Tuesday, August 31, 2010

நான்மணிக் கடிகையில் தமிழ்க் கடவுள்!

நான்மணிக் கடிகை

ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது!
நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன!
ஒரு ஆரம் (necklace) போல இருக்கு!
ஆகவே = நான்கு + மணிக் + கடிகை = நான்கு மணிகள் கோர்த்த மாலை! Four Stone Necklace!

இதன் ஆசிரியர் விளம்பி நாகனார்! இவர் காலம் கி.பி 5-6 நூற்றாண்டு!
மிக அருமையாகக் கருத்துக்களைக் கோர்க்கிறார்!
மொத்தம் 106 பாடல்கள்!
துவக்கப் பாடல்கள் இரண்டைத் திருமாலுக்கே ஆக்குகிறார் கவிஞர்!

மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம். ..... ..1

நிலா, திருமாலின் முகத்தை ஒத்திருக்கே!
கதிரவனோ, அவன் சக்கரத்தை ஒத்திருக்கே!
வயலில் உள்ள தாமரையோ, அவன் கண்ணை ஒத்திருக்கே!
இந்தக் காயாம்பூவோ, அவன் மேனியை ஒத்திருக்கே!

படியை மடியகத்து இட்டான்; அடியினால்
முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து
ஆனிரை தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன். ..... ..2

உலகத்தைத் தன் வயிற்றினுள் அடக்கினான்!
அதே உலகத்தைத் திருவடியினால் அளந்தான்!
ஆனிரைகளைக் காக்க குன்றம் எடுத்தான்!
இவனே துன்பத்தை அழித்த மகன்!!



திருமாலைப் பாடும் கீழ்க்கணக்குப் பாடல்கள் எவை என்பதற்காகத் தான் தரவுகள் தேடினேன்! ஆனால் அப்படிப் படித்த போது, நான்மணிக்கடிகை மிகவும் பிடித்து விட்டது!

அழகு தமிழில், சுருக்கமாக, இன்றைய Twitter தளத்தில் பேசுவது போல் என்னமாச் சொல்லி இருக்காங்க, பண்டைத் தமிழ்க் கவிஞர்கள்!
என்னமா கருத்துக்களைக் கோர்க்கிறார் நான் மணிக் கடிகையில்! நீங்களே பாருங்க! யார் யாருக்கு எல்லாம் தூக்கம் போச்சாம்?

கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை; காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்!.....9

1. திருடத் திட்டமிடும் திருடர்களுக்கு!
2. காதலியிடம் உள்ளம் கொடுத்தவர்களுக்கு!
3. செல்வம் சேர்க்க உண்மையாகவே துடிப்பவர்களுக்கு!
4. சேர்த்த செல்வத்தைக் காப்பாற்ற வேணுமே என்று சதா எண்ணுபவர்களுக்கு!
- நாலு பேருக்கும் தூக்கம் போச்சுடி யம்மா! :))

சங்க இலக்கிய அழகே அழகு தான்!
திருமால்=தமிழ்க் கடவுள் என்பதற்காக இப்போது தேடினாலும்...இன்னொரு முறை ஓய்வாக வந்து, கீழ்க் கணக்கு நூல்களை வாசிக்க வேண்டும் என்று ஆவல் எழுகிறது!

பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் மட்டுமே அதிகம் வாசித்துப் பழக்கம்! கீழ்க் கணக்கு நூல்களையும் இனி வாசிப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

0 comments:



Post a Comment

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP