Tuesday, August 31, 2010

முல்லைப் பாட்டில் தமிழ்க் கடவுள்!

முல்லைப்பாட்டு:

பத்துப் பாட்டு நூல்களில் மிகவும் சிறப்பான நூல்! இயற்கை வாழ்வும், மக்கள் வளமும், முல்லை நிலக் காடும் கழனியும் என்று பலவும் பேசும்!

தனித்தமிழ் அறிஞரான மறைமலை அடிகள், இதற்கென்றே, முல்லைப் பாட்டு - ஆராய்ச்சி உரை எழுதியுள்ளார்!
அத்தனை இயற்கை வளம், கணவன் மனைவி மன உணர்வுகளைச் சொல்லும் நூல்!

* முல்லைத் திணை = இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
* குறிஞ்சித் திணை = புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

குறிஞ்சியில் = தலைவன்-தலைவி உடல் இன்பத்தைப் பேசி, (களவொழுக்கம்)! தெய்வம் = முருகன்!
முல்லையில் = தலைவன்-தலைவி, ஒருவருக்கொருவர் என்றே இருத்தலைப் (இல்வாழ்வு - கற்பொழுக்கம்) பேசுவது! தெய்வம் = திருமால்!

ஹா ஹா ஹா! இப்போது தெரிகிறது, எதுக்கு எனக்கு முருகனை மறைமுகமா மனசுக்குள்ளாற ஆழமாகப் பிடிக்கிறது-ன்னு! :)
ஆனால் அவனுக்காக காத்து "இருப்பதே" - இருத்தலும் இருத்தல் நிமித்தமும் - என்று ஆக்கி விட்டு விட்டாரே முல்லை நிலப் பெருமாள் என்று தலைவி ஏங்கலாமோ?

பாடியவர்: நப்பூதனார் (காவிரிப் பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார், நப்பூதனார்)
பாடப்பட்டோன்: குறிப்பாக இன்னார் என்று இல்லை! சங்கத் தமிழ் வாழ்வியலே!

மனைவியைப் பிரிந்து, பகை வேந்தரோடு போர் செய்யப் போகிறான் தலைவன்!
"கார்காலத் தொடக்கத்தில் வருவேன், அது வரை நீ ஆற்றி இரு" என்று சொல்லி விட்டுச் செல்கிறான்!

அவன் சொல்லையே வாழ்வாகக் கொண்டு ஆற்றி இருக்கிறாள்! கார் காலம் முடிந்தும் வரவில்லை! இருப்பினும் காத்து இருக்கிறாள்! Like Penelope who waited for Odysseus!
திருமால் கோயிலுக்குச் செல்கிறாள்! அங்கே பெருமுது பெண்டிர் குறி சொல்லியும் அவளை ஆற்றுகிறார்கள்!


இது தான் பாட்டின் களம்!
முல்லை நிலச் செய்திகள், இயற்கை அழகு, இயற்கையான வாழ்வியல், அழகான உவமைகள், காதல் உணர்வு, காதல் எப்படி திருமணத்துக்குப் பிறகு இன்னும் ஆழமாகிறது....என்றெல்லாம் வருகிறது!



பாட்டின் துவக்கமே, திருமாலைச் சொல்லித் தான் துவங்குகிறது!

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல (3)

சக்கரப் படையும், சங்கும் தன் கைகளில் உடைய திருமால்!
திருமார்பில், துணைவியை அன்புடன் கொண்டுள்ள திருமால்!
அவன் கைகளில் நீர் வாங்கிக் கொண்டே நிமிர்ந்து உலகளந்தான் போலே, மேகமும் நீர் வாங்கிக் கொண்டே, உலகெலாம் சுற்றி வருகிறதே!

அருங் கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, 10
பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப

மேலும், ஊர்ப் பக்கத்தே திருமால் கோயிலுக்குப் போய், நாழி நெல்லும் முல்லையும் தூவி வணங்குதல் பற்றிச் சொல்கிறது!
குறி சொல்லும் வழக்கம் - முதிய பெண்டிர்களின் விரிச்சி (குறி) கேட்டு, மனம் ஆறுதல் பெறும் இளம் பெண்கள் பற்றியும் பேசுகிறது!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

0 comments:



Post a Comment

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP