவிசைப்பா/பல்லாண்டு
    10 = திருமந்திரம்
    11 = பிரபந்தம்
    12 = பெரிய புராணம், சேக்கிழார்!

    அப்பர் பெருமான் செய்தது மற்றுமே தேவாரம்!
    அத்தனைக்கும் மொத்தப் பெயர் திருமுறைகள்!

    ஆனால் for all practical purposes, தேவாரம் என்ற பெயர் மொத்தமாய் நிலைத்து விட்டது!
    இதில் மணிவாசகரை மட்டும் சேர்த்து தேவார/திருவாசகங்கள் என்ற சொற்றொடர் வந்து விட்டது!

    ReplyDelete
  119. // இலவசக்கொத்தனார் said...
    //ஜிரா!
    பாத்துக்குங்க! கண்ணனே வென்றான்!
    தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும்!
    தருமம் 100-இல் வெல்லும்!//

    ஆமாம் கவ்வும் கவ்வும்.

    என் பின்னூட்டங்களை அழித்த பின் 50 கூடத் தேறாது. அப்புறம் மண்ணைத்தான் கவ்வும். //

    ஒங்கது அம்பதுன்னா என்னது இருவது இருக்காதா? அதையும் நான் அழிச்சிர்ரேன். அப்ப என்னாகுதுன்னு பாப்போம்..... கொத்சுக்கு நேர்ந்த அவமானம் தமிழ்ச் சமுதாயத்திற்கு நேர்ந்த அவமானம். எழுவீர்..ரவியின் முதுகில் உழுவீர்.

    ReplyDelete
  120. //அப்பர் பெருமான் செய்தது மற்றுமே தேவாரம்!//

    என்ன சொல்லறீங்க? 4,5,6 ஆம் திருமுறைகள் மட்டுமே தேவாரம் என்றா சொல்கிறீர்கள்?

    எனக்குத் தெரிந்து முதலேழு திருமுறைகளுமே தேவாரம்தான். அப்பர் என்ற திருநாவுக்கரசர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோரே தேவாரப்பாடல்களை அருளியவர்கள் என்றே படித்துள்ளேன்.

    நான் கொடுத்த விக்கி சுட்டியைப் பாருங்கள்.

    ReplyDelete
  121. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //எனக்கு இருக்குறது ஆறுமுகம். அத இதுவரைக்கும் காட்டுனதில்லை. காட்ட வெச்சிராதீங்க. தாங்கமாட்டீங்க....//

    உமக்கோ வெறும் ஆறுமுகம்!
    எம் தலைவனின் எதிரிக்கும் கூடப் பத்து முகம்!
    எம் தலைவனுக்கோ நூறு முகம்!

    பெகாவத் கீதை சொன்ன ஜிரா பரந்தாமனிடம் கேட்டுத் தெளியுங்கள்! போர்க்களத்தில் விஸ்வரூப தரிசனத்தின் போது எத்தனை எத்தனை முகங்கள் தெரிந்தன என்று கவுண்டி விட்டுச் சொல்லுவார்! :-))) //

    ஹா ஹா ஹா

    ஆறுமோ ஆவல் ஆறுமுகனைக் காணாமல்.....
    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    ஆறுமுகனைத் துதியுங்கள் பாவச் சேறு நீங்கி வாழுங்கள்

    பத்தும் நூறும் பத்தாமல் திருடித் தின்னது தெரியாதோ எமக்கு! அது மறந்ததோ உமக்கு.

    ReplyDelete
  122. // இலவசக்கொத்தனார் said...
    //கொத்ஸ்!
    நடு ராத்திரி-ல எனக்கு நானே சிரிச்சிக்கிட்டு இருக்கேன்!
    இது வரைக்கும் இப்படி எல்லாம் வெளையாண்டதே இல்லை!
    முருகா! முருகா!!
    :-)))//


    சந்தோஷமா இருக்கும் போது வாயில் முருகன் பேருதான் வருது. ஜிரா நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். //

    என்னத்த நோட்டுறது..... அவரு உள்ளன்போடச் சொல்லலை. அது வெறும் உள்குத்து. கீழ அவரோட பின்னூட்டத்தையும் அதுக்குண்டான உண்மையான விளக்கத்தையும் கொடுத்திருக்கேன் பாருங்க.

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இம்புட்டு நேரம் இருந்த ஜிரா பரந்தாமன் எங்க போனாருன்னு தெரியலையே!
    கட்ச்சீ நேரத்துல பரந்தாமனை நம்புவதற்குப் பதிலா முருகனையே நம்பலாம் போலக் கீதே! ;-) //

    அதாவது இதுவரைக்கும் அவரு முருகனை நம்பலையாம். இனிமே நம்பலாம் போல இருக்குதாம். அவ்ளோதான். இது புரியலையா உங்களுக்கு. முருகன் பேரைச் சொல்லி டிராமாயிங். ஆனா நாங்க நம்ப மாட்டோம். நீங்களும் நம்பாதீங்க.

    ReplyDelete
  123. இன்னமுன் சொல்லப் போனால் அப்பரின் முதல் பதிகமான "கூற்றாயின வாறு விலக்ககிலீர்" எனத் தொடங்கும் பதிகத்தை விட மற்ற இருவரின் முதற் பதிகங்களான "தோடுடைய செவியன்" மற்றும் "பித்தா பிறைசூடி" எனத் தொடங்கும் பதிகங்களைத்தானே நாம் அதிகம் கேட்டு இருக்கின்றோம்?

    ReplyDelete
  124. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    நூறாம் பின்னூட்டம் பெருமாள் பேர்-லயா?
    ஆகா கண்ணா! உன் மகிமையே மகிமை! :-)))

    ஜிரா!
    பாத்துக்குங்க! கண்ணனே வென்றான்!
    தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும்!
    தருமம் 100-இல் வெல்லும்! //

    சூதும் வாதும் உமக்கே தோது
    முருகன் அன்பர்களாகிய நாங்களோ குணத்தான் சாது
    நீர் செய்திருப்பது தீது
    அதை விட்டால் உமக்குப் போக்கிடம் ஏது!

    ReplyDelete
  125. ரவி,

    தமிழ்ப் பெண்கள் பற்றிய உங்கள் புதிரா புனிதமா போட்டிக்கு ஒரு செல்லக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டு.

    தலைப்பில் இருக்கும் ஒவ்வாமை காரணமாக பங்கு பெற இயலாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதையெல்லாம் ஏன் நீ இங்க சொல்றன்னு கேக்கலாம், ஏன்னா எனக்குத் தெரிஞ்சி இதுக்கு முன்ன ரெண்டு(மூணு?) தடவை இந்தப் போட்டிகளில் பங்கேற்றிருக்கேன் என்பதால் என்று மட்டும் சொல்லிக் கொண்டு அப்பீட் ஆகிறேன்.

    என்னயிருந்தாலும் எங்களுக்கு எங்க அரசியல் ரொம்ப முக்கியம் :)

    ReplyDelete
  126. //இலவசக்கொத்தனார் said...
    என்ன சொல்லறீங்க? 4,5,6 ஆம் திருமுறைகள் மட்டுமே தேவாரம் என்றா சொல்கிறீர்கள்?
    எனக்குத் தெரிந்து முதலேழு திருமுறைகளுமே தேவாரம்தான்//

    அப்படி ஜெனரலைஸ் ஆயிரிச்சி கொத்ஸ்!
    முவர்=தேவாரம்
    மாணிக்கவாசகர்=திருவாசகம்
    ன்னு ஒரு பொதுப்படை ஆயிரிச்சி போலும்!

    ஆனா அப்பர் பெருமானின் பதிகங்களை மட்டுமே "தேவாரம்" என்ற பெயரில் குறிக்கிறார்கள்!
    http://www.shaivam.org/siddhanta/thiru.html

    ReplyDelete
  127. ////நான் கொடுத்த விக்கி சுட்டியைப் பாருங்கள்//

    பார்த்தேன் கொத்ஸ்! விக்கியின் தகவற் பிழையின்மை என்பது 100% அல்லவே!
    இங்கு தான் நம் பங்கும் விக்கிக்குத் தேவைப்படுகிறது போலும்! ரவியும் நேர்காணலில் சொல்லி இருக்காரு!

    சைவம்.ஓர்க்-இல் அதன் மூலமான பெயர்களை அப்படியே கொடுத்து இருக்காங்க! பாருங்க!

    9, 11 திருமுறைகளில் ஒரு கலக்சனே இருக்கும்! நீங்க சொன்ன திருவிளையாடற் புராணமும் அதுல ஒன்னா இருக்குமோ-ன்னு நினைச்சித் தான் அப்படிச் சொன்னேன்!
    ஆனால் கலெக்சனில் தேடிப் பார்த்த போது திருவிளையாடற் புராணம் திருமுறை திரட்டில் வரவில்லை!

    இன்னொன்னும் கவனிச்சீங்களா?
    முதல் மூவர் பாடியது தேவாரம், வாகீசர் பாடியது வாசகம்-ன்னா, அப்ப மத்த நான்கு திருமுறைகளுக்கு என்ன பொதுப்பெயர்?
    தேவாரம் என்ற சொல் அவரவர் பலுக்கலின் படியே புழுங்கி வந்துள்ளது போலும்!

    திருமுறை விற்பன்னர்கள் பதிவுலகில் யாரு? அவங்க வந்து விளக்கினா இன்னும் நல்லாப் புரியும்.
    அடியேன் இப்ப தான் திருமுறை பயிலத் துவங்கி இருக்கேன்!

    ReplyDelete
  128. அட ஒரு சுட்டி கொடுக்கக் கூடாது? :((((((((((((((((((((((((

    ReplyDelete
  129. 1. ஒக்கூர் மாசாத்தியார்

    2.திலகவதியார், மங்கையர்க்கரசியார்

    3.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

    4.சகோதரி நிவேதிதா தேவி

    5. மேஜர் லட்சுமி

    6. பால சரஸ்வதி
    7. குமுதவல்லி
    8. புனிதவதியார்?????
    9.சாந்தி
    10. வாசந்தி

    ReplyDelete
  130. 1. இ) காக்கைப்பாடினியார்
    2. அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்
    3. ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
    4. ஈ) நிவேதிதா தேவி
    5. லக்‌ஷ்மி சக்ஹல்
    6. இ) பாலசரஸ்வதி
    7. ஈ) குமுதவல்லி
    8. இ) தாடகை
    9. சாந்தி
    10. அ) பத்திரிகையாளர், வாசந்தி

    ReplyDelete
  131. 1. இ) காக்கைப்பாடினியார்
    2.அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்
    3.ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
    4. ஈ) நிவேதிதா தேவி
    5. கேப்டன் லட்சுமி செஹல்
    6. இ) பாலசரஸ்வதி
    7. ஈ) குமுதவல்லி
    8. இ) தாடகை
    9. சாந்தி செளந்திரராஜன்
    10. ஆ) இந்திரா நூயி

    ReplyDelete
  132. தல இந்தாங்க என்னோட பதில்

    1. ஆ
    2. -
    3. ஈ
    4. ஈ
    5 -
    6. அ
    7. ஆ
    8. -
    9. சாந்தி
    10. அ

    ;)

    ReplyDelete
  133. தல

    2 வது கேளவிக்கு பதில் - அ

    அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்

    ;)

    ReplyDelete
  134. \\பெண்களே...இதோ இந்தக் கே.ஆர்.எஸ்....போட்டீன்னா பெண்கள்தான் அடிச்சிக்கிட்டு வருவாங்க. அவங்க வந்து சண்டை போட்டாத்தான் பதிவுல குழாயடி எபெக்ட் இருக்கும்னு சொன்னாரு. அதுனாலதான் பின்னூட்டத்துல கூட. ஆண் -2 பெண்-1தானான்னு ஏத்தி விடுறதெல்லாம். \\

    ஆகா..தல என்ன இதெல்லாம்...புதிரா புனிதமா பதில் சொல்லவந்தா..இங்க உங்களை வச்சே பட்டிமன்றம் நடக்குது!!! ;))

    ReplyDelete
  135. இந்த முறை நேரமின்மை, பணிச்சுமையால இந்த புதிரா புனிதமாவை வெளியே நின்னு பாக்கப் போறேன். இனிமே தான் இடுகையையும் பின்னூட்டங்களையும் படிக்கணும். அதுக்கே ஒரு நாள் ஆயிடும் போலிருக்கு. :-)

    ReplyDelete
  136. ரவி, நீங்க குடுத்த சுட்டியிலேயே பாருங்க
    http://www.shaivam.org/siddhanta/saminfo.htm
    //If one wants to feel the splendors of thamiz language constructs the suggestion would be thirunyAna champan^dhar thEvAram; if one wants to feel the splendors of music the suggestion would be thirunyAna champan^dhar thEvAram; if one wants to feel the splendor of devotion the suggestion would be thirunyAna champan^dhar thEvAram !!!//

    http://www.shaivam.org/siddhanta/appinfo.htm

    //The fourth, fifth and sixth thirumuRai that were given by the sage thirun^Avukkarachar are called dhEvAram . The first to seventh thirumuRais are collectively known as thEvAram as well. But in specific the first three are called thirukkadaikkAppu , the next three being thEvAram and the seventh is thiruppAttu . //

    http://www.shaivam.org/siddhanta/suninfo.htm

    //The dhEvAram given to this world by chundhara mUrthi nAyanAr form part of the 7th thirumuRai. //


    அதனால் எல்லாமே தேவாரம் என்ற பொதுப்பெயரில்தான் அடங்குகின்றன என நினைக்கிறேன். அதனுள்ளே இவை நீங்கள் சொல்லும் வகைகளாகப் பிரிக்கப் பட்டு இருக்கின்றன என்றே தோன்றுகிறது. அப்பரின் மூன்று திருமுறைகள் கூட //The fourth thirumuRai consists of the hymns that were sung in many paN s(1). The fifth thirumuRai consists mainly of thirukkuRun^thokai a type of song that is very small in length and beautiful. The sixth thirumuRai is full of another type of song which is quite popular and called thiruththANdakam .// எனப் பிரிக்கப்பட்டுள்ளனவே. அது போலத்தா நீங்கள் சொன்ன பெயர்களும் என்றுதான் நம்புகிறேன்.

    வேறு பெரியோர்கள் வந்து விளக்கமளித்தால் நலம்.

    ReplyDelete
  137. //முதல் மூவர் பாடியது தேவாரம், வாகீசர் பாடியது வாசகம்-ன்னா, அப்ப மத்த நான்கு திருமுறைகளுக்கு என்ன பொதுப்பெயர்?//

    இதுக்கு எனக்குப் பதில் தெரியாது. ஆனால் சைவம்.ஆர்க் படிக்கும் பொழுது இப்படிப் பிரித்து இருக்கிறார்கள்.

    1-7 - தேவாரம்
    8 - திருவாசகம்
    9- திருவிசைப்பா / திருப்பல்லாண்டு
    10 - திருமந்திரம்
    11 - பிரபந்தம்
    12 - பெரிய புராணம்

    ReplyDelete
  138. 1-இ / 2-அ, / 3-ஈ, / 4-ஈ, / 5 - 0 / 6-இ, / 7 - ஈ, / 8 - ஊ / 9 - சாந்தி.

    நான் ரொம்ப லேட்டோ...

    ReplyDelete
  139. மக்கள்ஸ், back from sleep!
    அதுக்குள்ள ஆறு பேர் விடை சொல்லி இருக்கீக! இதோ சரி பார்த்து சொல்லிடறேன்!
    Thanks for your patience! :-)

    ReplyDelete
  140. கீதாம்மா
    345679 சரி!
    =6/10

    கமான் கீதாம்ம்மா! பெண்கள் தரப்பில் இருந்து இன்னொரு 10/10 தேவைப்படுது! கமான்!

    ReplyDelete
  141. கிரிக்கெட் ரசிகன்
    கலக்கிட்டீங்க! பத்து மட்டும் தான் தவறு!
    =9/10

    ரசிகன்-ன்னு சொல்லி இருப்பதால் (ரசிகை என்று சொல்லாமல்) நீங்க ஆண் சிங்கம்-ன்னு கவுண்ட் பண்ணிக்கறோம்!
    பெண்களே, கமான்! Cheerup and steal the show! ithu varaikkum ore oru 10/10 thaana?

    ReplyDelete
  142. தமிழ்ப் ப்ரியன்
    பின்னிட்டீங்க! வாழ்த்துக்கள்!
    =10/10

    10/10 நெலவரம்
    ஆண்கள் = 3
    பெண்கள் = 1
    வேர் இஸ் மகளிர் சக்தி?
    கமான்! :-)

    ReplyDelete
  143. தல கோபி
    வாப்பா! மொதல்ல கை குலுக்கிடறேன்! போன பதிவுல கை கொடுத்தியே! உங்க அக்கா - என் தங்கச்சி-ன்னு நாம ரெண்டு பேரும் ஒரே கட்சிப்பா! :-))

    15678&10 தவறுப்பா!
    இன்னொரு கா திருப்பி ஆடு!
    பிட்டிங் இஸ் லீகல்! :-)
    வெற்றி மட்டுமே வேண்டும்! I want my Gopi to win! :-))
    = 4/10

    ReplyDelete
  144. கிருத்திகா
    வாங்க! லேட் எல்லாம் ஒன்னும் இல்லை! இன்னிக்கி இரவு வரை நேரம் இருக்கு!

    5, 8 தவறு! 10க்கு பதில் சொல்லலையே!
    = 7/10

    இன்னொரு கா ஆடுங்க! googling, bitting=all legal! :-)))

    ReplyDelete
  145. //10/10 நெலவரம்
    ஆண்கள் = 3
    பெண்கள் = 1//

    Proof: Know thy enemy! :))

    ReplyDelete
  146. 27 சைவப் பெரியவர்களின் ஆக்கங்களின் மொத்தத் தொகுப்பே "திருமுறை" என வழங்கப்படுவது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், திருமூலர் சேக்கிழார் போன்றவர்கள் இதில் அடக்கம். இவர்களது இந்த ஆக்கங்கள் [சுமார் 18,000 பாடல்கள்] 12 தொகுப்புகளாக வரையறுக்கப்பட்டு, திருமுறை என வழங்கப்படுகிறது. முதல் 7 திருமுறைகள் "தேவாரம்" என அழைக்கப்படும். சமயக்குரவர் நால்வர் எனப் போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், பாடிய அனைத்தும் இதற்குள் வருகின்றன. எட்டாம் திருமுறை திருவாசகம், திருக்கோவையார் என அழைக்கப்படுகிறது. இவற்றைப் பாடியவர் மாணிக்கவாசகர். ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரு நூல்களைக் கொண்டது. திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறை. ப்ரபந்தமாலை எனப் பதினொன்றாம் திருமுறையும், சேக்கிழார் பாடிய பெரியபுராணம் பனிரண்டாம் திருமுறையாகவும் வழங்கும்.

    அப்பர், சுந்தரர், சம்பந்தர் இவர்கள் யாருமே தாங்கள் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்களைத் தொகுத்து நூல் வெளியிடவில்லை. இவர்களுடன் கூட இருந்தவர்கள் இவற்றைத் தொகுத்து அவற்றுக்குப் பெயரும் இட்டனர்.
    அதன்படி, அப்பர் பாடியது தேவாரம், சம்பந்தர் பாடியது திருக்கடைக்காப்பு, சுந்தரர் பாடியது திருப்பாட்டு என அழைக்கப்பட்டன.
    இறைவன்[தே] மீது அன்பு [வாரம்] செலுத்தியதால் தேவாரம் எனவும், காப்புச் செயுளாக பதினொன்றாம் பாட்டு ஒவ்வொரு பதிகத்திலும் வைத்ததால் 'திருக்கடைக்காப்பு' எனவும், திருப்புகழ் போல இறைவன் மீது பாடியதால் திரு[இறை]ப்பாட்டு எனவும் பெயரில் இவைகள் சொல்லப்பட்டாலும், இம்மூவரும் பாடிய ஏழு திருமுறைகளுமே "தேவாரம்" என்றுதான் சைவ சமயப் பெரியவர்களால் அழைக்கப் படுகின்றன.
    எல்லாவற்றிலும் ஊடுருவி நாசம் மட்டுமே விளவிக்கும் தீவிரவாதிகள் மதங்களிலும் உண்டு. அவர்கள் தாம் இப்படிப் பிரிவினையைச் சுட்டிக்காட்டி குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.
    சம்பந்தரின் பக்தர்கள், இதை திருக்கடைக்காப்பு எனவும், சுந்தரரின் பக்தர்கள் திருப்பாட்டு எனவும் சொல்லிக் கொண்டிருப்பதைப் போல.
    எல்லாமே தே மீது வாரமாகத் தொடுக்கப்பட்ட தே ஆரம்தான்.
    அப்பர் பாடியது தே வாரம்!
    இம்மூவரும் தொடுத்த மாலை தே ஆரம்!
    இம்மூவர் பாடிய 7 திருமுறைகளுமே தேவாரம்தான்!

    ReplyDelete
  147. //Proof: Know thy enemy! :))//
    முழிபெயர்ப்பு: எங்களுக்கு வேற வேலை இல்லை.

    ReplyDelete
  148. //ore oru 10/10 thaana?// சிங்கம் சிங்கிளா?

    ReplyDelete
  149. ///kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    கிரிக்கெட் ரசிகன்
    கலக்கிட்டீங்க! பத்து மட்டும் தான் தவறு!
    =9/10 ///
    10. இந்திரா நூயி
    நன்றி : மாதவிப் பந்தல் 2007 ஏப்ரல் மாதப்பதிவு அழகிகள் ஆறு பேர்.

    ReplyDelete
  150. //அழகா இருக்குற ஆண்களுக்கு அறிவு மட்டுந்தான் இல்லைன்னு வெச்சிக்கிட்டாலும் கூட... அந்தப் பக்கம் ரெண்டுமே இல்லையே ;)// ஜி.ரா. தம்பி, பித்தளைக் கம்பி, நீங்க இ.கொ.வைத் தானே சொல்றீக?
    அப்‍பாவி அக்காள்.

    ReplyDelete
  151. கிரிக்கெட் ரசிகன்
    ரெண்டாம் ஆட்டம் ஆடி....கலக்கல் தல! வாழ்த்துக்கள்! :-)

    =10/10

    10/10 நெலவரம்
    ஆண்கள் = 4
    பெண்கள் = 1

    @கொத்ஸ்
    Proof: Identify thy problem! Problem half solved :-)
    @கெபி அக்கா
    சரி தானேக்கா?

    அனானி ஆட்டம் ஆடியாவது பெண்கள் ஜெயிக்க வேணுமாய் பிரார்த்திக்கிறேன் :-)))

    ReplyDelete
  152. வணக்கம் SK ஐயா
    தங்கள் வருகை என்றும் எனக்கு உவகையே ஊட்டும்!

    வலைச்சரக் குட்டின் படிக் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் அடியேன் அந்தக் குழப்பத்தை மறைத்துக் கொண்டு பெருமை பேச மாட்டேன். அதனால் தான் கொத்தனாருக்கு அளித்த பதிலில்....
    //இன்னொன்னும் கவனிச்சீங்களா?
    முதல் மூவர் பாடியது தேவாரம், வாகீசர் பாடியது வாசகம்-ன்னா, அப்ப மத்த நான்கு திருமுறைகளுக்கு என்ன பொதுப்பெயர்?
    திருமுறை விற்பன்னர்கள் பதிவுலகில் யாரு? அவங்க வந்து விளக்கினா இன்னும் நல்லாப் புரியும்.
    அடியேன் இப்ப தான் திருமுறை பயிலத் துவங்கி இருக்கேன்!//

    என்று தான் கேட்டுள்ளேன். திருமுறைகளைப் பிரித்துப் போட்டு அவை தேவாரம் என்று சொல்லத் தகுதி உடையவை அல்ல என்று எல்லாம் சொல்லி இருக்கேனா என்று தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்!

    நீங்கள் வலைச்சரத்தில் சொல்லியபடி கேள்வியே கேட்கலாகாது. தியான யோகத்தில் ஆன்றவிந்து அடங்கணும்-னா...அந்தப் பரிபக்குவம் அடியேனுக்குக் கிட்டவில்லை போலும்!

    அர்ஜூனனும் கேள்விகள் தான் கேட்டான்! கண்ணனும் மறுதலிக்காது நண்பனாய் விடை சொன்னான்.
    கேள்வி கேட்ட அர்ஜூனனை கண்ணன் ஒரு போதும்
    //எல்லாவற்றிலும் ஊடுருவி நாசம் மட்டுமே விளவிக்கும் தீவிரவாதிகள் மதங்களிலும் உண்டு. அவர்கள் தாம் இப்படிப் பிரிவினையைச் சுட்டிக்காட்டி குழப்பம் ஏற்படுத்துகின்றனர்// என்று பார்த்தனைப் பரிகசிக்கவில்லை!

    தியான யோகத்தில் கேள்வியே எழாது எல்லாம் அவன் செயலே என்று இருப்பவர் பாதம் பணிகிறேன்! ஏன் என்றால் அவர்கள் அடியார்கள்.
    ஆனால் அடியேன் இப்போது உள்ள வழி தியான வழி அல்ல!
    அடியார்கள் அனைவருடனும் ஒன்று கூடி ஈசனைப் பேசியும் பாடியும் கேள்வி கேட்டும் பதில் கண்டும் = குணானுபவங்களில் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் நான் இருக்கிறேன்.
    "கூடி இருந்து" குளிர்ந்தேலோ ரெம்பாவாய் என்பதே அடியேன் ஆன்மீகம்!

    தங்களைத் தந்தையார் ஸ்தானத்தில் வைத்துப் போற்றும் அடியேன் உங்கள் மோதிரக் குட்டுகளை மனம் உவந்து ஏற்றுக் கொள்கிறேன்!
    நட்சத்திர வாரம் அதுவுமாய் உங்கள் சிறுவனை "பிரிவினையைச் சுட்டிக்காட்டி குழப்பம் ஏற்படுத்தும் தீவிரவாதி" என்று ஆசியுரைத்தமைக்கு நன்றி! :-((

    அடியேன் இராமானுச தாசன்!
    (என் பதில் உங்களுக்கு வருத்தம் தருமேயானால் அதற்கும் இப்போதே மன்னிப்பு கோருகிறேன். ஆபீஸ் மீட்டீங் முடித்து இன்னும் ஒரு மணி நேரத்தில் வருகிறேன்! bye for now)

    ReplyDelete
  153. இ) காக்கைப்பாடினியார
    அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்
    ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
    ஈ) நிவேதிதா தேவி
    லட்சுமி சஹல்
    அ) ருக்மணி தேவி அருண்டேல்
    ஈ) குமுதவல்ல
    சாந்தி சௌந்தராஜன்
    ஆ) இந்திரா நூயி

    give me a min i am working on 8th one

    nithya balaji

    ReplyDelete
  154. 8) பரவை நாச்சியார் ?

    ReplyDelete
  155. நித்யா பாலாஜி...வாங்க!
    நீங்க ஜிரா அண்ணன் ஸ்கிராப் புக்குல வம்பு பண்ணும் அதே தங்கச்சி தானே? உங்களைப் பாத்திருக்கேன்! :-)

    6,8 தவிர எல்லாமே சரி!
    6 is tricky! u have to read between lines.
    8 kku if ppl need more clues, lemme know

    Nithya Madam = 8/10 :-)

    ReplyDelete
  156. 1)ஆ) ஒக்கூர் மாசாத்தியார்

    3)ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி

    4)ஈ) நிவேதிதா தேவி


    5) Pratibha Patil

    6)இ) பாலசரஸ்வதி

    9) Shanthi

    ஆ) இந்திரா நூயி

    ரவி போட்டி இன்னூம் முடியலயே??நான் கொஞ்சம் தாமதமா வந்துட்டேன்...:):)

    ReplyDelete
  157. போட்டி முடியலீங்க ராதா
    Take your own till tonite.
    I even extended it from evening to night! (ellam thaaikulam mela ulla paasam :-)

    3 4 6 9 10 - சரி
    மீதிக்கெல்லாம் கூகுள் பிட் எல்லாம் அடிச்சிட்டு சீக்கிரம் வாங்க!
    பாருங்க 10/10 -il ஆண்கள் = 4
    :-))))
    Hurry! Cmon Radha! Cmon :-)
    KP akka! Cheer pannunga!

    ReplyDelete
  158. சியர் பண்ணறது என்ன, பிட் நோட்டிஸே அடிக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு...

    ReplyDelete
  159. நீங்க சொல்லும் தங்கச்சி நான் இல்லை.
    நான் ப்ளாகுக்கெல்லாம் புதுசு.
    உங்களோட காதலர் தின புதிரில் நான் 9/1௦.
    :-)

    6)பாலாசரஸ்வதி
    8)திலகவதியார்

    8 is pure guess. pls give a clue KRS

    நித்யா பாலாஜி

    ReplyDelete
  160. நித்யா பாலாஜி
    சாரி-நீங்க அவங்க இல்லை போல! :-)
    6th is right now
    8th still wrong
    =9/10

    2nd Clue for 8th question
    பெருமானின் 64 திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று!

    ReplyDelete
  161. //2nd Clue for 8th question
    பெருமானின் 64 திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று!//

    மன்னிக்க வேண்டுகிறேன்.
    அது திருவிளையாடற் புராணத்தில் வரும் குறிப்பு, ஆனால் 64 திருவிளையாடல்களுள் ஒன்றல்ல!

    ReplyDelete
  162. This comment has been removed by the author.

    ReplyDelete
  163. ஐயா, பிட் நோட்டீஸை பின்னூட்டத்தில் இட்டால், அதையும் வெளியிடுகிறீர்களே? இல்லை, பதில்களை எல்லாம் வெளியிடலாமா? விளையாட்டாய்த்தான் அதைப் போட்டேன்...

    ReplyDelete
  164. கெபி யக்கா
    நானே பத்து ரவுண்டு தண்ணியடிச்சா மாதிரி பதிவு போதையில இருக்கேன்!
    Neenga Not to Publish podavaillai. Athan publesssssha panniten!
    :-)))

    ஆனா அது செம ஐடியா! சூப்பர் கான்செப்ட்! ஒரு பதிவே போடுங்களேன் அத வச்சி! பிச்சிக்கிட்டுப் போகும்! என்னா சொல்றீங்க!
    தலைப்பு: KRS தப்பாட்டம்! கெக்கேபிக்குணி வெறியாட்டம்!
    :-))))

    சூடாயிறாது? :-)

    ReplyDelete
  165. கெபி யக்கா
    நானே பத்து ரவுண்டு தண்ணியடிச்சா மாதிரி பதிவு போதையில இருக்கேன்!
    Neenga Not to Publish podavaillai. Athan publesssssha panniten!
    :-)))

    ஆனா அது செம ஐடியா! சூப்பர் கான்செப்ட்! ஒரு பதிவே போடுங்களேன் அத வச்சி! பிச்சிக்கிட்டுப் போகும்! என்னா சொல்றீங்க!
    தலைப்பு: KRS தப்பாட்டம்! கெக்கேபிக்குணி வெறியாட்டம்!
    :-))))

    சூடாயிறாது? :-)

    ReplyDelete
  166. பதிவாகவே போடுகிறேன். 8 மணி ரிலீஸ். உண்மையாய் பதில் இடுபவர்களுக்கு நேரம் கிடைக்கும்...

    ReplyDelete
  167. 1) பொன்முடியார்??

    2)இசைஞானியார்,மங்கையர்கரசியார்

    5)லக்ஷ்மி சகால் (ஸ்வாமினாதன்)

    7) குமுதவல்லி தாயார்

    ReplyDelete
  168. did u get my previous comment??

    ReplyDelete
  169. Radha, ippo thaan veetukku vanden from oppice...:-)
    Unga 2,5,7 correct! 1 thappu
    8th attempt pannliyaa?

    guess adichikitte irunga! mark potturalam! u have to put up a show against the boys! :-)
    = 8/10

    ReplyDelete
  170. Boston-இல் இருக்கும் பதிவர் அல்லாத ஒரு நண்பர் - தமிழ் -ஆர்க்குட்டில் விடைகளைச் சொல்லி இருக்காரு!

    யப்பா தமிழ், புதிரா புனிதமாவை, ஆர்க்குட்டுக்கு கொண்டு சென்ற வீரா! வாழ்க! :-)
    128 தவிர எல்லாம் சரி!
    =7/10

    (இந்த கமெண்ட்டை அவருக்கு ஸ்கிராப்பி விட்டேன்!)

    ReplyDelete
  171. விடை சொல்லும் நேரத்தை காலை வரை நீட்டிக்கலாமா?
    மகளிர் சக்தி: என்ன சொல்றீங்க?
    ஆடவர் ஐயாஸ்: எனி கமென்ட்ஸ்?

    ReplyDelete
  172. 1.ஆ) ஒக்கூர் மாசாத்தியார்

    2. அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்

    3 ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
    4 இ) சரோஜினி நாயுடு
    5 Lakshmi segal
    6 இ) பாலசரஸ்வதி
    7 ஈ) குமுதவல்லி
    8 அ) திலகவதியார் (அப்பரின் தமக்கை)
    9 santhi soundararajan
    10 இ) திலகவதி IPS

    ReplyDelete
  173. வாங்க தியாகராஜன்
    235679 correct-unga!
    =6/10

    ReplyDelete
  174. //வாங்க தியாகராஜன்
    235679 correct-unga!
    =6/10//

    Submitted the arrear questions!!

    1) இ) காக்கைப்பாடினியார்

    4) ஈ) நிவேதிதா தேவி

    8) ஈ) புனிதவதி (காரைக்கால் அம்மையார்)

    10 ஆ) இந்திரா நூயி

    ReplyDelete
  175. ஆகா தியாகராஜன் இம்புட்டு ஃபாஸ்ட்டா? :-)
    எட்டு தவிர இப்ப எல்லாமே சரி!
    =9/10

    எட்டாம் கேள்வில எல்லாரும் இப்பிடி மாட்டிக்கிட்டு முழிக்கறாங்களேப்பா!
    கொத்ஸ்/அரைபிளேடு மட்டும் முதல் ரவுண்டிலேயே எப்படித் தான் sharpஆ அடிச்சாங்களோ தெள்ளேதே! :-))

    ReplyDelete
  176. //கொத்ஸ்/அரைபிளேடு மட்டும் முதல் ரவுண்டிலேயே எப்படித் தான் sharpஆ அடிச்சாங்களோ தெள்ளேதே! :-))//

    ரொம்ப சிம்பிள். மூணே மூணு காரணங்கள்.

    1) முயற்சி
    2) முயற்சி
    3) முயற்சி

    இதை சாக்கா வெச்சு நாந்தான் அரை பிளேடும் என்ற வதந்தியைக் கிளப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்புறமா என்னமோ வெற்றி பெற்ற ஆண்கள் எண்ணிக்கையை கூட்ட பிராக்ஸி போட்டா மாதிரி ஆகிடும். :))

    ReplyDelete
  177. 150 தாண்டியாச்சு. வெளியிடாம இருக்கிற பின்னூட்டங்கள் எவ்வளவு? அதைச் சொன்னா 200 அடிக்க இன்னும் எவ்வளவு வேணும் என்பது தெரியுமில்ல!! :))

    ReplyDelete
  178. @கொத்ஸ்
    ஒங்க திருவிளையாடல் மகிமையே மகிமை! :-)
    இன்னும் வெளியிடாத பின்னூட்டம்ஸ் (not including this one)= 24

    He He
    Innikku
    Dharmam 200-la velluma? :-))

    ReplyDelete
  179. Koths, result announce panna enakku oru half hour venum!
    Announce panniralaama or can we extend to morrow morning, to allow more magalir sakthi? :-))

    ReplyDelete
  180. //இன்னும் வெளியிடாத பின்னூட்டம்ஸ் (not including this one)= 24//

    ஆக மொத்தம் 180 இருக்கு. இன்னும் 20தானே. பின்னூட்ட எண்ணிக்கை 200 கொண்டு வந்திடலாம்.

    ஆனா தருமம் வெல்லுமா என்பது சந்தேகம்தான். ஏன்னா நீர் ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணாம ஆடறீரு!

    ReplyDelete
  181. //Announce panniralaama or can we extend to morrow morning, to allow more magalir sakthi? :-))//

    ஆமாய்யா நல்ல பிள்ளை மாதிரி என்னைக் கேளும். நானும் விடைகளைச் சொல்லிடுங்கன்னு சொல்லுவேன். நீரும் சொல்லுவீரு. நாளைக்கு அவகாசம் தரக்கூடாதான்னு ஒரு கும்பல் வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடும். அப்போ என் பக்கம் நைசா கையைக் காமிப்பீரு. உடனே எனக்கு துலாபாரமா ஈயம் பித்தளை எல்லாம் கிடைக்கும்.

    நல்ல மனசு ஐயா உமக்கு!

    ReplyDelete
  182. வடை சமையல் குறிப்பு ரிலீஸ் பண்ணலாமா?

    ReplyDelete
  183. //எட்டாம் கேள்வில எல்லாரும் இப்பிடி மாட்டிக்கிட்டு முழிக்கறாங்களேப்பா!
    கொத்ஸ்/அரைபிளேடு மட்டும் முதல் ரவுண்டிலேயே எப்படித் தான் sharpஆ அடிச்சாங்களோ தெள்ளேதே! :-))//
    அக்கிரமம்! இருட்டடிப்பு! நானும் இன்னும் பலரும் சொன்னோமே எட்டுக்கு பதில். பூனை வெளியே வந்ததய்யா இதில்!

    ReplyDelete
  184. @கெபி அக்கா
    இன்னுமா வடைய ரிலீஸ் பண்ணல?
    பண்ணிட்டுச் (ச)சுட்டியை உடனே இங்கு கொடுக்குமாறு மிக மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
  185. //அக்கிரமம்! இருட்டடிப்பு! நானும் இன்னும் பலரும் சொன்னோமே எட்டுக்கு பதில். பூனை வெளியே வந்ததய்யா இதில்!//

    இருட்டினாதானே நட்சத்திரம் தெரியும்.

    ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க.....

    ReplyDelete
  186. 8. தடாதகை

    NithyaBalaji

    ReplyDelete
  187. 8. தடாதகை

    NithyaBalaji

    ReplyDelete
  188. ////kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    ஆகா தியாகராஜன் இம்புட்டு ஃபாஸ்ட்டா? :-)
    எட்டு தவிர இப்ப எல்லாமே சரி!
    =9/10

    எட்டாம் கேள்வில எல்லாரும் இப்பிடி மாட்டிக்கிட்டு முழிக்கறாங்களேப்பா!
    கொத்ஸ்/அரைபிளேடு மட்டும் முதல் ரவுண்டிலேயே எப்படித் தான் sharpஆ அடிச்சாங்களோ தெள்ளேதே! :-)/////
    தல, நானும் தான் கரெக்டா சார்ப்பா அடிச்சேன். நம்மலை விட்டுட்டீங்க பாத்தீங்களா? அந்த 8 வது கேள்விக்கு க்ளூ -
    1.அந்த நிகழ்ச்சி நடந்த தலம் - கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் உள்ளது.
    2. இவர் பெயரில் இன்னொரு பெண்ணும் இருந்தார்.

    ReplyDelete
  189. வடை ரிலீஸ்:
    நட்சத்திரப் போட்டி: வடை பிட் நோட்டிஸ். வடை செய்வது எப்படி?

    KRS தப்பாட்டம்! கெக்கேபிக்குணி வெறியாட்டம்!

    ReplyDelete
  190. ///kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    ஆகா தியாகராஜன் இம்புட்டு ஃபாஸ்ட்டா? :-)
    எட்டு தவிர இப்ப எல்லாமே சரி!
    =9/10

    எட்டாம் கேள்வில எல்லாரும் இப்பிடி மாட்டிக்கிட்டு முழிக்கறாங்களேப்பா!
    கொத்ஸ்/அரைபிளேடு மட்டும் முதல் ரவுண்டிலேயே எப்படித் தான் sharpஆ அடிச்சாங்களோ தெள்ளேதே! :-))///
    தல எங்களை விட்டுட்டீங்களே? ஒத்தையா இரட்டையா போட்டு விடை சொல்லலை தலைவா!
    8 வது கேள்விக்கான க்ளூக்கள்.
    1. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற கோவில் கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் உள்ளது.
    2. இவர் பெயரில் இலக்கியங்களில் இன்னொரு பெண்ணும் இருக்கிறார்.

    ReplyDelete
  191. சும்மா எல்லா பின்னூட்டத்தையும் வெளியிட்டா போதுமா? முடிவுரை எங்க?

    ReplyDelete
  192. 8 வது கேள்விக்கான விடை ; தாடகை.
    அந்த நிகழ்ச்சி நடைபெற்ற தலம் : திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் கோவில்.
    தாடகை என்ற ஓர் அசுர குலமாது (இராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) சிவபெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டவள். அவன் குழந்தை வரம் வேண்டி நாள்தோறும் இறைவனை மலர்களால் பூஜித்து வழிப்பட்டு வந்தாள்.

    இந்நிலையில் தாடகையின் பக்தியை சோதித்து பார்க்கவிரும்பினார் இறைவன். தாடகை சிவலிங்கத்திற்கு மாலை சூட முயன்றபோது அவரது ஆடையை இறைவன் நெகிழச் செய்தார். தாடகை தன் ஆடையை முழங்கையால் இடுக்கிக் கொண்டு தம் மாலையை சிவலிங்கத்திற்கு அணிவிக்க முயன்றார். ஆனால் அவரால் மாலையை சிவலிங்கத்திற்கு அணிய முடியவில்லந. உடனே தாடகை சிவபெருமானிடம் அம்மாலையை ஏற்றருளுமாறு வேண்டிக்கொண்டாள். சிவனும் தாடகையின் கோரிக்கையை ஏற்று அவளது பக்கம் தன்னை வளைத்து கொடுக்க, அம்மாலையை சிவனுக்கு அணிவித்தாள் தாடகை. மேலும் தாடகையின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அவருக்கு காட்சியளித்தது மட்டுமல்லாமல் அவள் கேட்ட வரங்களையும் தந்து அருளினார். தாடகையின் விருப்பத்திற்கிணங்க இத்தலம் தாடகையீச்வர எனவும் வழங்கப்பெற்றது,

    இதில் ஆச்சர்யமானவிஷயம் என்னவென்றால் தாடகைக்காக வளர்ந்த சிவலிங்கம் அதற்குப் பின்பு நிமிராமலேயே காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஒரு காலத்தில் சோழமன்னன் அம்முடியை நிமர்த்தவிழைந்து, பணியாட்கள், குதிரைகள், யானைகள் முதலியவற்றினால் கட்டி இழுத்தும் சிவலிங்கத்தை நிமரச் செய்ய முடியவில்லை என்பது முக்கியமானதாகும்.

    இந்நிநலையில் திருக்கடவூர் என்ற ஊரில் வாழ்ந்துக் கொண்டிருந்த குங்கிலியக் கலய நாயனார் சோழமன்னனின் விருப்பத்தை அறிந்து, தாமே திருப்பனந்தாளுக்கு சென்று இறைவனைப் பலவாறு போற்றித் துதித்து இறைவன் முடியினும், தம் கழுத்திலும் ஒரு நூலைக் கட்டி இழுத்தார். யானைகள், குதிரைகள் பணியாட்கள் என்று சேர்ந்து கட்டி இழுத்தப்போது நிமிராத சிவலிங்கம் குங்கிலியக் கலய நாயனார் நூலில் கட்டி இழுத்தப்போது நிமிர்ந்தது. ஆச்சர்யத்தில் சோழ மன்னனும், ஊர் மக்களும் திகைத்தனர். நாயனாரை வணங்கினர். நாயனாரின் பெருமையை உலகத்திற்கு உணர்த்தவே இறைவன் இப்படி ஓர் நாடகத்தை நடத்தினார்.

    ReplyDelete
  193. தமிழ் பிரியன் அண்ணா,

    நான் முன்னமே இந்த சுட்டியைக் குடுத்து இருக்கேன் பாருங்க.

    http://www.aaraamthinai.com/aanmeegam/2008/01aanmee

    ReplyDelete
  194. ஒன்றாவது கேள்விக்கான செய்யுள் :
    278. பெரிது உவந்தனளே!
    பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்
    திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி

    "நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
    முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
    படைஅழிந்து மாறினன்" என்று பலர் கூற,
    "மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
    முலைஅறுத் திடுவென், யான்' எனச் சினைஇக்,
    கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,
    செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய
    படுமகன் கிடக்கை காணூஉ,
    ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!"

    ReplyDelete
  195. ஆக மொத்தம் ரவி நீர் நினைச்சது வேலைக்கு ஆவல!

    நீரும் எம்புட்டு நேரம் குடுத்துப் பார்த்தீரு. ஆனாத் தேறினது ஒண்ணே ஒண்ணுதான். அதுக்குப் பின்னாடி இருந்ததும் ரங்கமணிதான் என்பது நமக்கெல்லாம் தெரியும். உமக்கு முதல் ஆப்பு.

    அடுத்தது சுப்பையா வாத்தியாருக்கு. மருந்துக்கும் ஒரு ஆம்பிளை பேரைச் சொல்லலை. ஆனா இப்போ என்ன சொல்லப் போறாருன்னு பார்க்கலாம்.

    ReplyDelete
  196. தமிழ் பிரியன் அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம்.

    உங்க பேர் தமிழ்ப் பிரியன் அப்படின்னு இருக்க வேண்டாமா?

    ReplyDelete
  197. ///இலவசக்கொத்தனார் said...

    தமிழ் பிரியன் அண்ணா,

    நான் முன்னமே இந்த சுட்டியைக் குடுத்து இருக்கேன் பாருங்க.*///
    அய்யா கொத்ஸ், நாங்களெல்லாம் பொடிப்பசங்க. அண்ணா எல்லாம் சொல்லி பயமுறுத்தாதீங்க..

    ReplyDelete
  198. நிலா நிலா ஓடி வான்னு கூப்பிட்டது போய் நட்சத்திரமே ஓடி வான்னு கூப்பிடும் நிலை வந்திடும் போல இருக்கே!!

    ReplyDelete
  199. நட்சத்திரமே, டிலீட் செஞ்ச விஎஸ்கே ஐயாவின் பின்னூட்டத்தை மீண்டும் போட்டீரா?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP